முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 3.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2.
புதன்: பூரட்டாதி- 1.
குரு: ரேவதி- 2.
சுக்கிரன்: ரேவதி- 4.
சனி: அவிட்டம்- 4.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
மாசி 28 (12-3-2023) மேஷ சுக்கிரன் (காலை 8.27).
மாசி 29 (13-3-2023) மிதுன செவ்வாய் (காலை 5.03).
பங்குனி 1 (15-3-2023) மீன சூரியன் (காலை 6.34).
பங்குனி 2 (16-3-2023) மீன புதன் (பகல் 10.48).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
13-3-2023 அதிகாலை 2.18 மணிக்கு விருச்சிகம்.
15-3-2023 காலை 7.33 மணிக்கு தனுசு.
17-3-2023 காலை 10.48 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்கள் அனைத்தும் முழுமையான வெற்றிதரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபங்களைப் பெறமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் இழப்பு களைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்பவர் கள் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டு. பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும், அதன்மூலம் அனுகூலப் பலன்களும் அடையும் யோகமும் உண்டு. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் முன்னேற் றத்தைத் தரக்கூடியவையாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 11-ல் குரு ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்ச மிருக்காது. உங்களின் அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகும். சூரியன், புதனுடன் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நண்பர்கள் மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி சுக்கிரன், ராகு சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. திங்கட் கிழமைமுதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிக்கவிருப் பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், உடன் வேலை செய்பவர் களின் இடையூறுகள் விலகி சுமூகமான சூழ்நிலை யும் ஏற்படும். அசையா சொத்துகளில் முதலீடு செய் வதற்கான வாய்ப்புகளுண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். துர்க் கையம்மனுக்கு தீபமேற்று வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் இந்த வாரத்தில் 9, 10-ல் சூரியனுடன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு உங்கள் எண்ண
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 3.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2.
புதன்: பூரட்டாதி- 1.
குரு: ரேவதி- 2.
சுக்கிரன்: ரேவதி- 4.
சனி: அவிட்டம்- 4.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
மாசி 28 (12-3-2023) மேஷ சுக்கிரன் (காலை 8.27).
மாசி 29 (13-3-2023) மிதுன செவ்வாய் (காலை 5.03).
பங்குனி 1 (15-3-2023) மீன சூரியன் (காலை 6.34).
பங்குனி 2 (16-3-2023) மீன புதன் (பகல் 10.48).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
13-3-2023 அதிகாலை 2.18 மணிக்கு விருச்சிகம்.
15-3-2023 காலை 7.33 மணிக்கு தனுசு.
17-3-2023 காலை 10.48 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்கள் அனைத்தும் முழுமையான வெற்றிதரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபங்களைப் பெறமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் இழப்பு களைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்பவர் கள் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டு. பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும், அதன்மூலம் அனுகூலப் பலன்களும் அடையும் யோகமும் உண்டு. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் முன்னேற் றத்தைத் தரக்கூடியவையாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 11-ல் குரு ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்ச மிருக்காது. உங்களின் அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகும். சூரியன், புதனுடன் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நண்பர்கள் மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி சுக்கிரன், ராகு சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. திங்கட் கிழமைமுதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிக்கவிருப் பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், உடன் வேலை செய்பவர் களின் இடையூறுகள் விலகி சுமூகமான சூழ்நிலை யும் ஏற்படும். அசையா சொத்துகளில் முதலீடு செய் வதற்கான வாய்ப்புகளுண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். துர்க் கையம்மனுக்கு தீபமேற்று வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் இந்த வாரத்தில் 9, 10-ல் சூரியனுடன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சுக காரகன் சுக்கிரன், ராகுவுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெண்கள்வழியில் அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். குருபகவான் 10-ல் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்க மான நிலை இருக்கும். எனவே சிக்கனத்தோடு இருப்பது, மற்றவரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர் பார்ப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக் கும். ஒவ்வொரு செயலிலும் யோசித்து பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. அதிக நேரம் உழைப்பதால் உடல் அசதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு கூடுதல் பணிச் சுமை காரணமாக அலைச்சல் ஏற்படும். பிறர் பேச்சைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. கேது ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் இயற்கை உணவுகளை உட் கொள்வது நன்று. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் சிறப்பான அனுகூலங்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனைசெய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4லிஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்ப தாலும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், எதிர்பார்த்ததைவிட சிறப்பான பணவரவும் ஏற்படும். உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதிமுதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் விலகி நிம்மதியான நிலையுண்டாகும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப் பதால் நல்ல லாபங்களை அடையமுடியும். கூட் டாளிகளை சற்று கலந்தாலோசித்து செயல் படுவதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது அனுகூலங்களை அடைய இருக்கிறீர்கள். உங்களுக்குப் பிரச்சினை களை ஏற்படுத்தியவர் கள்கூட தற்போது நட்புடன் பழகும் நிலையுண்டாகும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியவையாக இருக் கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்கு களில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான அறிகுறி கள் தென்படும். புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்ப தாலும், திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எந்த வொரு நெருக்கடியையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் பலமுண்டாகும். ராசியாதிபதி சூரியன் இவ்வாரத்தில் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடு ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தேவையில்லாத நெருக்கடி கள் இருக்கும். உடன் இருப் பவர்களே உங்களது அமைதியைக் குலைப் பார்கள். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவை கள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வேலையாட்கள் புதிய கோரிக்கைகளை வைப்பார் கள். போட்டிகள் காரண மாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறு கள் உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிச் சுமை காரணமாக உடல் அசதி உண்டாகும். நெருக் கடியினால் எதிலும் ஒரு ஈடுபாடில்லாத நிலையிருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராதவகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை உங்கள் கைக்கு வந்துசேரும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நிறைவேறு வது மட்டுமல்லாமல் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி ஏற்படும். திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப் பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நவீன கரமான பொருட்களை வாங்கும் யோக முண்டு. வார முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பென்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்களை அடைவது மட்டுமல்லாமல், எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பெரிய பணிகளைக்கூட எளிதில் முடித்துவிடமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இட மாற்றமும், உங்கள் உழைப்புக்கான சன்மானமும் கிடைக்கும். படித்து முடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத் திலிருந்து அழைப்புவரும். திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. மகாலட்சுமி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் வரும் நாட்களில் 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், 8-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் புதன்கிழமைமுதல் 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் ஓரளவுக்கு விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவித்த உங்களுக்கு பணப்புழக்கம் சிறப்பாகி அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள், நெருக் கடியான நிலைகள் விலகி நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும், உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்கும் பலமேற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக் கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரும் இனிய செய்திகள் கிடைக்கும். ஞாயிறு, புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டா கும். மகாவிஷ்ணு வழிபாடு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதாலும், ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகத் திருப்திகரமாக இருக்கும். அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கடினமான பணிகளைக்கூட உங்கள் தனித்திறமையால் சுலபமாக செய்துமுடிப்பீர்கள். பணப் பரிமாற்ற விஷயங்களில் சிறப்பாக செயல் பட்டு எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. ராசியாதிபதி செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. சனி 4-ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்பதாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சில நேரங்களில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூல மான பலன்களை அடையக்கூடிய வாய்ப் பிருந்தாலும் ஓய்வுநேரம் குறையும். ஒரு பெரிய மனிதனுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந் தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல் படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் அனுகூலங்கள் உண்டு. திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், புதன்கிழமைமுதல் சூரியன் 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் எதையும் எதிர் கொண்டு லாபத்தை அடையும் வாய்ப்புகள் இருந்தாலும், ஓய்வுநேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தால் மட்டுமே இலக்கை எட்டமுடியும். சில நேரங்களில் உடனிருப் பவர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். வேலைக்குச் செல்பவர் களுக்கு அதிகாரிகள் கெடுபிடி இருப்பது மட்டுமல்லாமல், சக ஊழியர்களும் பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள். நீங்கள் சரியாகப் பணிபுரிந்தாலும் பழிச்சொற்களை எதிர் கொள்ளக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப் பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் பூர்த்தி யாகும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதா லும், 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். ராசிக்கு 5-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், புதன்கிழமை முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைத்து தற்போதுள்ள நெருக்கடிகள் சற்று குறையும். இவ்வாரம் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றலாம். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலச் செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித் துச்சென்றால் நிலைமையை சமாளித்து ஆதாயங்களைப் பெறடியும். கணக்கு வழக்குகளை சரிவரப் பராமரிப்பது, தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். புதிய வாய்ப்பு எதிர்பார்ப்பவர்கள் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணச் சேர்க்கை ஏற்பட்டு உங்களது பிரச்சினைகள் குறையும். ஆஞ்சனேயர் வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்ப தால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ப அமைந்து கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினைகள் சற்றுக் குறையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப் பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதாலும் உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இதுநாள் வரை 4-ல் சஞ்சரித்த செவ்வாய் தற்போது 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால் இனி உங்களுக் குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறைந்து அனுகூலமான பலன்களை அடைவீர் கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட் கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நற்பெயர் எடுக்கும் வாய்ப்புண்டு. நீங்கள் பட்ட கஷ்டத்திற்குத் தற்போது பலனடையப் போகிறீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். ஆஞ்சனேயர் வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் குரு, திங்கட்கிழமை முதல் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நன்மை தரும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் நேரமாகும். குடும்ப விஷயங் களைப் பிறரிடம் பேசாமலிருப்பது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவு, தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய லாபங்கள் தடைப்படும். சட்டரீதியான சிக்கல்கள் மன நிம்மதியைக் குறைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறைவது மட்டுமல்லாமல், உடன் வேலை செய்பவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எடுத்த பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் நெருக்கடிகள் சற்று குறையும். குலதெய்வ வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.