"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஔவையார் வாக்கு.
அது சரி- ஆலயம் என்றால் என சில சிந்தனைகள் வரலாம். நமக்கு பொதுவாக தெரிந்திருக்கும். சில இடங்களிலுள்ள சிவ மூர்த்தங்கள் சுயம்பு என்று. சுயம்பு என்பது மனிதர்களால் உருவாக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்தங்கள். மூர்த்தங்கள் என்பது சிலை அமைப்புகள் என்பதை நாம் அறிவோம்.
சரி- இதுபோன்ற சுயம்பு லிங்கம், சிவன் கோவில்களில் இயல்பாக வழிபடு தலமாக அமைந்துவிடும். "உரு' ஏறினால் "திரு' ஏறும் என்று சொல்வதுபோல, சில திருத்தலங்கள் இதுபோல பெருமைக்குரியனவாக இருக்கும்.
அந்த வரிசையில் இந்த வாரம் நாம் சிந்திக்க தரும் திருத்தலம், செல்வ வளம் தரும் திருக்கோவில். இது ஒரு வரம் தரும் திருத்தலமாகவே போற்றப்பட வேண்டிய கோவில்.
இந்தத் திருக்கோவில் தமிழகத்திலில்லை என்பது ஒரு புறம் இருக்க, இந்த கோவிலின் அமைப்பு ஒவ்வொரு நகர்விலும் நம்மை பிரமிக்க வைக்கும்.
இந்தத் திருக்கோவில் உத்திராஞ்சல் மாநிலத்தில் டேஹ்ராடூன் என்ற இடத்தில் இருக்கும் திருக்கோவில்.
இந்தத் திருக்கோவிலிலுள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தம். அது மட்டுமல்ல இது ஒரு குகையில் அமைந்த லிங்கம். குகையில் இருப்பது ஒன்று பெரிய வி
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஔவையார் வாக்கு.
அது சரி- ஆலயம் என்றால் என சில சிந்தனைகள் வரலாம். நமக்கு பொதுவாக தெரிந்திருக்கும். சில இடங்களிலுள்ள சிவ மூர்த்தங்கள் சுயம்பு என்று. சுயம்பு என்பது மனிதர்களால் உருவாக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்தங்கள். மூர்த்தங்கள் என்பது சிலை அமைப்புகள் என்பதை நாம் அறிவோம்.
சரி- இதுபோன்ற சுயம்பு லிங்கம், சிவன் கோவில்களில் இயல்பாக வழிபடு தலமாக அமைந்துவிடும். "உரு' ஏறினால் "திரு' ஏறும் என்று சொல்வதுபோல, சில திருத்தலங்கள் இதுபோல பெருமைக்குரியனவாக இருக்கும்.
அந்த வரிசையில் இந்த வாரம் நாம் சிந்திக்க தரும் திருத்தலம், செல்வ வளம் தரும் திருக்கோவில். இது ஒரு வரம் தரும் திருத்தலமாகவே போற்றப்பட வேண்டிய கோவில்.
இந்தத் திருக்கோவில் தமிழகத்திலில்லை என்பது ஒரு புறம் இருக்க, இந்த கோவிலின் அமைப்பு ஒவ்வொரு நகர்விலும் நம்மை பிரமிக்க வைக்கும்.
இந்தத் திருக்கோவில் உத்திராஞ்சல் மாநிலத்தில் டேஹ்ராடூன் என்ற இடத்தில் இருக்கும் திருக்கோவில்.
இந்தத் திருக்கோவிலிலுள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தம். அது மட்டுமல்ல இது ஒரு குகையில் அமைந்த லிங்கம். குகையில் இருப்பது ஒன்று பெரிய விஷமில்லை.
ஆனால் அந்த குகையில் எங்கிருந்து தண்ணீர் வருகிறது என தெரியாதபடி இந்த சிவ லிங்கத்தின்மீது தண்ணீர் விழுகிறது. அதுவும் சீரான இடைவெளியில் ஒரே அளவில் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
இன்னும் சொல்லவேண்டும் என்றால், அந்த தண்ணீர் அமிர்தத்தைவிட சுவை நிறைந்திருக்கிறது. விழுந்த தண்ணீர் அடுத்த சில மணித்துளிகளில் இல்லாமல் போகிறது.
இந்த தண்ணீர் இயற்கையாகவே குகைவழியாக வருகிறது. யாரும் தண்ணீர் ஊற்றுவதில்லை. அருகில் தண்ணீர் ஓடை, குளம் போன்ற எந்த அமைப்பும் இல்லை.
இப்படி ஒரு சிவன் கோவில் பிரமிப்பாகவும் இருக்கிறது. சாநித்தியம் பெற்ற திருக்கோவில் கேட்டதை உடனே வரம் தரும் திருத்தலமாகவும் விளங்குகிறது.
இந்தத் திருக்கோவில், துரோணர் இருந்த இடமாக சொல்லப்படுகிறது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருக்கோவில் அமைந்த இந்த குகையை துரோணர் குகை என்றே வழக்கத்தில் மக்கள் அழைக்கின்றனர்.
சாலை ஓரத்தில் அமைந்த இந்தத் திருக்கோவில் வரவேற்பு வளைவு நம்மை அழைக்கிறது. உள்ளே சென்றதும் தமிழக கோவில்கள்போல நீண்டு உயர்ந்த ராஜ கோபுரங்கள் பொதுவாக வடநாட்டு பகுதி களில் இருப்பதில்லை என்றாலும் இந்தத் திருக்கோவிலிலும் அப்படி ஒரு பெரிய கோபுர அமைப்புகள் இல்லை.
தமிழக கோவில்கள்தான் பிரம்மாண்டமாக இருக்கும். சில கோவில்கள் சில ஏக்கர் கணக்கில் பெரியதாகவும் இருக்கும். ஆனால் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் பெரியதாக இருப்பதில்லை என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
கோவில் உள்ளே நுழைந்ததும் குகைவழியாக சுவாமி தரிசனத்திற்கு போக முடியும். லிங்கத்தின் பானம் சிறியதாக இருக்கிறது. இந்த குகையில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை என்றாலும் 24 மணி நேரமும் லிங்க திருமேனியில் தண்ணீர் விழுகிறது. அதுவும் ஒரே சீராக, சீரான இடைவெளியில் என்றால் மனதை தொடுகிறது.
இந்த லிங்க திருமேனியின் முன்நின்று கண்மூடி சில நிமிடம் நமது வேண்டுதல்களை வைத்து கண் திறந்து பார்க்கும்போது, நீர் லிங்க திருமேனியில் விழுந்தால், நினைத்தது நடக்கும் என்பது போன்ற குறிப்பும் உள்ளது. இது ள்ஹ்ய்ஸ்ரீட்ழ்ர்ய்ண்ள்ங் ஆகும்போது, இந்தப் பலன் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.
சோதிடரீதியாக சொல்லவேண்டும் என்றால், நீச பங்கம்பெற்ற ஜாதகர்கள் யாராக இருந்தாலும் இதுபோன்ற திருத்தலங்களில் வழிபாடு இயற்றுவது அவசியம். இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காதவர்கள், சித்தர்கள் வழிபாடுகள், மகான்களின் சமாதிகளில் வழிபாடு செய்யலாம்.
அங்கிருந்து வரும் ல்ர்ள்ண்ற்ண்ஸ்ங் ஸ்ண்க்ஷங் நேர்மறை அதிர்வலைகள், வழிபாட்டின் பலனை பெற்றுத்தரும். சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் வரிசை கட்டி வழிபாட்டிற்கு காத்திருப்பார்கள் என்றால் இந்தத் திருக்கோவிலின் சிறப்பை தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
சரி- இந்த கோவிலுக்கு எப்படி போவது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?
டேஹ்ராடூன் ரயில் நிலைத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இந்த தபகேச்வர் திருக்கோவில் உள்ளது. டேஹ்ராடூன் ரயில் நிலைத்தில் இருந்து சிட்டி பஸ் வசதிகள் உண்டு. ஆட்டோ வசதிகளும் உண்டு.
அங்கே ஆட்டோவுக்கு விக்ரம் என்றுதான் பெயர். நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் நியாயமான கட்டணத்தைதான் வாங்கிகொள்வார்கள். பயமில்லாமல் பயணம் செய்யலாம்.
உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள டெஹ்ராடூன் செல்வதற்கு டெல்லியில் இருந்து ரயில் வசதிகள் உள்ளது. தமிழகத்தில், மதுரையிலிருந்து வாரம் ஒருமுறை செல்லும் ரயிலும் உண்டு. விவரங்களை ரயில் அட்டவணையில் பார்த்துப் பயண திட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தத் திருக்கோவிலுக்கு மட்டும் என திட்டமிடாமல், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற ஒரு யாத்திரையாக திட்டம் வைத்துக்கொண்டு ஒருநாள் இதற்கு என ஒதுக்கி டெஹ்ராடூன்வரை சென்றுவரலாம். இதன் அருகில் முசூரிவரை சென்று இயற்கை கொஞ்சும் எழில் அழகையும், ரசித்துவிட்டு, இறைவன் அருளும் திருவருளையும் பெற்றுக்கொண்டு வரலாம்.
முறையாக திட்டமிட்டு ஒரு பயண அட்டவனையைத் தயாரித்து அருகில் உள்ள திருத்தலங்கள், டூரிஸ்ட் தலங்கள் என பயணத்தை அமைத்துக் கொண்டால் முழு பயனையும் அடையலாம்.
இதுபோன்ற பகுதிகளுக்கு செல்லும்போது, குறிப்பாக டெஹ்ராடூன் போன்ற இடங்களுக்கு செல்லும்போது, ஹிந்தி தெரிந்திருப்பது அவசியம் அல்லது ஹிந்தி தெரிந்தவர்களை உடன் அழைத்துச்செல்வது நல்லது. ஆங்கிலத்தை வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்ற துணிவுடன் சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்வது சிரமம் இல்லாத பயணத்திற்கு துணையாக இருக்கும்.
இந்த உலகில் வாழும் காலம் கொஞ்சம்தான். இதுபோன்ற இடங்கள் சென்றவர வாய்ப்பு கிடைக் கட்டும் என்று காத்திருக்காமல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு துணிந்தால், வழி கிடைக்கும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172