முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 2.

செவ்வாய்: அவிட்டம்- 1.

Advertisment

புதன்: உத்திராட்டாதி- 1.

குரு: பரணி- 2.

சுக்கிரன்: அவிட்டம்- 4.

சனி: சதயம்- 4.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

பங்குனி 1 (14-3-2024 மீன சூரியன் (பகல் 12.36).

rr

பங்குனி 2 (15-3-2024 கும்ப செவ்வாய் (மாலை 6.08).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கும்பம்.

10-3-2024 இரவு 8.40 மணிக்கு மீனம்.

12-3-2024 இரவு 8.29 மணிக்கு மேஷம்.

14-3-2024 இரவு 10.39 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங் களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகளைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங் கள் உங்களுக்கு உண்டு. பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மாதக்கோளான சூரியன் வார முற்பாதியில் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பெண்கள்மூலமாக எதிர்பாராத உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி ஒன்று தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை பெற்று உங்களுக்கு உள்ள பொருளாதார நெருக்கடி களைக் குறைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. மாணவ- மாணவி யர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிள்ளைகள்வழியில் மனமகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றிபெறக் கூடிய யோகமுண்டு. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் உங்களுக்குள்ள சங்க டங்கள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி யும் பூரிப்பும் ஏற்படும். மாதக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய சூரியன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். புதன், ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வயதுமூத்தவர்களுடைய ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்துமுடிக்க முடியும். அரசாங்க வழியில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைத்து மன அமைதி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை எட்டமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல் பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். முடிந்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந் தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட் களில் இனிய நிகழ்வுகள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, படிக்கும் மாணவர்களுக்கு முடிந்த உதவிகள்ச்செய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 9-ல் சனி- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத் தோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் இக்கட்டான நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட் களாக உங்களுக்கு இருந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்ச்சி கள் நடக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்துவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், ராகு சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் உங்களது முன் கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது, நெருங்கியவரிடம் பேச்சை குறைப் பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. சிறுபாதிப்பு என்றாலும் அதனை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் தான் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும். தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒருசில முக்கிய விஷயங்களை வேலையாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர் களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு உங்களது கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்லபெயர் எடுக்கமுடியும். குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பணவரவுகள் தாராளமாக இருந்து எதிர்பாராத அனுகூலங் களை பெறுவீர்கள். வரும் ஞாயிற் றுக்கிழமை தேவையற்ற மனகுழப்பங்கள் உண்டாகும். வரும் வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பது நல்லது.

t

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகள் விரும்பிய நவீன பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நீண்டநாட்களாக இருந்துவந்த இடையூறுகள் விலகி குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக வேலையாட்களால் இருந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியியல் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மனநிம்மதி குறைவு, நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் சரபேஸ்வரரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன்- சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்தாலும் தேவையில்லாத சில நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத மனக்கவலை உண்டாகலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றா லும் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பதன்மூலம் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்றாலும் தற்போது கிடைக்கக்கூடிய நல்லவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொண்டு உங்களுடைய படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் செய்ய நினைத்த விஷயங்களை சிறப்பாக செய்து முடிக்கமுடியும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனைசெய்வது நற்பலனைத் தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீண்டநாட்களாக உள்ள தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச் சினைக்கு தற்போது ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உடன்பிறந்தவரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதியமுயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரித்து இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தன பஞ்சமாதிபதி குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு அசையும்- அசையா சொத்துவகையில் வீண் செலவுகள் ஏற்படும். பொதுவாக உறவினரிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் போட்டிகள் காரணமாக உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்யும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது. முடிந்தவரை அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் தற்போது பொறுமையைக் கடைப்பிடித்தால் விரைவில் நல்லமாற்றங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கக்கூடிய நிலையும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகளைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. ஒருசிலருக்கு தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் வெற்றிபெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் சுலபமாக செய்து முடிக்கக் கூடிய பலம் உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பெரியவர்களுடைய ஆசியைப் பெறமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் அவர்கள்மூலம் ஒருசில அனுகூலமான பலன்களை அடையும் யோகமும் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குருபகவான் 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வரக்கூடிய வரவை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு வீண் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஒருசில உதவிகள் கிடைத்து அதன் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் சற்று கவனத் தோடு செயல்பட்டால்தான் இருக்கும் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வேலையாட்கள்மூலமாக தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நீங்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு சிக்கலான நிலை ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்வார்கள். தற்போதைக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்லமாற்றங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது கெடுதியைக் குறைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நெருங்கியவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் முடிந்தவரை ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கக்கூடிய அமைப்பும், குடும்பத்தில் ஒருசில சுபநிகழ்ச்சிகள் கைகூடக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் அவர்களை அனுசரித்துச்சென்றால் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். தொழில்ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சில முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது, தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்து வைத்துக்கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அலைச்சல் காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையக்கூடிய நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். மாணவ- மாணவியர்களுக்கு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் படிப்பில் கவனம் செலுத்துவதும் நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிதருவது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் பொதுவாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் கடினமான காரியத்தைகூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். உறவினர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவு காலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் மிகை ஆகாது. புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனைசெய்வது நற்பலன்களைத் தரும்.