முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 4.
செவ்வாய்: ரோகிணி- 3.
புதன்: அஸ்தம்- 2 (வ).
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: மகம்- 4.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
ஆவணி 32 (17-9-2022) கன்னி சூரியன் (காலை 7.22).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
13-9-2022 காலை 6.35 மணிக்கு மேஷம்.
15-9-2022 பகல் 2.28 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சர்ப்ப கிரகங்கள் உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். 5-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் தக்கநேரத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய யோகமுண்டு. ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு உங்களுக்குக் கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். சட்ட சிக்கல்கள் விலகி தொழிலில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப் பாக செய்துமுடிப்பீர்கள். அலைச்சல்கள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்குவீர்கள். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் அரங்கேறும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், புதன் 5-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் அடையவேண்டிய இலக்கை அடையும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் விலகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், சுக ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதால், அதிக அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் என்ற எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலம் மகிழ்ச்சியடையக்கூடிய அளவுக்கு ஒரு இனிய செய்தி கிடைக்கும். தொழில்ரீதியாக சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீங்கள் போட்ட முதலீட்டை வரும் நாட்களில் எளிதில் எடுத்துவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது பழிச்சொற்களைச் சொல்வார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் கவனத்தோடு செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். வெளிநபர்களிடம் வீண் பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய செயல்களில் ஈடுபட்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலங்களை அடைவீர்கள். முருக வழிபாடு, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 4.
செவ்வாய்: ரோகிணி- 3.
புதன்: அஸ்தம்- 2 (வ).
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: மகம்- 4.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
ஆவணி 32 (17-9-2022) கன்னி சூரியன் (காலை 7.22).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
13-9-2022 காலை 6.35 மணிக்கு மேஷம்.
15-9-2022 பகல் 2.28 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சர்ப்ப கிரகங்கள் உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். 5-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் தக்கநேரத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய யோகமுண்டு. ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு உங்களுக்குக் கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். சட்ட சிக்கல்கள் விலகி தொழிலில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப் பாக செய்துமுடிப்பீர்கள். அலைச்சல்கள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்குவீர்கள். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் அரங்கேறும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், புதன் 5-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் அடையவேண்டிய இலக்கை அடையும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் விலகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், சுக ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதால், அதிக அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் என்ற எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலம் மகிழ்ச்சியடையக்கூடிய அளவுக்கு ஒரு இனிய செய்தி கிடைக்கும். தொழில்ரீதியாக சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீங்கள் போட்ட முதலீட்டை வரும் நாட்களில் எளிதில் எடுத்துவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது பழிச்சொற்களைச் சொல்வார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் கவனத்தோடு செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். வெளிநபர்களிடம் வீண் பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய செயல்களில் ஈடுபட்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலங்களை அடைவீர்கள். முருக வழிபாடு, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால், எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு உடனிருப்பவர்களின் ஆதரவானது சிறப் பாக இருக்கும். நம்பிக்கை கூறிய நபர்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியொன்று கிடைக் கும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருக்கும் கடன் பிரச்சினைகள் கூட ஓரளவுக்கு குறைந்து நிம்மதி ஏற்படும். ராசியாதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 5-ல் கேது சஞ்சரிப்பதாலும் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. இரவுநேரப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது உத்தமம். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளும், உத்தரவுகளும் வரும் நாட்களில் கிடைக்கும். வேலையாட்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், அதனை உங்களின் தனித்திறமையால் எளிதில் சமாளித்து தொழில்ரீதியாக நல்ல முன்னேற் றங்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நன்று. உத்தியோகரீதியாக பிறரால் முடிக்கமுடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு எளிதில் முடித்துவிடுவீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தற்போது குறைந்து சுமுகமான சூழ்நிலை ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமானதாக இருக்கும். கந்த சஷ்டி கவசம் படிப்பது, செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதமிருப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். நீண்டநாட்களாக எதிர் பார்த்த நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடினமான பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்கக்கூடிய பலமுண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனுகூலங்கள் ஏற்படுமென்றாலும், ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வாகனங்கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாமர்த்திய மாக செயல்பட்டு லாபத்தை அடையும் வாய்ப்புகள் ஏற்படும். என்றாலும் சில வெளிநபர்களின் செயல்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல் களை சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு செயலிலும் பொறுமையோடு செயல்படுவது நன்று. மற்றவர்கள் பணியையும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை தற்போதைக்கு உள்ளதால் டென்ஷன், உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டு மனநிம்மதி சற்று குறையும். பிறர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்காமல், உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்ல நிலையை எட்டமுடியும். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அதிகப்படியான ஆதாயங்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற் கொள்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுடைய வேகத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவு சற்று சாதகமாக இருக்குமென்றாலும், கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. உங்கள் சக்திக்குமீறி வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் சற்று குறையுமென்றாலும் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்ப தைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநபர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகாலப் பிரச்சினைகள் விலகி நிம்மதியுண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்பு களைத் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் மூலமாக நெருக்கடிகள் ஏற்படும் நேரமென்பதால் அனைத்து செயலிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். உடன் வேலை செய்பவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்று. அசையா சொத்துவகையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், வீண் குழப்பங்கள் ஏற்படும். வெள்ளி, சனிக்கிழமைகளில் மிகவும் சாதகமான பலன்களை அடையமுடியும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அபிஷேகம் செய்வது கெடுதியைக் குறைக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
சூரியன், சுக்கிரனுடன் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். மிகவும் நம்பியவர்களே பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் வீண் செலவுகளால் மன அமைதி குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு கள் நிலவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டிய நேரமாகும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. முக்கிய முடிவெடுக் கின்றபொழுது மிகவும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்றாக இருக்கும். வேலை யாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். உங்கள் உழைப்புக்கான பலன்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், தற்போதைக்கு ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் சூரியனுடன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய உன்னதமான வாரமாக வரும் நாட்கள் இருக்கும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் கைகூடும் சூழல் ஏற்படும். ஒருசிலருக்கு நவீனகரமான பொருட் களை வாங்கும் வாய்ப்புண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்த கவலைகள் மறைந்து நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுத்து கடன் பிரச்சினைகளை பைசல் செய்யமுடியும். தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, இரவுப் பயணங்களில் கவனத்தோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலமாகும். சிறப் பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல் எதிர்பார்த்த உயர்வான நிலையை எட்ட முடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தி-ருந்து அழைப்பு வரும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் அனைத்துவிதமான செயல்களிலும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு செய்வது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருந்து பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உள்ள நெருக்கடிகள் தற்போது விலகி அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் தற்போது விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் கௌரவமான நிலையினை எட்டமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் முடித்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யமுடியும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் தீர்வு கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வரும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சி நடக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் உங்களுக் குள்ள கடந்தகால பிரச்சினைகள் முழுமையாக விலகி குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். வாங்கிய கடன்களைப் படிப்படியாக பைசல் செய்யமுடியும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் உண்டு. ராசிக்கு 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. உறவினர்களின் ஆதரவானது சிறப்பாக இருப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். தொழில்ரீதியாக இருந்துவந்த பொருட் தேக்கங்கள் விலகி, சந்தையில் நல்ல விலை கிடைக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் முழுமையாக மறைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடிப் பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உடன் வேலை செய்பவர் கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் பரிபூரண வெற்றி கிடைக்கும். சனிபகவானுக்கு சனிக் கிழமையன்று கருப்புநிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் பொருளாதார நெருக் கடிகள் ஏற்படும். நியாயப்படி கிடைக்க வேண்டிய பண வரவுகள்கூட தேவையற்ற வகை யில் தடைப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தூரப் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. குரு வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கக்கூடிய பலம் கிடைக்கும். என்றாலும் எதிலும் தற்போதைக்கு சிக்கனமாக இருப்பது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். அரசுவழி அதிகாரிகள் செய்யக்கூடிய சில செயல்களால் தொழிலில் உங்களது அமைதி யானது குறையும். சூழலுக்குத் தக்கவாறு மிகவும் கவனத்தோடு ஒவ்வொரு விஷயத் தையும் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது உத்தமம். சக ஊழியர்கள் சில நேரங்களில் உங்களுக்கு உதவியாக இருந்தா லும், நீங்கள் பணியில் சிறப்பாக செயல்படு வதற்கு உங்களது ஆரோக்கியமே ஒரு இடையூ றாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செயல் களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய வலிமை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். ராசிக்கு 4-ல் செவ்வாய், 7லில் சூரியன் சஞ்சரிப்ப தால் அலைச்சல், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை யாட்களின் செயல்களால் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். சிலருக்கு நெருங்கியவர் களே நெருக்கடிகளை உண்டாக்கக்கூடிய நேரமென்பதால் எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பி செயல்படாமல் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. இயந்திரங்களைப் பழுது பார்ப் பதற்காக செலவு செய்ய நேரிடும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடன் வேலை செய்பவர்கள் உதவியாக இருந்தாலும் எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய காலமாகும். உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவரிடம் சற்று பொறுமை யோடு இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுடைய அனைத்துவிதமான செயல் களுக்கும் முழுமையான வெற்றியினைப் பெறுவீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு, முருகன் தலங்களுக்குச் சென்றுவருவது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால், பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருக்கும். கடந்தகால கடன் பிரச்சினைகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் அனைத்திலும் தைரியத்துடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். ராகு 2-ல் இருப்பதால் பிறரிடம் உணர்ச்சிவசப்படாமல், முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தி களைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவதால் நீங்கள் எடுத்த ஆர்டரை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலமுண்டாகும். தொழில் விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன் அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைப்பதால் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்வது, ஏழைகளுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி செய்வது நல்லது.