முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 2.
செவ்வாய்: உத்திராடம்- 3.
புதன்: திருவோணம்- 2.
குரு: பரணி- 1.
சுக்கிரன்: உத்திராடம்- 1.
சனி: சதயம்- 3.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
தை 29 (12-2-2024) மகரச் சுக்கிரன் (அதிகாலை 4.53).
மாசி 1 (13-2-2024) கும்ப சூரியன் (பகல் 3.44).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கும்பம்.
12-2-2024 காலை 9.35 மணிக்கு மீனம்.
14-2-2024 காலை 10.43 மணிக்கு மேஷம்.
16-2-2024 பகல் 2.43 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும், மாதக் கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைப்ப தெல்லாம் நடக்கும். உங்களது பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்ககூடிய நேரமாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பணவரவுகள் சாதக மாக இருந்து நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தற்போது வெற்றியைத் தரும். ஒருசிலருக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவு களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர்- வெளிநாடுகள்மூலமாக ஆதாயம் தரக்கூடிய செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட பதவி உயர்வுகள் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங் களை அடையமுடியும். துர்க் கையம்மனை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவதன் மூலமாக வளமான பலன்களை அடைய முடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்ககூடிய சுக்கிரன் வரும் திங்கட் கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து மனநிம்மதி உண்டாகும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போது தவிர்க்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் போட்ட முதலீடுகளை எடுக்கமுடியும். ஏழாம் அதிபதி செவ்வாய் 9-ல் உச்சம்பெற்றிருப்பதால் கூட்டாளிகள்மூலமாக ஒருசில வளமானப் பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். மற்றவர்களுடைய பணியை நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தினால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள சங்கடங்கள் குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் இருக்கும் பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 2.
செவ்வாய்: உத்திராடம்- 3.
புதன்: திருவோணம்- 2.
குரு: பரணி- 1.
சுக்கிரன்: உத்திராடம்- 1.
சனி: சதயம்- 3.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
தை 29 (12-2-2024) மகரச் சுக்கிரன் (அதிகாலை 4.53).
மாசி 1 (13-2-2024) கும்ப சூரியன் (பகல் 3.44).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கும்பம்.
12-2-2024 காலை 9.35 மணிக்கு மீனம்.
14-2-2024 காலை 10.43 மணிக்கு மேஷம்.
16-2-2024 பகல் 2.43 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும், மாதக் கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைப்ப தெல்லாம் நடக்கும். உங்களது பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்ககூடிய நேரமாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பணவரவுகள் சாதக மாக இருந்து நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தற்போது வெற்றியைத் தரும். ஒருசிலருக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவு களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர்- வெளிநாடுகள்மூலமாக ஆதாயம் தரக்கூடிய செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட பதவி உயர்வுகள் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங் களை அடையமுடியும். துர்க் கையம்மனை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவதன் மூலமாக வளமான பலன்களை அடைய முடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்ககூடிய சுக்கிரன் வரும் திங்கட் கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து மனநிம்மதி உண்டாகும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போது தவிர்க்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் போட்ட முதலீடுகளை எடுக்கமுடியும். ஏழாம் அதிபதி செவ்வாய் 9-ல் உச்சம்பெற்றிருப்பதால் கூட்டாளிகள்மூலமாக ஒருசில வளமானப் பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். மற்றவர்களுடைய பணியை நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தினால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள சங்கடங்கள் குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் இருக்கும் பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தற்போது உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல்ரீதியாக இருக்கக்கூடிய சின்னசின்ன பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கிய வர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எளிதில் லாபம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தூரப் பயணங்கள் மேற் கொள்ளும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்ல, விரும்பிய இடமாற்றங்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. பூர்வீகச் சொத்து வகையில் நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு தெய்வ தரிசனங்கள் மேற் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கோபப்படாமல் பொறுமையோடு செயல்பட்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருந்து உங்களின் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பதன்மூலம் பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன்- நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளிடம் மன ஸ்தாபம் ஏற்பட்டு உங்களுடைய அன்றாட செயல்களில் மன நிம்மதிக் குறைவு உண்டாகும். முடிந்தவரை வேலை யாட்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை முடிந்தவரை தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடிய ஒருநிலை உண்டாகும். தேவையற்றவகையில் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்து வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள் காலை ஆகிய நேரங்களில் தேவையற்ற அலைச்சல், மனநிம்மதி குறைவு உண்டாகும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். கால பைரவரை வழிபாடு செய்வது, சிவன் தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் செவ்வாய் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமையப் பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மனைவி, பிள்ளை கள் விரும்பியதை வாங்கித்தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனியும், வரும் செவ்வாய்க் கிழமைமுதல் 7-ல் சூரியனும் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப் பான விலை கிடைப்பது மட்டுமில்லாமல் கூட்டாளிகளை சற்ற அனுசரித்துச் சென்றால் மேலும் வளமான பலன்களை அடையலாம். பெண்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவர் களால் முடிக்கமுடியாத பணிகளைகூட உங்களின் தனித் திறமையால் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்க முடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் பெறுவீர் கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் காலை நேரங்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு நேரமென்பதால் எதிலும் கவனத் தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனிக்கிழமை கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதியான புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன், செவ்வாய்க்கிழமைமுதல் 6-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு சிறப்பான அமைப்பாகும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து கடந்தகால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக இருந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது குறைந்து சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்பும், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல் படுவீர்கள். உயர்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத்தரும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாள் பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு முடிவுக்கு வரும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் ஒரு புதிய முயற்சி ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை, தேவை யற்ற குழப்பங்கள் ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் திங்கட்கிழமைமுதல் கேந்திர ஸ்தானமான 4-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலையும் ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் பொருளாதார அணுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய யோகம் இருக்கிறது. தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் வழியி-ருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். வெள்ளி மதியத்திற்கு பின்பு, சனிக்கிழமை ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிச்செய்வது நன்மையைத் தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் பொறுமை யோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளித்து அனுகூலங்களை அடைய முடியும். தற்போது 3-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் 4-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரித்து, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்ப தால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் ஒருசில அனுகூல மான பலன்களை பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருந்தால் நிலைமையை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஏற்படக் கூடிய சிறு சிறு உடல் உபாதைகளைத் தவிர்க்கமுடியும். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்ககூடிய நேரமாகும். தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். திங்கட்கிழமைமுதல் 2-ல் சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கடந்தகால சிக்கல்கள் குறையக்கூடிய அமைப்புகள் ஏற்படும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் வரும் நாட்களில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றுவதால் தொழில்ரீதியாக இருந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். ஒருசிலருக்கு அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வரும் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெற்று உங்களுக்கு உள்ள கனவுகளை நிறைவேற்றமுடியும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் குரு சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச்சினை கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருக்கவேண்டும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்ற வர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். ஜென்ம ராசியில் புதன், திங்கட்கிழமைமுதல் ஜென்ம ராசி யில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடியில் இருந்தாலும் உங்கள் தனித் திறமை யால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மிக கவனமாக செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினை களைச் சமாளிக்கமுடியும். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்படுவதன்மூலமாக ஒருசில உதவிகளை அவர்கள்மூலம் அடையமுடியும். தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருந்தால் நல்லபெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருக்கவேண்டும். இயற்கை உணவுகளை உட் கொள்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய நாட்களாக இருக்கும். மேற்கூறிய நாட்களில் ஏதாவது ஒரு செயல் ஈடுபட்டால் நல்ல ஆதரவு கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் வளமான பலன்களை அடையலாம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் நெருக்கடி, தேவையற்ற நிம்மதிக்குறைவு ஏற்படும். உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரித்த சுக்கிரன் வரும் திங்கட்கிழமைமுதல் புதன் சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையில்லாத வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கூட்டாளிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருப்ப தால் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். உடனிருப்ப வர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். வேலையாட்கள் விஷயத் தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்து விட வேண்டாம். குறிப்பாக உங்கள் பணியில் கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலை புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஆதாயங்களை அடையமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவர் வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். கடந்தகாலங்கள் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கக்கூடிய நேரமாகும். நீண்டநாட்களாக தடைபட்டுவந்த உங்கள் முயற்சிகளுக்கு வரும் நாட்களில் நல்லசெய்தி கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் அனுகூலங்கள் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகக்கூடிய ஒருநிலை ஏற்படும். குறிப்பாக உங்கள்மீது இருந்த வீண்பழி சொற்கள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதியுடன் பணி புரியமுடியும். வரும் செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குறிப்பாக வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சரபேஸ்வரரை தரிசிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.