நலம் தரும் திருத்தலம்! விசு அய்யர் 11

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-11

ழிபாட்டுத் திருத்தலம் என்றவுடன் நம்மை ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க செய்வது கேட்டதை கேட்டபடியே கேட்டவுடனே நிறைவேற்றி தரும் திருமுருகப் பெருமானின் திருத்தலம்தான் என்றால் மறுத்து சொல்ல யாரால் முடியும்? அந்த வரிசையில் இந்த வாரம் நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் திருத்தலம் ஒரு முருகன் திருத்தலம்தான். தினைப்புலம் காத்தவள்ளி தாயாரை மனம்புரிந்த திருத்தலம்.

பைசல் ஆகாமல் நிலுவையிலுள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடக்க இந்த திருத்தலம்தான் கை கொடுக்கும். தொழில்முறை வழக்கு இருப்பவர்கள் இந்த திருத்தலத்தில் வேல் அர்ச்சனைசெய்து வேண்டியதை சுலபமாக பெற்றுச்செல்லலாம்.

இந்த தலத்திற்கு உள்ள சிறப்பு என்ன தெரியு

ழிபாட்டுத் திருத்தலம் என்றவுடன் நம்மை ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க செய்வது கேட்டதை கேட்டபடியே கேட்டவுடனே நிறைவேற்றி தரும் திருமுருகப் பெருமானின் திருத்தலம்தான் என்றால் மறுத்து சொல்ல யாரால் முடியும்? அந்த வரிசையில் இந்த வாரம் நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் திருத்தலம் ஒரு முருகன் திருத்தலம்தான். தினைப்புலம் காத்தவள்ளி தாயாரை மனம்புரிந்த திருத்தலம்.

பைசல் ஆகாமல் நிலுவையிலுள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடக்க இந்த திருத்தலம்தான் கை கொடுக்கும். தொழில்முறை வழக்கு இருப்பவர்கள் இந்த திருத்தலத்தில் வேல் அர்ச்சனைசெய்து வேண்டியதை சுலபமாக பெற்றுச்செல்லலாம்.

இந்த தலத்திற்கு உள்ள சிறப்பு என்ன தெரியுமா? முருகப்பெருமானே அருணகிரி பெருமாளுக்கு உடன்வந்து வழிகாட்டிய திருத்தலம் ஆகும். வயலூரில் திருப் புகழை பாடவைத்த ஆறுமுகக்கடவுள் அருணகிரியை "விராலிமலைக்கு வா' என்று அசரீரி வாக்கு கொடுத்து சென்றுவிட்டார்.

mm

விராலி மலைக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற அருணகிரிநாதருக்கு, முருகனே வேடனாக உடன்வந்து வழிகாட்டிய திருத்தலம் தான் விராலிமலை. பதினாறு திருப்புகழ் பாடல் பாடப்பெற்ற அற்புதமான திருத்தலம் விராலிமலை. இந்த திருத்தலத்தில்தான் அருணகிரி பெருமானுக்கு அஷ்டமா சித்தியை தந்து அருளியதாக சொல்லுவார்கள்.

திருவண்ணாமலைக்கு இணையான திருத்தலம் என விராலிமலை போற்றப்பட இன்னொரு காரணம் இங்கு சித்தர் பெருமக்கள் தவம் செய்த மலை. சனற்குரார் களுக்கு முருகப்பெருமான் காட்சிதந்த திருத்தலம் இந்த விராலிமலை. நாரதர் சாப விமோச்சனம் பெற்ற திருத்தலம் என பெருமைக்கு பெருமை சேர்க்கும் திருத்தலமாக விளங்குவது விராலிமலை.

மயில்களின் சரணாலயம் என்று போற்றப் படுகிற விராலிமலை திருக்கோவில் திருச்சியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உண்டு. வைகாசி விசாகம், தை பூசம், கந்தர் சஷ்டி என முருகப்பெருமானுக்குரிய எல்லா விசேஷ தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

207 படிக்கற்கள்கொண்ட சின்னமலைதான் என்றாலும், வழி நெடுகிலும், சோலைகளும், மயில்களும், சுனைகளையும்கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்கள் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால் விரவிமலை- விராலிமலை என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

முத்துப் பழனி கவிராயர் எழுதிய குறவஞ்சி பாடல் திருவிழா காலங்களில் இங்கே நாடகமாக பாடப்படுகிறது என்பது தமிழ் கடவுள் அருள்பாலிக்கும் பழமையை பறை சாற்றுகிறது.

தமிழ் கடவுளான முருகன் திருத் தலத்திலுள்ள மயிலின் அமைப்பை வைத்து அந்த தலத்து பரிகார குறிப்புகளை சொல்லிவிடலாம் என்றவகையில் இங்குள்ள மயில் தென் திசை நோக்கிய கூறிய பார்வையில் அமைந்து இருக்கும். இதனை "அசுர மயில்' என்று சொல்லுவார்கள். அதனால்தான் விரோதிகளால் ஏற்படும் தொல்லை, நிலுவையிலுள்ள வழக்கு சாதகமாக அமையவும், விரைவில் தீர்ப்பு கிடைக்கப் பெறவும், இங்கு வேல் அர்ச்சனை செய்து வேண்டுதலை பெற்றுக்கொள்ளமுடியும்.

வேறு எந்த கோவில்களிலும் இல்லாதபடி மூலவருக்கு எதிரில் நவகிரக சந்நிதிகள் இருக்கும். படி ஏறி செல்லும்படியான சிறிய மலைதான் என்றாலும் மலை ஏற முடியாதவர்களுக்காக சாலை வசதியும் உள்ளது.

வழக்கு, கடன், நோய் என பிரச்சினையில் மன உளைச்சலில் உள்ளவர்கள், சத்ரு சம்ஹார பதிகத்தையும், வேல்மாரல் பாராயணம், ஷண்முக கவசம் என அவரவர்கள் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ஆலோசனைப்படி படனம் செய்து, வேல் அர்ச்சனைசெய்து வேண்டியதை பெற்று மனநிறைவுடன் வாழ வாழ்த்து கிறோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172

bala131023
இதையும் படியுங்கள்
Subscribe