வாழ்க்கையில்தான் எத் தனை மாற்றங்கள். சமூக கலாச்சாரத்தில் மாற்றம், உடை, நாகரீகத்தில் மாற்றம், பேச்சுமொழி, நட்பு, உறவு என அனைத்திலும் மாற்றம்.

தெரிந்தோலி தெரியாமலோ இதை நாம் ஏற்றுக் கொள்ள பழகிவிட்டோம். இதை ஏற்றுக்கொள்ள தயங்குபவர்கள் அல்லது மறுப்பவர்கள் இங்கே வாழ தகுதியில்லாதவர்கள்போல ஆகிவிடுகி றோம். அதனால் விரும்பியோலி விரும்பாமலோ, விளம்பரத்தை பார்த்து வாழ்க்கையை பலர் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இன்றைய நிதர்சனம்.

உடல் எடை குறையவேண்டும் என்றால், "அந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உணவு முறையை பின்பற்றுங்கள்' என்று அடுக்குபவர்களில் யாராவது ஒருவராவது வியர்வை சிந்த உழைக்கவேண்டும் என்று சொல்றாங்களா பாருங்கள். இதுதான் இந்த மாற்றத்தைக்காட்ட ஒரு உதாரணம்.

மாத்திரை தினமும் எடுத்துக்கொள்ளாத எங்களைப்போல ஒரு சிலரையாவது உங்களால் காட்டமுடியுமா? என்றால் அது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கும்.

Advertisment

இப்போ சர்க்கரை வியாதி பரவலாக நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. சரி நம்ம வீட்டில் ஒருவராக இருக்கட்டுமே என நாமும் அதை விட்டுவிட்டோம். அதைவிட நம்மை முடக்கிபோடும் இன்னொரு சிக்கல் இப்போ பரவலாக இருக்கிறது தெரியுமா?

ஆமாம். அதுதான் ஆர்தரைடிஸ் என்று சொல்லக்கூடிய மூட்டுவலி பிரச்சினை. முன்பெல்லாம் வயதான பெண்களுக்கு என்று அடையாளம் காட்டப்பட்ட இந்த மூட்டுவலி பிரச்சினை இப்போது இளவயதினர்களுக்கே வருகிறது என்றால், நாம் எங்கே தவறு செய்கிறோம் என்று யோசிப்பதற்கு பதில், அவற்றுடன் வாழ பழகிக்கொண்டுவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்.

ffdf

Advertisment

தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு பழகிய தமிழ் சமுதாயம் இப்போது வீட்டுக்கு வீடு டேபிளில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுகிறார்கள். சாதாரணமாககூட, டிவி பார்க்கும்போதுகூட கீழே உட்காருவதில்லை. விளைவு மூட்டுவலி பிரச்சினை, மூட்டுமாற்று பல லட்சம் செலவு செய்துவரும் அறுவை சிகிச்சை என நோய்க்கு தீர்வு சொல்வதற்கு நவீன மருத்துவமும் நம்முன் வந்துநிற்கிறது.

"ஆமாங்க ஐயா, இந்த மூட்டுவலி பிரச்சினை இருக்கே' என்று நம்மை பார்த்ததும் அந்தவலி உணர்வுகளை நம்மிடம் கொட்டும் பலரை நாம் சந்தித்து இருப்போம். எத்தனையோ மருந்துகள், பலவித மருத்துவமுறை சிகிச்சைகள் என பார்த்து சோர்ந்துபோன சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு செய்தியை சொன்னால். சொல்லும்போதே கேட்க ஆவல்வருகிறது அல்லவா?

உங்களுக்காகதான் இந்த வார திருத்தல குறிப்பில் இந்த வழிபாட்டு தலத்தை பகிர்ந்துகொள்ள போகிறேன்.

செல்லூர் என்றதும் உங்களுக்கு அவரைத்தான் நினைவில் கொண்டுவர தோன்றும். இந்த வார சிந்தனையில் இடம்பெறும் திருக்கோவில், மதுரை அருகே செல்லூரிலுள்ள ஆப்புடையார் திருக்கோவில்தான். இந்த மூட்டுவலி பிரச்சினைகளுக்கு முழு தீர்வு தரும் திருத்தலமாக பரிந்துரைக்கப்படுகிறது.

தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி நீண்டநாட்களாக பிரச்சினை உள்ளவர்களுக்கும் வலியிலிருந்து விடுதலைபெற திருஞானசம்பந்தர் அருளிய ஆப்புடையார் திருத்தல பதிகத்தை படனம்செய்து வலம் வந்து வழிபட பிரச்சினைகள் குறைவதை கண்முன்னே காணலாம். இது ஒரு அனுபவக் குறிப்பு என்றுகூட கொள்ளலாம்.

இந்த ஆப்புடையார் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே சிம்மக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி வைகை ஆற்று பாலத்தை கடந்து அந்தவழியாக செல்லலாம். அல்லது சாலை வழியாக ஆப்பனூர் பேருந்து நிலையத்தில் இறங்கியும் செல்லமுடியும். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உண்டு.

இந்த திருக்கோவிலிலுள்ள லிங்கமூர்த்தி சுயம்பு. இந்தத் திருக்கோவில் மட்டுமல்ல; இங்குள்ள லிங்கமும் அளவில் சிறியதுதான் என்றாலும், பலன் தருவதில் அசாத்திய பலம் பொருந்தியது என்று சொல்வது மிகையல்ல.

பெரியதாக ராஜ கோபுரம் என எதுவுமில்லாமல் சிறிய சாலை ஓர சந்தில் இருக்கும் இந்த திருக்கோவில், தேவாரப் பாடல்பெற்ற திருக்கோவில் என்ற பெருமைக்குரியது.

மதுரையை சுற்றியுள்ள பஞ்சபூத தலங்களில், இது நீர் க்ஷேத்ரமாக சொல்லப்பபடுகிறது. இந்தத் திருத் தலத்திலுள்ள சுவாமி தரிசனத்திற்கு ஒரு மாடத்தில் (சுமார் 5 அடி உயரத்தில் இருக்கும்) படிக்கட்டுக்கள் வழியாக பக்க வழியாக ஏறி செல்லவேண்டும். சுவாமிக்கு நேராக செல்லமுடியாது. சுவாமிக்கு எதிரேயுள்ள நந்திதேவர் உயரமான மாடத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கி உள்ள இந்தத் திருக்கோவிலில் சுகந்த குந்தாளாம்பிகை என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கும் அம்மன் சன்னதி பிரகாரகத்தில் தனியாக இருக்கிறது. அருள் மனம் கமழும் இந்தத் திருக்கோவிலில் ஒரு அரைமணி நேரம் அமர்ந்து தியானம்செய்தால் மன அமைதி கிடைக்கும் என்பதை அனுபவ வாயிலாக உணரலாம்.

சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்து முருகன், ஆக்ஞை விநாயகர் என திருக்கோவிலை வலம்வந்து பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்து சுவாமியை வழிபட சிக்கல் தீர்ந்து நலம்பெறலாம்.

சோதிடரீதியாக, சொல்லவேண்டும் என்றால் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு நில ராசியைகொண்டும் அதன் அதிபதிகளின் இருப்பு சேர்க்கை வைத்தும் சொல்லமுடியும். நிலத்திற்கு எதிராகவுள்ள நீர் தலங்களை தரிசனம்செய்வது, வழிபாடு செய்வது என கொண்டால், மூட்டு வலி சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

மூட்டுகளில் ச்ழ்ண்ஸ்ரீற்ண்ர்ய் (உராய்வு தன்மை) இருக்கவேண்டும் என்றுதான் எண்ணை மசாஜ், தைலம் தடுவதல், ஒத்தடம் கொடுத்தல் என சில வழிமுறைகளை வலி மற்றும் சிக்கல் உள்ளவர்கள் அனுபவத்தில் கையாண்டு இருப்பார்கள் என்பதை நாமும் அறிவோம்.

அந்தவகையில் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாவது வைகை ஆற்று மணலை சோறு ஆக்கிய குபேரனை பெற்றுத்தந்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் இந்தத் திருக்கோவிலில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை படனம் செய்து வழிபாடு இயற்றி நற்பலன்பெற அன்புடன் வேண்டுகி றோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172