முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

ரக பாதசாரம்:

சூரியன்: பூரம்- 3.

செவ்வாய்: அஸ்தம்- 2.

Advertisment

புதன்: பூரம்- 1 (வ).

குரு: பரணி- 3 (வ).

சுக்கிரன்: ஆயில்யம்- 1.

சனி: சதயம்- 1 (வ).

ராகு: அஸ்வினி- 1.

tt

கேது: சித்திரை- 3.

கிரக மாற்றம்:

ஆவணி 30 (16-9-2023) புதன் வக்ரநிவர்த்தி (அதிகாலை 1.50).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மிதுனம்

10-9-2023 காலை 10.25 மணிக்கு கடகம்.

12-9-2023 இரவு 11.00 மணிக்கு சிம்மம்.

15-9-2023 பகல் 11.35 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப் பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்றநாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். புதன் பஞ்சம ஸ்தானத் தில் இருப்பதால் சூழலுக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரகதியில் இருப்பதால் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடும், நிதானத் தோடும் செயல்படுவது உத்தமம். பங்காளி வகையில் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய ஒரு செயல் நடக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். அதிகாரி கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி ஒரு சுமூகமான நிலை உண்டாகும். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவி உறவு அற்புதமாக இருக்கும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட் களை வாங்குவீர்கள். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகைகைக்கு கிடைத்து உங்களுக் கிருந்த நெருக்கடிகள் குறையும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட உங்களுக்கு தற்போது குரு- சனி வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சூரியன் 4-ல் இருப்பதால் வேலைப்பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் களை நீங்கள் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற முடக்கங்கள் எல்லாம் விலகி உங்கள் திட்டங்களை செயல்படுத்து வதற்கான வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். வேலையாட் கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது மிகமிக உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி அடையக் கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் ஒருசில அனுகூலங் களும் அடையும் யோகம் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன், சூரியன் சேர்க்கைபெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்களை தற்போது செயல்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தற்போது விலகி ஒரு சுமூகமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான ஒரு வளர்ச்சியினை அடையமுடியும். வெளிநபர்களால் சில இடையூறுகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் அதுமட்டும் இல்லாமல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. புதிய வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்புவரும். உடன் பிறந்தவரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். நீங்கள் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ர கதியில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் சற்று குறைந்து நல்ல முன்னேற்றங் களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய திட்டங்களை போட்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். சக ஊழியர் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். உங்களுக்கு உள்ள கடன்களை வரும் நாட்களில் குறைக் கக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத் திற்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சுப செய்திகள் இல்லம் தேடிவரும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

tt

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப் படாமல் நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் உள்ளது. முடிந்தவரை பேச்சை குறைப் பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் 12-ல் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் உண்டாகலாம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். பெரிய முதலீடு கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. வேலையாட்களை முடிந்தவரை அனுசரித்துச்செல்வது, கூட்டாளியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமை யோடு இருப்பது மிகவும் உத்தமம். ஒருசிலர் செய்யக் கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தடைப்படும். அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், விரும்பிய இடம் மாற்றங்களை பெறக் கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக் கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பைரவர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவதுமூலம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது உத்தமம். பொதுவாக கோபத்தை குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது மிகமிக நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. பெண்கள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பூர்வீகச் சொத்துரீதியாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது முடிவு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் உங்களுடைய நீண்டநாளைய கனவுகளை தற்போது செயல்படுத்து வதற்கான ஒரு சந்தர்ப்பங்களும் ஏற்படும். தொழிலில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கடினமான பணிகளைக் கூட நீங்கள் தலையிட்டு சுலபமாக செய்துமுடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியருடைய ஒத்துழைப்பானது திருப்திகரமாக இருக்கும். அலர்ஜி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் குறிப்பாக ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெற்று மன நிம்மதி ஏற்படும். துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானமான 10-ல் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருந்து மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் நீண்டநாட்களாக இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றமும் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களும் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் வாங்க முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற் கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு வெளியிடங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய யோகங்களும் வரும் நாட்களில் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் மிகச் சிறப்பான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் எளிதில் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஆதரவு மிகவும் நன்றாக இருக்கும். அதன்மூலம் உங்களது வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களில் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு அதிகாரிகளிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு சிறப்பான நிலை, விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஒருசிலருக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது வந்தடைந்து மகிழ்ச்சி கிடைக்கும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு, அசையும்- அசையா சொத்து கள் வாங்ககூடிய யோகம் உண்டாகும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங் களையும் பெறக்கூடிய வாய்ப்புகளும், இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்க கூடிய யோகமும் உண்டு. உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் சஞ்சரிப்பது சிறப்பான தர்மகர்மாதிபதி யோகம் என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர் களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து சுமூகநிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டு வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக வெளிநபர் களிடம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வானது தற்போது கிடைக்கக்கூடிய நிலையும், உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் விலகி ஒரு சுமூகமான சூழ்நிலை உண்டாகக்கூடிய ஒரு அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையற்ற குழப்பங்கள், சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பிரத்தியங்கரா தேவி வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். தற்போது குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தி யாவதுடன் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை காப்பாற்றக் கூடிய பலம், நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக் கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு இருந்த உடல் உபாதைகள் எல்லாம் சற்று விலகி எதிலும் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு நீண்ட நாட்களாக இருந்த வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் இருக்கும். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் ஒருசில கடினமான காரியத்தைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புதன், வியாழன், வெள்ளி முற்பகல் காலங்களில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது கெடுதிகளைக் குறைக்கும்

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் உங்கள் மன அமைதியை குறைப்பார்கள். கணவன்- மனைவியிடையே தேவையில்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் பணவரவுகள் சற்று திருப்திகரமாக இருந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த போட்டிகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில காரியங்களில் இருந்து வந்த இடையூறுகளை தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும் என்றாலும் அதற்கான சன்மானங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மன நிம்மதி குறைவுகள், எடுத்த பணியில் தடை ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக் கையுடன் செயல்படு வது உத்தமம். முருக வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றா லும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுடைய அனைத்து செயல்களும் வெற்றிப்பெற்று நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலையும் விரும்பிய இடமாற்றங்களை பெறக்கூடிய யோகமும் உண்டு. ஒருசிலருக்கு கடந்த காலங்களில் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்து ரீதியாக உள்ள வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மையை தரும்.