முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 1.
செவ்வாய்: ஆயில்யம்- 1.
புதன்: கிருத்திகை- 3.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: பூசம்- 3.
சனி: சதயம்- 2.
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்:
வைகாசி 32 (15-6-2023)
மிதுன சூரியன்
(மாலை 6.16).
ஆனி 2 (17-6-2023) சனி (வ) ஆரம்பம் (இரவு 9.49).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
11-6-2023 காலை 8.46 மணிக்கு மீனம்.
13-6-2023 பகல் 1.32 மணிக்கு மேஷம்.
15-6-2023 இரவு 8.23 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிர னும், 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறும் வாய்ப்புண்டு. பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு பார்வை 7-ஆமிடத் திற்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் வரும் நாட்களில் கை கூடும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 15-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிலவக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி நெருங்கியவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கௌரவமான நிலையினை அடையும் வாய்ப்புகள், போட்ட முதலை எடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்குமென்பதால் பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். புதன், வியாழன் ஆகிய கிழமைகள் உங்களுக்கு வளமான பலன்களை தரக்கூடிய நாட்களாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்ப தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அனைத்துவிதமான பிரச்சினைகளை யும் உங்கள் தனித் திறமையால் கையாண்டு இலக்கை அடைவீர்கள். தனகாரகன் குரு 12-ல் ராகு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. நம்பியவர் களே நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் வேலையாட் களுடைய ஒத்துழைப்பை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் கவனத் தோடு இருந்தால்தான் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சக ஊழியருடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மையைத் தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் குரு, ராகு சஞ்சரிப்ப தால் பண வரவுகள் மிக தாராளமாக இருந்து அனைத்து தேவைகளையும் எளிதில் பூர்த்திசெய்ய முடியும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குடும்பத்துக்குத் தேவையான நவீன கரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 15-ஆம் தேதி வரை 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகள்மூலமாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகமுண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது பலனளித்து சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். உடல் ஆரோக்கிய மானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, லஷ்மி நரசிம்மரை வழிபடுவது நன்மையைத் தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது, சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. குருபகவான் 10-ல் சஞ்சரிப்ப தால் பணப் பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கு யென்பதால் மிகவும் பொறுமையோடும் நிதானத்தோடும் இருக்கவேண்டிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. உங்களது முன்கோபத்தால் உடன் இருப்பவர் களே வீண் நெருக்கடிகளை உண்டாக்கு வார்கள். முடிந்தவரை பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். 15-ஆம் தேதிவரை சூரியன் 11-ல் புதனுடன் சஞ்சரிப்பதால் சில வாய்ப்புகள் கிடைக்குமென்றாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் கவனமாக இருந்தால் வீண் செலவுகளை குறைக்கமுடியும். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களிடம் வீண் பேச்சைத் தவிர்த்துவிட்டு ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடந்து அதன்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக் முடிந்த உதவியைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, ராகு சஞ்சரிப்ப தும், ராசியாதிபதி சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எதிர் பாராத தன வரவுகள் ஏற்பட்டு அனைத்து வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள் உங்களது மதிப்பும், மரியாதை யும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக ஒருசில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் எளிதில் காப்பாற்றுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச்சென்றால் வளமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த போட்டி, பொறாமைகள் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் வரும் நாட்களில் பலனடைய உள்ளீர்கள். உங்களின் சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். அதிகாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாகக் குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய நேரமாக இருக்கும். பெருமாள் வழிபாடு, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனைசெய்வது நற்பலனைத் தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் மிக தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். வீடு, மனை வாங்க வேண்டுமென்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெறுவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி பணியில் சுமூகமான நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சனி 5-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து அசையா சொத்துவகையில் அனுகூலங்களை பெறுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் 15-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம்கூட விலகி சகலவிதத்திலும் அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவுகூட உங்களுக்கு கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்துவந்த வம்புவழக்குகளுக்கு வரும் நாட்களில் ஒரு முடிவு கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். வெளிநபரிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டாம்.. சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாவிஷ்ணு வழிபாடு, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், தனக்காரகன் குரு 6-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். உடனிருப்பவர்களே உங்கள் அமைதியைக் குறைப்பார்கள். பண விஷயத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய பலத்தை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு சிக்கனத்தோடு இருந்துவிட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக ஏற்படக்கூடிய நெருக்கடிகள் மன அமைதியைக் குறைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ள நேரிடும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மிக முக்கியமான பயணங்களை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மையைத்தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும் வாரத் தொடக்கத்தில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப் பாக இருந்து உங்கள் தேவைகள் நிறைவேறுவதுடன் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளையும் எளிதில் நிறைவேற்று பலம் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. உங்களுக்கு இருந்த கடந்தகால சங்கடங்கள் எல்லாம் முழுமையாக மறைந்து மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக விலகி ஒற்றுமை அதிகரிக்கும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது மிக மிக நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல நிலையினை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகி சந்தோஷம் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், விரும்பிய பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சக ஊழியரிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பது நன்மையை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செய-லும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது உத்தமம். குரு பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது தற்போதைக்கு உத்தமம். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 7-ல் சுக்கிரன் இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் பல்வேறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலையாட்களை அனுசரித்துசென்றால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். ஒருசில நேரங்களில் கூட்டாளிகளுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் உங்களது சிக்கல்களை சமாளிக்கமுடியும். கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பைகூட தவறவிடாமல் எதிலும் கவனத்தோடு செயல்படுவது நன்மையை தரும். உத்தியோகரீதியாக கூடுதல் பணி சுமை காரணமாக மன அமைதி குறைவது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும், எதிர்பாராதவகையில் பொருளாதார உதவிகளும் உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 6-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், வீண் அலைச்சல்கள், எதிர்பாராத செலவுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் உங்கள் மன தைரியத்தால் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறரை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காது. சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் தற்போதுள்ள நிலைமையை சமாளிக்கமுடியும். அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை தகுந்த முறையில் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சரிவர பணிபுரிவதற்கு உங்களது ஆரோக்கியமே ஒரு இடையூறாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, அதிகாரியிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக இருப்பதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனு கூலங்கள் கிடைக் கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குரு 2-ல் பலமாக சஞ்சரிப்பதாலும், பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் தாராள தன வரவுகள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி உண்டாகும். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் வரும் நாட்களில் கைகூடும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமான ஒரு சூழலை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஏற்றங் களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை பெற முடியும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை வருகின்ற நாட்களில் அடைவீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் பொருளாதாரரீதியாக அனுகூலங்களை பெறமுடியும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மையை தரும்.