ருவருடைய ஜனனக் குறிப்பு- அதாவது ஜாதகத்துடன் உள்ளங்கை அமைப்பும் சீராகக் காணப்பட்டால், வாழ்வின் தரம் சுலபமாகும். கைரேகை சாஸ்திரம் தேசிய நெடுஞ்சாலை போன்றது. அதில் காணப்படும் வளைவு, பாலம், குறுகலான பாதை போன்றவற்றை அறிவிப்புப் பலகைகள் சுட்டிக்காட்டுவதுபோல் உள்ளங்கை ரேகைகள், மேடுகள் உணரச் செய்யும்.

உதாரணமாக, கம்பரின் இராமாயண காவியத்தில் கைகேயியால் இராமன் கானகம் சென்றார் என்ற பழிச்சொல் உண்டு. உண்மையில் கைகேயி சாஸ்திர விவரங்களை அறிந்தவள். எனவேதான் இராமனை பதினான்கு ஆண்டுகள் மட்டுமே கானகம் சென்றுவர வரம் வாங்கினாள். இராமனுக்கு நாட்டில் ஏற்படும் கெடுதலைப் போக்க, பரதன் நாட்டை ஆளட்டும் என வேண்டிக் கொண்டாள். பதினான்கு ஆண்டுகள் 4இராமபிரான் அனுபவித்த துயரங்கள் நாம் அறிந்ததே. அவை யாவும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இறைசக்தியின் வெகுமதிதான் என்றால் மிகையல்ல.

நம் சொந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு 10-ல் சனி வலுவாகக் காணப்பட்டு, சனி விரலுக்கு நேர்கீழ் காணப்படும் சனி மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டு, ஜாதகத்தில் 12-ல் சூரியன் இருக்கப் பெற்றால், நாம் பல கோணங்களில் சம்பாதித்தவை யாவற்றையும் அனுபவிக்க இயலாமல் நம்மைவிட்டுச் சென்றுவிடும் என உணரல் வேண்டும்.

இவ்வாறாக ஜாதகத்தையும் உள்ளங்கையையும் ஒப்பிடும்போது பல உண்மைகள் தெரியவரும்.

Advertisment

பெற்ற மகளின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் சனி இருந்தால், சனிபகவான் அவளுக்கு கலப்புத் திருமணத்தை முடித்துவைக்கவே முயல்வார். சந்திரனுடன் ராகு- கேது காணப் பட்டால் திருமணகாலத்தில் குழப்பமான சூழ்நிலையே காணப்படும். இத்துடன் சுக்கிர மேட்டின் மையப்பகுதியில் கரும்புள்ளி தென்பட்டால், சுண்டு விரலில் கீழ் காணப்படும் திருமண ரேகை பிளவுபட்டால் காதல் திருமணம் ஈடேறுவது கடினமே.

ஒருவருடைய உள்ளங்கையில் சந்திர மேட்டில் திடமான ஒரு ரேகை உருவாகி, அது சூரியமேட்டை அடைந்தால் இவர்கள் ஜாதகத் தில் சந்திரன் லக்னத்திலேயே இருப்பார். அதன் பலன்- சந்திரன் அருளால் 90 ஆண்டுகள் வாழ ஆயுள் ரேகையும் பக்கபலமாக இருக்கும். 27 வயதிலிருந்து அரசு பதவிக்கு முயற்சிக்கலாம். இவர்கள் வயது 24-க்குமுன் திருமணம் செய்தல் விரும்பத்தக்கதல்ல. பெற்ற தாய்க்கு 34 வயதுமுதல் 48 வயதுவரை கண்பார்வை சார்ந்த தொல்லை வந்து மறையும். இவர்களுக்கு பால் பொருள் சார்ந்த வியாபாரம் ஒத்துவராது. சிவப்புநிறப் பொருட்கள் உற்பத்தி செய்யலாம்; வியாபாரமும் செய்யலாம்.

சூரியன், செவ்வாய், குரு 4 அல்லது 10-ல் இருக்கப் பெற்றால், பயணங்கள், வெளிநாட்டு வாணிபம், தொழில்மூலம் நன்மைகள் பெறலாம்.

Advertisment

சனி, சூரியன் 6-ல் இருக்கப் பெற்றால் வறுமை தாண்டவமாடும். குரு 11-ல் இருந்தால் திருமணத் திற்குப்பின் சில பின்னடைவு வரும். இதனை உறுதிசெய்வது சுக்கிரமேட்டின் கீழ்பாகத்தில் (கட்டை விரலை ஒட்டிய பாகம்) சல்லடைக் குறிகள் தோன்றியிருக்கும். இதற்கெல்லாம் பரிகாரம் கிடையாது. அனுபவம்தான் சிறந்த ஆசிரியர்.

jt

லக்னத்தில் சந்திரன் இருக்கப்பெற்று, 24 வயதிற்குமுன் சூழ்நிலை காரணமாக திருமணம் செய்துகொண்டால், ஜாதகத்தில் 7-ஆம் இடம் கிரகநாதர்கள் இல்லாதிருந்தால், வீட்டில் உதவிபுரியும் பணியாட்கள் இருத்தல் நன்று. சூரியன், சனி 6-ல் இருந்தால் வறுமை மெல்லமெல்ல வரும். புதன் 8-ல் இருந்தால் மணமானபின் நெருக்கடிவரும். ஜாதகம் வலுவுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவும்.

சுக்கிர மேட்டிலிருந்து ஒரு ரேகை (மெல்லியது) நேராக குரு மேட்டை அடைந்தால் ஜாதகத் தில் இரண்டாமிடம் நற்பலனைப் பெற்றுத் தரும். கட்டை விரலின் முதல் அங்குலாஸ்தியில் கோதுமை ரேகை சுத்தமாக, தீயகுறியின்றிக் காணப்படும். இதன் பலன்- வாலிபம்முதல் இறுதிவரை யோகநிலை பின்தொடரும். கட்டை விரல் இரண்டாம் அங்குலாஸ்தியில் கோதுமை ரேகை காணப்படடால் சகோதரி கள் இருந்தால் அதிக ஆதரவு பெறலாம்.

சந்திரன் லக்னத்தில் காணப்பட்டு, சந்திர மேடு உச்சம்பெற்றால், யோகம் தரும் வயதுகள் 2, 14, 26, 38, 50, 62, 81, 86 என இவ்வாறாக இருக்கும். வீடு, வாகனம் வரும்.

இரண்டாமிடத்தில் சந்திரன், லக்னத்தில் சூரியன் இருக்கப் பெற்றால் 25 வயதுமுதல் 34 வயதுவரை மனம் தீய எண்ணங்களில் நாட்ட மிடும். இதய ரேகையில் தீயகுறி, கரும்புள்ளி போன்றவை காணப்பட்டால் மனதை நல்வழிப்படுத்த தியானம் யோகம் போன்றவை செய்தல் நன்று.

3-ல் புதன், 9-ல் குரு இருந்தால் புதன்மேடு (சுண்டுவிரலை அடுத்தது), குருமேடு (சுட்டு விரலில் கீழ்பாகம்) நீசமாகக் காணப்படும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் வராது. பரிகாரமாக, 40 முதல் 43 நாட்கள் மாதர்களுக்கு மஞ்சள்நிற ஆடைகள் தானம் செய்வது நல்லது. பள்ளிக் குழந்தைகளுக்கு உதவிபுரிதல் வேண்டும்.

சந்திர மேட்டிலிருந்து ரேகை உதயமாகி புதன் மேட்டின் கீழ்பாகம் காணப்படும் இதய ரேகையில் முற்றுப்பெற்றால், இவர்கள் ஜாதகத்தில் சந்திரன் 12-ல், செவ்வாய் லக்னத் தில் இருக்கும். அரசு ஆதரவு தடையின்றி வந்து விடும். 2-ல் செவ்வாய் மாமனார்- மாமியார் செல்வந்தராக இருப்பார்கள். 3-ல் செவ்வாய் இருந்தால் சகோதரர்களால் பாகப்பிரிவினை வரும். 5-ல் கேது இருந்தால் பிள்ளைகளை வாலிபத்தில் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

4, 17, 28, 45, 55, 68 ஆகிய வயதுகளில் திடீர் மாற்றங்கள் வரும். நல்லதே நடக்கும்.

ஒருவருடைய உள்ளங்கையில், சுக்கிர மேட்டில் அல்லது கீழ்ச்செவ்வாய் மேட்டில் ரேகை உதயமாகி சந்திர மேட்டை அடைந்தால், அப்படிப்பட்ட நபரின் ஜாதக அமைப்பில் சந்திரன் லக்னத்திற்கு 3-ல் காணப்படுவார். இவர்கள் நன்மதிப்பு நிறைந்தவர்கள். சாதாரண குடும்பத்தில் வாழ்ந்தவரும் கௌரவத்தை சுயமாகத் தேடிக்கொள்ளலாம்.

ஜாதக நிலையில் 8-ஆமிடம் பலனற்றுக் காணப்பட்டால், பிறந்த எட்டாவது வயதில் சொத்து சுகம் வில்லங்கத்துக்கு உட்படுத்தப் படும். தாய்- தந்தையருக்கு அதன் அறிகுறி, கீழ்ச்செவ்வாய் மேட்டில் திடமான ரேகை உதயமாகி ஆயுள் ரேகையைக் கடந்து இதய ரேகையோடு முற்றுப்பெறும். ஆனால் லக்னத் திற்கு 12-ல் சனிபகவான் காணப்பட்டால் சட்டரீதியாக வரவேண்டியது வந்துவிடும்.

உள்ளங்கையில் இதய ரேகை சூரிய மேட்டைச் சார்ந்து வளைந்து காணப்படு வதோடு, சந்திர மேட்டிலிருந்து ஒரு ரேகை உதயமாகி ஆரோக்கிய ரேகையோடு இணைந் தால், அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் 5-ல் இருக்கப் பெறுவார். இவர்கள் உயர்வான ஆன்மிகவாதியாகத் திகழலாம். எதற்காகவும் எந்தவொரு சூழ்நிலையிலும் அச்சமென்பதே மனதில் இருக்காது. வியாபாரத்திலும் தன்னிறைவு பெறுவார். நல்ல குடும்பம் உருவாகும்.

இவர்களுடைய ஜாதகத்தில் சூரியன் 3 அல்லது 4-லும், சுக்கிரன், புதன் முறையே 9 அல்லது 11-லும் இருந்தால் எல்லாமே வெற்றிதான். கேது சீராக இருந்துகொண்டால் ஐந்து எண்ணிக்கைக்குமேல் ஆண் சந்ததி இருக்கப்பெறும்.

இதை நம்பும்விதமா, நான் ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தேன். முதலாளி கேரளத் தைச் சார்ந்தவர். அவருக்குத் தொடர்ச்சியாக எட்டு ஆண் சந்ததிகள்; அத்தனைப்பேரும் முத்தான பதவி வகித்தனர்.

சந்திர மேட்டிலிருந்து ரேகை உதயமாகி புத்தி ரேகையைத் தாண்டி புதன்மேட்டை அடைந்தால், இவர்கள் ஜாதகத்தில் சந்திரன் 6-ல் காணப்படுவார். இதன் பலன்- கிட்டத் தட்ட 80 வயதுவரை சுபிட்சமாக வாழலாம்.

இவர்கள் ஜாதகவாயிலாக குரு 2-ல் காணப் பட்டால் சில பின்னடைவால் தாயாரின் உடல் நிலை சிரமத்தைத் தரும். சொத்து சுகங்களிலும் மாற்றங்கள் வரலாம். பால் பொருட்கள் தானம் மிகச் சிறந்தது. ஐந்து வாரம் திங்களன்று, ராகு காலத்தில் பச்சைத் தண்ணீர் அருந்த வேண்டாம்.

இதய ரேகை புதன் மேட்டில் முற்றுப் பெற்று, சந்திர மேடு உச்சமாகக் காணப்படும். சந்திர மேட்டிலிருந்து ரேகை சுக்கிர மேட்டை அடைந்தால், குடும்ப வாழ்க்கையில்- ஆணானா லும் பெண்ணானாலும். பிறர் பாராட்டைப் பெறலாம். அனேகர் தங்கள் வாழ்க்கைத் துணைக்குக் கட்டுப்பட்டு வாழநேரிடும். சொந்த நாட்டிலும், அயல் நாட்டிலும் தனலாபம் பெறலாம். ஆன்மிகம், ஜோதிடம், அருள்வாக்கு என பாதை அமைக்கலாம்.

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு லக்னத் திற்கு 7-ஆக அமைவதோடு, சனி அதனுடன் காணப்பட்டால், குடும்ப வாழ்வில் ஆயுதத் தால் விபத்து வரலாம். புதன் லக்னத்தில் காணப்பட்டால், மதுபோதையில் பிறரிடம் வாக்குவாதம் வேண்டாம். வீண் வில்லங்கம் வந்ததுவிடும்.

பரிகாரம்

சனிக்கிழமை, முதிர்ந்த வேப்பமரப் பட்டை அல்லது கிளைத் துண்டைக காயவைத்து வசிக்கும் அறையின் தென்பாகத்தில் வைத்தால் அம்மன் அருளால் நன்மைகள் பெருகும்.

சுக்கிரன் 8-ல் காணப்பட்டால், புத்தி ரேகை யின் மேல்பாகத்தில் முக்கோணம் காணப்படும். விதிரேகை சந்திரமேட்டில் முற்றுப் பெறும். சிலருக்கு ஆயுள்ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றிருக்கும். ஜாதகத்தில் சனி, 2-ல் இருந்தால் ராகு மற்றும் சந்திரனால் அதிக நன்மைபெறலாம். சுண்டுவிரல் நீண்டு காணப்படும். எண்பது வயதைக் கடக்கலாம். பொதுவாழ்வு மேன்மை தரும்.

பொதுப் பரிகாரம்

உள்ளங்கையில் ஏழு மேடுகள், ஞாயிறு (சூரியன்), சந்திரன், செவ்வாய் (மேல், செவ்வாய், கீழ் செவ்வாய்), புதன், குரு, சுக்கிரன், சனி என அமையப்பெறும். அதனை உன்னிப் பாகப் பாருங்கள். சில மேடுகள் தாழ்ந்து, சில உயர்ந்து காணப்படும். சனி மேடு தாழ்ந்துதான் இருக்கவேண்டும். நீசமான மேடுகளுக்கு அவை சார்ந்த கிரகநாதரை வணங்கி சுபிட்ச மாக வாழலாம்.

செல்: 93801 73464