முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 2.
செவ்வாய்: விசாகம்- 3.
புதன்: அனுஷம்- 2.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: உத்திரம்- 4.
சனி: அவிட்டம்- 4.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 30 (16-11-2023) விருச்சிக- செவ்வாய் (பகல் 10.47).
கிருத்திகை 1 (17-11-2023) விருச்சிக- சூரியன் (அதிகாலை 1.19).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
13-11-2023 இரவு 9.17 மணிக்கு விருச்சிகம்.
16-11-2023 அதிகாலை 3.00 மணிக்கு தனுசு.
18-11-2023 காலை 7.00 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்களெல்லா வகையிலும் பொருளாதாரரீதியாக சுபிட்சமாக இருப்பீர்கள். கடந்தகால கடன்களை பைசல் செய்வது மட்டுமில்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். சற்று பொறுமையோடு விட்டுக்கொடுத்து சென்றால் சகல சௌபாக்கியங்களையும் அடைய முடியும். தொழிலில் உங்களின் நீண்டநாள் கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய காலமாக வரும் நாட்கள் இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துசென்றால் மிகவும் அனுகூலமான பலன்களை அடைய லாம். தொழில் வளர்ச்சிக்காக வெளியாட்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் நேரம் பணிபுரிய நேர்ந்தாலும் அதற்கான சன்மானத்தை அடைய முடியும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வண்டி, வாகனங் கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் பரிபூரண வெற்றியை தரும். செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நரசிம்மரை வழிபடுவது மூலமாகவும், சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மூலமாகவும் நல்லது நடக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
மாதக் கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று வார முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள சிக்கல்களிலிருந்து விடுபட்டு கௌரவமான நிலையினை எட்டமுடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், சுபகாரியங்கள் கைகூடி மனநிம்மதி ஏற்படும் நிலை இவ்வாரத்தில் உண்டு. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்ப தால் நீண்டநாட்களாக தீராத பிரச் சினைகளுக்கு எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். ஆடம்பரச் செலவு களை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. 12-ல் குரு சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில் ரீதியாக உங்களுக்கிருந்த சோதனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் புதிதாக தொழிலில் இணைவார்கள். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றமுடியும். உடல்நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வினை அடையமுடியும். மற்றவர்கள் பணியை எடுத்து செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதன்மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் மிகவும் அனுகூல மான பலன்களை பெறமுடியும். வியாழன், வெள்ளிக் கிழமைகளில் உங்களுக்கு வீண் குழப்பங்கள் நிலவும். விநாயகரைப் தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 2.
செவ்வாய்: விசாகம்- 3.
புதன்: அனுஷம்- 2.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: உத்திரம்- 4.
சனி: அவிட்டம்- 4.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 30 (16-11-2023) விருச்சிக- செவ்வாய் (பகல் 10.47).
கிருத்திகை 1 (17-11-2023) விருச்சிக- சூரியன் (அதிகாலை 1.19).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
13-11-2023 இரவு 9.17 மணிக்கு விருச்சிகம்.
16-11-2023 அதிகாலை 3.00 மணிக்கு தனுசு.
18-11-2023 காலை 7.00 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்களெல்லா வகையிலும் பொருளாதாரரீதியாக சுபிட்சமாக இருப்பீர்கள். கடந்தகால கடன்களை பைசல் செய்வது மட்டுமில்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். சற்று பொறுமையோடு விட்டுக்கொடுத்து சென்றால் சகல சௌபாக்கியங்களையும் அடைய முடியும். தொழிலில் உங்களின் நீண்டநாள் கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய காலமாக வரும் நாட்கள் இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துசென்றால் மிகவும் அனுகூலமான பலன்களை அடைய லாம். தொழில் வளர்ச்சிக்காக வெளியாட்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் நேரம் பணிபுரிய நேர்ந்தாலும் அதற்கான சன்மானத்தை அடைய முடியும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வண்டி, வாகனங் கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் பரிபூரண வெற்றியை தரும். செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நரசிம்மரை வழிபடுவது மூலமாகவும், சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மூலமாகவும் நல்லது நடக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
மாதக் கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று வார முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள சிக்கல்களிலிருந்து விடுபட்டு கௌரவமான நிலையினை எட்டமுடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், சுபகாரியங்கள் கைகூடி மனநிம்மதி ஏற்படும் நிலை இவ்வாரத்தில் உண்டு. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்ப தால் நீண்டநாட்களாக தீராத பிரச் சினைகளுக்கு எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். ஆடம்பரச் செலவு களை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. 12-ல் குரு சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில் ரீதியாக உங்களுக்கிருந்த சோதனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் புதிதாக தொழிலில் இணைவார்கள். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றமுடியும். உடல்நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வினை அடையமுடியும். மற்றவர்கள் பணியை எடுத்து செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதன்மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் மிகவும் அனுகூல மான பலன்களை பெறமுடியும். வியாழன், வெள்ளிக் கிழமைகளில் உங்களுக்கு வீண் குழப்பங்கள் நிலவும். விநாயகரைப் தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதாலும், சனி 9-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல் படுவீர்கள். குரு 11-ல் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் 10-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நடந்தால் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு செலவுகள் விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் தேவையற்ற கடன்களை தவிர்க்கமுடியும். வயதில் மூத்தவர் களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பூர்வீக சொத்துவழியில் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சற்று சிந்தித்து செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்சமயத்துக்கு தள்ளிவைப்பது உத்தமம். ஒருசில இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தட்டிப்போகும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை கேட்டு குழப்பிக்கொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்பட்டால் எந்த பிரச்சினை யும் ஏற்படாது. தற்போது சற்று பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இவ்வாரத்தில் சனிக்கிழமையன்று எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
குரு வக்ரகதியில் இருப்பதாலும், ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் ஏற்படும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுகொடுத்து செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுக்கு அஜீரண கோளாறு, வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடனும், கட்டுப்பாடுடனும் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு அதில் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டு. தொழிலில் லாபங்கள் அதிகப்படியாக கிடைத்து கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிலும் நிம்மதியுடன் இருக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட கூடிய மனநிலை ஏற்படும். உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்திய சக ஊழியர்கள் தற்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் சற்றும் எதிர்பாராதவகையில் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து மேலோங்கும் நேரமாக இருக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து கடந்தகால கடன்கள் குறைவது மட்டுமில்லாமல் முதலீடு செய்யும் அளவிற்கு பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மனநிம்மதி அடைவீர்கள். சனி 7-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துகொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்களுக்கு கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உங்களை தவறாக புரிந்துகொண்டவர்கள்கூட தற்போது நிலைமையை உணர்ந்து உங்களிடம் நட்பாக பழகுவார்கள். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து சிலருக்கு குடும்பத்துடன் இணையும் யோகம் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கான சன்மானம் தற்போது கிடைப்பதால் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும் என்பதால் பூமி, மனை வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது நடக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்களது சங்கடங்கள் குறையும். எதிலும் துணிவோடு செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காணமுடியும். ஜென்ம ராசிக்கு 7-ல் ராகு, இவ்வாரத்தில் பிரதான நாட்கள் 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக செயல்பட்டாலும் தேவையற்ற சிக்கல்கள் உங்களை தேடிவரும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைகூட எளிதில் செய்துமுடித்து லாபத்தை ஈட்டமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள்மூலம் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தற்போது கிடைத்து மன நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்தபணியை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய யோகம் இருந்தாலும் வேலைப்பளு காரணமாக உடல் அசதி, உடன் வேலை செய்பவர்களால் சற்று மன உளைச்சல் ஏற்படும். அதிகாரிகள் சற்று உதவிகரமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளமுடியும். வரும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்பதால் மேற்கூறிய நாட்களில் முக்கிய செயல்களில் ஈடுபடுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சர்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு சனி 5-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களை தேடிவரும். குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடையமுடியும். சூரியன், செவ்வாய் இவ் வாரத்தில் 1, 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சிக்கனத்தோடு இருக்கவும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்குத் தக்கவாறு யோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சற்று நெருக்கடியான நேரம் என்பதால் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் முடிந்தவரை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லநிலையை அடையமுடியும். தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையில்லாத நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகள் சொல்படி கேட்டு நடந்துகொண்டால் எதையும் சமாளிக்க முடியும். சக ஊழியர்களை நம்பி முக்கிய விஷயங்களை பேசினால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். உங்களது உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற செயல்கள்மூலம் அனுகூலப்பலன் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. நினைத்த காரியத்தை நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செய்துமுடித்து எல்லா வகையிலும் வளர்ச்சியை அடைவீர்கள். சனி 4-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோளான சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் 12-ல் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்படும் நேரமென்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்து வது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வரும் நாட்களில் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துகள்மூலம் சுபச்செலவுகள் உண்டாகும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது பைசல் செய்யமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வங்கிக்கடன்கள் எல்லாம்கூட தற்போது கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். நெருங்கிய நண்பர்களின் ஆலோ சனையால் எடுத்த ஆர்டர்களை சிறப்பாக செய்துமுடித்து சமுதாயத்தில் தொழில்ரீதியாக ஒரு கௌரவ நிலையினை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு மதிப்பு, மரியாதைகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். பணிச்சுமை காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் நிலை ஏற்படலாம். வரும் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் எதிர்பாராதவகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத கோளான சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும்கூட வரும் நாட்களில் தீர்வு ஏற்படும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகள் தற்போது கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு வராமல் இருந்த பணங்கள் தற்போது வந்து உங்களின் நீண்டநாளைய பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் தீரும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நல்லவாய்ப்புகள் ஏற்படும். அதிகாரிகள் உதவியானது அனுகூலமாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வாய்ப்பு தற்போது கிடைக்கும். ராகு 4-ல் இருப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபோது நிதானத்தோடு செல்வது உத்தமம். வரும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்டநாள் இழுபறி நிலையில் இருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், செவ்வாய் இவ்வாரத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடிவரும். குரு 4-ல் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக சற்று தேக்கநிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயமடைவீர்கள். பெண்களின் உதவியால் உங்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பெற்றோர் வழியில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுகொடுத்து செல்வது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. உங்களின் உடல்நலத்திற்கும் சற்றுநேரம் ஒதுக்குவது நன்று. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படவும். வேலையாட்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல்அசதி, உடனிருப்பவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது உத்தமம். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடப்பதாலும், மூன்றில் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடி, உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள். எந்த ஒரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கமுடியும். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 9, 10-ல்- சூரியன், செவ்வாயும் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தொழில், வியாபாரத்தில் உங்களின் சாமர்த்தியத்தால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் சரிவர ஒத்துழைக்கமாட்டார்கள் என்பதால் நீங்கள் கால நேரம் பார்க்காமல் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் வீண்விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது வீண்பழிச்சொற்களும் ஏற்படும். வெளிநபர்களிடம் எதையும் பேசாமல் இருந்தால் சூழ்நிலையை சமாளிக்கமுடியும். பிரதான கிரகங்களின் சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன் 9-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்கள் கிடைக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ளமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்றுப் பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில்ரீதியாக நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் வேலையாட்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. தொழில் விஷயங்களை புதிய நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு மிகவும் கவனமாக செயல்படவேண்டிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். ஒருசில நேரங்களில் பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் நேரம் என்பதால் சற்று கவனத் தோடு செயல்பட்டால் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்துவிடலாம். இவ்வார தொடக்க நாளான ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தேவையற்ற குழப்பங்கள், மன நிம்மதி குறைவு ஏற்படும். எதிலும் நிதானத்துடனும், கவனத் துடனும் இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும்.