முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 4.
செவ்வாய்: கிருத்திகை- 2.
புதன்: பூரம்- 3.
குரு: உத்திரட்டாதி- 4. (வ)
சுக்கிரன்: பூசம்- 2.
சனி: அவிட்டம்- 2. (வ)
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆவணி 1 (17-8-2022)
சிம்ம சூரியன் (காலை 7.23).
ஆவணி 5 (21-8-2022)
கன்னி புதன் (அதிகாலை 2.04).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
14-8-2022 மாலை 4.15 மணிக்கு மீனம்.
16-8-2022 இரவு 9.05 மணிக்கு மேஷம்.
19-8-2022 காலை 6.06 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் வாய்ப்புண்டாகும். நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கெல்லாம் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் பேச்சில் பொறுமையோடு இருப்பதன் மூலம் வாக்குவாதங்களைத் தவிர்க்கமுடியும். தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சூரியன் 17-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் வீண் அலைச்சல்கள் எல்லாம் குறையும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் இருப்ப தால் தொழில், பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமைந்து, கடந்தகால உழைப்புக்கு பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும் யோகம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வெளி உதவிகளை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள்மீதிருந்த பழிச் சொற்கள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். உடன் வேலைசெய்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களின் செயல்களுக்கு முழுமையான பிரதிபலன் கள் கிட்டும். வெளியிடங் களில் நல்ல ஆதரவும் பெறமுடியும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்று வது, வேங்கடாசலபதியை வழிபடுவது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு வார முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். வயது மூத்தவர்களுடைய ஆதரவு கிடைப்ப தால் தீர்க்கமுடியாத சிக்கல்கள் எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். வெளியூர் தொடர்புகள்மூலம் பொரு ளாதார அனுகூலங்களை அடைவீர்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலமுண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட் டாலும் குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு சிறப்பாக இருப் பதால், எதையும் எளிதில் கையாண்டு ஆதாயங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிடலாம். அரசாங்கவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சூழ்நிலைக் கேற்றவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் முடித்துவிடுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய ஐந்து நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால், நீண்டநாட்களாக எண்ணிய காரியங்களைத் தற்போது நிறைவேற்ற முயற்சித்தால் எளிதில் வெற்றியடையமுடியும். அஷ்டலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பொருளாதாரரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 17-ஆம் தேதிமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்ப தால் குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடு கள் விலகி ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமல் லாமல் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வு கள் நடக்கும். பிள்ளைகள்வழியில் இருந்த வீண் கவலைகள் மறைந்து நிம்மதி ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் முதலீடு செய்யும் வாய்ப்புண்டாகும். பிரதான கிரகங்களான குரு, சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால், தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்பவர் களுக்கும் தற்போது உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் உண் டாகும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து நல்ல லாபத்தை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறைந்து தொழிலில் நிம்மதி யுடன் செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உழைப்புக்கான பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், பிறர் பார்த்து வியக்குமளவுக்கு நல்ல நிலையை அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல் படமுடியும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து ஏற்றங் களைப் பெறுவீர்கள். சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது கஷ்டங்களைக் குறைக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதன் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சுத்திறமையால் பல்வேறு காரியங் களை எளிதில் சாதித்துவிடுவீர்கள். உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும், குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது உத்தமம். வாகனங்கள்மூலம் எதிர் பாராத செலவுகள் ஏற்படும். சனி ராசிக்கு 7-ல் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வ தன்மூலம் வீண் பிரச்சினைகளைக் குறைக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித் துச் சென்றால்தான் லாபத்தை அடையமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களி டம் பேசாமலிருந்தால் சிக்கல் களைத் தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சிக்காக வெளியூர் நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உழைப்புக்கான பலனை அடையும் யோக முண்டு. உடன்பணிபுரிபவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது, ராகுகால பூஜையில் கலந்துகொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது மிக நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், 10-ல் செவ்வாய் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு இலக்கை அடைவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகள் தற்போது விலகி இல்லத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான யோகம் உண்டாகும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதி களைத் தக்கநேரத்தில் காப்பாற்றுமளவுக்கு உங்களது பலம் கூடும். தற்போது 12-ல் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சூரியன் 17-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவுள்ளதால் வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையாட் கள் சாதகமாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து வாடிக்கையாளரி டம் ஒப்படைக்க முடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு உங்கள்மீதிருந்த அவப்பெயர் விலகி நல்லபெயர் எடுக்கமுடியும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பும் அதன் மூலம் அனுகூல செய்திகளும் கிடைக்கும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், வார முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பென்பதால் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகும். பெண்கள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு நல்ல வளர்ச்சியை அடையமுடியும். ராசிக்கு 5-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொள்வதும், இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பதும் நன்று. பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையோடு இருக்கவும். தொழில், வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கலாம். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங் களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். உடன்வேலை செய்பவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லநிலையை அடையும் யோகமுண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவது, பாம்புப் புற்றுக்குப்பால் விடுவது, ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்று வது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் உச்ச கேந்திர மான 10-ஆம் வீட்டில் சஞ்சரித்து குரு பார்வை பெறுவதால், நீண்டநாள் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். புதன் 11-ல் சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தை சாதித்துக்கொள்வீர்கள். இவ்வாரத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகம், பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலையுண்டு. பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் கண்டிப்பாக நல்ல ஆதாயம் கிடைக்கும். கடந்தகாலங்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து, எந்தவித இடையூறுமின்றி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, பயணங்களில் நிதானமாகச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் வேலைப்பளுவும் சற்று குறையும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைக்கும். சஷ்டியன்று விரதமிருந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, சனிக்கு எள்தீபமேற்றி வழிபடுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கடந்தகாலங்களில் இருந்த எதிர்ப்புகள் படிப்படியாகக் குறைந்து நிம்மதியுடன் செயல்படமுடியும். எடுத்த பணிகளை சிறப்பாகக் கையாண்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். ராசியாதிபதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் உங்கள் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத் தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்ப தால் போட்ட முதலீட்டைவிட அதிகப் படியான லாபங்களை ஈட்டமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளையும் உத்தரவுகளையும் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மிகவும் அனுகூலமான காலமென் றால் மிகையாகாது. மேலதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்புவரும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதற்கு கைமேல் பலன் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது, அறுகம்புல் மாலைசாற்றி, நெய்தீபமேற்றி வழிபடுவது, அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது கஷ்டத்தைக் குறைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பென்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் ஒரு தெளிவு கிடைக்கும். தற்போது 8-ல் இருக்கும் சூரியன் 17-ஆம் தேதிமுதல் 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக உள்ளதால் ஆரோக்கியரீதியாக இருந்த குறைபாடுகள் எல்லாம் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும், பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகம், மறைமுகப் பிரச்சினைகள் விலகி அனுகூலமான நிலை ஏற்படும். வேலையாட்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளை உங்கள் தனித்திறமையால் எளிதில் கையாண்டு லாபத்தை அடைவீர்கள். தொழில்ரீதியாக புதிய திட்டங்களைப் போட்டு நல்ல வளர்ச்சியை அடைவதற்கான யோகமுண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு இதுவரை இருந்த வேலைப்பளு குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். தற்போது நீங்கள் செய்யும் பணியே நல்லதென்பதால், பிறர் சொல்வதைக்கேட்டு மனதைக் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும். பேச்சில் பொறுமையோடு இருப்பதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைப்பட்ட காரியங்களை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு, சரபேஸ்வரரை தரிசிப்பது நன்று.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மசனி நடப்பதாலும் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதாலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சக்திக்குமீறிய செலவுகளால் கையிருப்பு குறையும். இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒருசில நேரங்களில் ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் பிரச்சினைகள் அதிகரிக்கும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. எந்த செயலிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் தான் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக வெளியிடங்களில் பேச்சைக் குறைப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங் களை அடையமுடியும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, துர்க்கையம்மன் தலங்களில் நடைபெறும் ராகுகால பூஜையில் கலந்துகொள்வது நன்று.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, வார முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நிலைமையை சமாளிப்பீர்கள். ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளின் உதவி சிறப்பாக இருந்து தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். வேலையாட்களை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் தற்போதுள்ள சிறுசிறு பிரச்சினைகளை சமாளித்து அனுகூலப் பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் உங்கள் பணியில் மட்டும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். வெளியூர் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து செயல்களுக்கும் வெளியிடங்களில் சிறப்பான ஆதரவு கிடைக்கும். கிருத்திகையன்று விரதமிருந்து முருக வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, கருப்புநிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் 17-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங் களைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகக்கூடிய அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்கள் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு சகஜமாகப் பழகக்கூடிய சூழலும் உண்டாகும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர் கள். திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவுக்கு லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை தற்போது நிறைவேற்றமுடியும். வெளியாட்களால் இருந்த இடையூறுகள் தற்போது விலகி தொழிலில் வளர்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். ஒருசிலருக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய அமைப்பு ஏற்படும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபமேற்று வது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருவது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.