ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், ராசி, நட்சத்திரம், திதி என்பதை எப்படி முக்கியமாக நாம் எடுத்துக்கொள்வோமோ அதேபோல் கரணத்தையும் நாம் எடுத்துக் கொண்டு அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்துவந்தால் எளிதில் சுபப் பலன்களை அடையலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் கரணத்தை எப்படி எடுப்பது. கரணம் ஒருவருடைய ஜாதகத்தில் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஐந்து அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் ஆகும். நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் என ஐந்து பூதங்களின் தத்துவமாகவே பஞ்சாங்கம் உள்ளது.
1. நெருப்பு தத்துவத்தை கிழமையும்.
2. நிலத் தத்துவத்தை திதியையும்.
3. காற்று தத்துவத்தை கரணமும்.
4. ஆகாயத் தத்துவத்தை யோகமும் விளக்குகிறது.
உடலும் பஞ்சபூதங்களால் ஆனது தான். இதேபோல் பஞ்சாங்க கூறு களும் உடல் கூறுகளோடு பொருந்திப் போகும்.
கரணங்கள் 11 ஆகும். இதில் சர கரணம் 7. ஸ்திர கரணம் 4-ஆக இருக்கிறது. இவற்றில் சர கரணம் ஏழும் நன்மை தரக்கூடியது. ஸ்திர கரணம் நான்கும் தீமை தரக்கூடியது .
கரணங்கள் 11
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. தைதுலை
5. கரசை
6. வணிசை
7. பத்திரை
8. சகுனி
9. நாகவம்
10. சதுஷ்பாதம்
11. கிம்ஸ் துக்னம் என்ற 11 கரணம் உள்ளது.
ஒவ்வொரு கரணத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அந்த கரணத்துக்குரிய அதிதேவதையை வழிபாடு செய்து மலர்களையும் வஸ்திரங்களையும் பயன்படுத்துவது சிறந்தது. கரணத்திற் குரிய அந்த விலங்களுக்கு உணவு அளிப்பது மூலமாக நல்ல பலன்களை அடையலாம் கரணத்திற்கு வாசனை என்ற ஒரு அர்த்தமும் உண்டு.
ஒரு திதியில் பாதியே கரணமாகும்.
ஆறு பாகை கொண்டது ஒரு கரணமாகும்.
11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் கரணங்களை குறிக்கும் பறவைகள் மிருகங்கள் ஊர்வனவற்றின் குணாதிசயங் களையும் உணர்வுகளையும் செயல்பாடு களின் குணங்களையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள் முதல் கரணம் பவம் அதி தேவதை- இந்திரன், தேவேந்திரன்.
மிருகம்- சிங்கம்
கிரகம்- செவ்வாய்
மலர்- புன்னைமலர்
தெய்வம்- நரசிம்மர், ஸ்ரீ அனுமான் வழிபாடு முறை புன்னை மலர்களை வைத்துப் பூஜிக்கச் செய்யலாம்.
தோட்டத்தில் புன்னை மரங்களை வளர்க்கலாம்
பிரச்சினைகள் வரும் போது கரண நாதனை வழிபட்டு அன்னதானம் வழங்கலாம்.
கோவிலுக்கு போனால் அன்னதானம் நடந்தால் அலட்சியப்படுத்தாமல் உணவருந்தி வரலாம்.
பெண்களாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளிக்கலாம்.
ஆண்களாக இருந்தால் வழிபடும் தெய்வத்திற்கு கஸ்தூரி மஞ்சளை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.
பிரச்சினை வரும் காலகட்டத்தில் மஞ்சளை பூசி அல்லது அபிஷேகத்திற்கு கொடுத்துவந்தால் உங்களுடைய பிரச்சினைகள் எளிதில் தீர்ந்து விடும்.
வீட்டில் பூஜை செய்யும்பொழுது அகில் கட்டைகளை சாம்பிராணியுடன் கலந்து தூபம் போடவேண்டும்.
இந்தப் பரிகாரம் செய்யும்போது வெள்ளை ஆடைகளை அணியலாம்.
வெளியே ஒரு காரியத்துக்காக செல்லும் பொழுது அல்லது பெரியோர்களைச் சந்திக்கும்பொழுது வெள்ளை ஆடைகளை அணிந்து போகலாம். இது ஒரு சிறப்பான சந்திப்பு ஏற்படுத்தி தருவதற்கு உதவும். இப்படி பவகரணத்தில் குறியீடுகள் பொருட்களை பயன்படுத்தலாம்.
பவகரணத்தில் பிறந்த நபர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஒரு ஆண் ஜாதகர் பவகரணத்தில் பிறந் திருந்தால் அவருக்கு பல வருடங்கள் சரியாக வேலை அமையாமல் இருக்கும்.
அவர் வேலைக்கு போகும்பட்சத்தில் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும்.
இவருக்கு தாயார் அல்லது மனைவியின் மூலம் பண உதவிகள் கிடைக்கும்.
பவகரணத்தின் குணங்கள்
இக்கரணத்தில் பிறந்த ஆண்களைவிட பெண்கள் வேகமாக இருப்பார்கள். ஆனால் ஒரு காரியம் முடியும்போது ஆண்களின் உதவி நிச்சயம் தேவைப்படுகிறது. பவ கரணத் தில் பிறந்தவர்கள் அதிக எடை கொண்டவர் களாக இருப்பார்கள். அதனால் எளிதில் மூட்டுத் தேய்மானம் ஆகிறது. இந்தக் கரணத் தில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள். பெரியோர்களிடம் பாராட்டும் பரிசும் பெறுபவர்கள் ஆகவே இருப்பார்கள். இவர்கள் கலந்துகொண்ட பல போட்டிளில் வெற்றிபெறுவார்கள். சுகத்தின்மீது மட்டுமே ஈர்ப்புடைய பூரண சுகவாசிகளாகவே இருப் பார்கள். இவர்கள் செய்யும் பல வேலைகள் தனித்தன்மை வாய்ந்ததாகவும் பிரமிக்கத் தக்கக்கூடிய வகையில் சிறப்பானதாக இருக்கும். இவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் பெரும் உபாசனை சக்தி பெறவும் சிங்கத்தின்மீது அமர்ந்த துர்க்கா கன்னிகா பரமேஸ்வரி போன்ற பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் அமைதி யானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அரசாங்க ஆதரவு எப்பொழுதும் உண்டு. இவர் கள் ஏழ்மை சூழ்நிலையில் பிறந்தாலும்கூட மிகவும் பெருந்தன்மையான பிறவி குணங் களை பெற்றிருப்பார்கள். இவர்கள் பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வார்கள். இந்த கரணத்துக் குரிய விலங்காக சிங்கம் இருப்பதால் வீர தீர சாகசம் புரியும் இராணுவம், காவல்துறை, தீயணைப்புதுறை, காவல் பணிகள், பலரை வழிநடத்தைச் செல்லும் தலைமை பணிகள் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களிடம் தெய்வ நம்பிக்கை குறைவாக இருக்கும். உழைப்பில் இருக்கும் நம்பிக்கை அளவிற்கு தெய்வத் திடம் நம்பிக்கை இருக்காது. எக்காரணத்தி லும் பின்வாங்காத தைரியம் உடையவர்கள். எதையும் நுண்ணியமாக கூர்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள். இவர்கள் வழிபடும் தெய் வத்தை கஸ்தூரி மஞ்சளினால் அபிஷேகம் செய்து வெண்மை துணியால் அலங்கரித்து மாணிக்க மாலை அணிவித்து, அன்னம் படைத்து அகில் குச்சியினால் தூபம் காட்டி புன்னை மலர்களால் அர்ச்சித்து வழி பட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கர்ண நாதன் பூரண பலம் அடைகிறது. ஜாதகருக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது. ஜாதகருக்கு காரியங்கள் நடக்க பலவித தடைகள் இருந்த போதிலும் காரியங்கள் சாதாரணமாக நடக்க இந்த கரணநாதர் உங்களுக்கு அருள் புரிகிறார்.
செல்: 90802 73877