ஸரயூ நதியின் இரு கரைகளிலும் கோஸலமென்ற ஒரு தேசம் உண்டு. அது வெகு விஸ்தாரமுள்ளது. அதில் அளவற்ற தானிய வளமும், கவலையற்ற மக்களும் ஆனந்தமாக காலம் கழிக்கிறார்கள்.
இந்த கோஸலை நாட்டில், அயோத்தியை எனும் நகரமுண்டு. மனுஷ்யர்களுக்கு அதிபதியான வைவஸ்வத மனுவால் உண்டாக்கப்பட்டது. 12 யோஜனை நீளமும், மூன்று யோஜனை அகலமுமுள்ளது. சமமான பூமியில் தான்யங்கள் செழித்து வளரும் ஸ்தலமாகும். அதிலுள்ள ஜலம் கரும்பைப் போல், ருசியாக இருக்கும். அதனுடைய சாலைகள் இருமடுங்கில
ஸரயூ நதியின் இரு கரைகளிலும் கோஸலமென்ற ஒரு தேசம் உண்டு. அது வெகு விஸ்தாரமுள்ளது. அதில் அளவற்ற தானிய வளமும், கவலையற்ற மக்களும் ஆனந்தமாக காலம் கழிக்கிறார்கள்.
இந்த கோஸலை நாட்டில், அயோத்தியை எனும் நகரமுண்டு. மனுஷ்யர்களுக்கு அதிபதியான வைவஸ்வத மனுவால் உண்டாக்கப்பட்டது. 12 யோஜனை நீளமும், மூன்று யோஜனை அகலமுமுள்ளது. சமமான பூமியில் தான்யங்கள் செழித்து வளரும் ஸ்தலமாகும். அதிலுள்ள ஜலம் கரும்பைப் போல், ருசியாக இருக்கும். அதனுடைய சாலைகள் இருமடுங்கிலும் நிழல் தரும் மரங்கள்கொண்டது. கோட்டையைச் சுற்றி அகழ்கள்கொண்டது. கோட்டை சுவரில் சதக்னி முதலிய ஆயுதங்களுடன் வீரர்கள் இருப் பார்கள். விலையற்ற ரத்னங்கள் இழைத்த க்ரீடா கிரகங் களும். க்ரீடா பர்வதங்களும் காணப்படும். உயரமான மேடைகளின்மேல் கட்டப்பட்ட வீடுகளில் கொடிகள் பறக்கின்றன. ராஜவீதிகள் சில்மிகளாலும் ஸங்கீத நிபுணர் களாலும், அரசனுக்கு கப்பம் கட்ட வந்த அரசர்களாலும் நிறைந்திருக்கும். உத்தம ஜாதி யானை, கழுதை, பசு, ஒட்டகம், எருது, கோவேறு கழுதை என பலகோடி உண்டு.
அதிலுள்ள பிராமணர்கள் அக்னி ஹோத்ரம், ஔபாஸனம், வைசுவதேவம் முதலிய வைதிகக் கிரியைகளை விதிப்படி அனுஷ்டிப்பர். அதிலுள்ள க்ஷத்ரி யர்கள் அஸ்த்ர சாஸ்த்ர வித்யில் நிபுணர்கள் துணையற்றவனையும், ஒரே புத்ரனையும் அடிப்பதில்லை.
இப்படி அழகுபெற்ற அயோத்யை எனும் உத்தம நகரம் பூமியில் பிரசித்தி பெற்றது. இந்த அயோத்தியை நகரை இஷ்வாகு குல அரசர்களில் அதிரதரான தசரதர் ஆட்சி செய்தார். இவர் புத்திர பாக்கியத்திற்காக, அசுவமேத யாகம் நடத்தினார்.
தசரதருடைய அஸ்வமேத யாகத்தில் யாக பாகங்களை பெற வந்த ஸகல தேவர்களும், தங்களின் தலைவனான ப்ரஹ்மாவை நோக்கி, ஸ்வாமி இராவணன் என்ற ராட்சஸன், கடுந்தவத்தால் தங்களை சந்தோஷப்படுத்தி, அபூர்வமான வரங்களைப்பெற்று, எங்களை உபத்திரவிக்கிறான்.
தேவர்களால் மரணமில்லை என வரம் கொடுத் துள்ளீர்கள். மேலும் அவனுக்கு தேவ, கந்தர்வ, ரிஷிகள், ராட்சஸர்கள் யாவராலும் மரணம் நேராது எனவும் வரம் அளித்துள்ளீர்கள். எனவே அவனிடமிருந்து எங்களைக் காத்து ரட்சிக்கவேண்டும்' என வணக்கமாய் தெரிவித்தனர்.
அதனைக்கேட்ட பிரஹமா, அவன் மனிதர்களை அலட்சியம் செய்து, அவர்களால் மரணம் நேரக்கூடா தென்று எனும் வரத்தை கேட்கவில்லை. எனவே அவனுக்கு மனிதனாலேயே மரணம் நேரும் என சமாதானம் கூறினார்.
ஸகலரும், ஸ்ரீ மகாவிஷ்ணுவை வணங்க, விஷ்ணுவும், இராவண வதத்திற்காக, தாம் தசரதருக்கு, நான்கு அம்சங்களாக புத்திரராக பிறப்பதாக வரமளித்தார். இதனால், அயோத்யை எனும் பூமி, ஸ்ரீமத் நாராயணரின் அவதாரத் தால், புண்ணிய பூமியாக மாறியது. விஷ்ணுவே ஸ்ரீராமராக அவதரித்தார்.
செல்: 94449 61845