"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பது சொல்லடை.
ஆனாலும் பாருங்கள், வேறு எங்கும் காணமுடியாதபடி இப்படி ஒரு முருகன் கோவில் என்றால், ஆச்சரியமாகதானே இருக்கும். மலைமீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என, பல மலைக் கோவில்களில் இப்போது சாலை வழிப்பாதை அமைத்து, கார், பஸ் போகும்படி செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்த திருக்கோவிலில் மலையில் கால்நடையாக மட்டும்தான் ஏறி செல்லமுடியும்.
மலை ஏற்ற பாதை செங்குத்தாகதான் இருக்கும். தமிழகத் திலேயே உயரமான மலையில் இருந்து அருள்பாலிக்கும் முருகன் கோவில் இதுதான். இந்த மலையை ஏறி பழகி விட்டால், தமிழகத்திலுள்ள எந்த மலைக் கோவில்களிலும் ஏறுவது சிரமம் இருக்காது என்று சொல்லக்கூடிய அளவில் உயரமான மலை. மலை ஏற்றம், சுமார் 1,800 படிகளை கொண்டதாக, சற்று சிரமமாக இருந்தாலும் மலை ஏறும்போது, சுவாமி நம் பெயரை சொல்லி அழைக்கும் ஒலி கேட்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
இந்த கோவில் தினந்தோறும் திறந்து இருக்காது. சனி, ஞாயிறு மற்றும் கிருத்திகை நாட்களில்தான் திறந்து இருக்கும். சரி அப்படி ஒரு வித்தியாச
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பது சொல்லடை.
ஆனாலும் பாருங்கள், வேறு எங்கும் காணமுடியாதபடி இப்படி ஒரு முருகன் கோவில் என்றால், ஆச்சரியமாகதானே இருக்கும். மலைமீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என, பல மலைக் கோவில்களில் இப்போது சாலை வழிப்பாதை அமைத்து, கார், பஸ் போகும்படி செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்த திருக்கோவிலில் மலையில் கால்நடையாக மட்டும்தான் ஏறி செல்லமுடியும்.
மலை ஏற்ற பாதை செங்குத்தாகதான் இருக்கும். தமிழகத் திலேயே உயரமான மலையில் இருந்து அருள்பாலிக்கும் முருகன் கோவில் இதுதான். இந்த மலையை ஏறி பழகி விட்டால், தமிழகத்திலுள்ள எந்த மலைக் கோவில்களிலும் ஏறுவது சிரமம் இருக்காது என்று சொல்லக்கூடிய அளவில் உயரமான மலை. மலை ஏற்றம், சுமார் 1,800 படிகளை கொண்டதாக, சற்று சிரமமாக இருந்தாலும் மலை ஏறும்போது, சுவாமி நம் பெயரை சொல்லி அழைக்கும் ஒலி கேட்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
இந்த கோவில் தினந்தோறும் திறந்து இருக்காது. சனி, ஞாயிறு மற்றும் கிருத்திகை நாட்களில்தான் திறந்து இருக்கும். சரி அப்படி ஒரு வித்தியாசமான கோவிலா என்று நீங்கள் யோசிக்கும் அந்த திருக்கோவில் ஓதிமலைதான்.
சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலை, கோயம் புத்தூர் மாவட்டத்தில், இரும்பறை என்ற கிராமத்தில் உள்ளது. இங்குள்ள சுவாமிக்கு ஓதியப்பர் என்று பெயர்.
படைக்கும் தொழிலை செய்துவந்த பிரம்மதேவனுக்கு, பிரவணத்தின் பொருள் தெரியாமல் திகைக்க, அயனை தலையில் குட்டி, சிறையில் அடைத்து படைப்பு தொழிலை தாமே செய்ததாக புராணம் சொல்லும். சிறை என்பது அன்றையநாளில் இரும்பு அறையாக இருந்தது. அதனால் தான் மலைக்கு கீழ் பகுதி இன்றளவும் இரும்பறை என்ற பெயரில் உள்ளது. நடைமுறை பழக்கத்தில் மக்கள் இந்தபகுதியை இரும்பொறை என அழைக்கிறார்கள்.
இங்கு ஐந்து முகங்களும் எட்டு கரங்களும்கொண்ட திருமேனியுடன் முருகன் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறார். உலகிலேயே வேறு எங்கும் இந்த அமைப்பு முறை இல்லை என்பதால், "ஆதி பிரம்ம ஸ்வரூபம்' என்று சொல்கிறார்கள்.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத வடிவமைப்பிலுள்ள இந்த கோவில் அடிப்பாகம் வட்ட வடிவத்திலும், கூம்பு வடிவத்தில் உச்சி பகுதியும் அமைந்துள்ள சிறுமுகை என்ற இடத்தில் அமைந்த வனப்பகுதி ஆகும்.
பதினெண் சித்தர்களில் போகர் இங்கே இருந்து முருகனை தரிசித்து வழிபட்டுவந்தார். இவர் வாழ்ந்த இந்த பகுதி பூதிக்காடு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மண் வெள்ளை நிறத்தில் இருக்கும். விபூதிகாடு என்பது பூதி காடு என அழைக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் இந்த மண்ணே பிரசாதமாக வழங்குவார்கள்.
ஆறுமுகத்தில் ஒரு முகம் போகர் முனிவருக்கு, பழனி மலைக்கு செல்லவழி காட்ட ஆறு முகத்தில் ஒரு முகம் சென்றதால், இந்த திருத்தலத்தில் முருகனுக்கு ஐந்து முகம்தான். ஆறாவது முகம் அருகிலுள்ள குமார பாளையத்தில் இருந்து அருள்பாலிக்கிறது என்று சொல்கிறார்கள்.
சுவாமி மலையில் பிரணவத்திற்கு பொருள் சொல்லி, வேத ஆகமங்களை இந்த மலையில் ஓதியதால், இது ஓதிமலை என்ற பெயருடன் இன்றும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இங்கு வள்ளி, தெய்வானை கிடையாது.
இரவு நேரத்தில் விளக்குகள் இருப்பதில்லை என்பதால் மாலை நேரத்தில் மலை ஏறவோ, இரவு நேரத்தில் இறங்கவோ அனுமதி இல்லை.
இரும்பொறையில் இருந்து ஓதி மலை செல்ல பேருந்து வசதிகளும் போதிய அளவில் இல்லை என்பதால், இந்த மலைக்கு செல்பவர்கள் முன்னேற்பாடாக பயணத்தை திட்ட மிட்டுக் கொள்ளவேண்டும். அல்லது ஒரு வழிக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் நடைபயணமாக ஏற்றுக்கொள்ள தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
திருக்கோவிலும் தினமும் திறந்து இருக்காது என்பதால், கோவில் அர்ச்சகரிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வருகையை உறுதிசெய்துகொள்வது நல்லது. சனி, ஞாயிறு, கிருத்திகை போன்ற நாட்களில் திறந்து இருக்கும் என்றாலும் ஒருமுறை உறுதிசெய்துகொள்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும்.
மலைப்பாதையில் ஒரு லிங்க திருமேனியை வழிபட்டு மேலே சென்றால், சர்ப்ப கிரகங்கள் மட்டும் இருக்கும். தனியாக நவகிரகங்கள் இருக்காது. அதையும் தாண்டி மேலே படி ஏறி சென்றால் குரங்குகள் நிறைந்த பகுதி. அதையும் கடந்து மேலே சென்றால் திருக்கோவிலை அடையலாம்.
போதிய அளவு தண்ணீர், சாப்பாட்டு தேவைக்கு பண்டங்கள் என வாங்கி எடுத்துச்செல்வது சிக்கல் இல்லாத பயணமாக இருக்கும்.
இந்த கோவிலுக்கு செல்ல நினைப்பவர்கள், போதிய போக்குவரத்து வசதிகள் செய்துகொண்டுசெல்வது நல்லது. இல்லையென்றால் நீண்ட தூரம் நடக்கவேண்டியது இருக்கும் என்பதை குறித்துக்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறையாவது தல யாத்திரை செய்து பழகுங்கள். இவ்வளவு கஷ்ட பட்டு இங்கே போக வேண்டுமா என நினைக்காமல் போகவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு (commitசெய்துகொண்டு) உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.
புதியதாக ஒரு செயலை தொடங்கும்முன், தொழில் அபிவிருத்தி, என எந்த ஒரு செயலுக்கும் முன் இங்கேவந்து அனுமதிபெற்று செல்வார்கள். சிரசில் பூ வைத்து உத்தரவு வாங்குவார்கள்.
ஜோதிடரீதியாக எதிரிகளால் தொல்லை, வம்பு வழக்குகள் உள்ளவர்கள், எட்டாம் பாவகம் பழுதுபட்டு இருப்பவர்கள் இந்த திருத்தல முருகனை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
எந்த பாதிப்புமே இல்லாதவர்கள்கூட அவசியம் இந்த திருத்தல முருக பெருமானை வருடத்திற்கு ஒருமுறையாவது வணங்கி வழிபட்டுவந்தால், அந்த வருடத்து பிரச்சினைகள் மற்றும் சவால்களை சந்திக்கும் ஆற்றலும் சமயோசித அறிவும் சாதகமாக அமையும்.
கோவையில் இருந்து அன்னூர் வழியாக இருபொறை சென்று அங்கிருந்து ஓதிமலையை அடையலாம். வாய்ப்பு கிடைக்கட்டும் என காத்திருக்காமல், வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ஓதிமலை ஆண்டவரை வழிபட்டு சகல நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறோம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172