முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூரம்- 1.
செவ்வாய்: மிருகசீரிடம்- 4
புதன்: ஆயில்யம்- 4
குரு: மிருகசீரிடம்- 1.
சுக்கிரன்: உத்திரம்- 4.
சனி: பூரட்டாதி- 1 (வ).
ராகு: உத்திரட்டாதி- 4.
கேது: அஸ்தம்- 2.
கிரக மாற்றம்:
(4-9-2024) சிம்ம புதன்பகல் 11.41 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கடகம்.
1-9-2024 இரவு 9.48 மணிக்கு சிம்மம்.
4-9-2024 காலை 9.55 மணிக்கு கன்னி.
6-9-2024 இரவு 11.00 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபகவான் சாதகமாக இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து சமுதாயத்தில் ஒரு கௌரவ நிலையினை எட்ட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி தொழில் அபிவிருத்தியை செய்யமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாகவும், துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன்மூலமாகவும் வளமான பலன்களை பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். தேவையில்லாத அலைச்சல் கள், வசதி வாய்ப்புகள் இருந்தா லும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பை யும் சரியானமுறையில் பயன் படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். உத்தியோக ரீதியாக அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மனக்கவலை ஏற்படும். பொதுவாக பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகப்பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள்வழியில் ஒரு வளமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிலவிய தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்க கூடிய நேரமாகும். பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலமாக தேவையற்ற பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும். உத்தியோக ரீதியாக நல்லநிலை ஏற்படக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு மிகமிக சிறப் பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மேலும் வளமான பலன்களைப் பெற தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்துவிதமான தேவை களும் பூர்த்தியாகக்கூடிய நேரம் என்றாலும் 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களை பெறலாம். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய நேரம் என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிவ வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 4, 5, 6.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஆதாயங் களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதும் அதிக முதலீடுகொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பதும் நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பதன்மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நேரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருக்கவேண்டும். பணி நிமித்தமாக தேவையற்ற பயணங்கள், வீண்செலவுகள் உண்டாகக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 7.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நேரமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு வேலைப்பளு குறைந்து மன நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய அமைப்பும், ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்கு உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு இக்கட்டான நேரத்தில் கிடைத்து அதன் மூலம் ஆதாயங்கள் அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்- ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 4, 5, 6.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் குரு, 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஆடம்பர ச்செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். உடல் ஆரோக்கிய மானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப் போடு செயல்படுவீர்கள். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர் உடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் கவனமாக பழக வேண்டிய நேரமாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 7.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய வம்பு, வழக்குகள் எல்லாம் தீரக்கூடிய ஒரு சூழலும் வரும் நாட்களில் உண்டு. குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கு அவர்கள் ஏக்கமானது வரும் நாட்களில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுப்பது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு ஒரு அனுகூலமான நிலை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கக்கூடிய நேரம் என்பதால் மன நிம்மதி உண்டாகும். உத்தியோகரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது நல்ல சன்மானம் கிடைக்ககூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களை பெறக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, ஆஞ்சனேய வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 6.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு பகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தற்போது சூரியன் 9-லும், சுக்கிரன் 10-லும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பெண்களுடைய உதவியானது சரியான நேரத்தில் கிடைப்பதால் இக்கட்டான நிலையைக்கூட எளிதில் எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு செய்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருந்து லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சித்தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர்கள் மூலமாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம்கூட தற்போது விலகி மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் நல்லவாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் ஒருசில நேரங்களில் அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, கால பைரவரை வழிபாடு செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் உண்டாகி மன அமைதியைக் குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. பெண்கள்வழியில் தேவையில்லாத வீண்செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பழக்க- வழக்கங்களை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 3-ல் குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது, சூழலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள்மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடைவீர்கள். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகளும், போட்ட முதலை எடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும், பிறரால் முடிக்கமுடியாத ஒரு பணியைக்கூட நீங்கள் சிறப்பாக முடித்து உயர் அதிகாரிகளிடம் பரிசும் பாராட்டுதல்களும் பெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 6.