முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 1.

செவ்வாய்: புனர்பூசம்- 4.

Advertisment

புதன்: அஸ்வினி- 4.

குரு: அஸ்வினி- 2.

சுக்கிரன்: திருவாதிரை- 2.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்: v வைகாசி 1 (15-5-2023) ரிஷப சூரியன் (பகல் 11.45).

வைகாசி 2 (16-5-2023) புதன் (வ) நிவர்த்தி (காலை 8.45).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

15-5-2023 அதிகாலை 3.24 மணிக்கு மீனம்.

17-5-2023 காலை 7.38 மணிக்கு மேஷம்.

19-5-2023 பகல் 1.35 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரத் தேவைகள் சரியான நேரத் தில் பூர்த்தியாகி மனமகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். புதிய யுக்தி களைப் பயன்படுத்தி தொழில், வியாபாரத்தில் நல்ல நிலையினை அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். எதிலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய திறமை இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 4-ல் செவ்வாய், திங்கட்கிழமைமுதல் 2-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது, நெருங்கியவர்களிடம் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத் தில் அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். வெளிநபர்களிடம் வீண் பேச்சைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. உடல் ஆரோக்கியத் தில் அக்கறை செலுத்துவதாலும், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதா லும் தேவையற்ற மருத்துவ செலவுகளைத் தவிர்க்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கள் கிடைக்கும் என்றாலும், மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருக்கும். எது எப்படியிருந் தாலும் உங்கள் உழைப்புக்கான சன்மானம் கண்டிப் பாகக் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். குரு, ராகு விரய ஸ்தானத் தில் இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் நெருங்கிய வரின் உதவியால் எதையும் சமாளிப்பீர் கள். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வயது மூத்தவர் களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியா பாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலன் கள் கிடைக்கும். வேலை யாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்ற காரணத்தினால், ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக ஈடு படுவது நல்லது. தேவை யற்ற நெருக்கடி இருந் தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கொடுக் கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பென்பதால் நீண்டநாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த நெருக்கடிகள் தற்போது குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய நேரமென்ப தால் உங்கள் காரியங்களில் கவனமாக இருப்பது நல்லது. பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லக்கூடிய நிலை உண்டாகலாம். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் எதிர்பாராதவகையில் வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கிடைக்கப்பெற்று உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். சிவ வழிபாடு செய்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

weekrasi

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டு மல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராசியாதிபதி புதன், ராகு, குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப தால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைவீர்கள். நண்பர்கள்மூலமாக அனுகூலமான பலன் களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், திங்கட் கிழமைமுதல் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வயதில் மூத்தவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர் கள். அரசு வகையில் எதிர் பார்த்த உத்தரவுகள் கிடைக் கும். கடந்தகால சட்ட சிக்கல் கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் விரும்பிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கிருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய நாட்களாக இருக்கும். முருகனுக்கு அர்ச்சனை செய்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல் படவேண்டும். ஆறுதல் தரக் கூடிய விஷயம் என்னவென்றால் உங்கள் ராசிக்கு 10-ல் புதன், திங்கட்கிழமைமுதல் 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்ப தால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் நிலைமையை சமாளிக்க முடியும். பெண்கள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் எடுத்த பணி யைக் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் முடிக்கமுடியம். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் ராசிக்கு சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப் பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, ராகு சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்ப தால் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை பெறும் வாய்ப்புண்டு. திங்கட்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிர் பார்க்கக்கூடிய காரியங்கள் எளிதில் கைகூடுவது மட்டு மல்லாமல் உங்களுடைய மதிப் பும், மரியாதையும் அதிகரிக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்வான நிலையை எட்டு வீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகு வார்கள். கூட்டுத்தொழில் செய் பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ மான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உங்களுக்கிருந்த சம்பள நிலு வைத் தொகைகள் தற்போது கிடைத்து நீங்கள் பிறருக்குத் தரவேண்டிய பணத்தை பைசல் செய்ய முடியும். ஞாயிறு, மற்றும் சனிக்கிழமைகளில் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் எதிர் பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். உடல் ஊன முற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி களைச்செய்வது, சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடுமேற்கொள்வது மிகவும் நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் எண்ணங் கள் பூர்த்தியாகும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சி கள் நடக்கும். அசையும், அசையா சொத்துவகை யில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்னச் சின்ன நெருக்கடிகள்கூட ஓரளவுக்கு விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல் சின்னச்சின்ன பிரச்சினைகள் எல்லாம்கூட விலகி நிம்மதியுடன் பணி புரியமுடியும். உத்தியோகரீதியாக கௌரவ மான நிலை ஏற்படும். புதிய வாய்ப்பு எதிர் பார்த்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேற்றுமை எல்லாம் மறைந்து சுமூகமான நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ் டத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்ப தாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்ப தாலும் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங் கள் கைகூடி மன நிம்மதி ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்து கடந்தகால கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்க ளுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தற்போது 7-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித் துச் செல்வது, கணவன்- மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக் கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தரவேண்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப் பாற்றும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலையானது மிகமிக நன்றாக இருக்கும். சட்டரீதியாக உங்களுக்கிருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல் படுவது மட்டுமல்லாமல் மற்றவரிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். உங்கள்மீதிருந்த பழிச் சொற்கள் தற்போது விலகி பணியில் நிம்மதி யுடன் செயல்படமுடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நன்மையைத் தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமத மாகக்கூடிய நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தற்போது 6-ல் சஞ்சரிக்கும் சூரியன் திங்கட்கிழமைமுதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கி யவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல் களை தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராதவகையில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது உத்தமம். குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருக்க கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். எந்திரங்கள் பழுதாவதால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களைச் சொல்வார் கள். ஒவ்வொரு செயலிலும் சற்று பொறுமை யோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக இருப்பதால் எதிர்பாராதவகையில் கிடைக் கக்கூடிய உதவிகள் காரணமாக உங்கள் நெருக்கடிகள் குறையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு ஜென்ம ராசியை பார்ப்பதாலும், 3-ல் சனி சஞ்சரிப்ப தாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மனைவி, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள், உங்களுடைய கடந்தகால நெருக்கடிகள் குறையும் சூழல் ஏற்படும். திங்கட்கிழமைமுதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியா பாரத்தில் இருந்துவந்த மறைமுகப் பிரச்சினை கள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக் காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப் பது மட்டுமல்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பானது சிறப் பாக இருப்பதால் மனக்கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்தகால மருத்துவ செலவுகள் குறையும். ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று எதிர்பாராத லாபங்களை அடைவீர்கள். சுப செய்திகள் தேடிவரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் ராகு, குரு சஞ்சரிப்பதும், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் பிறர் அதனைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் ஆடம்பரத்தைச் சற்று குறைத்துக் கொள்ளவேண்டும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்க முடியும். ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாகதான் செயல்பட வேண்டியிருக் கும். நெருக்கடியான நேரத்தில் வேலையாட் களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப் பாக இருக்காது. நீங்கள் சரிவர செயல்பட வில்லை என்றால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்னசின்ன வாய்ப்புகள்கூட கைநழுவிப் போய்விடும். அதனால் எதிலும் கவனத் தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் சற்று பொறுமையோடு செயல்படுவதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உங்கள் பணிக்கான அங்கீகாரம் தற்போது கிடைக்காவிட்டாலும் விரைவில் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டு என்பதால் தற்போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆதாயங்கள் கிடைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும் சூழல், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றா லும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். சுக்கிரன 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப உறுப்பினர் கள் நெருக்கடியான நேரத்தில் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருந்தால் போட்ட முதலை எடுக்கமுடியும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகரீதியாக வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டாகும். அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, தட்சிணா மூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன் சஞ்சரிப் பதாலும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருந்து கடந்தகால சோதனைகள் மறைந்து மகிழ்ச்சியான நிலையுண்டாகும். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் திங்கட்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நெருங்கியவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகக்கூடிய நிலை ஏற்படும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய நிலையும் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைத்து மனநிம்மதி அடை வீர்கள். நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்யமுடியும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற் கான வாய்ப்புகள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். சக ஊழியர்களுடைய உதவியானது சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். உணவு விஷயத் தில் கட்டுப்பாட்டோடு இருந்தால் ஆரோக் கியம் சிறப்பாக இருக்கும். திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண் டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் அர்ச் சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக் கும்.