முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்

சூரியன்: விசாகம்- 2.

சந்திரன்: அவிட்டம்- 4.

Advertisment

செவ்வாய்: பூசம்- 2.

புதன்: அனுஷம்- 4.

குரு: மிருகசீரிடம்- 1 (வ).

Advertisment

சுக்கிரன்: மூலம்- 2.

சனி: சதயம்- 4 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

கிரக மாற்றம்

15-11-2024 சனி (வ) நிவர்த்தி இரவு 8.34 மணிக்கு

dd

16-11-2024 விருச்சி சூரியன் காலை 7.32 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கும்பம்

12-11-2024 அதிகாலை 2.21 மணிக்கு மீனம்.

14-11-2024 அதிகாலை 3.11 மணிக்கு மேஷம்.

16-11-2024 அதிகாலை 3.16 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது தற்போதைக்கு நல்லது. உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதாலும், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 14, 15.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய மங்கள நிகழ்வுகள் கைகூடும். ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியானது மிகமிக சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக வேலைப்பளு சற்று குறையும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவி களை பெறக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமுக நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். பெண்கள் வழியில் ஆதாயமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல முடிவு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்களுடைய படிப்பு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதுடன் நல்ல பெயரும் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் தீபமேற்றுவதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளியூர்மூலமாக நல்லவாய்ப்புகளை அடையக்கூடிய நேரம் ஆகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்படுவதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அதிக வேலைப்பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உறவினரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்களை அடையக் கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் சக மாணவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரமென்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

ss

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக் கூடிய நேரமாகும். பிள்ளைகள் வகையில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையமுடியும். புதிய யுக்திகளை பயன்படுத்தி போட்ட முதலீடுகளை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு எல்லாம் தற்போது குறைவது மட்டும் இல்லாமல் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் உங்களுடைய படிப்பில் சிறப் பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 16.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். குரு, சனி இருவரும் வக்ரகதியில் இருப்பதால் நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட சற்று தாமதமாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத சில பணவரவுகள் ஏற்பட்டு அதன்மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்தோடு நடப்பதன்மூலம் நற்பலனை அடையமுடியும். தற்போது இருப்பதை சமாளித்துவிட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வார இறுதியில் குறிப்பாக சனிக்கிழமைமுதல் சனி வக்ர நிவர்த்தியடைய இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் பேசக்கூடிய வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வளமான பலன்களை பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து தாராள தனவரவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது சற்று குறைந்து அனுகூலமான நிலை ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியமில்லை என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். இந்த வாரத் தில் வளமான பலன்களைபெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்பு கள் உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர்கள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழி-ல் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உறவினர் களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் தைரியத்தோடு கையாளக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் முன்கோபத்தை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். ஒருசிலருக்கு பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு அதிபதி குரு 6-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். கடந்த நான்கு மாதமாக வக்ரகதியில் சஞ்சரித்த சனி வரும் சனிக்கிழமை அன்று வக்ரநிவர்த்தி அடைய இருப்பது அற்புதமான அமைப்பு ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை ஈடுபடுத்தக்கூடிய யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடன் பணிபுரியக்கூடியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடும். இரவு நேரம் தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 16.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிலும் தைரியத்தோடு செயல்படமுடியும். வயது மூத்தவர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு வரும் நாட்களில் நல்லதீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். சனி 2-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமை காப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்களுக்கு இருந்துவந்த பனிச்சுமை சற்று குறையும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருந்தால் படிப்பில் சிறப்பாக செயல்படமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 10-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நேரமாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கக்கூடிய அமைப்புகள், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதால் எதிலும் மன நிறைவோடு செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிகாரியினுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக் கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் வளமான பலன்களைப்பெற முடியும். காலபைரவரை வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 14, 15.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினைகள் சற்றுக் குறைந்து ஒருசில ஏற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு விஷயத்திலும் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது வேலைப்பளு இருந்தாலும் நீங்கள் உங்களின் தனித் திறமை காரணமாக எதிலும் கவனமாக செயல்பட்டு எடுத்த பணியை சிறப்பாக முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16.

ப்