இந்த வார ராசிபலன்: 14-7-2024 முதல் 20-7-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-14-7-2024-20-7-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: புனர்பூசம்- 3.

சந்திரன்: சித்திரை- 2.

செவ்வாய்: கிருத்திகை- 2.

ss

புதன்: ஆயில்யம்- 2.

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: பூசம்- 2.

சனி: பூரட்டாதி- 2(வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆனி 32 16-7-2024 கடக சூரியன் (பகல் 11.19).

ஆடி 03 19-7-2024 சிம்ம புதன் (இரவு 8.39).

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம் என்பதால் உங்களுடைய பணிகளில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். குரு பார்வை 5, 7-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையலாம். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், கடந்த காலங்களில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையக்கூடிய ஒரு நிலையும் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலையும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, காலபைரவரை தரிசிப்பது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்தி

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: புனர்பூசம்- 3.

சந்திரன்: சித்திரை- 2.

செவ்வாய்: கிருத்திகை- 2.

ss

புதன்: ஆயில்யம்- 2.

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: பூசம்- 2.

சனி: பூரட்டாதி- 2(வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆனி 32 16-7-2024 கடக சூரியன் (பகல் 11.19).

ஆடி 03 19-7-2024 சிம்ம புதன் (இரவு 8.39).

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம் என்பதால் உங்களுடைய பணிகளில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். குரு பார்வை 5, 7-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையலாம். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், கடந்த காலங்களில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையக்கூடிய ஒரு நிலையும் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலையும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, காலபைரவரை தரிசிப்பது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணவரவுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களால் மனஅமைதி குறைவு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. உங்கள் ராசிக்கு வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் பிறரிடம் பேசுகின்றபொழுது யோசித்துப் பேசவேண்டிய நேரம் ஆகும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக் கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒரு சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக இருந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லமாற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். தேவையற்ற பயணங்களை தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருந்து உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு அனுகூல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் மற்றவர்கள் உங்கள்மீது கூறிய பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர்களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் விரைய ஸ்தானத் தில் சஞ்சாரம் செய்வதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கூட்டாளிகள்மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. முடிந்தவரை ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன அமைதி குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற் களை சொல்வார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்த்து விட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைபெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசியில் இருப்பதால் சில நாட்களாக இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும் பொருளாதார உதவியும் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த மனக் கவலைகள் குறையும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு விரும்பிய பாடப்பிரிவை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 17, 18.

dd

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சர்ப்ப கிரகமான ராகுபகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில்கூட சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஒருசில நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தொழில்ரீதியாக கிடைப்பதில் ஒருசில இடையூறுகள் ஏற்படும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக ஊழியர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முருகனுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 19, 20.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பெண்கள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்னசின்ன பிரச்சினைகள்கூட முழுமையாக விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகளும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையும் உண்டாகும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலமும் உண்டாகும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 17, 18.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதாலும், மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நெருங்கியவர்களிடம் தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். செவ்வாய் 6-ல் இருப்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் தைரியத்தோடு செயல்பட்டாலும் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேகத்தை காட்டாமல் விவேகத்தோடு செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக மனநிம்மதி குறைவு, மனைவி, பிள்ளைகளிடம் மனஸ்தாபம் ஏற்படக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்து வதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 19, 20.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் தாராள தனவரவு உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். நெருங்கியவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப் பாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் வாடிக்கையாளர் களுடைய விருப்பங்களை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் உங்களுடைய திறமைகளை வெளிக் காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு தொடர்பான செய்திகள் வரும் நாட்களில் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் விலகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்:14, 15, 16, 17, 18.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 6-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். ராகு 2-ல் இருப்பதால் நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தற்போது உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலையானது இருக்கும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும். தற்போது 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்பட்டால் வீண் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் ஒருசில எதிர்பாராத அணுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் வளமான பலன்களைப் பெறலாம். நீங்கள் எடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடித்து மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். மாணவ- மாணவியர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தேவையற்ற பழக்க வழக்கங்களைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20.

bala190724
இதையும் படியுங்கள்
Subscribe