முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: கேட்டை- 3.
செவ்வாய்: ரோகிணி- 4 (வ).
புதன்: மூலம்- 4.
குரு: உத்திரட்டாதி- 1.
சுக்கிரன்: மூலம்- 3.
சனி: அவிட்டம்- 1.
ராகு: பரணி- 2.
கேது: சுவாதி- 4.
கிரக மாற்றம்:
மார்கழி 1 (16-12-2022) தனுசு
சூரியன் (காலை 9.58).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
11-12-2022 பகல் 1.51 மணிக்கு கடகம்.
14-12-2022 அதிகாலை 2.32 மணிக்கு சிம்மம்.
16-12-2022 பகல் 2.03 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன் 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். நெருங்கியவர் களின் உதவி தக்க நேரத்தில் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருக்கவும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 15-ஆம் தேதிவரை சூரியன் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதாலும், 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் பணப்பரிமாற்ற விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காதென்பதால் எந்த வொரு வேலையையும் நீங்களே முன்நின்று செய்வது மிகவும் நல்லது. தொழில்ரீதியாக ஏற்படும் சின்னச் சின்ன சட்டச் சிக்கல்கள் மன அமைதியைக் குறைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் செயல் களைத் தற்போதைக்கு தவிர்ப் பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். சற்று பொறுமையோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் ராசிக்கு சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைப்பதுடன் லாபகரமான பலன்களையும் அடைவீர்கள். சிவன், முருக வழிபாடு மிகவும் நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்து உங்களுடைய கடந்தகால நெருக்கடிகள் குறைவது மட்டுமல்லாமல், கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரும் சுபச்செய்திகள் தேடிவரும். சுப காரியங்கள் கைகூடும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப் படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். சிறுசிறு சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் உங்களின் தனித்தன்மையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் ஆதாயங்களைப் பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப் பாகக் கையாண்டு நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களினால் உடல் அசதி, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையும் வாய்ப்புண்டு. அஷ்டலட்சுமி வழிபாடு, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 7-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு நற்பலன்களை அடையும் யோகமுண்டு. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சூரியன் 6-லும், ராகு 11-லும் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடைந்து மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங் களில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் பேச்சுத் திறமை யால் எதிர்பாராத அனுகூலங்களை அடை வீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து மகிழ்ச்சியான நிலை ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச்சென்றால் சிறுசிறு இடர்ப்பாடுகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறமுடியும். வாகனங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள் ளும் செயல்களுக்கு அதிகப்படியான ஆதரவுகள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைசெய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி, மஞ்சள் வஸ்திரம் சாற்றுவது மிகவும் நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
குரு பகவான் 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாள் கனவுகள் எளிதில் நிறைவேறும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் 16-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை வார இறுதி நாட்களில் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிப்பதில் தடங்கல்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். நவீன யுக்திகளைப் பயன் படுத்தி தொழிலை மேம்படுத்தும் வாய்ப்பு கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள்மீதிருந்த பழிச் சொற்கள் குறையும். உங்கள் தனித் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். சந்திரன்- திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால், மிக முக்கியமான பணிகளை இந்த நாட்களில் மேற்கொண்டால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு கஷ்டங்கள் குறையும். அஷ்டலட்சுமி வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, லட்சுமி நரசிம்மர் தரிசனம் நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். சுக்கிரன், புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் முழுமையான வெற்றியைத் தரும். குடும்பத்தில் நிலவிய சிறுசிறு பிரச்சினை களும் முழுமையாக விலகுவதால் நிம்மதி ஏற்படும். செவ்வாய் 10-ல் இருப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக அனு கூலமான பலன்களை அடைவீர்கள். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து சிறப் பான லாபங்களை அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் விலகும். நல்ல நிலையை எட்டமுடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சியான நிலையுண்டாகும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. புதன், வியாழன் ஆகியவை உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நாட்களாக அமையும். நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு, மாணவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், புதன் இணைந்து 4-ல் வலுவாக சஞ்சரிப்பது சிறப்பான தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிதரும் இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கடந்தகால உடல்நல பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும். ஒருசிலருக்கு தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்யும் வாய்ப்புகளும், நவீன கருவிகளை வாங்கும் அதிர்ஷ்டங்களும் ஏற்படும். பங்காளியிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவரிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக உள்ளதால், புதிய முயற்சியில் ஈடுபட்டால் எதிர்பார்த்ததைவிட அதிகமான சாதகப் பலனை அடையவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிக நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. தேக ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், நேரத்திற்கு சாப்பிடுவதும் உத்தமம். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருக்கவும். ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். அசையா சொத்துவகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். நீங்கள் நினைப் பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்குமென்பதால், புதிய திட்டங்களைத் தற்போதைக்கு செயல்படுத்தாமல் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது உத்தமம். நம்பியவர்களை நெருக்கடிகளை ஏற்படுத்தும் நேரமென்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடல் அசதி, மன உளைச்சல் அதிகரிக்கும். நீங்கள் சரியாகப் பணிபுரிந்தாலும் அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், பண விரயங்கள் ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில், மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். நவகிரக வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வத்தை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றும் பலம் ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கடந்தகால சோதனைகள் மறைந்து எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலவிய கவலைகள் முழுமையாக மறையும். பணவரவு சிறப் பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களை அடைவது மட்டுமல்லாமல், நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கடந்தகால வழக்குகள் எல்லாம் இருந்த இடம்தெரியாமல் மறையும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப் பதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புண்டு. குடும்பத்தில் மட்டும் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் மேலும் வளமான பலன்களைப் பெறலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 4-லும், சூரியன் 12-லும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக்திக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். சனி 2-ல் இருப்பதால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். முடிந்தவரை பேச்சைக் குறைப்பது, மற்றவர்கள் விஷயத் தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் சுக்கிரன், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலமும், திடீர் உதவிகள் கிடைத்து பொருளாதார நெருக்கடிகள் குறையக்கூடிய அமைப்பும் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளவும். நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசுவழி அதிகாரியிடம் பேசும்பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். சிவ வழிபாடு, ராகு காலத்தில் அம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளால் அன்றாட செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் தடங்கல்கள் ஏற்படும். சுக்கிரன், புதன் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய செலவுகள் உண்டாகும். பணப் பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. ராகு 4-ல் சஞ்சரிப்பதால் அசையா சொத்துகளைப் பராமரிப்பதற்காக செலவுசெய்ய நேரிடும். சூரியன் வார முற்பாதியில் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். சில இடைத்தரகர்களின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தடைப்படும். உங்கள் உழைப்புக்கான பலனையடைய இடையூறுகள் ஏற்படும். சந்தை சூழ்நிலை சாதகமற்றிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வீண் பழிச்சொற்கள் எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையும், மற்றவர்கள் பணியை இணைத்து செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். பணியில் சிறப் பாக செயல்பட உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்காது. ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காத இனிய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. முருக வழிபாடு, சனிபகவானுக்கு சனிக்கிழமை எள்தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் குரு, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சுக்கிரன், புதன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் அதிர்ஷ்டம், நீண்டநாட்களாக உள்ள சிக்கல்கள் குறையும் யோகம் இந்த வாரத்தில் உண்டு. ராகு 3-ல் இருப்பதால் உங்களின் அனைத்துவிதமான செயல்பாடுகளும் பொருளாதாரரீதியாக மேன்மையைத் தரும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலைகிடைத்து சிறப்பான லாபங்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சிறப்பாக செய்துமுடிக்க முடியும். ஒருசிலருக்கு வெளியூர்த் தொடர்புகள்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்களை அடைவதற்கான யோகமுண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, விநாயகர் வழிபாடு, சஷ்டி விரதமிருப்பது மிகவும் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் அனைத்து செயலிலும் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகமுண்டு. சுக்கிரன், புதன் 10-ல் இருப்பதால் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான யோகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்ற மான நிலை ஏற்படும். பொருளாதாரநிலை மிகமிக சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். திறமையான வேலையாட்கள் கிடைப்பதால் எடுத்த வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிதரும். நண்பர்களுடைய ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனக் கவலைகள் எல்லாம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். விநாயகர் வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அபிஷேகம் செய்வது நன்மை தரும்.