முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 3.
செவ்வாய்: பூரம்- 4.
புதன்: பூரம்- 3.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 3 (வ).
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்: ஆடி 32 (17-8-2023) சிம்ம சூரியன் (பகல் 1.32).
ஆவணி 1 (18-8-2023) கன்னி செவ்வாய் (மாலை 3.54).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்
14-8-2023 அதிகாலை 4.25 மணிக்கு கடகம்.
16-8-2023 மாலை 4.58 மணிக்கு சிம்மம்.
19-8-2023 அதிகாலை 5.40 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- புதனுடன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து வழியில் ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். குரு பார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன்களை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் சிறு தடைக்குப் பிறகு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனிக்கிழமைகளில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றி கிடைப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாரத்தொடக்கத்தில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அசட்டு தைரியத்துடன் எதிலும் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 12-ல் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு சிக்கலான நேரமென்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில்ரீதியாக வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் அனைத்து செயலிலும் முன்நின்று செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்று. பெண்கள் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது சிறப்பு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்ககூடிய நாட்களாக இருக்கும். ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசி அதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான்- ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்ககூடிய அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தற்போது 2-ல் சஞ்சரிக்கக் கூடிய சூரியன் குடும்பத்தில் சிறுசிறு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் வரும் வியாழக்கிழமை முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலில் எளிதில் எடுக்க முடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் மிகையாகாது. அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. நெருங்கியவர்களே தேவை யற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்தி லும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பண பரிமாற்ற விஷயங்களில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். புதன் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் உதவியை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் நிலைமையை சமாளித்து போட்ட முதலில் எடுக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும் படி இருக்காது. ஒருசிலருக்கு எந்திரங்கள் பழுதாவதால் வீண்செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உடல் அசதி ஏற்படும் என்றாலும் உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பணி தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பெண்கள்வழியில் தேவையற்ற வீண்செலவுகள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்பொழுது கவனமாக இருக்கவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு கடந்தகால நெருக்கடிகள் சற்று குறையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், பாக்கியஸ்தானமான 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஒவ்வொரு காரியத்திலும் மிக சாமர்த்திய மாக செயல்பட்டு பொருளாதார ஏற்றங்களை பெறுவீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கூட்டாளியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை உண்டாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் ஒரு சில நேரங்களில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். சட்டரீதியாக இருக்கக்கூடிய சிக்கல்கள் எல்லாம் தற்போது தீர்ந்து மன நிம்மதி உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பும் அதன்மூலம் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மையை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- செவ்வாயுடன் 12-ல் சஞ்சரிப்பதாலும், குரு, ராகு 8-ல் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் நீங்கள் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் நடப்பது ஒன்றாக இருக்கும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படலாம். முடிந்தவரை ஆடம்பரத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஒருபெரிய மனிதருடைய உதவி உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். பெண்கள்வழியில் எதிர்பாராத அணுகூலங்களை பெறுவீர்கள். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதும் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்படுவதும்மூலம் அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றா லும் உடன்வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால் மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். வரும் நாட்களில் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசி அதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 10, 11 சஞ்சரிப்ப தால் உங்களது செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவையும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யமுடியும்.தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வளமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு அதிகப்படியான விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்டரீதியான பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் பணியில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எந்தச் செயலில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அணுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய்- புதன் சேர்க்கைப் பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு வலுவாக சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதாரநிலை சாதகமாக இருப்பது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு உள்ள தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற குழப்பங்களும், மனக்கவலைகளும் ஏற்படலாம் என்பதால் பொறுமை காப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் பரிபூரண வெற்றினை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, குரு பகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது நன்று.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமை முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக விலகி ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து மன மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன் அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச்சிறப்பாக இருக்கும். ஒருசில செயல்களில் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரிய ஆர்டர்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமுதாயத்தில் நல்லபெயர் எடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியில் சிறப்புடன் செயல்படமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாககூடிய ஒருகாலம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணபரிமாற்ற விஷயங்களில் வீண் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நீங்கள் சிக்கனமாக செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்கமுடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சின்னசின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது சிறப்பு. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் ஓய்வு நேரம் குறைவது மட்டும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடம் நிம்மதி குறைவு ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அணுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன் மாலை, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வீண் அலைச்சல் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதாலும், உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து சகலவிதத்திலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக் கூடிய ஒவ்வொரு செயலுக்கும் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் உங்கள் கடன்களை குறைத்துக் கொள்ளமுடியும். சம சப்தம ஸ்தானமான 7-ல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். மறைமுக பிரச்சினைகள் குறைவதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய மாற்றங் களை அடையக்கூடிய ஒரு அனுகூலமான நிலை உண்டாகும். ஒருசிலருக்கு சகஊழியர்களால் சில இடையூறுகள் இருந்தாலும் எந்தவித பிரச்சினையும் தைரியத்தோடு கையாளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தினால் அதில் முழுமையான வெற்றியினை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. வரும் சனிக்கிழமையன்று மன அமைதியற்ற நிலை, சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்வது, விநாயகருக்கு சூர தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பஞ்சமஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண, ரோக, ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பாகும். 2-ல் குரு வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, கடந்த காலங்களில் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது சுலபமாக கைகூடகூடிய ஒரு அமைப்புகள் உண்டு. தற்போது 5-ல் சஞ்சரிக்கக் கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமை முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் தற்போது நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவ செலவு குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வாய்ப்புகளும், நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் வரும் நாட்களில் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலமாக குடும்பத்தில் நிலவும் சங்கடங்கள் குறையும்.