திருத்தல வரிசையில் வாரம் ஒன்றை சொல்லி மெய்சிலிரிக்க வைக்கிறீர்கள் என்று சொல்லி மகிழ்ந்த வாசகர்களில் சிலர், தேர்வுசெய்த கோவில்களை எடுத்து சொல்லி விளக்கத்தை சொல்கிறீர்கள். இப்போது புதிதாக வந்துள்ள அயோத்தி கோவிலைப் பற்றி எப்போ சொல்லுவீங்க என்று கேட்கிறார்கள்.

குறிப்பாக சில செய்திகளை சொல்கிறேன்; குறித்துக்கொள்ளுங்கள். திருத்தலம் என்பது நமக்கு பலன் தருவனவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அது கலை மட்டும் கலாச்சாரங்களை வெளிப் படுத்துவனவாக வும் இருக்க லாம். நம் அன்பின் மிகுதியால் அங்கே ஆண்டவ னின் சிலையை வைத்துவிடலாம்.

நம் வீட்டு வாசலில்கூட விநாயகர்

சிலையை வைப்பதைப் பார்த்து இருப்போம். அதை வைப்பதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அதாவது வீட்டு வாசலின் வலது புறம் வைக்கவேண்டும் என்பதுபோல சொல்லுவார்கள்.

Advertisment

அதுபோலதான் பலன் தரும் திருத்தலங்கள் என்று சொல்லும்போது அந்தபலன் நமக்கு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்வுசெய்து பதிகிறோம்.

இதில் நீங்கள் சொல்லும் அந்த திருக்கோவில் வரவில்லை என்றால் அதற்கு சில காரணங்கள் உண்டு.

ஆண்டவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந் திருந்தாலும், ஜோதிடரீதியாக ஒரு திருத்தலத்தை சொல்லும்போது, அந்த திருத்தல அமைப்பு, ஸ்தான சுத்தி,

Advertisment

மூர்த்தி தீர்த்தம், விருட்சம், அமைப்பு, திசை, சம்பவங்கள், வரலாறு என பலவற்றை சிந்தித்துதான் சொல்லப்படுகிறது. இவற்றுடன், அனுபவங்கள் சேரும்போது, இவை தானாக அமைந்துவிடும்.

திருத்தலங்களை தேர்வுசெய்து சொல்வதோடு மட்டும் அல்லாமல் வழிபாட்டு முறைகளையும், தெரிந்து

கொள்வதுதான் உசிதம். இதேபோல சிவன், முருகன் போன்ற சைவ கோவில்களில் மட்டும்தான் நவகிரகங்கள் இருக்கும். நவகிரகங்கள் என்பவை ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ண்ய்ஞ் ர்ச்ச்ண்ஸ்ரீங்ழ் போல, இறைவன் இட்ட ஆணையை செயல்படுத்துவார்கள். ஆணையை செயல்படுத்த கடமைபட்டவர்களுக்கு ஆணையை திருத்த அவர்களுக்கு உரிமை இல்லை.

அந்த நவகிரங்களிடமுள்ள ஆணையை படித்து சொல்வதுதான் ஜாதகம். அதை எடுத்துச் சொல்பவர்கள் தான் சோதிடர்கள் என்ற நிலையில் புரிந்துகொண்டால், நம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண யாரை அணுக வேண்டும் என்பது உங்களுக்கு சொல்லாமலே புரிந்துவிடும்.

"அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே'' என்பது சம்பந்தர் வாக்கு.

"அல்லல் என் செய்யும் அருவினை என் செய்யும்'' என்பது அப்பர் வாக்கு.

"நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்'' என்பது அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்.

"மாதமும் தினம் வாரமும் திதி யோகமும் அழ நாள்களும் படர் மாதிரம் திரி கோள்களும், கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர'' என்பது பாம்பன் ஸ்வாமிகள் வாக்கு. "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாளாது உஞற்று பவர்'' என்பது திருக்குறள்.

dd

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும், உங்கள் பிரச்சினைக்குரிய தீர்வுகாண, தேர்வுசெய்து தருவதுதான் வழிபடும் நலம் தரும் திருத்தலம். கையிலுள்ள கொத்துச் சாவியிலுள்ள எல்லா சாவியும் பூட்டி உள்ள அந்த பூட்டை திறக் காது. அந்த பூட்டுக்குரிய சாவியால் மட்டுமே திறக்க முடியும் என்பதுபோல, பிரச்சினைக்குரிய தீர்வுக்கு என தேர்வுசெய்த திருத்தலங்களை இந்த தொடரில் நாம் பார்த்தோம்.

அடிப்படையில் இறைவன், கடவுள், தெய்வம் என்ற வேறுபாட்டை புரிந்து கொண்டால், நீங்களே விளக்கம் எதுவும் சொல்லாமல், இதனைத் தெரிந்து கொள்ளமுடியும்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்கள் தெய்வம். குலதெய்வம் என்பதுபோல உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை அல்லவா. பிறந்து

மறைந்தவர்கள் கடவுள். பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை என்றால் இறைவன். இந்த அடிப்படை சிந்தனையில் வைத்து சிந்தித்து பார்த்தால், உங்களுக்கு மற்றது தானே விளங்கும்.

இதில் இறைவன், கடவுள், தெய்வம் என அனைவருக் கும் கோவில் உண்டு. மற்றவர்கள் வணங்கதக்கவர்கள், இறைவன் வழிபாட்டுக்கு உரியவன். வழிபாட்டுக்கு உரியவனால் மட்டுமே நம்மை வழிப்படுத்தி, நல்வழி காட்டமுடியும். வணக்கத்துக்குரியவர்களும் இறைவனை வணங்கிதான் நமக்கு ஆலோசனை தருவார்கள். ஆலோசனை தருவது என்பது வேறு. வழிப்படுத்துதல் என்பது வேறு. இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், வருத்தத்தில் இருக்கும்போது, நம்மை ஆற்றுப்படுத்தி வழிப்படுத்துவது தான் இறைவன். அதனால் தான் அவருக்கு மட்டும் வழிபாடு என்பதை புரிந்து கொண்டால் மற்றது தானே விளங்கும்.

அன்பர்கள் குறிப்பிட்டு சொன்ன அந்த கோவில், இந்த சிந்தனைகளுடன் வைத்து சிந்தித்து பார்த்தால் இது குறித்து எதுவும் சொல்ல தேவையில்லை என்பது புரியும். இன்னும் அங்கே திருப்பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் அங்கே சென்று அவர்கள் பணிக்கு தொந்தரவாக நாம் இருக்க கூடாது. அதனால் அங்கே சென்று அவர்கள் பணிக்கு தொந்தரவாக அவர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்யாமல் இருக்க அங்கே இப்போது செல்லாமல் இருப்பதே நல்லது என்பதை மனதில் பதித்துக் கொண்டால் எல்லாம் நன்மையே விளையும்.

இதுவரை 30 வாரங்களாக வந்துகொண்டு இருந்த "நலம் தரும் திருத்தலம்' இந்த வாரத்துடன் நிறைவுசெய்து தருகிறோம்.

அடடா... இவ்வளவு திருத்தலங்கள் தானா என்று ஏங்கி நிற்க வேண்டாம். சொல்வதற்கு நிறைய உண்டு என்றாலும், படிப்பவர்கள் சுவை கூடுவதற்கும், மெகா சீரியல்போல சலிப்பு வராமல் இருக்கவும் "நலம் தரும் திருத்தலம்' என்ற தொடரை இந்த வாரத்துடன் நிறைவுசெய்து தருகிறோம். இதுவரை நல் ஆதரவுதந்து ஊக்கப்படுத்திய ஒவ்வொரு "பால ஜோதிட' வாசகர்களுக்கும் நெஞ்சம்நிறைந்த நன்றிகளைப் பதிவு செய்கிறேன்.

திருத்தல தொடர்தான் வருவதில்லையே என்று சோர்ந்துவிடாமல், தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள். தமிழ்வழி வழிபாடு செய்யுங்கள். தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் ஒரு உணர்வு நிலை உண்டு. அது எண்ண நிலையை மாற்றிவிடும். எண்ணங்கள் எதுவோ அதுவே வாழ்க்கை என்ற உளவியல் தத்துவப்படி, வாழ்வியல் நிலை மாறும். அந்த மாற்றமே ஏற்றத்தை தரும். மற்றமொழி வழிபாடுகள் மனத்திற்கு அமைதி தரும். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்னொரு புதிய தொடரில், உங்களுடன் இனைந்து வருகிறேன்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(முற்றும்)

செல்: 94443 27172