"ஐம்புலன் அறிவு அவசியம் நமது அனைவருக்கும்' என்பதை நாம் அறிந்திருப்போம். ஐம்புலன் என்பது, கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்தல் என இதனை "பொறி ஐந்தும் மதி மயங்கி' என அப்பர் தேவாரத்தில் குறிப்பிடுவதை நாம் அறிந்திருப்போம்.
இந்த ஐம்புலனில் முதலில் சொல்வது கண்தான். "முகத்திரண்டு புண் உடையார்' என திருவள்ளுவரும் கண்ணின் முக்கியத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்.
கண் மருத்துவத்திற்கென்றே தனி மருத்துவத்துறை உண்டு. ஞல்ற்ட்ஹப்ர்ம்ண்ள்ற் என கண் மருத்துவரை சொல்வார்கள். பார்வைக்குறை என ஒன்று வந்துவிட்டால், தாங்கிக்கொள்ளவே முடியாது. நரை, திரை, மூப்பு என சொல்லும் இதில் கண்ணிலுள்ள பார்வைக் குறை, வயதான காலத்தில் வரும் ஸ்ரீஹற்ஹழ்ஹஸ்ரீற் அதைப் புரை என்று சொல்வார்கள்.
உடலில் எல்லா உறுப்பும் சிறு குழந்தைமுதல் வளரும்போது, தானே வளர்ந்துவிடும். ஆனால் கண்ணிலுள்ள கருவிழி வளராது. கண்களிலுள்ள ஐரிஸ் வைத்து ஒருவரின் குணத்தைக் கண்டுபிடித்துவிட முடியும்.
கண்ணின் அமைப்பு எத்தனை டிகிரி கோணத்தில் அமைந் திருக்கிறது என்பதை வைத்து அவரின் குணத்தை சொல்லிவிடமுடியும். இதனால்தான் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகும்போது, முக லட்சணத் தைப் பார்த்து அந்தப் பெண்ணின் குணத்தை சொல்லிவிடலாம் என்பது டர்ற்ற்ன்ல்ர்ழ்ண் என்ற கலை. இது சாமுத்திரிகாவின் ஒரு பகுதிதான்.
இதிலும் யாருக்குமே வரக்கூடாத குளுக்கோமா என்ற கண் நோய் வந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழப்பு வந்து முற்றிலும் பார்வையை மறைத்துவிடும். எத்தனை அறிவியல் முன்னேற்றம் வந்தாலும், ரெட்டினா பாதிப்புக்கு யாரும் எதுவும் செய்யமுடியாது என நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என நினைக் கிறீர்கள்?
கண்ணிலுள்ள நரம்புகள் (Opticnerve) புடைத்துப் பெரிதாகிவிட்டால் (Edima) அந்த தொல்லையை சொல்லிமுடியாது. இதில் பிரச்சினை இருக்கும். ஆனால் தெரியாது என சொல்வதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைய நாளில், ரீல் போடுவது, ஸ்டோரி போடுவது என கண்களை சிமிட்டாமல், செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர், டிஜிட்டல் டிவி என மின் திரைகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பதால், கண்கள் சோர்வடைவது, கண்களில் ஈரத் தன்மை இல்லாமல் உலர்ந்திவிடுவது என நிறைய பிரச்சினைகளும், மருத்துவர்களின் விழிப்புணர்வும் வந்துகொண்டிருந்தாலும் நம் மக்கள் பிரச்சினை வந்த பிறகுதான் இது பற்றி யோசிப்பார்கள்.
இதுபோன்ற கண்களிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடவுள் கருணை கண்முன்னே இருக்கிறதென்றால் ஆச்சரியமாகதானே இருக்கும். மருந்தைத் தரும் மருத்துவனும் மனதைத் திருத்தும் வள்ளி மணாளனும் ஒரு நேர்க்கோட்டில் நின்று துணை செய்தால், பிரச்சினை தீரும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பிரச்சினை வராமளிருக்க, இறைவழிபாடு செய்து இறையருள் பெறுவது சாத்தியம்தானே.
ஆம்; திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது "எண்கண்' என்ற திருத்தலம். என்னது... கண் பார்வைக்கு என தனித்தலமா என யோசிக்கும்படி அமைந்துள்ளது இந்த திருக்கோவில். இது அடிப்படையில் பிரம்மபுரீஸ்வரர் என்ற சிவத்தலம்தான். ஆனாலும், இங்கே முருகனே பிரதானம். திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் என்ற கிராமத்திலுள்ள ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் வயலூர் முருகன் எப்படி பிரசித்தி பெற்றவரோ அப்படிதான் இந்த எண்கண் திருக்கோவில்.
முருகன் என்றாலே அழகு என்பது தமிழ் சொல்லும் பொருள். அந்த அழகுக்கு அழகு சேர்க்கும்விதமாக அமைந்துள்ளது எண்கண் திருக்கோவிலிலுள்ள முருகன் சிலை என்றால் கொஞ்சம் மனக்கண்ணில் பாருங்கள். முருகனே நேரில்வந்து பேசுவதுபோல உணரமுடியும்.
மயில்மீது, அமர்ந்த கோலத்தில் இருந்து ஆறுமுகப் பெருமானாக அருள்பாலிக்கிறார். இந்த மயிலும் ஒற்றைக்காலில் முருகப் பெருமானைத் தாங்கி சுமந்தபடி சிலையை அமைத்து வடித்திருக்கும் சிறப்பு சிற்பியின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் சொல்லவேண்டும் என்றால் கை விரல் களுக்கு இடையேயுள்ள இடைவெளியைக்கூட தத்ரூபமாக அமைத்திருக்கும் இந்த சிலாரூபம் நம்மை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
முருகப் பெருமானுக்கு சிறப்பைச் சொல்லும் கிருத்திகை, அதை ஒட்டிய விரதம், வழிபாடு எல்லாம் சொல்ல இந்த திருக்கோவிலே முதன்மை பெறுகிறது. ஷண்முக அர்ச்சனை பிரார்த்தனையைத் தொடங்கிவேல் அர்ச்சனை செய்துமுடித்தால், கண் பார்வை குறைபாடு நீங்கி முழுமையாக குணமாகும் என்பது இந்த நூற்றாண்டில் நாம் கண்கூடாகப் பார்க்கும் அதிசயம்.
பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாமல் பிரம்மனை சிறைபிடித்த முருகன், பிரணவ மந்திரம், வேத ஆகமங்களை சிவனாருக்கு ஓதியதுபோல, நான்முகநாயகன் பிரம்மன் இந்த திருத்தலத்தில் தவம் இயற்றி முருகப் பெருமானிடம் மந்திர உபதேசம் பெற்று பிரணவத்தின் பொருள் உணர்ந்து, நலம் பெற்றார் என சொல்லும் ஐதீகமும் இந்த திருத்தல சிறப்பில் சொல்வதுண்டு. அதனால் தான் முருகன் தென்திசை பார்த்து அருள் பாலிக்கிறார்.
வடக்கு சுவரில் பிரம்மாவும், நடராஜருக்கு எதிரே சனிபகவானும் உள்ள இந்த திருக்கோவில் ஒரு பிராகாரத்தை மட்டும்கொண்டு கிழக்கு மற்றும் தெற்கு என இரண்டு வாசல்கொண்ட சின்ன கோவில் தான். ஆனால் இந்த திருத்தலம் தரும் பலன்கள் அளவிட முடியாதது. க்ஷேத்ர மகாத்மியத்தில் இந்த திருத்தலம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலமாகும்.
சிக்கல், எட்டுக்குடி மற்றும் எண்கண் இந்த மூன்று திருத்தல முருகன் சிலைகளும் ஒரே சிற்பியின் கைவண்ணத்தில் மலர்ந்தது என்பது இன்னொரு சிறப்பு. பார்வை இழந்த சிற்பி தன் மனக்கண்ணால் வடிவமைத்த சிலை என்ற சிறப்புடன், பங்குனி மாதத்தில் சூரிய கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர்மீது படுகிறது என்பதும் இன்னொரு சிறப்பு.
சோதிடப்படி லக்னத்திற்கு 2, 12-ல் ஒளிக்கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு கண் நோய் வரும்.
லக்னம் பாவகர்த்தாரியாக இருந்தால் அவர்களுக்கு கண் தொடர்பான பிரச்சினை உண்டு. இதில் சனி பார்வையும் சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் என மருத்துவ சோதிடம் சொன்னாலும், பார்வை வளம்பெற ஒரே தீர்வு எண்கண் முருகனே என்ற நம்பிக்கையுடன் வழிபாடு செய்யுங்கள்.
இன்றைய நாளில் கண்ணாடி அணிவது, கான்டாக்ட் லென்ஸ் போடுவது என சர்வ சாதாரணமாகி விட்டாலும், அதிக நேரம் மின்திரையைப் பார்த்து கண்சோர்வு வருவது தவிர்க்கமுடியாது என்பதால் ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த எண்கண் திருக்கோவிலுக்குச் செல்லவேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழில் நிமித்த பயணம் செய்பவர்கள் இந்த பகுதிக்கு வரும்போது, இந்த திருக்கோவில் செல்லவேண்டும் என குறித்து வைத்துக்கொள்ளுங் கள்.
இந்த திருக்கோவில் திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. பஸ் வசதிகள் உள்ளது. காலை 10.00 மணிமுதல் பகல் 11 மணிவரை திறந் திருக்கும். மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
திருத்தல யாத்திரை செய்வோம்; திருவருளைப் பெறுவோம்.
நல்லதே நினைப்போம்: நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172