நலம் தரும் திருத்தலம்! விசு அய்யர் 27

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-27

னக்கு சம்பளம் போதவில்லை. எதாவது Part-Time வருமானம் கிடைக்கும் படி யிருந்தால் சொல்லுங்க என பலரும் சமூக வலைப்பதிவுகளில் கேட்பதை பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு ஆலோசனையாக பலரும் கை காட்டுவது பங்குச் சந்தை தான். இப்போது பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டு விட்டது. 70 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து விட்டது என உசுப்பேத்தும் வார்த்தைகளைச் சொல்-, அடிப்படை தெரியாமல் பங்குச் சந்தையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் பலர் உண்டு. ஒருமுறை அடிபட்டவர்கள் அந்த பக்கமே எட்டிப் பார்க்காமல் போனதும் உண்டு.

நீண்டகால முதலீட்டுக்கு என்று ஆலோசனை வைத்தால், பலரும், முத-ல் கைகாட்டுவது பங்குச் சந்தைதான். அதை அடுத்து மியுச்சுவல் பண்டு. இப்படி நிறைய சொல்வார்கள்.

இன்னும் சிலர், சீட்டுக் கம்பெனி, அதிக வட்டி தரும் டெபாசிட் என ஏமாந்தவர்கள் பட்டியலும் ஏமாற்றிய கம்பெனிகள் பட்டியலும் நிறையவே உண்டு. அதை நாமும் அவ்வப்போது செய்திகளில் பார்த்துக்கொண்டு இருப்போம்.

temple

இதெல்லாம் வேண்டாம் என்று சின்னதாகத் தொழில்செய்து நஷ்டம் அடைந்து மீண்டும் தொழி-ல் முதலீடு செய்ய வாய்ப்பில்லாமல் இழ

னக்கு சம்பளம் போதவில்லை. எதாவது Part-Time வருமானம் கிடைக்கும் படி யிருந்தால் சொல்லுங்க என பலரும் சமூக வலைப்பதிவுகளில் கேட்பதை பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு ஆலோசனையாக பலரும் கை காட்டுவது பங்குச் சந்தை தான். இப்போது பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டு விட்டது. 70 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து விட்டது என உசுப்பேத்தும் வார்த்தைகளைச் சொல்-, அடிப்படை தெரியாமல் பங்குச் சந்தையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் பலர் உண்டு. ஒருமுறை அடிபட்டவர்கள் அந்த பக்கமே எட்டிப் பார்க்காமல் போனதும் உண்டு.

நீண்டகால முதலீட்டுக்கு என்று ஆலோசனை வைத்தால், பலரும், முத-ல் கைகாட்டுவது பங்குச் சந்தைதான். அதை அடுத்து மியுச்சுவல் பண்டு. இப்படி நிறைய சொல்வார்கள்.

இன்னும் சிலர், சீட்டுக் கம்பெனி, அதிக வட்டி தரும் டெபாசிட் என ஏமாந்தவர்கள் பட்டியலும் ஏமாற்றிய கம்பெனிகள் பட்டியலும் நிறையவே உண்டு. அதை நாமும் அவ்வப்போது செய்திகளில் பார்த்துக்கொண்டு இருப்போம்.

temple

இதெல்லாம் வேண்டாம் என்று சின்னதாகத் தொழில்செய்து நஷ்டம் அடைந்து மீண்டும் தொழி-ல் முதலீடு செய்ய வாய்ப்பில்லாமல் இழந்த பணத்தையும் எடுக்கமுடியாமல், ஏதாவது ஒரு கம்பனியில் திறமைக்கு குறைவான பதவியில் சுமாரான சம்பளத்தில் வேலை செய்யும் சிலரையும் நாம் பார்த்திருப்போம்.

இதுபோல இருந்த பணம் அல்லது முதலீட்டை தொலைத்தவர்கள் செய்வது அறியாமல் நிற்கும்போது, அவர்களுக்காக வருத்தப்படாமல் இருக்க முடியுமா என்ன?

"வறுமை நீங்கி... வளமைபெற...' என்ற அமேசானில் கிடைக்கும் புத்தகத்தில் சில வழிபாட்டு பாடல்களைக் குறித்து தந்துள்ளது அந்தத் தமிழ் வழிபாட்டு பாடல்களே பலன்தரும் என்றாலும் இழந்த செல்வத்தை மீட்டு பெறுவதற்கும், இனி இழப்பை தவிர்க்கவும் ஒரு ஆலோசனை சொல்ல மாட்டாங்களா? என்று ஏங்குபவர்களுக்கு இந்த வாரம் இந்த திருத்தல பயணத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்.

இந்த திருத்தலம், சென்னைக்கு அருகில் இருக்கிறது என்றால், நாம் தவிர்த்துவிடலாமா? முருகன் திருத்தலம்தான். இந்தியாவிலே உயரமான சிலை வடிவமைப்பைக்கொண்ட இந்த திருத்தலம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள வல்லக்கோட்டையிலுள்ளது.

வல்லக்கோட்டையிலுள்ள கோடை நகர் குமரன் என்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இயல்பாகவே வல்லக்கோட்டை முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. "வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு... அரோஹரா' என்று ஒரே ஒரு நாளைக்கு ஒருமுறை சொல்-ப் பாருங்கள்; மனதில் உற்சாகம் பிறக்கும்.

இந்த வல்லக்கோட்டை முருகன் கோவி-லுள்ள முருகன் சிலை இந்தியாவிலேயே உயரமான முருகன் என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா. வள்ளி- தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் இருந்து அருள் பா-க்கும் முருகன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

பொதுவான நிலையில் எல்லா நாட்களிலும் இந்த திருத்தலம் சென்று வழிபாடு செய்யலாம் என்றாலும், இழந்ததை மீட்டு பெறவும், இழப்பை தவிர்க்கவும், தொடர்ந்து வாரம் ஒருமுறை என்ற வகையில் ஏழு வாரம் தொடர்ந்து சென்று வழிபாடு செய்யவேண்டும். ஒரு வாரம் தவறினால், மீண்டும் முத--ருந்து தொடங்கவேண்டும்.

இப்படி ஏழு வாரம் தொடர்ந்து வழிபாடு செய்தால் ஒன்பதாவது வாரத்தி-ருந்து மாற்றம் வருவதை அவரவர் அனுபவத்தில் உணரலாம்.

ஏழு வாரங்களிலும் ஒரே வேண்டுதலை வைத்திருக்க வேண்டும். பொதுவாக மக்கள் இயல்பு முத-ல் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, ஒருசில வாரங்களுக்கு பிறகு வேறு ஒரு வேண்டுதலை வைப்பார்கள், நிறைவாக இரண்டும் நிறைவேறாமல் போயிடும்.

அதன்பிறகு மற்றவர்களைக் குறைசொல்வார்கள். அதனால் அன்பர்கள் இதனைக் குறித்துக்கொண்டு எந்த வேண்டுதலை தொடங்கி வழிபாடு வைக்கிறோமோ. அதே வேண்டுதலை தொடர்ந்து ஏழு வாரம் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், நினைத்த பலனை அடையலாம்.

திருப்புகழ் பாடப்பெற்ற இந்த திருத்தலம், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது. ஒருமுறை அருண கிரிநாதர் திருப்போரூரில் வழிபாடு இயற்றி, மறுநாள் திருத்தணி போக எண்ணி இருந்தார்.

"கோடை நகர் மறந்தனையோ' என முருகப்பெருமான் கனவில் வந்து கேட்டத னால் வல்லக்கோட்டை வந்து முருகப் பெருமானை தரிசித்து எட்டு திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியதாக வரலாறு சொல்லும்.

கோவி-ன் வெளிப்புறத்தில் திருக்குளம் இருக்கிறது. வச்சிராயுதம் கொண்டு உருவாக் கப்பட்ட திருக்குளம் என்பதால் வஜ்ஜிர தீர்த்தம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள் ளது. பாதிரி மரத்தை தல மரமாகக்கொண்ட இந்த திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட் டத்தில், ஸ்ரீபெரும்புதூர் என்ற ஊரி-ருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள் ளது. இப்போது சாலை விரிவாக்கம் செய்யப் பட்டிருப்பதால் பயணம் சுலபமாகவும் விரைவாகவும் சென்றுவர பஸ் வசதிகளும் இருக்கிறது.

ஆலயத்தின் பிராகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனி கள் வரிசையாக உள்ளன. முன்பே சில கட்டுரைகளில் சொன்னதுபோல, எங்கே யெல்லாம் பாம்பன் சுவாமிகள் சிலை இருக்கிறதோ, அந்த திருக்கோவில் எல்லாமே பலன் தரும் அற்புதத்திருத்தலம் என்பதில் ஐயமில்லை.

முன்பு பழுதடைந்திருந்த ஆலயம் இப்போது சிறப்பாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது என்பதற்கு சான்றாக முன்பெல்லாம் அன்னதானத்தில் பங்குபெற 50 நபர்கள்தான் இருப்பார்கள். இப்போது சுமார் 1,500 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் இதை மிகப்படுத்தி சொல்ல தேவையில்லை.

தொடர்ந்து ஏழு வாரங்கள் எல்லாம் என்னால் போகமுடியாது என்று நினைப் பவர்கள் என்றால்கூட பரவாயில்லை. ஒரே ஒருமுறை சென்று கோடை நகர் குமரனை வழிபாடு செய்துவாருங்கள். முருகனே உங்களை அழைத்துச்செல்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala020224
இதையும் படியுங்கள்
Subscribe