ஒவ்வொரு நாளும் அனேகமாக அனைத்து வீடுகளிலும் காலைநேர பரபரப்பு இருக்கும். அதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை மறதியாக எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள் பாருங்கள்- உச்சபட்ச டென்ஷனைத் தந்துவிடும். "கார் சாவி எங்கே? ஸ்கூட்டர் சாவியை இங்கேதான் வைத்தேன்; காணோமே' என்றும், மேட்சிங் டிரஸ் வகையறா எங்கே என்றும், இன்னும் பள்ளிக் குழந்தைகளின் அம்மாக்கள் அதையும் இதையும் தேடுவது எப்போதும் நடப்பதுதான்.
ஆனால் வீட்டில் நகை போன்ற விலை மதிப்புமிக்க பொருள், வீட்டுமனைப் பத்திரம், பங்குப்பத்திரம், செக் புக், நிரந்தர வைப்பு டாக்குமென்ட், லாக்கர் சாவி, கார் இன்ஷூரன்ஸ் பேப்பர்கள், கடன் சம்பந்த ஒப்பந்தம், வியாபார கையெழுத்துப் பத்திரம், உயில், தொழிற்சாலைக்கான டாக்குமென்டுகள், கான்டிராக்ட்டுகள், வெளிநாட்டு பாஸ்போர்ட் என இன்னும் பல முக்கிய தஸ்தாவேஜுக்கள் தொலைந்துவிட்டால் எவருக்குமே மிக பதட்டம் தொற்றிக் கொள்ளும். அது வீட்டிலேயே மறதியாக வேறெங்காவது வைக்கப்பட்டு விட்டதா அல்லது திருடு போய்விட்டதா என மனக் குழப்பமும் பயமும் தடுமாற்றமும் ஏற்படும்.
இதற்கெல்லாம் பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் தீர்வு காணலாம். ஆனால் பொது மக்கள், அவசர மனநிலையில் ஜோதிடரி டம் போவதென்பது சற்று சிரமமான விஷயம். இதற்கு உங்களுக்கு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் ஹோரா எனும் ஓரை கால நிலை.
நீங்கள் ஒரு பொருள் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்ததும், உடனே அந்த நிமிடத்து நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும். பின் காலண்டரில் அல்லது பஞ்சாங்கத்தில் அந்த நேர ஹோரையின் கால கிரகத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
அந்த ஹோரையின் நிலையைக் கொண்டு பொருளின் இருப்பிடத்தை அறியமுடியும்.
சூரிய ஹோரை
உங்கள் நேரக் கணக்
ஒவ்வொரு நாளும் அனேகமாக அனைத்து வீடுகளிலும் காலைநேர பரபரப்பு இருக்கும். அதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை மறதியாக எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள் பாருங்கள்- உச்சபட்ச டென்ஷனைத் தந்துவிடும். "கார் சாவி எங்கே? ஸ்கூட்டர் சாவியை இங்கேதான் வைத்தேன்; காணோமே' என்றும், மேட்சிங் டிரஸ் வகையறா எங்கே என்றும், இன்னும் பள்ளிக் குழந்தைகளின் அம்மாக்கள் அதையும் இதையும் தேடுவது எப்போதும் நடப்பதுதான்.
ஆனால் வீட்டில் நகை போன்ற விலை மதிப்புமிக்க பொருள், வீட்டுமனைப் பத்திரம், பங்குப்பத்திரம், செக் புக், நிரந்தர வைப்பு டாக்குமென்ட், லாக்கர் சாவி, கார் இன்ஷூரன்ஸ் பேப்பர்கள், கடன் சம்பந்த ஒப்பந்தம், வியாபார கையெழுத்துப் பத்திரம், உயில், தொழிற்சாலைக்கான டாக்குமென்டுகள், கான்டிராக்ட்டுகள், வெளிநாட்டு பாஸ்போர்ட் என இன்னும் பல முக்கிய தஸ்தாவேஜுக்கள் தொலைந்துவிட்டால் எவருக்குமே மிக பதட்டம் தொற்றிக் கொள்ளும். அது வீட்டிலேயே மறதியாக வேறெங்காவது வைக்கப்பட்டு விட்டதா அல்லது திருடு போய்விட்டதா என மனக் குழப்பமும் பயமும் தடுமாற்றமும் ஏற்படும்.
இதற்கெல்லாம் பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் தீர்வு காணலாம். ஆனால் பொது மக்கள், அவசர மனநிலையில் ஜோதிடரி டம் போவதென்பது சற்று சிரமமான விஷயம். இதற்கு உங்களுக்கு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் ஹோரா எனும் ஓரை கால நிலை.
நீங்கள் ஒரு பொருள் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்ததும், உடனே அந்த நிமிடத்து நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும். பின் காலண்டரில் அல்லது பஞ்சாங்கத்தில் அந்த நேர ஹோரையின் கால கிரகத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
அந்த ஹோரையின் நிலையைக் கொண்டு பொருளின் இருப்பிடத்தை அறியமுடியும்.
சூரிய ஹோரை
உங்கள் நேரக் கணக்குப்படி, சூரிய ஹோரை வருமாயின் நீங்கள் தொலைத்த பொருளைத் தேடவேண்டிய இடங்கள்:
விளக்கு, ஒளி, மின்சார மீட்டர் பெட்டி அருகில், முகம் பார்க்கும் டிரஸ்ஸிங் டேபிள், பூஜையறை, விபூதி வைக்குமிடம், ஆபரணங்கள் வைக்கும் பெட்டி, சமயலறை, அடுப்பு வைத்திருக்கும் இடமருகில், மருந்து சம்பந்தமான பொருட்கள் வைத்திருக்கும் ஷெல்ஃப், துணி அடுக்குகளின் இடையே, குழந்தைகளின் புத்தக அலமாரி மற்றும் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள் பரப்பியிருக்கும் இடம், அரிசி டப்பா, தேங்காய் சேர்த்து வைத்திருக்கும் இடம், உங்களின் அலுவலக அலமாரிகள், விளையாடுமிடம், வியாபாரிகளாயின் உங்கள் கடைகளில் என இவ்விடங்களில் தேடினால் நீங்கள் தொலைத்த பொருள் உங்களுக்குக் கிடைக்கும்.
சந்திர ஹோரை
உங்கள் பொருள் தொலைந்த நேரம் சந்திரன் ஓரையில் வந்தால் தேடவேண்டிய இடங்கள்:
கிணறு அருகில், தண்ணீர் டிரம் பக்கத்தில், மோட்டார் அறையில், அரிசி டிரம் அருகே, படங்களின் பின்னால், கண்ணாடி அருகில், செடி, வயல் அருகில், பால், தயிர் வைக்குமிடத்தில், மருந்துப் பொருட்கள் அருகே, கதைப் புத்தங்களின் பக்கத்தில், பூக்கள் அருகே, வெண்மை நிறம்
கொண்ட பொருட்களின் அருகே, உணவு மேஜை, மீன்தொட்டி அருகே, கடிகாரம், மெத்தை, கடிதங்கள் வைக்குமிடம், சந்தனம் வைக்குமிடம், குங்குமம் உள்ள செப்பு, வெண்கலப் பொருட்கள், குடிநீர் கேன் அருகில், காய்கறி ட்ரே, குளியலறை என இவ்விடங்களில் தேடவும்.
இந்த சந்திர ஹோரை வந்து, அன்றைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் எனில் தேடுவது சற்று சிரமம். சந்திராஷ்டமம் முடிந்தபிறகு தான் தேடிய பொருள் கைக்குக் கிடைக்கும். அன்றைக்கு சந்திரன் உச்சமாகியிருந்தால், தேடிய பொருளுடன், தேடாத பொருளும் சர்ப்ரைஸாக சேர்ந்து கிடைக்கும்.
செவ்வாய் ஹோரை
தேடிய நேரம் செவ்வாய் ஹோரையாக வந்தால் பொருள் கிடைப்பது சற்று சிரமம் தான். எனினும் அன்றைக்கு செவ்வாய் உங்கள் ராசிக்கு நல்ல நிலையில் இருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோரை வந்தால் தேடவேண்டிய இடங்கள்:
அடுப்பருகே, சாக்கடை அருகில், முட்கள் உள்ள பகுதியில், பள்ளமான இடங்களில், மட்பாண்டத்தில், கத்தி, கத்தரிக்கோல் வைக்குமிடத்தில், மிளகாய் வற்றல் டப்பாக் களில், செம்புப் பாத்திரத்தில், விளையாட்டுப் பொருள் குவிந்து கிடக்குமிடத்தில், தையல் எந்திரம் அருகே, கிரைண்டர் பக்கத்தில், அயர்ன் பாக்ஸ் அருகே, எலெக்டிரிக் ஓவன், தோசைக்கல் வைக்குமிடத்தில், தீப்பெட்டி அருகே, வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், மாட்டுத் தொழுவத்தில், குடிசையில் நாய் கட்டுமிடத்தில், விறகு போட்டு வைக்குமிடத் தில், மரம் பக்கத்தில், அசைவம் சம்பந்தமான இடங்களில் நன்றாகத் தேடினால் கிடைக்க வாய்ப்புண்டு.
புதன் ஹோரை
தேடும் நேர ஹோரை புதனாக அமைய தேடிவேண்டிய இடங்கள்:
புத்தக அலமாரி, செடிகள், தோட்டத்தில், பூந்தொட்டி அருகே, பணப்பெட்டியில், எழுதுபொருள் வைக்குமிடத்தில், எழுதும் மேசையில், சிறு பொம்மைகள் அருகில், இசைக் கருவிகள் பக்கத்தில், ஆடைகள் உள்ள அலமாரியில், கண்ணாடியின் பின்புறமுள்ள சுவரில், டிரங்க் பெட்டியில், சூட்கேஸில், டைனிங் டேபிளிலில், குழந்தைகள் புழங்குமிடத்தில், மருந்து வைக்குமிடத்தில், டைரியின் உள்ளே, ஸ்டோர் ரூமில், புது ஆடைகள் வாங்கிய கவரில், பறவைகளின் கூண்டருகில், புராணக் கதைப் புத்தகத்தில், பத்திரிகை, தினசரி, வாரப் பத்திரிகைகள் வைக்குமிடத்தில், ஸ்டேஷனரி பொருட்கள் உள்ள இடத்தில், பித்தனைப் பூ வைக்கும் குவளையில், தொலைபேசி அருகில், சாமி படங்களின் பின்னால் என தேடினால் தொலைந்த பொருள் கிடைக்கும்.
குரு ஹோரை
உங்கள் பொருள் தொலைத்த நேரம் குரு ஓரையில் வருமாயின் தேடவேண்டிய இடங்கள்:
பூஜையறையில், சாமி படங்களின் பின்னால், ருத்ராட்ச மாலை வைக்கு மிடத்தில், பூஜைப் பொருட்களை பத்திரப் படுத்துமிடத்தில், பள்ளி, கல்லூரிகளில், கோவில்களில், பெரிய மரங்கள் அருகில், பசுத் தொழுவத்தில், தேன், நெய் போன்றவை இருக்குமிடத்தில், வீட்டு பர்னிச்சர்களின் பின்புறம், மளிகைப் பொருட்கள் உள்ள அடுக்குகளில், விவசாயம் சார்புடைய பொருட்கள் உள்ள இடத்தில், ஆரோக்கியம் சம்பந்தமான கருவிகள் உள்ள இடத்தில், மஞ்சள்நிறப் பொருட்களின் அருகில், உங்கள் வீட்டில் ஊஞ்சல் இருந்தால் அதன் அருகில், பழைய ஆடைகளைப் போட்டுவைக்கும் கூடையில், பழரசம் பிழியும் கருவி அருகில், கிணறு அருகில், நீர் நிரப்பி வைக்கும் தொட்டி அல்லது வாட்டர் டேங்க் அல்லது மேல்நிலை நீர்த்தொட்டி அருகில், இரண்டு பொருட்கள் சேர்ந்திருக்கும் அமைப்பின் அருகில், பலாமரம் அருகில் எனத் தேடவேண்டும். குரு ஹோரை வந்தால் முக்கியமாக பூஜை, தெய்வீகம் சம்பந்தமான இடங்களில் முதலில் தேடவேண்டும்.
சுக்கிர ஹோரை
உங்கள் பொருள் தொலைந்த நேரம் சுக்கிர ஹோரையில் வருமாயின் தேடவேண்டிய இடங்கள்:
புதிய ஆடைகள் வைத்துள்ள இடங்கள், வளர்ப்புப் பிராணி கட்டியிருக்கும் இடங்கள், படுக்கயறை, பூக்கள் வைக்குமிடம், உப்பு ஜாடியருகில், நீருள்ள இடங்களின் அருகில், நாட்டியம் பயிலும் இடங்களில், இசைக் கருவி வைத்துள்ள இடமருகில், நீச்சல் குளம் அருகில், அலங்கார விளக்குகள் அருகே, வெள்ளைநிறப் பொருட்கள் அருகே, அழகுப் பொருட்கள், மேக்கப் பொருட்கள் வைத்துள்ள டிரஸ்ஸிங் டேபிள் அருகே, பழரசம் செய்யும் கருவியருகில், கடையரு கில்- அதிலும் தராசுக் கருவியருகில், புல் வெளியில், கால்நடைகள் மேயும் பகுதியில், பசுத் தொழுவத்தில், நாற்காலிகளில், பூந்தொட்டி அருகில், பாய் வைத்திருக்கும் இடத்தில், கண்ணாடி அலமாரியில், பட்டுப் புடவைகளின் மடிப்புகளில், போட்டோக்களின் பின்னால், தையல் மெஷின் அருகில் என தேடவேண்டும். சுக்கிர ஹோரை வந்தால் படுக்கும் இடத்திலும், அழகுப் பொருட்கள் வைக்கும் இடத்திலும், வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் முதலில் தேடவேண்டும்.
சனி ஹோரை
நீங்கள் பொருள் தொலைத்த நேரம் சனி ஹோரையாக வந்தால் தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. எனவே வீணாகத் தேடவேண்டாம். முயற்சிசெய்து பார்க்கலாமே எனத் தோன்றினால், பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில், சாக்கடை அருகில், எண்ணெய் வைத்துள்ள இடத்தில், நிலக்கரி, சிமென்ட், கருங்கல் உள்ள இடங்களில், கம்பளியை உதறிப் பார்த்தல், கிணறு, மறைவான இடங்கள், துர்நாற்றம் அடிக்கும் இடங்கள், மீன் உள்ள இடத்தில், குப்பைக் கூடை அருகில், பிண்ணாக்கு மூட்டை அருகில், செருப்பு வைக்குமிடத்தில், டாஸ்மாக் கடையில், கருப்புநிறப் பொருட்கள் வைக்குமிடங்களில் தேடலாம்.
வீட்டில் குழந்தைகள் காணாமல் போய்விட்டால் உடனடியாக காவல் நிலையத் திற்குத் தகவல் கொடுத்துவிடவேண்டும்.
பொருட்கள் காணாமல் போனால் உடனே அரைக்காசு அம்மனை வேண்டிக் கொள்ளவும். புதுக்கோட்டை அருகில் திருக்கோகர்ணம் ஆலய அரைக்காசு அம்மன் எனப்படும் பிரகதாம்பாளை நினைத்து வழிபட வேண்டும். இவளை வேண்டிக்கொள்ள பொருட்கள் கிடைத்து விடும். பொருட்கள் கிடைத்தவுடன் பூஜையறையில் கொஞ்சம் வெல்லம் வைத்து நிவேதனம் செய்யவும். மனிதர்கள் காணாமல் போனாலும் இந்த அம்மனை வேண்டிக்கொள்ளலாம்.
செல்: 94449 61845