"புத்தியுள்ள மனித ரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.' கடினமாக உழைப்பவர்கள் வெளிச் சத்துக்கு வர முடிவதில்லை; பேருக்கு உழைப்பவர்கள் பேரெடுத்து வெற்றியாளர் ஆகின்றனர். நமக்கு எது வருமோ, எதில் தனக்கு ஆர்வம் உள்ளதோ அந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது உசிதம். அன்றி, சரித்திரத்தில் ஆர்வமுள்ள மாணவர் கெமிஸ்ட்ரியில் சேர நினைப் பது கொடுமையல்லவா? ஒரு நல்ல கவிஞன் நல்ல மருத்துவராக முடியாது. ஒரு நல்ல விவசாயி ஒரு பொறியாளராக முடியாது.
எனவே, அவர்களின் ஜாதகங் களை ஆராய்ந்து, அவர்கள் எதில் சிறப்பாக வருவார்கள் என்பதை அறிந்து அதில் ஈடுபடுத்தி வெற்றி யடையச் செய்வதே பெற்றோர்களின் கடமையாகும்.
4-ஆம் வீடு உயர்கல்வி யைக் குறிக்கிறது. வித்யாகாரகன் குரு.
4-ஆம் அதிபதி சிறப்பாக இருக்க வேண்டும். 4-ஆம் அதிபதி யுடன் இணைந்த கிரகங்கள் பலம்மிக்கதாக இருக்கவேண்டும். சூரியன் ஒருவரின் தகுதி, திறமை, சக்தியையும் குறிக்கிறது. 5-ஆம் வீடு ஜாதகரின் அறிவு வளர்ச்சியை குறி காட்டுகிறது.
பல நேரங்களில் ஒருவர் படித்த படிப்புக்கும் பார்க் கும் வேலைக்கும் சம்பந்தம் இருக் காது. வேதியியல் படித்தவர் கணக்கியல் பிரிவில் சம்பந்தமே இல்லாமல் பணியாற்றிக் கொண்டு இருப்பார். எனவே, ஜோதிடர்கள் தொழில் பாவமான 10-ஆம் வீட்டை ஆராய்ந்து பணிக்கேற்ற படிப்பை ஓரளவு சிபாரிசு செய்யவேண்டும்.
2-ஆம் அதிபதி, புதன், குரு ஆகியோர் இணைந்து 8-ல் அமர்ந்திருந்தால், ஜாதகருக்கு சிறப்பான கல்வி நிலை இருக்காது. அவர்கள் கேந்திர கோணங்களில் இருப்பின் ஜாதகர் நன்கு படித்து கல்வியில் வெற்றிக் கனியைப் பறிப்பார்.
உயர்ந்த, தரமான கல்வி பெற சூரியன் பலம்மிக்கவராக இருக்கவேண்டும். 4-ல் உள்ள ராகு பொதுவாக தடைப்பட்ட கல்வியை அளிக்கிறார்.
சந்திரனுக்கு கேந்திரத்தில், கோணத்தி லுள்ள குரு பொதுவாக ஜாதகருக்கு நல்ல கல்வியையும், அறிவுக் கூர்மையையும் அளிக்கிறார். புதனுக்கு 4 அல்லது 10-ல் இருக்கும் குரு மிகச்சிறந்த கல்வி நிலையைத் தருகிறார்.
2-ஆம் அதிபதியும், குருவும் கேந்திர கோணங்களில் இருக்க, ஜாதகருக்கு சிறந்த கல்வி அமைகிறது. ரவி- மங்கள யோகம் நல்ல கல்வியை அளிக்கிறது. ஆனால், புதன் சூரியனுக்கு 10 பாகைக்குள் இருக்கக்கூடாது.
லக்னாதிபதி அசுபரோடு இணைய அல்லது பார்வை பெற்று, சனி 5-ல் இருக்க மற்றும் லக்னாதிபதி சனியால் பார்க்கப்பட, ஜாதகர் வடிகட்டிய முட்டாளாக இருப்பார்.
சரஸ்வதி யோகம் சிறப்பான கல்வி நிலையைத் தருகிறது. குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் லக்னம், 2, 4, 5, 7, 9 அல்லது 10-ஆம் இடங்களில் சேர்ந்தோ அல்லது தனியாக இருந்து, குருவும் தனது சுய, உச்ச அல்லது நட்பு வீட்டில் அமர்ந்திருக்க சரஸ்வதி யோகம் ஏற்படுகிறது.
5-ஆம் வீட்டில் சுபர் இருந்து, 5 ஆம் அதிபதி குரு, புதன் அல்லது சுக்கிரனோடு இணைந்திருந்தால் ஜாதகர் மிகப்பெரிய மேதையாகத் திகழ்வார்.
கிரகங்களுக்குரிய பாடப் பிரிவுகள்
சூரியன்- அரசுப்பணி, வேதியியல், வானியல், மருத்துவம், அரசியல், மனோதத் துவம்.
சந்திரன்- நேவிகேஷன், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், விலங்கியல்- முக்கியமாக கடல் வாழ் உயிரினங்கள்.
செவ்வாய்- வேதியியல், உலோகவியல், புவியியல், அறுவை சிகிச்சை, இராணுவம், இயந்திரவியல், பொறியாளர், பௌதிகம், ஆயில் டெக்னாலஜி.
புதன்- கணிதம், பௌதிகம், பொறியியல், ஆர்க்கிடெக்சர், ஆசிரியர், ஜோதிடம், மின்னணுவியல், பொருளாதாரம், இலக்கியம், கைத்தொழில், அக்குல்ட் சயின்ஸ், மறைபொருளான கல்வி (ங்ள்ர்ற்ங்ழ்ண்ஸ்ரீ ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்ள்).
குரு- சட்டம், ஜோதிடம், மதம், தத்துவம், அரசியல், இலக்கியம் போன்ற சுதந்திரமான தொழில்கள். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை.
சுக்கிரன்- நடனம், நாடகம், நடிப்பு, கவிதை, இலக்கியம், இசை, ஓவியம், பொருளாதாரம் மற்றும் தாவரவியல்.
சனி- விவசாயம், உலோகவியல், மருந்து, புவியியல், வேதியியல், வெளிநாட்டு மொழிகள், விலங்கியல், பங்கு வர்த்தகம், ஆயில், சரித்திரம், அரசியல், பொருளாதாரம் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்.
ராகு- நாடகம், மருந்து, தகவல் தொடர்பு, வெளிநாட்டு மொழிகள், இரும்பு, அரசியல் தந்திரம்.
கேது- லெதர் டெக்னாலஜி, ஆல்கஹால், வானவேடிக்கை கலைகள், வாட்ச், நுண்ணுயிரியல், பக்தி மார்க்க கல்வி.
4-ஆம் வீட்டு அதிபதி 10-ல் இருந்தால் ஜாதகர் விஞ்ஞானியாக அல்லது மருத்துவராகும் வாய்ப்புண்டு.
4-ஆம் அதிபதி லக்னத்திலிருந்தால் ஜாதகர் ஒரு சங்கோஜ பேர்வழியாக இருப்பார்.
4-ஆம் அதிபதி 9-ல் இருக்க ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகவும், எதையும் எளிதாக கிரகிக்கக் கூடியவராகவும் இருப்பார்.
"பாவார்த்த ரத்னாகரா' என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளனது.
4-ல் சுக்கிரன் இருக்க இசைத் திறமை உண்டு.
4-ல் புதன் - ஜோதிடத் திறமை உண்டு.
சூரியன், புதன் அல்லது ராகு 5-ல் இருக்க மருத்துவம் அல்லது ஜோதிடம்.
சூரியன் புதன் 2-ல் ஜோதிடம். இவர்களை சனி பார்க்க பெரிய கணித மேதை அல்லது கம்ப்யூட்டர் திறன்.
சூரியன் அல்லது செவ்வாய் 2-ல்- தர்க்க சாஸ்திர அறிவுள்ளவர்.
சூரியன், புதன் மற்றும் சனி 5-ல்- தத்துவ மேதை.
புதன், சூரியன் கேந்திரத்தில் அல்லது கோணத்தில் அல்லது 11-ஆம் பாவத்தில்- கணித மேதை.
சுக்கிரன் 2-ல்- கவிஞர்.
ராகு 5-ல் உட்பொருள் அனைத்தையும் விவரித்துச் சொல்லும் திறன்மிக்கவர்.
2-ல் குரு- வேதம், வேதாந்தத்தில் அறிவு மிக்கவர்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களின் படிப்பு விஷயத்தில் ஜோதிடர்களின் ஆலோசனை கேட்பது சிறப்பு.
செல்: 97891 01742.