பிரச்சினை இல்லாத வாழ்க்கையைதான் எல்லாரும் விரும்புகிறோம். ஆனால் பாருங்கள், பிரச்சினையை நாம் விரும்பா விடிலும், பிரச்சினைகளுக்கு நாம் இல்லாமல் இருக்கமுடியாது. அதனால் பிரச்சினைகளும் அதை எதிர்த்து துணிந்து நிற்கும் தன்னம்பிக்கையும் அமைந்துவிட்டால், இறைவன் திருவருள்தானே அமைந்துவிடும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்ன? பணம் ஒருவகையில் பிரச்சினை என்றாலும், உடல் ஆரோக்கியம் இன்னொரு வகையிலான பிரச்சினை. கை நிறைய உணவு எடுத்த சாப்பிட்டவர்கள் இன்று வேளைக்கு இத்தனை என மாத்திரை எடுத்துக்கொள் ளாமல் இருக்கிறார்களா என்ன? சர்க்கரை நோய் மட்டுமல்ல; வயதான காலத்தில் வரும் மூட்டுவலிகூட இளம் வயது பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது.

இதில் குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பருவம் எய்தவில்லை என்றாலும் பிரச்சினைதான். பருவம் வந்த பெண்களுக்கும் சரியான நேரத்தில் மாதவிடாய் இல்லை என்றாலும் அது தொடர்பான பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் மனம் சார்ந்த பிரச்சினை என்று உளவியலார் சொன்னாலும், முதிர் இளம் கன்னியர்களுக்கு வரும் மெனோபாஸ் இன்னொரு பிரச்சினை, இதன்விளைவாக மூட்டுவலி, எலும்பு தேய்மானம், குதிகால் எலும்பு என பிரச்சினைகளை அடுக்கி கொண்டேபோகலாம்.

tt

நோய் எதிர்ப்பு சக்திக்கு மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்கிறோமோ இல்லையோ, நோய் தீர்வுக்கு பணத்தை தயார்செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் இருக்கும் இன்றைய நம்மவர்கள், இப்படி ஒரு சிக்கலை சந்திப்பார்கள் என்று அறிந்துதானோ இறைவன் நமக்காக, திருஅருள்புரிந்துவைத்து இருக்கிறார்.

திருச்சி மாவட்டத்தில், உத்தமர் கோவில் என்ற திவ்ய தேசம் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்த திருத்தலத்திற்கு அருகே, முசிறி செல்லும்பாதையில் உள்ளது திருவாசி என்ற திருத்தலம்.

இந்த திருவாசி என்ற திருத்தலத்தின் தொன்மை யான பெயர், திருப்பாச்சிலாச்சிராமம் என்பதாகும். இது தேவாரம் பாடல் கிடைக்கப்பெற்ற காவிரி வடகரை தலங் களில் 62-ஆவது தலமாக சைவ அன்பர்களால், போற்றப் படுகிறது.

சிவனாரின் தோழமைகொண்டு சைவ பணியாற்றிய சுந்தரர் பொன் பெற்ற திருப்பதிகங்களில் ஒன்று இது. இதுபோல கோடீஸ் வரராக்கும் திருப் பதிகங்கள் என ஒரு தொகுப்பு உண்டு. அத னை தொகுத்து "வறுமை நீங்கி வளமை பெற...' என்ற தலைப்பில் புத்தகமாக அமேசானில் பதிப்பு செய்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பலன்பெறலாம்.

திருவாசி என்ற இந்த திருத்தலத்தில், கொல்லிமலைத் தொடரை எல்லையாக கொண்டு கொல்லி மழவன் என்ற சிற்றரசன் ஆண்டுவந்தான். அவனது மகளுக்கு தீராத வலிப்பு நோய் இருந்து குணமாகாமல் இருந்தது.

தலயாத்திரை சென்றுவந்த திருஞானசம்பந்தர் இந்த திருத்தலத்தில் எழுந்து அருளிய சமயம், இதை அறிந்த மன்னன், தனது மகளின் நோயை நீக்கி அருள சம்பந்த பெருமானை வேண்டி நின்றான். திருப்பதிகம் பாடி சம்பந்த பெருமான் அந்த கொல்லி மழவனின் மகளின் நோயை தீர்த்து அருளினார் என்பது வரலாறு. இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவமில்லாது இருக்கும் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்த திருத்தலத்தில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை தீரவும், மூட்டுவலி, வாதநோய் போன்றவை குணமடையவும் இந்த திருத்தலத்தில் வழிபாடுசெய்யநோய் நீங்கி ஆரோக்கியம் நிலைக்கும்.

கீழேகாலை மடக்கி உட்கார முடியாதபடி மூட்டுவலி பிரச்சினை, வேறுவழி இல்லைமூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்து கொள்ளவேண்டும் என டாக்டர் சொல்லி விட்டார் என்று பயப்பட வேண்டாம். சவ்வு கிழிந்து விட்டது போன்ற கடினமான பிரச்சினைகளாக இருந்தாலும், "திருவாசி' என்று இப்போது அழைக்கப் படும் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இந்த திருத்தல பயணம்செய்து வன்னி இலைகொண்டு இறைவனை மனம் உருகி வழிபாடு, செய்தால், உறுதியான பலன் கிடைக் கும் என்பது இன்றும் நடைமுறையிலுள்ள கைமேல் பலன் தரும் திருத்தலம் இது என்றால் ஆச்சரியமாகதானே இருக்கிறது.

இங்குள்ள இறைவனின் பெயர் மாற்று உரை வரதர் என்பதாகும். வரதர் என்பது பெருமாளை குறித்து சொல்லும் பெயர் அல்லவா என்று யோசிக்க தேவை யில்லை என்பதால்தான் உத்தமர் கோவிலை முன்பே கோடிட்டு காட்டியது.

இந்த திருத்தலத்திற்கு வந்தவன் தொண்டரான நம்பி ஆரூரன், இறைவனிடம் பொன் கேட்டு பெற்ற திருத்தலம். இங்கே சுவாமி சுந்தரருக்கு பொன் முடிப்பு தந்து அருளியதும், மாற்று உரைத்து, பொன்னின் தரத்தை சோதித்து பார்த்தமையால், இங்குள்ள இறைவனாருக்கு மாற்று உரை வரதர் என பெயர் என சொல்லுவார்கள்.

கடைசி சமயத்தில் கை நழுவி போகும் வாய்ப்புகள், அறிவும்திறமையும் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத அன்பர்கள், இங்குள்ள வன்னி மரத்தடியில் உடைத்த கடலை மாவினை "கிழி கொடுத்து அருளிய திருவாசல்' வழியாகவந்து வன்னி மரத்தடியில் எறும்புகள் சாப்பிடும் வகையில் பரவி போட்டுவிட்டு வருதல், தடைகள் நீங்கி, பலன் தரும்.

வழக்கத்திற்கு மாறாக, இந்த திருத்தலத்தில், அர்த்த சாம பூஜையின்போது, முதலில் அம்பாளுக்கே முதல் பூஜை நடக்கும். இந்த திருக்கோவிலிலுள்ள நவகிரங்கள் அனைத்தும் தலைமை கிரகமான சூரியனை பார்த்து வணங்கி நின்றபடி அருள்பாலிக்கிறார்கள்.

சுயம்பு லிங்கமாக அருளும் இறைவனார், அருள் பாலிக்கும் இந்த திருக்கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று சைவ அன்பர் களால், போற்றப்படுகிறது.

சோதிடரீதியாக பாலாரிஷ்டம் உள்ள குழந்தை களுக்கு அபிடேக தீர்த்தம் தெளித்து உள்ளுக்கு கொடுக்க நோய் தீருமென்ற நம்பிக்கை உள்ளது.

காலை ஏழு மணிமுதல் நண்பகல் வரை திறந்திருக்கும் இந்த திருக்கோவில், மாலை 8 மணிவரையில் திறந்து இருக்கும். திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில், சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருவாசி என்ற பேருந்து நிறுத்தத் தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் ஊருக்குள் நடந்து சென்றால் திருக்கோவிலை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளது.

குறிப்பிட்டு சொன்ன பிரச்சினை உள்ளவர்கள் மட்டும்தான் இந்த திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்காமல் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, இந்த திருத்தலத்தை அடைந்து வழிபாடு செய்வது சிறப்பு!

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172