இந்த வார ராசிபலன் 14-4-2024 முதல் 20-4-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-14-4-2024-20-4-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வனி- 1.

செவ்வாய்: பூரட்டாதி- 1.

புதன்: ரேவதி- 4 (வ).

குரு: பரணி- 4.

சுக்கிரன்: ரேவதி- 1.

ss

சனி: பூரட்டாதி- 1.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மிதுனம்.

15-4-2024 இரவு 8.38 மணிக்கு கடகம்.

18-4-2024 காலை 7.56 மணிக்கு சிம்மம்.

20-4-2024 இரவு 8.50 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுநாள்வரை 12-ல் சஞ்சரித்த சூரியன் இனி ஜென்ம ராசியில் குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. சுக்கிரன், ராகு 12-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு திருப்திகரமாக இருப்பதால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங் கள் இருக்கிறது. உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் தேடிவரும். உங்கள் மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான அமைப்பு ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய யோகங்கள் இருக்கிறது. வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு செயல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினை அடையும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குருபகவான் சூரியன் சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒருசில விஷயங்களுக்கு மற்றவருடைய உதவியை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால் உங்களுடைய செயல்களில் முழுமையான வெற்றியினை பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் வெளிநபர்கள்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற் கொள்வது நற்பலனை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன், ராகு சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுநாள்வரை 10-ல் சஞ்சரித்த சூரியன் இனி குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தான மான 11-ஆம் வீட்

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வனி- 1.

செவ்வாய்: பூரட்டாதி- 1.

புதன்: ரேவதி- 4 (வ).

குரு: பரணி- 4.

சுக்கிரன்: ரேவதி- 1.

ss

சனி: பூரட்டாதி- 1.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மிதுனம்.

15-4-2024 இரவு 8.38 மணிக்கு கடகம்.

18-4-2024 காலை 7.56 மணிக்கு சிம்மம்.

20-4-2024 இரவு 8.50 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுநாள்வரை 12-ல் சஞ்சரித்த சூரியன் இனி ஜென்ம ராசியில் குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. சுக்கிரன், ராகு 12-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு திருப்திகரமாக இருப்பதால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங் கள் இருக்கிறது. உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் தேடிவரும். உங்கள் மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான அமைப்பு ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய யோகங்கள் இருக்கிறது. வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு செயல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினை அடையும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குருபகவான் சூரியன் சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒருசில விஷயங்களுக்கு மற்றவருடைய உதவியை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால் உங்களுடைய செயல்களில் முழுமையான வெற்றியினை பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் வெளிநபர்கள்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற் கொள்வது நற்பலனை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன், ராகு சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுநாள்வரை 10-ல் சஞ்சரித்த சூரியன் இனி குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைத்து நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாய், சனி 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளியூர் மூலமாக மனமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்ப தால் உங்கள்பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பணி நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுடைய பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மனமகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வரும் நாட்களில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நற்பலனைத் தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கிய வர்களின் உதவி உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் இருக்கக் கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். இதுநாள் வரை 9-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவுநேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்களே முன் நின்று செயல்படுவது நல்லது. மற்றவரை நம்பினால் தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல்அசதி ஏற்படுவது மட்டுமில்லாமல் உடன்வேலை செய்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு செய-லும் சற்று யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள்வழியில் ஒரு சில ஆறுதல் தரக்கூடிய மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக் கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது நன்மை தரும்.

ss

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன்- குரு சேர்க்கைப்பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 8-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. ஒருசில நேரங்களில் வெளிநபர்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் தனித்து செயல்பட்டால்தான் அடைய வேண்டியதை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் கள் எடுப்பீர்கள் என்றாலும் உடனிருக்கக்கூடிய நண்பர்கள் உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்து வார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமிநரசிம்மரை மனதார வேண்டிக்கொள்வதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையமுடியும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 7-ல் இருப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர் களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி யும் சந்தோஷமும் ஏற்படும். கடந்த காலங்களில் உடனிருப்ப வர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து ஒரு சுமூகமான சூழ்நிலை ஏற்படும். செவ்வாய், சனி 6-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அரசுவழியில் நீங்கள் எதிர் பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச் சுமை குறைந்து மனநிம்மதி உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகவும் கவனத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்குச் சென்றுவருவது, குருபகவானுக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களின் பொருளாதாரநிலை திருப்தி கரமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தி யாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். இருக்குமிடத்தில் மதிப்புமிகுந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். கடந்தகால கடன் பிரச்சினைகளைத் தற்போது குறைத்துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகள்மூலம் சாதகமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியுடைய ஆதரவை பெறமுடியும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடந்துகொள்வது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு வளமான பலன்களை தரக் கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமிநரசிம்மரை வழிபாடு செய்வது அனுகூலமான பலனைத் தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். சிறப்பான பணவரவுகள் ஏற்படும். இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த சூரியன் இனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அடைவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீண்டநாளைய சிக்கலுக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைத்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியினை அடையக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. குறிப்பாக இன்னும் இரு வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய வேலை நெருக்கடியை பற்றி கவலைப்படாமல் பொறுப்புடன் செயல்பட்டால் விரைவில் நீங்கள் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடந்தகாலத்தில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் சில விஷயங்களைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் உங்களுக்கு எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப் பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த மறைமுக போட்டிகள் எல்லாம் தற்போது குறைவதால் உங்களுக்கு இருந்துவந்த கவலைகள் மறையும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சக ஊழியருடைய ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு அதிகாரிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த இடம் மாற்றத்தை தற்போது பெறமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் பரிசுகளை தட்டிச்செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மேன்மை மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகளும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. செவ்வாய், புதன்கிழமைகளில் அலைச்சல், டென்ஷன், தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மன அமைதி குறைவு உண்டாகும். துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவி போவதற்கான சூழ்நிலை ஏற்படும். வேலையாட்களும் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை பெரிதும் நம்பாமல் நீங்களே முன்நின்று பொறுப்புடன் செயல்படுவதாலும், தற்போது கிடைக்கக்கூடிய சிறுசிறு வாய்ப்பையும் சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்வதாலும் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். வயது மூத்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பக்குவத்தோடு நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஒருசிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை விட்டுவிட வேண்டாம். பொதுவாக மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வீண் பிரச்சினை, பொருளாதாரரீதியான நெருக்கடிகள் ஏற்படும். காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் ஒருசில நல்லவாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். இதுநாள்வரை 2-ல் சந்தித்த சூரியன் இனி 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் இருந்த இடையூறுகள் விலகி அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். குறிப்பாக பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகள் குறையும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 2-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். பண வரவுகள் சாதகமாக இருந்து மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளைத் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுக்கமுடியும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். செவ்வாய், சனி 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதியமுயற்சிகளில் ஈடுபடுகின்றபொழுது சற்று சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். குறிப்பாக உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்லவாய்ப்பை பெறுவீர்கள் என்றாலும் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச்சொற்களை சொல்- உங்களை சங்கடப்படுத்துவார்கள். அதிகாரியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும் உடனிருப்பவர்கள் உங்களுடைய மனதை மாற்ற முயற்சிப்பார்கள். சூழலுக்கு ஏற்றவாறு சற்று பக்குவத்தோடு நடந்து கொள்வது நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு அர்ச்சனைசெய்வது, எள் தீபமேற்றுவது நன்மை தரும்.

bala190424
இதையும் படியுங்கள்
Subscribe