முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 2.
செவ்வாய்: அஸ்வினி- 3.
புதன்: திருவாதிரை- 3.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆனி 28 (12-7-2022) மகரச் சனி (வ) (பகல் 2.47).
ஆனி 29 (13-7-2022) மிதுன சுக்கிரன் (பகல் 10.50).
ஆனி 32 (16-7-2022) கடக புதன் (இரவு 12.09).
ஆனி 32 (16-7-2022) கடக சூரியன் (இரவு 10.57).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
12-7-2022 அதிகாலை 5.15 மணிக்கு தனுசு.
14-7-2022 அதிகாலை 4.32 மணிக்கு மகரம்.
16-7-2022 அதிகாலை 4.15 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பதாலும், 3-ல் புதன் ஆட்சிபெற்று சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக ஆதாயங்களை அடைவீர்கள். ஆடம் பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், ராகுவுடன் இருப்ப தால் எதிலும் அவசரப்படா மல் பொறுமையோடு செயல் பட்டால் ஆதாயங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சில மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கண் ணும் கருத்துமாக செயல்படு வது உத்தமம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, பண உதவி செய்வது போன்றவற்றை சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எனினும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்து வார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் ஆரோக் கியம் சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருபவர் களுக்கு தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக் கும். பெருமாள் வழிபாடு, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச் சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்றும், 2-ல் புதன் ஆட்சிபெற்றும் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும் பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு இவ்வாரத் தில் உண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான தேவை களும் பூர்த்தியாகும். பிறருக் குக் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் கடந்தகால கடன் பிரச்சினைகளும் முழுமையாக விலகி நிம்மதியடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறையும். தொழிலில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றமடைவீர்கள். தொழில் வளர்ச்சிக் காக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் புதிய ஆர்டர்களை துணிச்ச லோடு எடுத்து நல்ல நிலையை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை திறம்பட செய்வது மட்டுமல்லாமல் இருக்கும் இடத்தில் நல்லபெயர் எடுக்கமுடியும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் குடும்பத்தில் ஏற்பட்டு மகிழ்ச்சியுண்டாகும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். சூரிய நமஸ்காரம், முருகனுக்கு
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 2.
செவ்வாய்: அஸ்வினி- 3.
புதன்: திருவாதிரை- 3.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆனி 28 (12-7-2022) மகரச் சனி (வ) (பகல் 2.47).
ஆனி 29 (13-7-2022) மிதுன சுக்கிரன் (பகல் 10.50).
ஆனி 32 (16-7-2022) கடக புதன் (இரவு 12.09).
ஆனி 32 (16-7-2022) கடக சூரியன் (இரவு 10.57).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
12-7-2022 அதிகாலை 5.15 மணிக்கு தனுசு.
14-7-2022 அதிகாலை 4.32 மணிக்கு மகரம்.
16-7-2022 அதிகாலை 4.15 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பதாலும், 3-ல் புதன் ஆட்சிபெற்று சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக ஆதாயங்களை அடைவீர்கள். ஆடம் பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், ராகுவுடன் இருப்ப தால் எதிலும் அவசரப்படா மல் பொறுமையோடு செயல் பட்டால் ஆதாயங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சில மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கண் ணும் கருத்துமாக செயல்படு வது உத்தமம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, பண உதவி செய்வது போன்றவற்றை சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எனினும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்து வார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் ஆரோக் கியம் சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருபவர் களுக்கு தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக் கும். பெருமாள் வழிபாடு, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச் சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்றும், 2-ல் புதன் ஆட்சிபெற்றும் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும் பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு இவ்வாரத் தில் உண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான தேவை களும் பூர்த்தியாகும். பிறருக் குக் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் கடந்தகால கடன் பிரச்சினைகளும் முழுமையாக விலகி நிம்மதியடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறையும். தொழிலில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றமடைவீர்கள். தொழில் வளர்ச்சிக் காக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் புதிய ஆர்டர்களை துணிச்ச லோடு எடுத்து நல்ல நிலையை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை திறம்பட செய்வது மட்டுமல்லாமல் இருக்கும் இடத்தில் நல்லபெயர் எடுக்கமுடியும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் குடும்பத்தில் ஏற்பட்டு மகிழ்ச்சியுண்டாகும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். சூரிய நமஸ்காரம், முருகனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன் ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவதுடன் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு பல்வேறு முன்னேற்றங்களை அடைவீர்கள். லாப ஸ்தான மான 11-ல் செவ்வாய், ராகுவுடன் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன் நீண்டநாளைய பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. சூரியன் ஜென்ம ராசியில் உள்ளதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொள்வதன்மூலம் அஜீரணக் கோளாறுகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத் தில் எந்தவொரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டிற்கு பங்கமில்லாமல் லாபத்தை ஈட்டமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைக் கூறக்கூடிய நேரமென்பதால் எந்த செயலிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆதாயங்கள் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக் கும். பொருளாதாரரீதியாக லாபகரமான பலன்களைப் பெற்று அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்ப டும். தடைப்பட்டுக் கொண்டி ருந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடி நிம்மதி உண்டாகும். இருக்குமிடத்தில் ஒரு கௌரவமான பதவி உங்க ளைத் தேடிவரும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான செயல் களில் தற்போது முயற்சித் தால் சாதகமான செய்தி கிடைக் கும். உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவுக்கு சிறப் பான முன்னேற்றங்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக் கும். உங்களின் கடந்தகால உழைப்புக்கான பலனைத் தற்போது பெற்று அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள். வேலையாட் கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களின் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உங்கள்மீதிருந்த வீண் பழிச்சொற்கள் முழுமை யாக மறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் பல்வேறு வளமான பலன் களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு சனிக் கிழமையன்று எள்தீபமேற்றுவது, மகா விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், தனலாபாதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன் களைப் பெறுவீர்கள். பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்ப தால் உங்களுக்குள்ள பிரச் சினைகள் பகலவனைக் கண்ட பனிபோல படிப்படி யாகக் குறையும். ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் 10-ல் வலுவாக ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டா கும். வெளியூர், வெளிமாநிலங் கள்மூலமாக ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொருட்தேக்கமின்றி போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் உறு துணையாக இருப்பதால் மனநிம்மதியுடன் செயல்பட முடியும். வெளிநபர்களால் இருந்த தொந்தரவுகள் முழுமையாக மறைந்து தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியுடன் பணிபுரியலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச் சியை அடையமுடியும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் மிகவும் அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் புதன், சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் சகல விதத்திலும் சுபிட்சங்களைப் பெறுவீர்கள். எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சமுதாயத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்ப தால் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் சேமிக்குமளவுக்கு உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த கவலைகள் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். செவ்வாய், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உடன்பிறந்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்று. தொழில் ரீதியாக மிகவும் லாபகரமான பலன்களை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங் களைப் பெறும் யோகமுண்டு. வேலைப்பளு குறைவது மட்டுமல்லாமல் சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் உங்களின் அனைத்து விதமான செயல்களிலும் பரிபூரண வெற்றி யைப் பெறுவீர்கள். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்வது, கந்த சஷ்டி, கந்த குரு கவசம் படிப்பது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு செவ்வாய், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பிறர் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பது உத்தமம். குரு பகவான் 6-லும், சுக்கிரன் 8-லும் சஞ்சரிப்பதால் சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற் குக்கூட வாக்குவாதங்கள் ஏற்படலாம். சூழ் நிலைக்குத் தக்கவாறு சிந்தித்துப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. சூரியன், புதன் 9-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து உங்களின் பொருளா தாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படவேண்டிய காலமாகும். வேலையாட்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக செயல்படவும். அரசு அதிகாரிகள் ஏற்படுத்தும் இடையூறு களால் அமைதி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் பணியையும் இணைத்துச் செய்யவேண்டிய நிலையிருக்கும். பிறர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமல் அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, அஷ்டலட்சுமியை வழிபடுவது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பா கும். நான்காவது ராசிமுதல் எட்டாவது ராசி வரை தொடர்ந்து கிரகங்கள் ஆட்சிபெற்றி ருப்பது சிறப்பென்பதால், அனைத்துவகை யிலும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமல்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு உங்களுடன் நட்பாகப் பழகுவார்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள்மூலமாக ஆதாயமான பலன்களை வரும் நாட்களில் அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிப்பது மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். போட்டி, பொறாமைகள் விலகும். நிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். இடைத்தரகர்களால் இருந்த இடையூறுகள் விலகி தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு அனுகூலமாக இருப்பது மட்டுமல்லாமல் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்துவாழும் நல்லநிலை ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். 5-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உறவினர் களிடம் கருத்து வேறுபாடுகள், மன அமைதிக் குறைவு ஏற்படும். எந்த செயலிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதும், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதும் நல்லது. பொதுவாக நீங்கள் கவனமாக செயல்பட்டால்தான் நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக மன உளைச்சல், ஓய்வுநேரம் குறையும் சூழல் உண்டாகும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது சற்று பொறுமையோடு இருந்தால் உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ள முடியும். உக்ர தெய்வங்களை வழிபடுவது, ஆதரவற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடையும் வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவை யில்லாத அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார்- உறவினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பதும், கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு செயல்படுவதும் நன்று. பெண்கள்வகையில் ஒருசில உதவிகள் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் பொறுமை யுடனும் கவனமாகவும் செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து ஆதாயங்களைப் பெறமுடியும். வேலையாட்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் ஒத்துழைப்பு கிடைக்காது. எந்திரங் கள் பழுதாவதால் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வேலைக்குச் செல்பவர் களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறமுடியும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் கிடைக்கும். வேங்கடாசலபதி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்று வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடைபெறுவதால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த உங்களுக்கு தற்போது 2-ல் குரு ஆட்சிபெற்று, 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கடந்தகால சோதனைகள் முழுமையாக மறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன் ஆட்சிபெற்றும், 5-ல் புதன் ஆட்சிபெற்றும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், செல்வம், செல்வாக்கு மேலோங்கும் அமைப்பு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் அற்புத நிலை வரும் நாட்களில் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனங்கள் வாங்கும் யோகமானது தற்போது உள்ளதால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டகூடிய யோகமுண்டு. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் எளிதில் சமாளிக்கும் பலம் உங்களிடம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை, வேலைப்பளு குறையும் அமைப்பு ஏற்படும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகநிலை ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குரு ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் துடன் செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால், முன்கோபத்தால் வீண் சிக்கலை எதிர்கொள்ள நேரும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். எதைப் பேசினா லும் சற்று யோசித்துப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் மிகவும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். அலைச்சல் காரணமாக நிம்மதிக் குறைவு, உடல் அசதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடைஞ்சல்கள் உண்டாகும். புதன் 4-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் ஒருசில ஆதாயங்களைப் பெறமுடியும். இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தடைப்படும் என்பதால், எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சற்று கவனத்தோடு கையாண்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். வெளியூர்ப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சந்திரன் இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.