இன்றையநாளில் குடும்பத்தில் ஒருத்தருக்காவது சர்க்கரை வியாதி இல்லாமல் இல்லை அதுபோல, சம்பாதிப்பவர்கள் ஏதாவது ஒருவகையில் கடன் வாங்காமல் இருப்பதில்லை. சிலர் சம்பாதிக்கும் நாள் முழுவதும் ஊஙஒ கட்டியே சோர்ந்து விடுவார்கள்.
நாமபாட்டுக்கு இருந்தால்கூட, கடன்வேண்டுமா? என கேட்டு தொலைபேசியில் விடாது துரத்தி எந்த டாக்குமெண்டும் தேவையில்லை என நமது ஆசைகளை தூண்டி, கடன் வாங்க வைத்துவிடுவார்கள். அதை கட்டுவதற்குள் அப்பாடா.. போதும்.. போதும்... என ஆகிவிடும். இந்த கடனை எப்படிடா அடைப்பேன் என விழி பிதுங்க நின்று கொண்டு இருப்பவர்கள் ஏதாவது வழி கிடைக்காதா? யாராவது ஆலோசனை சொல்லமாட்டாங்களா என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்யும்.
இப்படி கடன் தொல்லையில் இருந்து வருந்துபவர்களுக்காகதான் இந்த வாரம் இந்த கோவிலை பரிந்துரை செய்கிறேன். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இதுபோன்ற கடன் பிரச்சினை எனக்கு மட்டும் இல்லாமலா இருக்கும் என நினைக்கிறீர்கள். ஒருசமயம் கடன்சுமை வருந்தும் நிலையில் இருக்கும்போது, எனக்கு கைகொடுத்தது இந்த திருத்தலம்தான் என்றால் வியப்பாகதான் இருக்கும்.
இந்த திருத்தலத் தின் சிறப்பை கேட் டால் ஆச்சரியமாக இருக்கும். கோவில் கூட சின்ன கோவில் தான். இருக்கு மிடமும் சிறிய கிராமம்தான். அட ஒரு கிராமத்தில் இப்படி ஒரு அதிசயமா என்ற வியப்பில்தான் நானும் நுழைந்தேன்.
இந்த கோவில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேந்தன்பட்டி என்ற சிற்றூரில் உள்ளது. இந்த திருத்தலத்தில் சிவபெருமானைவிட நந்திக்கு தான் பெருமைபோல. அதனால் நந்தியின் பெயரிலேயே கோவில் அமைத்து இருக்கி றார்கள்.
இது தேவார பாடல்பெற்ற திருத்தலம் அன்று எனினும் நகரத்தார்கள் இந்த கோவிலுக்கு நிறைய நற்பணிகள் செய்து இருக்கிறார்கள்.
இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக மீனாட்சியம்மன் சமேத சொக்கலிங் கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இருப்பினும் இங்குள்ள நந்தியே சிறப்புக்குரியது என்பதால், நெய் நந்தீஸ்வரர் என்ற நந்தியின் பெயரிலேயே இவ்வாலயம் சிறப்புபெற்று விளங்குகிறது.
இது பாண்டிய நாட்டுத் திருத்தலம்தான். ஒருசமயம் இங்கு ஆட்சிசெய்த பாண்டிய மன்னன், பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு போக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு கோவிலை அமைத்து அங்கே மீனாட்சி சொக்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
ஆலய வராலாறு முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என்றாலும் பழமையான மற்றும் பலன் தரும் திருக்கோவில் என்றவரிசையில் அனுபவ வாயிலாகவே இதனை சொல்லலாம்.
தஞ்சை பெரியகோவில் நந்தியும் இந்த திருக்கோவிலிலுள்ள நந்தியும் சம காலத்தியவை என்பதால் இந்த கோவில் நந்தியை தம்பி நந்தி என்று பாசமாக அழைக்கின்றனர்.
கடன் தொல்லை உள்ள "ரிஷப ராசி' அன்பர்கள் இந்த கோவிலில் நந்திஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் கடன்தொல்லை தீர வழி பிறக்கும். கடன் சுமை சேராமல் இருக்கவும் தேவைக்கேற்ற வருமான வாய்ப்பிற்கும் வழி கிடைக்கும்.
இந்த கோவிலிலுள்ள நந்திக்கு செய்யப்படும் நெய் அபிஷேகத்தில், கீழே சிந்திய நெய்யை எறும்புகள் மொய்ப்பதில்லை. அபிஷேக நெய்யை வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. கோவிலிலுள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள். நெய் கிணறு நிரம்புகிறது. திறந்தவெளியில் இருக்கும் நெய்யில் ஈ, எறும்பு துளிகூட வருவதில்லை என்றால் அதிசயமாகதானே இருக்கிறது இல்லையா.
வன்னிமரத்தை தல விருட்சமாககொண்ட இந்ததிருத்தலம், வேப்ப மர நிழலில் அமைந்திருக்கிறது. சாதரணமாக சிவாலயங்களுக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு எடுத்துச்செல்லும் பூஜை மற்றும் அபிஷேக பொருட்களுடன், நந்திக்கு சிறப்பாக சுத்தமான பசு நெய் அபிஷேகத்திற்கும், அர்ச்சனை மற்றும் தனியாக பூ மாலை மற்றும் பூஜை பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும். கோவில் அருகில் பெரிய கடைகள் எதுவுமில்லை என்பதால் தேவையான பொருட்களை நாமே எடுத்துச்செல்வது நல்லது. அங்கே சென்றபிறகு இது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லாது இருக்கும் இல்லையா குறிப்பாக கடன் தொல்லையால் பாதிக்கப்படும் ரிஷப ராசி அன்பர்கள், வேறு எந்த தொல்லையாக இருந்தாலும் நந்திஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்து நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள சக்கரத்தை தரிசித்து பிரார்த்தனை செய்துவந்தால் தீர்வும் தெளிவும் உறுதியாக கிடைக்கும்.
மதியம் 12 மணிவரை திறந்திருக்கும் இந்த திருக்கோவில், மாலையில் 8 மணிவரையில் திறந்திருக்கும். சிறிய ஊர் என்பதால், பஸ் வசதிகள், அங்கே கிடைக்கும் பொருட்கள்பஸ் வசதிகள் என நாமே திட்டமிட்டு எடுத்துச் செல்வது சிக்கலையும் மன வருத்தத்தையும் குறைக்கும்.
இந்த திருக்கோவிலில், சுவாமிக்கு இடது புறம் அன்னை மீனாட்சி அருள் பாலிக்கிறார். மாங்கல்யம் நிலைக்கவும் தன் கணவருக்கு ஏற்பட்ட தீராத உடல் நோய் நீங்கவும் இங்கே பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
பிராகாரத்தில் விநாயகர், வள்ளி குஞ்சரிசமேத முருகப்பெருமான், தேவயானையுடன் அருள்பாவிக்கிறார். மகாலட்சுமி, பைரவர், நவகிரகங்கள் ஆகியோரும் சுற்று பிராகாரத்தில் வீற்றிருக்கிறார்கள்.
மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோல முக்கியமான விசேஷ நாட்கள் உண்டு என்றாலும் பிரதோஷம் பிரதானமாகவும், மிக விசேஷமாகவும் உள்ளது.
அருள்மிகு மீனாட்சியம்மை சமேத சொக்கலிங்க பெருமான் அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேந்தன்பட்டி என்ற சிற்றூரில் உள்ளது. இது பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது,
கடன் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுகிற ரிஷப ராசி அன்பர்கள் இந்த திருத்தலத்திற்கு சென்றுவருவது நன்மை பயக்கும். ரிஷப ராசி அன்பர்கள் மட்டும் தான் செல்ல வேண்டுமா என கேட்காதீர்கள். எல்லாரும் செல்லலாம், எனினும், ருண, ரோக, சத்ரு ஸ்தானமாக சோதிடத்தில் சொல்லப்படும் 6-ஆம் பாவகம் பழுதுபட்டு இருக்கும் வெவ்வேறு ராசி அன்பர்களுக்கு வெவ்வேறு திருக்கோவில் வழிபாடு உண்டு. அதை வரும் வாரங்களில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
நல்லதே நினைப்போம்: நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172