நலம் தரும் திருத்தலம்! விசு அய்யர் 15

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-15

யாருக்கும் எந்த கெடுதலும் நான் செய்ததில்லை. ஆனால் பாருங்கள் எனக்கு இந்த கஷ்டம் வந்திருக்கு. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று வருத்தமுடன் அன்புள்ளவர்களிடம் சிலர் பகிர்ந்து கொள்வார்கள்.

உண்மையில் அவர் யாருக்கும் கெடுதல் செய்யாதவரா என்று கேட்டால், அப்படி இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலர், போன ஜென்மத்து பாவம் சார், கர்மவினை என ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்லி வருத்தத்தில் உள்ளவர்களை தேற்றுவார்கள்.

இன்னும் சிலர், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, வாழ்க்கை போரடிக்கிறது என்றுதானே பிரச்சினையை தேடிக்கொண்டு வந்து சிக்கலில் மாட்டிக்கொண்டு இதிலிருந்து எப்படி மீண்டுவருவது என தெரியாமல் தவிப்பார்கள்.

ஆக, மக்கள் இப்படியும் இருக்கிறார்கள். அப்படியும் இருக்கிறார்கள்.இதுபோன்ற நிலையிலுள்ள இருவருக்கும் ஒரே தீர்வு வழிபாடுதான் என்றாலும் அந்த வழிபாடு தலம் எது என்று தெரிந்தால், இப்படி ஒரு திருத்தலம் தமிழகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கும்.

ஆலயம் நிறைந்த தமிழ்நாட்டில், ஆண்டவன் அருள் நிறைந்து இருப்பதாலும், மக்களின் எந்த பிரச்சினைக்கும் இங்கே தீர்வு உண்டு. எந்த பூட்டுக்கு எந்த சாவி என தெரியாமல் சாவிக் கொத்தை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பூட்டாக முயற்சித்துக் கொண்டு இருப்பதால் பிரச் சினைக்கு தீர்வு சிலருக்கு

யாருக்கும் எந்த கெடுதலும் நான் செய்ததில்லை. ஆனால் பாருங்கள் எனக்கு இந்த கஷ்டம் வந்திருக்கு. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று வருத்தமுடன் அன்புள்ளவர்களிடம் சிலர் பகிர்ந்து கொள்வார்கள்.

உண்மையில் அவர் யாருக்கும் கெடுதல் செய்யாதவரா என்று கேட்டால், அப்படி இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலர், போன ஜென்மத்து பாவம் சார், கர்மவினை என ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்லி வருத்தத்தில் உள்ளவர்களை தேற்றுவார்கள்.

இன்னும் சிலர், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, வாழ்க்கை போரடிக்கிறது என்றுதானே பிரச்சினையை தேடிக்கொண்டு வந்து சிக்கலில் மாட்டிக்கொண்டு இதிலிருந்து எப்படி மீண்டுவருவது என தெரியாமல் தவிப்பார்கள்.

ஆக, மக்கள் இப்படியும் இருக்கிறார்கள். அப்படியும் இருக்கிறார்கள்.இதுபோன்ற நிலையிலுள்ள இருவருக்கும் ஒரே தீர்வு வழிபாடுதான் என்றாலும் அந்த வழிபாடு தலம் எது என்று தெரிந்தால், இப்படி ஒரு திருத்தலம் தமிழகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கும்.

ஆலயம் நிறைந்த தமிழ்நாட்டில், ஆண்டவன் அருள் நிறைந்து இருப்பதாலும், மக்களின் எந்த பிரச்சினைக்கும் இங்கே தீர்வு உண்டு. எந்த பூட்டுக்கு எந்த சாவி என தெரியாமல் சாவிக் கொத்தை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பூட்டாக முயற்சித்துக் கொண்டு இருப்பதால் பிரச் சினைக்கு தீர்வு சிலருக்கு கிடைக் காமல் இருந்திருக்கலாம் அல்லது தாமதமாக கிடைக்கலாம்.

உடல்நலக் குறைவு என்றால், மருத்துவர் சொன்ன முறையில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர் கொடுத்த அத்தனை மருந்துகளையும் ஒரே வேளையில் எடுத்துக்கொள்வதும் தவறு. நாம் விரும்பியபோது எடுத்துக்கொள்வதும் தவறு.

முறையாக மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட காலநிலைக்கு பிறகுதான் சரியாகும் என்பதை அறிவுநிலையில் மனதளவு ஏற்றுக்கொள்ளும் நம்மவர்கள், இறைவழிபாடு செய்தவுடன், தமக்கு உரிய இன்னல்கள் கெடுபலன்கள் தீரவேண்டும் என நினைப்பது குழந்தை தனமானதாக தெரிகிறது அல்லவா. உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி வழிபாடு இயற்றி பலன் பெறுங்கள்.

உடல்நோய்க்கு மருத்துவரின் மருந்து குணமாக்கும் என்றால், உயிர் நோய்க்கு ஆண்டவனின் வழிபாடு இன்றி வேறு எது சரியாக்கும் என நினைக்கிறீர்கள். சரி அப்படி என்றால் எனக்கு வந்துள்ள கேடுகளில் இருந்து நான் விடுபட என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் என கேட்கவரும் உங்கள் ஆர்வம் புரிகிறது.

கேடுகளை நீக்கும் இறைவன் அக்ஷ்யலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கேடிலியப்பர். கேடுகளை களையும் தெய்வம் என பெயரை கேட்டவுடன் மனதில் நம்பிக்கை பிறக் கும். இந்த திருத்தலத்தில் கால் பதித்ததும் இந்த உணர்வு வரும். இங்குள்ள சரவணா தீர்த்தத்தை பார்த்ததும் அது உறுதி ஆகிவிடும்.

dd

தென் பத்ரிகாரண்யம் என அழைக் கப்படும் இந்த திருக்கோவில் தென் தமிழகத்தில்தான் இருக்கிறது. வடநாட்டில் ஒருபத்ரிகாரண்யம் இருப்பது போல இது தென் தமிழ்நாட்டில் உள்ளது. ஆரண்யம் என்றால் காடு. பத்ரி என்பது இலந்தை என்பது ஆன்மிக அன்பர்களுக்கு தெரிந்திருக்கும்.

சூரனை வென்ற முருகன், வீரஹத்தி தோஷம் நீங்க சுவாமியை இங்கே வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழிபாட்டிற்காக, முருகன் ஏற்படுத்திய தீர்த்தம்தான் சரவண தீர்த்தம் என சொல்கிறார்கள். நவலிங்க பிரதிஷ்டை செய்து இந்த அக்ஷய லிங்க பெருமானை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றார் என்பது தல வரலாறு. இங்குள்ள முருகன் தவக் கோலத்தில், இருப்பதை காணலாம்.

இந்த வழிபாட்டில் இடையூறு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஐந்து திசைகளிலும், காவலாக நின்ற வனமுலை நாயகி, தனது காளி ஸ்வரூபமாக அஞ்சுவட்டத்து அம்மனாக வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், ஐந்து புறங் களில் இருந்தும் குமரனுக்கு இடையூறு வாராமல் காத்திருந்து இங்கே அருள் பாலிக்கிறார்.

இந்த திருக்கோவில், கீழ்வேளூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து நாகபட்டினம் செல்லும் வழித்தடத்தில், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், சிக்கல் என்ற ஊருக்கு அடுத்த ஊரில் உள்ளது.

திருவாரூரில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. கோவில் அமைதியான சூழலில் நிம்மதியாக வழிபடும்படி ஊருக்கு நடுவில் தனிமையில் இருக்கிறது.

சிலந்தி சோழன் என்று சொல்லும் கோட்செங்கன் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஏழு நிலை ராஜ கோபுரம் கொண்ட இந்த திருக்கோவிலில் உள்ள சுவாமி சுயம்புலிங்கம். பெரிய ஆவுடை யுடன், மெல்லியபாணத்தில் லிங்க திருமேனி தாங்கி அருள்பாலிக்கிறார்.

இரண்டு விநாயகர் பத்ரி விநாயகர், சுந்தர விநாயகர் என கோவிலுக்கு வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவியின் திருநாமம் சுந்தரகுஜாம்பிகை எனும் வனமுலை நாயகி என்பதாகும். இந்த அம்மன் திருமேனி சிரித்த முகத்துடன் நம்மை பார்க்கும்போதே, கனமான மனம் இலேசாக மாறுவதை உணரமுடியும்.

பாடல் தோறும், அப்பர் தேவரத்தில் கேடிலியை நாடுபவர்களுக்கு கேடு இல்லையென்று உறுதிசெய்து தந்திருப்பது நமக்கு நம்பிக்கையை தருகிறது. இது அகத்தியர் பெருமான் கூத்தபிரானின் வலது திருவடியை தரிசித்த திருத்தலம் என இந்த தலத்தின் வரலாறு சொல்கிறது.

பிரம்மன், அகத்தியர், தேவர், முருகன், மார்கண்டேய முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற இந்த திருத்தலம், நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. காலை 7 மணி முதல் ஆலயம் திறந்திருக்கும். இந்த திருக்கோவில், ஜோதிடரீதியாக 12-ஆம் அதிபதி தசை அல்லது புக்தி நடக்கும் போது வரும் கேடுதரும் பலன்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவும், கேட்டில் இருந்து விடுபடவும் உங்கள் நம்பிக்கைகுரிய சோதிடர் ஆலோசனைப் படி இங்கே வழிபாடு இயற்றி நற்பயனை பெற்று பயன்பெறலாம்.

தொடர்ந்து வரக்கூடிய சனி வக்கரநிவர்த்தி, சர்ப்ப கிரக பெயர்ச்சி போன்ற கிரக சூழலில் வரும் கேடுகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கேடில்லாதவளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரையும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் வனமுலை நாயகியையும், புன்சிரிப்புடன் பிரம்மச்சாரி திருக்கோலத்தில் இருந்து தவம் இயற்றும் முருகவேளையும் தரிசித்து பயன் பெறவேண்டுகிறோம்.

இதுபோன்ற சிறப்பு பொருந்திய திருத் தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பது சிறப்பு. அந்த தமிழ்நாட்டில் நாம் வசிப்பது அதை விட சிறப்பு. இதுபோன்ற சிறப்பான செய்தி களை தரும் பாலஜோதிடம் வார இதழை படிக்கும் வாய்ப்பு கிடைப்பது சிறப்பு என தெய்வ அருள் உள்ள வாசகர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த தேவார பாடல் கிடைக்கப்பெற்ற திருத்தலத்திற்கு சென்று உங்கள் நம்பிக்க்குரிய சோதிடர்கள் ஆலோசனைபடி வழிபாடு இயற்றி கேடு இல்லாத சுகமான வாழ்வை பெற வாழத்துகிறோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala101123
இதையும் படியுங்கள்
Subscribe