நலம் தரும் திருத்தலம்! - விசு அய்யர் 20

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-20

“சார். எப்படி இருக்கீங்க.?’. என்று முன்பெல்லாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கேட்டுக்கொள்வதும், பிறர் நலனில் அக்கறைகொள்வதும் வழக்கமாக இருந்தது.

இப்போதெல்லாம் “என்ன சார்... சர்க்கரை எவ்வளவு இருக்கு?’ என்று கேட்டுக் கொள்ளும் நிலையில் சர்க்கரை வியாதி வெகுவேகமாக பரவிவருகிறது.

முன்பெல்லாம் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிகள்பெறுவது ஒரு பழக்கமாக இருந்தது.. அன்றைய பெரியவர்கள் “தீர்க்காயுசுமான் பவ’ என்றும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டும்’ என்று ஆசி தருவார்கள்.

ff

இப்போது யாரும் வயதில் சிறியவர்கள் யாரும் அப்படி விழுவதுமில்லை. அந்த நிலைக்கு பெரியவர்களின் ஒழுக்கமும் குறைந்துவிட்டது. தப்பி தவறி காலில் விழும் சிலரைகூட அந்த பெரியவர்கள் “நிறைய சம்பாதித்து பெரிய பதவிக்கு வர வேண்டும்’ என ஆசி தருகிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியத்தைவிட பணம்தான் முக்கியமாக போய்விட்டது.

இந்த சர்க்கரைவியாதி, வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் சுண்டி இழுப்பதற்கு காரணம் உடல் உழைப்பு இல்லை என்பதால் தான் மருத்துவர்களும் நடைபயிற்சி, யோக பயிற்சி என சொல்கிறார்கள்.

சோறு சாப்பிடுவதாலோ, சப்பாத்தி சாப்பிடுவதாலோ ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை என்று தெரிந்தும், ஒருவருக்கு தரும் மாத்திரை அல்லது மருத்துவ முறை இதற்கு தீர்வு இல்லை என தெர

“சார். எப்படி இருக்கீங்க.?’. என்று முன்பெல்லாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கேட்டுக்கொள்வதும், பிறர் நலனில் அக்கறைகொள்வதும் வழக்கமாக இருந்தது.

இப்போதெல்லாம் “என்ன சார்... சர்க்கரை எவ்வளவு இருக்கு?’ என்று கேட்டுக் கொள்ளும் நிலையில் சர்க்கரை வியாதி வெகுவேகமாக பரவிவருகிறது.

முன்பெல்லாம் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிகள்பெறுவது ஒரு பழக்கமாக இருந்தது.. அன்றைய பெரியவர்கள் “தீர்க்காயுசுமான் பவ’ என்றும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டும்’ என்று ஆசி தருவார்கள்.

ff

இப்போது யாரும் வயதில் சிறியவர்கள் யாரும் அப்படி விழுவதுமில்லை. அந்த நிலைக்கு பெரியவர்களின் ஒழுக்கமும் குறைந்துவிட்டது. தப்பி தவறி காலில் விழும் சிலரைகூட அந்த பெரியவர்கள் “நிறைய சம்பாதித்து பெரிய பதவிக்கு வர வேண்டும்’ என ஆசி தருகிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியத்தைவிட பணம்தான் முக்கியமாக போய்விட்டது.

இந்த சர்க்கரைவியாதி, வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் சுண்டி இழுப்பதற்கு காரணம் உடல் உழைப்பு இல்லை என்பதால் தான் மருத்துவர்களும் நடைபயிற்சி, யோக பயிற்சி என சொல்கிறார்கள்.

சோறு சாப்பிடுவதாலோ, சப்பாத்தி சாப்பிடுவதாலோ ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை என்று தெரிந்தும், ஒருவருக்கு தரும் மாத்திரை அல்லது மருத்துவ முறை இதற்கு தீர்வு இல்லை என தெரிந்தும், மருத்துவர்கள் மாத்திரை தருகிறார்கள். நோயாளிகள் கேட்க மாட்டார்கள் என்று தெரிந்தும் இனிப்பு சேர்க்காதீர்கள் என்று ஆலோசனை சொல்லி அனுப்புகிறார்கள்.

காசுகொடுத்து இத்தனை மாத்திரை சாப்பிடுவது பெருமை என நினைத்துக் கொண்டு, நோயுடன் அதன் பக்க விளைவு களையும் விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள், தாங்கமுடியாத நிலை வரும்போதுதான் இந்த பணத்தால் எதுவும் முடியாது. பணம் இருந்தால் போதுமா அதை அனுபவிக்க சௌபாக்கியம் வேண்டாமா என்று யோசிக்க தொடங்கி நிற்கிறார்கள்.

மருத்துவ ஜோதிடரீதியாக யாருக்கு எப்போ சர்க்கரை வியாதி வரும் என சொல்ல முடியும் என்றாலும், இந்த வாரம் சர்க்கரை வியாதிக்கு சில குறிப்புகளையும் வழிபாட்டு தலங்களையும், பரிந்துரை செய்கிறோம். சரி பார்த்துக்கொள்ளவும்.

சர்க்கரை நோய்க்கு தீர்வு குரு பகவான் தான் என்றால் வியப்பாக இருக்கும். தேவகுருவை குறிக்கும் வண்ணம் மஞ்சள். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவர்கள் தரும் மருந்துகள் மற்றும் ஆலோசனைகளுடன், மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்தி வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மஞ்சள் நிறத்தை உணவிலும் உடையிலும் தன்னை சுற்றியுள்ள பகுதியிலும் இருக்கு ம்படி பயன்படுத்திகொள்ளலாம். மஞ்சள் துண்டை போட்டுக்கொள்ளலாம். மஞ்சள் நிறத்திலுள்ள ஆவாரம்பூ தேநீர் (பஊஆ) சாப்பிடலாம். இரவில் பால் குடிக்கும் போது, துளி மஞ்சள் தூள் போட்டுசாப்பிடலாம். ஆம்லா ஜூஸ் உடன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். இந்த சோதிட ஆலோ சனையுடன், தேக பயிற்சி, யோக பயிற்சி என மருத்துவர் ஆலோசனைப்படி செய்யலாம்.

ss

இதெல்லாம் சரி. உடலும், மனமும், செல்வ வளமும் நிறைந்திருக்க நிலைத்து நிற்க வழிபாடு செய்யவேண்டாமா? அதற்குதான் இந்த வாரம் இந்த திருத்தலத்தை பரிந்துரை செய்கிறேன்.

சர்வ தோஷ‘ நிவர்த்தி தரும் தலம் என்று போற்றப்படும் திருத்தலம் திருவாரூர். இந்த திருத்தலத்தில் நிறைய சன்னதிகள் உள்ளன. அதை ஒவ்வொன்றாக சொல்ல ஒரு வார பதிவு போதாது. அவ்வளவு விஷயங்கள் உள்ள கோவில் இந்த திருவாரூர் திருக்கோவில். ஆழித்தேர் இந்த கோவிலின் சிறப்பு. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்றால் கற்பனை செய்துதான் பாருங்களேன். சுமார் 120 அடி உயரம் உள்ள நீண்டு நெடிது நிற்கும் ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தியாக விளங்கும் தியாகராஜர், 80 விமானங்கள், 12 மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தங்கள், 3 நந்தவனம், 3 பெரிய பிராகாரம், 365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், 1000 கல் தூண், மரகத லிங்கம், 51 சக்தி பீடத்தில் ஒன்று, சுமார் 33 ஏக்கர் பரப்பளவுகொண்ட திருக்கோவில் என பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

தண்ணீரில் விளக்கேற்றிய பெருமை, சிவ பெருமான் தெரு வீதிகளில் நடந்து சென்ற அற்புதம், திருவடி பதிந்த திருத்தலம், மிகப்பெரிய கமலாலய திருக்குளம், பிறக்க முக்தி தரும் திருத்தலம், சுந்தரர் தங்கம் பெற்ற இடம், இறைவன் 364 திருவிளையாடல் நிகழ்த்திய தலம், சிவபாதம் அமைந்த இடம், அஷ்ட துர்க்கை, முருகன் தலையை தடவி கொடுத்தபடி அம்பாள், வீணை இல்லாத சரஸ்வதி, மற்ற திருக்கோவிலில் உள்ளது போல அமர்ந்த கோலத்தில் இல்லாமல், நின்ற கோலத்தில் நந்தி, என இந்த கோவில் 350-க்கும் மேற்பட்ட பாடல்பெற்ற திருத்தலம், நித்திய பிரதோஷம் நடைபெறும் கோவில் என பெருமைகளை சொல்ல ஒருதொடரே எழுதலாம்.

எடுத்துக்கொண்ட சிந்தனைக்கு ஏற்ப, சர்க்கரை வியாதியால் சிரமப்படுபவர்கள், பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தது எனக்கும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் என அனைவரும் இந்த திருத்தல வழிபாடு செய்யவேண்டும்.

சோதிடத்தில் ஆறாம் பாவகத்தை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை என சொல்லு வார்கள். அதே சிந்தனையில் இங்குள்ள ருண விமோச்சன லிங்க தேவரை ஞாயிறு, திங்கள் கிழமைகளில் முறையாக வழிபாடு செய்ய நோய் கட்டுப்பாட்டில் வருவதுடன் நல்ல குணமும் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். குறிப்பாக அமாவாசை தினத்தில் தொடர்வழிபாடு என சொல்வது வழக்கம்.

இருப்பினும், உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் ஆலோசனைப்படி இங்கே முறையாக வழிபாடு இயற்றி நோயில் இருந்து விடுதலை பெறலாம். என உறுதியாக நம்புங்கள்.

இந்த திருக்கோவிலில் மேற்கு பகுதியி லுள்ள அனுமாரை எண்ணி மாலை சார்த்தி வழிபட தொலைந்த பொருட்கள் கிடைக் கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது.

அம்பாள் சன்னதி கமலாம்பாள் என்ற திருநாமத்துடன் கலைமகள், மலைமகள், அலைமகள் என்ற முப்பெருந்தேவியின் அம்சமாக, தலையில் சந்திரனை சூடியபடி, தனியாக உள்ளது. இங்குள்ள நவகிரங்கள் ஒரே வரிசையில் தியாகராஜர் அருளைபெற வரும் பக்தர்களுக்கு நல்லனவே செய்ய காத்திருப்பதுபோல நின்ற கோலத்தில் இருக்கும். நவகிரக தோ‘ம் எள்ளவும் வராது என்பதால்தான் இந்த திருத்தலத்தை சர்வ தோஷ நிவாரண ஸ்தலம் என்று சொல்கிறார்கள். நவகிரக சன்னதியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிப்பதால், “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்லவேண்டும்’ என்ற சொல்லடை இன்றளவும் உள்ளது.

இந்த கோவிலின் நந்தவன அழகு ரம்மிய மான சூழலுக்கு நம்மை அழைத்துசெல்லும்.

இந்த கோவிலை முறையாக வழிபாட்டு சுற்றி பார்க்க ஒருநாள் ஆகும். அத்தனை பெருமைகளைகொண்ட இந்த திருக்கோவில் தினமும் காலை 5 மணிமுதல் திறந்திருக்கும்.

இந்த திருக்கோவிலை மனதால் எண்ணி, அன்பர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்குவந்து தியாகராஜனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலனும்பெற வேண்டுகிறோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

bala151223
இதையும் படியுங்கள்
Subscribe