முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: சித்திரை- 1.

செவ்வாய்: புனர்பூசம்- 2.

Advertisment

புதன்: சித்திரை- 4.

ww

குரு: மிருகசீரிடம்- 2 (வ).

சுக்கிரன்: விசாகம்- 4.

சனி: சதயம்- 4 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

கிரக மாற்றம்:

17-10-2024 துலா, சூரியன் காலை 7.42 மணிக்கு சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மகரம்

13-10-2024 பகல் 3.44 மணிக்கு கும்பம்.

15-10-2024 மாலை 4.48 மணிக்கு மீனம்.

17-10-2024 மாலை 4.20 மணிக்கு மேஷம்.

19-10-2024 மாலை 4.10 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமையானது மிகச்சிறப்பாக இருக்கும். வார முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு மதிப்புமிகுந்த இடத்திலிருந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.

we

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வரும் 17-ஆம் தேதிமுதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது வளமான பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதிய யுத்தி களை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த உயர்வுகளை அடையக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத் தோடு செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதாலும், விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நெருங்கியவர்களின் உதவியானது தக்க நேரத்தில் கிடைத்து பல்வேறு நெருக்கடிகள் விலகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்று குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி மன நிம்மதி ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக் கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய வளர்ச்சியானது சிறப் பாக இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். உடன் இருப்பவர்கள் சில இடையூறுகளை தந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வயதில் மூத்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பார்கள் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 18, 19.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பு களை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறைவதால் நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. பணி தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மாற்றுத் திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தற்போது குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தேவையற்ற வகையில் தாமதமாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். முடிந்தவரை அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு வேலையாட்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நல்லது. தூரப் பயணங்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகள்வழியில் தேவையற்ற நிம்மதிக்குறைவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்கள் ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கடந்த காலங்களில் தடைப்பட்டுவந்த சுப காரியத்திற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நன்மை ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி சமூக நிலை உண்டாக கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஜென்ம ராசியில் சுக்கிரன், வார முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்வழியில் ஒருசில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் காலநேரம் பார்க்காமல் தற்போது உழைத்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும் என்றாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வீண் வாக்குவாதங்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்ல வாய்ப்பு உண்டு. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் புதன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி நல்லவளர்ச்சி உண்டாகும். கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை எடுக்கும் வாய்ப்புகள் உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கின்ற உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு தற்போது நற்பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியியல் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பிள்ளைகள்வகையில் ஏற்பட்ட கவலைகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். இந்த வாரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் அடையக்கூடிய நேரமாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் நீங்கள் மன நிம்மதியுடன் செயல்படக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து ஒரு சுமூகமான நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைகூட நீங்கள் முடித்து ஒரு நல்ல நிலையினை அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசு பாராட்டுதல்களை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16, 17.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராகு 2-ல் இருப்ப தால் முடிந்தவரை பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது வீண் பிரச்சினைகளை குறைக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமைமுதல் 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் வாரத் தொடக்கத்தில் சில நெருக்கடி இருந்தாலும் வார இறுதியில் ஒருசில அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சற்று குறைத்துக் கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளி களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, இரவு நேரப் பயணங்களை தள்ளிவைப்பது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 18, 19.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத் தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனு பவிக்க இடையூறுகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக பேசினாலும் உடன் இருப்பவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். சில நேரங்களில் வேலை ஆட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளித்து ஒரு வளமான பலன்களை பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனமாக இருப்பது நல்லது. உடன் இருக்கக்கூடிய சக ஊழியர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நண்பர்கள் பேச்சைக் கேட்காமல் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16, 17.