ரணம்- பாலவம் இந்த கரணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த ஒழுக்கங்கள் கொண்டவர்களாக இருப் பார்கள்.

அதி தேவதை- ஐயப்பன்

மிருகம்- புலி

மலர்- செண்பக மலர்

கிரகம்- ராகு

தெய்வம்- கிராம காவல் தெய்வம்.

புலியை தன்னுடன் வைத்துள்ள தெய்வங்களை வழிபடலாம். இவர்களுக்கு வாசனை அதிகம் பிடிக்கும். எதுவும் மணக்கும் படி இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்தக் கரணம் மண் தத்துவமாகும் அதனால் இவர்கள் உடல் உபாதைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களில் பதப்படுத்தப் பட்ட மருந்துகள் நல்ல பலன் கொடுக்கும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோயும் மன பயமும் ஏற்படும். தெய்வ சிலைகளை அமைத்து அலங்கரித்து வீட்டில் வழிபட்டு வரலாம்.

ss

இவர்கள் தங்களது பரிகார தெய்வங் களை பக்குவப்படுத்தப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட தெய்வீக சிலைகளை வைத்து வழிபட்டுவந்தால் இவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இவர்களுக்கு திட்டமிடும் குணம் அதிகமாக இருக்கும் பல திட்டங் களை தீட்டும் அதிகாரிகளாகவும் குடும்பத்தை திட்டமிட்டு நடத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். மாணவ கரணம் ராகு தோஷத்தை நீக்கும். பாலவக் கருணத்தில் பிறந்தவர்களுக்கு ராகு பெரும் தீமையை தருவதில்லை. ஜாதகத்தில் திருமணத்தடை செய்யும் கடுமையான சர்ப்ப தோஷமாக இருந்தாலும்கூட இந்த கரணத்தில் பிறந்திருந் தால் திருமணம் சாதாரணமாக நடக்கிறது. அதேபோல் குழந்தை பாக்கியத்தை தடை செய்யும் கடுமையான சர்ப்ப தோஷமாக இருந்தாலும் இந்த கரணத்தில் பிறந்திருந் தால் குழந்தை பாக்கியம் சாதாரணமாக கிடைத்துவிடும். குழந்தை பாக்கியத்தையும் தடுப்பதில்லை. பாலவ கரணத்தில் பிறந்தவர் களுக்கு பதுங்கி செயல்படும் தன்மையுண்டு இவர்களுக்கு காத்திருந்து பழிவாங்கும் குணமும் உண்டு. இந்த கரணம் தரும் யோகம் 18 வருடங் களுக்கு நீடித்திருக்கும். அழகான தோற்றம் கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பார் கள். மிகுந்த தைரியசாலிகளாக இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். பிறருக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம்கொண்ட இவர்கள் அது சம்பந்த மான துறைகளில் சாதனைகளும் புரிவார் கள். ஆயுதம் இல்லாமல் போட்டியாளர் கள் கொண்ட விளையாட்டில் சிறந்து விளையாடுகி றார்கள்.

இந்தக் கரணத் தில் பிறந்தவர் களுக்கு லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகப்படி புதன் தசா காலத்தில் நோயால் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். நீங்காத பேரும் செல்வமுடைய வராக இருப்பார்கள். தாராளமான குணமும், தர்மம் செய்யும் மனமும் உடையவர்கள்.

பிறரால் போற்றக்கூடிய நற்குணம் உடைய வர்கள். தன் உறவினர்களையும் பேணிக் காக்கும் குணமுடையவர்களாகவே இருப் பார்கள். இந்த தருணத்தில் பிறந்தவர்கள் பலர் அனாதை ஆசிரமம் வைத்திருப்பவர் களாகவும் முதியோர் இல்லம் நடத்துபவர் களாகவும் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் வீட்டில் பலரும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்.

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சக்தியை அதிகப்படுத்த பாயசம் செய்து தெய்வத்திற்கு சன்னதியில் நெய்வேத்தியமாக வைத்து பிரார்த்தனை செய்து அந்த பாயசத்தை பலருக்கு தானமாக கொடுத்து தானும் சாப்பிட்டுவர இவர்களுக்கு கரணநாதன் பலமடைந்து இவர்களுக்கு மென்மேலும் பலம் கிடைக்கிறது. இவர்கள் வழிபடும் தெய்வத்தை வெள்ளி பாத்திரத்தில் சந்தனம் கலக்கி சந்தனம் பூசி சந்தனத்தால் அபிஷே கம் செய்து சிவப்புத் துணியினால் அலங் கரித்து முத்துமாலை அணிவித்து பாயசம் படைத்து செண்பகப் பூவால் அர்ச்சித்து வழிபட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கர்ண நாதன் பூரண பலம் அடைந்து ஜாதகருக்கு அனைத்து காரியங்கள் நடக்க பலவித தடைகள் இருந்த போதிலும் காரியங்கள் சாதாரணமாக உங்கள் கரணநாதன் உங்களுக்கு வாரி வழங்கி அருள்புரிவார்.

கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பான

Advertisment

தகவல்களுக்கு பேச: 90802 73877