முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 2.

செவ்வாய்: சித்திரை- 2.

Advertisment

புதன்: உத்திரம்- 1.

குரு: பரணி- 3 (வ).ww

சுக்கிரன்: ஆயில்யம்- 4.

சனி: சதயம்- 1 (வ).

ராகு: அஸ்வினி- 1.

கேது: சித்திரை- 3.

கிரக மாற்றம்:

புரட்டாசி 14 (1-10-2023) கன்னி புதன் (இரவு 8.39).

புரட்டாசி 15 (2-10-2023) சிம்ம சுக்கிரன் (அதிகாலை 1.02).

புரட்டாசி 16 (3-10-2023) துலா செவ்வாய் (மாலை 5.58).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மேஷம்

2-10-2023 இரவு 12.15 மணிக்கு ரிஷபம்.

5-10-2023 காலை 6.58 மணிக்கு மிதுனம்.

7-10-2023 மாலை 5.18 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதாரநிலை ஓரளவு சிறப் பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஜென்ம ராசியில் ராகு, செவ்வாய்க்கிழமைமுதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நல்லது. தொழி-ல் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கூட்டாளிகள் அவர்களுடைய பங்கை கேட்டு உங்களுக்கு தொந்தரவு தருவார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருந்தால் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்களிடம் வாக்குவாதம் செய்த சக ஊழியர்கள் தற்போது உங்களிடம் சுமூகமாக பழகக்கூடிய நிலை உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். அலைபேசிவழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். துர்க்கையம்மனுக்கு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த இடர்பாடுகள் எல்லாம் விலகி படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். திங்கட்கிழமைமுதல் ராசியாதிபதி சுக்கிரன் 4-ல், உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் உண்டு. தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய்க்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு நெருக்கடிகளை தந்தவர்கள்கூட உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய ஒருநிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெ-வரி செய்யமுடியும். அரசுவழியில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்திவரும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். திடீர் பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள கடன்களை குறைத்துக் கொள்ளமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்க ஒருசில இடையூறுகள் ஏற்படலாம். தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ராசியாதிபதி புதன் வரும் திங்கட்கிழமைமுதல் 4-ல் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 5-ல் கேது சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது மூலம் தேவையற்ற ஆரோக்கிய இடர்பாடுகளை சமாளிக்கமுடியும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படலாம். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை குறிப்பாக வேலையாட்களிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியில் இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்களை பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு மிகவும் சந்தோஷ மான நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

weekrasi

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்ப வர்களுடைய ஆதரவானது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய்க்கிழமைமுதல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் சற்று இருக்கும். இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப் பாக இருப்பதால் எவ்வளவு கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சி ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கவேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 2-ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை தேவையற்ற வகையில் பாதிக்கும். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதையும் எதிர்க்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நெருக்கடியான நேரத்தில்கூட உரிய பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி உங்கள் ராசிக்கு 7-ல் வக்ரகதியில் இருப்பதால் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் தான் நீங்கள் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளியிடங்களில் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது உத்தமம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நீண்டநாட்களாக எண்ணிய காரியங்களை செயல்படுத்தினால் முழுமையான அனுகூலங்களை பெறமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், 1, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசில நேரங்களில் உடனிருப்பவர்களே தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் தக்கநேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தேவையற்ற மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது, பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலைசெய்பவர்கள் உங்களுக்கு தேவையற்றவகையில் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பாராத உதவி கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங் கள் உண்டு. பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும், செவ்வாய்க்கிழமைமுதல் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. திங்கட்கிழமை முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியானது சற்று சாதகமாக இருக்கும். பெண்கள்வழியில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தடைப்பட்டு மனநிம்மதி குறைவை ஏற்படுத்தும். பங்காளியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். சில விஷயங்களை வேலையாட்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். சிலர் சொல்லக்கூடிய வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்தி கொள்வதன்மூலம் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். அதிகாரிகளிடம் பேசும்பொழுது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் தேவையில்லாத மனகுழப்பங்கள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது, பைரவரை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு திங்கட்கிழமை முதல் 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் சுலபமாக கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலம் மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் உயர்வு, விரும்பிய இடமாற்றங் கள் கிடைக்கக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த மருத்துவச்செலவுகள் எல்லாம் தற்போது குறையும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் உங்கள் பொருளாதார நிலை உயரும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை ஏற்படும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை வழிபடுவது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த கடந்தகால சோதனைகள் எல்லாம் முழுமையாக மறைந்து மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வரும் திங்கட்கிழமைமுதல் 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருந்து நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபம் கிடைத்து கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீண்டநாட்கள் முடிக்கமுடியாமல் இருந்து வந்த வேலைகளைகூட வரும் நாட்களில் சுலபமாக முடிக்கமுடியும். உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒருசிலருக்கு பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்க முடியும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நிம்மதி ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தினால் அதில் அனுகூலமான பலன்களை பெறமுடியும். சனிக்கிழமை மாலை வேலையில் தேவையற்ற நிகழ்வுகள் வீண் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக இருந்துவந்த தேக்கங்கள் எல்லாம் சற்று குறைந்து தாராள தன வரவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாகவும் இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சனி உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கூட்டாளிகள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கின்றபொழுது அவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பக்குவமாக நடந்துகொள்வது மிகவும் நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடன்வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு நன்றாக இருக்காது. ஒருசில குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். வண்டி, வாகனங்கள்மூலமாக எதிர்பாராதவகையில் வீண்செலவுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, திங்கட்கிழமைமுதல் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தற்போது 3-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் விலகி பணவரவுகள் சாதகமாக இருக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள சின்னசின்ன பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் விலகி மனநிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் ஒருசில நல்ல நிகழ்வுகள் நடந்து உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக் கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அதன் மூலம் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்து நேரத்தில் செய்துமுடிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினையி-ருந்து விலகி நிம்மதியுடன் நாட்களை நடத்தமுடியும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருக்கவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்களுடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றுவது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி மனக்கவலையை தரும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்ற முடியாது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உங்களுடைய கூட்டாளிகள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய வேலையில் மட்டும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். உடன்வேலை செய்பவர்கள் பேச்சைக்கேட்காமல் எதிலும் பொறுமையோடு இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத மறைமுக எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதால் மற்றவரிடம் வீண் பேச்சை குறைப்பது உத்தமம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் வெளியி-ருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைத்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.