இந்த வார ராசிபலன் 14-1-2024 முதல் 20-1-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-14-1-2024-20-1-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 1.

செவ்வாய்: மூலம்- 4.

புதன்: மூலம்- 2.

குரு: அஸ்வினி- 4.

சுக்கிரன்: கேட்டை- 3.

சனி: சதயம்- 2.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

dd

கிரக மாற்றம்:

(15-1-2024) மகர சூரியன் (அதிகாலை 2.43).

(18-1-2024) தனசு சுக்கிரன் (இரவு 8.57).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கும்பம்.

16-1-2024 அதிகாலை 00.37 மணிக்கு மீனம்.

18-1-2024 அதிகாலை 3.33 மணிக்கு மேஷம்.

20-1-2024 காலை 8.52 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- புதன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோளான சூரியன் திங்கட்கிழமைமுதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும் யோகம் உண்டு. சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகால கடன்களை குறைத்துக் கொள்ளமுடியும். உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது நற்பலனைத் தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் ராகு சஞ்சரிப்பதாலும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூல மான பலன்களை பெறமுடியும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல் படுவது, உடன்பிறப்புகளிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறை யில் பயன்படுத்திக்கொண்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். சில விஷயங் களில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் வீண் அவப்பெயர்களைத் தவிர்த்து நல்ல பெயரை எடுக்கமுடியும். குருபகவான் 12-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகளைப் பெறக் கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. சில கிரகங்கள் சாதகம் மட்டும் இருந்தாலும் மேற்கொண்ட நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 1.

செவ்வாய்: மூலம்- 4.

புதன்: மூலம்- 2.

குரு: அஸ்வினி- 4.

சுக்கிரன்: கேட்டை- 3.

சனி: சதயம்- 2.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

dd

கிரக மாற்றம்:

(15-1-2024) மகர சூரியன் (அதிகாலை 2.43).

(18-1-2024) தனசு சுக்கிரன் (இரவு 8.57).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கும்பம்.

16-1-2024 அதிகாலை 00.37 மணிக்கு மீனம்.

18-1-2024 அதிகாலை 3.33 மணிக்கு மேஷம்.

20-1-2024 காலை 8.52 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- புதன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோளான சூரியன் திங்கட்கிழமைமுதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும் யோகம் உண்டு. சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகால கடன்களை குறைத்துக் கொள்ளமுடியும். உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது நற்பலனைத் தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் ராகு சஞ்சரிப்பதாலும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூல மான பலன்களை பெறமுடியும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல் படுவது, உடன்பிறப்புகளிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறை யில் பயன்படுத்திக்கொண்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். சில விஷயங் களில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் வீண் அவப்பெயர்களைத் தவிர்த்து நல்ல பெயரை எடுக்கமுடியும். குருபகவான் 12-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகளைப் பெறக் கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. சில கிரகங்கள் சாதகம் மட்டும் இருந்தாலும் மேற்கொண்ட நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் சம சப்தமஸ்தானமான 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர் கள். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், வரும் திங்கட்கிழமை முதல் 8-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, வண்டி, வாகனங் களில் செல்கின்றபோது பொறுமையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத் தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள்போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகமிக நன்றாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக் குச் செல்பவர்கள் பணியில் சிறப் பாக செயல்படுவீர்கள் என்றா லும் அதிகாரியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து நீங்கள் எதிர்பார்த்தப் பலனை அடையமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

rasipalan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு திங்கட்கிழமைமுதல் 7-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல் களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்லவாய்ப்புகள்கூட தடைப் படும். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பதும் மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுக் காமல் இருப்பதும் நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்களது ஓய்வு நேரம் சற்றுக்குறையும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயத்தில் கவனம் செலுத்துவதைவிட படிப்பில் கவனமாக இருந்தால் நல்ல பெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் வீண் குழப்பம், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் சூழ்நிலை ஏற்படும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் முயற்சிகளுக்கு ஆதாயம் தரக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 5-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களுக்கு இருந்த கடந்தகால நெருக்கடிகள் குறையும் நாட்களாக வரும் வாரம் இருக்கும். வரும் திங்கட்கிழமைமுதல் ராசியாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்பட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறையும். சனி 7-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, வாகனங்களை செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வரும் வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற மன குழப்பங்கள், சுலபமாக முடியக்கூடிய காரியங்கள் தடைப்படக்கூடிய நிலை உண்டாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நற்பலனை அடையமுடியும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல், டென்ஷன் எல்லாம் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வயது மூத்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகநிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் விரும்பிய இடம் மாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுடைய பணியை பகிர்ந்துகொள்வதால் எதிலும் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வரும் நாட்களில் கணவன்- மனைவியிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வதும், பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பதும் உத்தமம். மாணவ- மாணவியர்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வரும் திங்கட்கிழமைமுதல் 4-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் சொல்படி நடந்து கொண்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சனிக்கிழமையன்று தேவையற்ற மன குழப்பமும் உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளைத் தரக்கூடிய நிலையும் ஏற்படும். இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமத மாகும். நெருங்கியவர்களே நிம்மதி குறைவுகளை ஏற்படுத்துவார்கள். இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படவேண்டும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். கேது 11-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் உடைய செயல்பாட்டில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படலாம். உடன்பிறந்தவரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி அதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதுமூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும். 5-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும் மிகச்சிறப்பான அமைப்பாகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி சமுதாயத்தில் ஒரு கௌரவ நிலையினை எட்டமுடியும். ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமானபலன்களை பெறமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையை அடையமுடியும். நீண்டநாட்களாக நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நற்பலன் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் நிறுவனத்தில் இனைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் கௌரவமானநிலை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்து செல்வது, உறவினரிடம் பேசுகின்றபொழுது கோபத்தைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நட்புகள் விஷயத்தில் சற்று கவனத் தோடு செயல்பட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். துர்க்கைக்கு தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லாதாக பேசினா லும் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரமென்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையீடாமல் இருப்பது நல்லது. குருபகவான் 4-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு உங்களது கையிருப்பு குறையும். தற்போது 12-ல் இருக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, எதிலும் சற்று கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. எந்த ஒரு செய-லும் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் சிந்தித்துச் செயல் படவேண்டிய நேரமாகும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் நீங்கள் தற்போது இருக்கக்கூடிய நிலையே ஒரு சிறப்பான நிலையாகும், மற்றவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிடவேண்டாம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் முழுமையான வெற்றியை தரும். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. பொதுவாக மற்றவரிடம் பேசுகின்றபொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து, பேசுவது நல்லது. குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் கவனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசில நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதன்மூலம் நீண்டநாள் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிக்கலாம். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் ஒருநல்ல நிலைமையை எட்டக்கூடிய ஒரு வாய்ப்புகளும் பெற்றோர்களுடைய ஆதரவு சிறப் பாக இருக்கக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக இருக்கும். சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீப மேற்றுவது நன்மையைத்தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குறிப்பாக ராசியாதிபதி குருபகவானும், 2-ஆம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 10-ல் புதன், திங்கட்கிழமைமுதல் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத லாபங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் பரிபூரண வெற்றியினை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லநிலை அடைவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர்மூலமாக நல்ல செய்தி கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை தட்டி செல்வார்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் தொட்டகாரியம் அனைத்தும் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் மேலும் வளமானபலன்களை பெறலாம்.

bala190124
இதையும் படியுங்கள்
Subscribe