ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிடநாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும் நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல. அது பிரபஞ்சம் என்னும் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நம் விதியை சொல்லும் ஒரு முன்னோட்டமே!
ஒவ்வொரு மனிதனின் பெயரைகொண்டும் அவன் பிறந்த தேதிகளுக்குள்ளும் அந்த பெயர் எண்களின் கூட்டத் தொகைகுள்ளும் அவனது வாழ்வியல் ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது. அதனைத் தெளிவாக அவனது ஜாதகக் கட்டத்தில் இருக்கும் கிரகங் கள் நமக்கு உணர்த்தும்.
ஒரு மனிதனுடைய ஜாதகத்தை பார்க்காமலேயே அவருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் மற்றும் அவர் பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றைக் கூட்டி வரக்கூடிய எண் அல்லது அவர் பெயரின் முதல் எழுத்து இவற்றைக் கொண்டு அந்த மனிதனு டைய வாழ்வியல் விஷயங் களை நாம் எளிதாக சொல்லி விடலாம்.
அந்தவகையில் நாம் இன்று காண இருப்பது சூரிய னின் ஆதிக்கம் யாருக் கெல்லாம் இருக்கும். இவர்களின் ஜாதகத் தில் எவ்வாறு சூரியன் அமைப்பு முதன்மையாக இருக்கிறது. இவர்கள் வெற்றிபெற என்னவிதமான செயல்கள் செய்யவேண்டும். எந்தவிதமான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எந்தவிதமான பரிகாரங்கள் செய்வதன்மூலம் அவர் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி இன்றைய கட்டுரையில் காண்போம்.
ஒரு மனிதனின் அவருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் ஆ ஒ ஓ ஃ வ அல்லது இதனு டைய பிறந்த தேதி 1, 10, 19 எனில் அல்லது இவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றை மூன்றையும் கூட்டி வரக்கூடிய தொகை 1 எனில் அல்லது இவரின் பெயரின் எழுத்துக்களை கூட்டி வரக்கூடிய தொகை 1 எனில் இவர் முழுவதும் சூரியனின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய நபராக இருப்பார்.நேர்மை, நாணயம், அதிகாரம் இவைகள் நிறைந்த நபராக இவர்கள் இருக்கிறார்கள். சுதந்திரமான எண்ணம் கொண்ட இவர்கள் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவராகவும் தன் எண்ணங்களை செயலாற்றி காட்டக்கூடிய திறமை கொண்டவராக வும் இருக்கிறார்கள். இவர்கள் ஜாதகத்தில் சூரியன் என்ற கிரகம் முதன்மை கிரகமாக அந்த ஜாதகத்தை ஆளும் கிரகமாக அமைந்திருக்கும்.
அதாவது இவர்களின் சுய ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருக்கும் அல்லது லக்னாதிபதியுடன் இருக்கும்.
பரிவர்த்தனை பார்வை இப்படி ஏதேனும் ஒருவகையில் லக்னம் லக்னாதிபதியை தொடர்பு கொண்டிருக்கும். மேலும் இவர்கள் சிம்ம ராசி, சிம்ம லக்னம், உத்திராடம், கிருத்திகை, உத்திரம் போன்ற நட்சத்திர ராசி லக்னங்களில் பிறந்த வர்களாகவும் இருப்பார்கள்.
வணிசை பவ கரணத்தில் பெரும்பாலும் இவர்கள் பிறக்கிறார்கள்.
மிஸ் பண்ண ஜாதக அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின் தொடர்பு நிச்சயம் இருக்கும். இவர்கள் எல்லாரையும் தன் கட்டுப்பாட்டில்கொண்டு வருகிறார்கள். மற்றவர்களை அதிகாரம் செலுத்துவ திலும் அரவணைப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே.
வஞ்சகம், துரோகம், ரகசியம் போன்ற கெட்ட எண்ணங்கள் ஏதும் தனுடன் வைத்துக்கொள்ளாமல் எதனையும் தைரியமாக வெளிப்படையாக செய்யக்கூடிய நபராக இவர்கள் இருப் பார்கள். தான் மற்றவரை சென்று நாடாமல் தன்னை மற்றவர் நாடி வரவேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்கள். பிரபலமாகவும் பிரகாசமாகவும் கம்பீரமாகவும் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்வில் நோக்கமாக இருக்கும். அதற்கு ஏற்பவே இவர்களின் வாழ்வியல் நடைமுறைகள் இருக்கும்.
தன்னைச் சுற்றி உள்ளவர்களின் நிலையறிந்து ஓடிச்சென்று உதவுவதில் முதல் நபராக இருக்கும் இவர்கள் பெரும்பாலும் மற்றவர் உதவியை நாடுவது இல்லை. சோம்பேறிகள்தான். இருந்தாலும் அவர்கள் மற்றவர்களை திறமையாக வேலை வாங்கக்கூடிய அமைப்பை கொண்டவர்கள்.
மருத்துவம், அதிகாரம், அரசு சார்ந்த தொழில்கள், நிறுவனங்கள், பரம்பரையாக செய்துவரும் தொழில்கள் போன்ற அமைப்புகளில் இவர்களின் உத்தியோகம் அமைகிறது. அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் இவர்கள். இவர்கள் வீட்டில் அரசு பணியாற்றும் நபர் அல்லது அரசியலில் இருக்கக்கூடியவர் நிச்சயம் இருப்பார்கள்.
இவர்களுக்கு வரக்கூடிய நோய்களாக ஒற்றைத் தலைவலி, முதுகுத்தண்டு சார்ந்த பிரச்சினைகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வலது கண் பாதிப்பு அடைதல், எலும்பு தொடர்பான வியாதிகளால் இவர்கள் 40 வயதுக்குமேல் அவதிப்படுகிறார்கள்.
சூரியனின் ஆளுமையைப்பெற்ற இவர்கள் அனுதினமும் சூரியனை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்து வருதல்வேண்டும்.
அசைவ உணவுகளைத் தவிர்த்து பிரதோஷ வழிபாடுகளை சிறப்பாக இவர்கள் மேற்கொள்ளவேண்டும். வயதில் மூத்தவர்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டு அவர்களை பகைக்கக்கூடாது. அரசு உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
அரசு சார்ந்த, ஆவணம் சார்ந்த தவறுகள் ஏதும் செய்யாமல் தான் செய்யும் தொழில் நேர்மையைக் கடைப்பிடித்தாலே இவர்களின் வெற்றியின் உயரம் அளப்பரியதாக இருக்கும்.
வாழ்வின் வெளிச்சம் இவர்களை வந்தடையும்.
செல்: 99525 43925