இப்போதைய கால கட்டத்தில், நிறைய மனிதர்களுக்கு, சொந்தத் தொழில், தனியாக வியாபாரம், சுதந்திரமான வர்த்தகம் என இவை போல செயலாற்றும் ஆசை யும், ஆர்வமும் அதிகரித் துள்ளது. இதற்காக இவர்கள் செயல்படுத்த முனையும்போது, அட, ஒரு பார்ட்னரை, ஒரு பங்குதாரரை சேர்த்துக் கொண்டால் பணமும் முதலீடு செய்ய உதவியாக இருக்கும். மேலும் வேலை யிலும் உறுதுணையாக இருப்பார்கள் எனும் எண்ணம் மேலோங்கி, ஒரு வியாபார பங்குதாரரை சேர்த்துக்கொள்வர்.
சரி, இவ்வாறு பங்கு தாரர் கிடைத்து, கொஞ்ச நாள் சென்ற பிறகு தான் அதன் உண்மைத்தன்மை தெரியவரும். சிலர் பங்குதாரர்களால் மிகவும் மேன்மை அடைவர். சிலருக்கு பரவாயில்லை என்கிற அளவில் அமையும். வேறு சிலருக்கு, அடக் கடவுளே இவன்கிட்டபோய் மாட்டிக் கிட்டோமே என அலறத் தோன்றும். பங்குதாரார்கள் உங்களை வெகுகஷ்டம் கொடுத்து பாடாய்படுத்திவிடுவர்.
இதற்கு உங்கள் நட்சத்திரம் தெரிந்து கொண்டால்போதும். ஒரு சிறிய ஜோதிட கணக்கீட்டுமூலம் எந்த நட்சத்திர பங்கு தாரர் உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனத் தெரிந்துகொள்ளலாம்.
இனி 27 நட்த்திரங்களும், அவர் களுக்கு ஆகாத பங்குதாரர் நட்சத்திரம்:
அஸ்வினி
இதற்கு ஆகாத நட்சத்திரம் கேட்டை ஆகும். அஸ்வினி மேஷ ராசியில் வரும். கேட்டை விருச்சிக ராசியில் வரும். மேஷ ராசிக்கு விருச்சிகம் 8-ஆம் ராசியாகும். இது ஒரு காரணம். இன்னொரு காரணம் அஸ்வினி நட்சத்திரம் குதிரையைக் குறிக்கும். கேட்டை மான் இனத்தைக் குறிக்கும். இரண்டும் ஓட்டமாய் ஓடும் நட்சத்திரங்கள். எனினும் குதிரை தைரியத்துடன், கம்பீரமாக ஓடும். மான் எதற்கெடுத்தாலும் பயந்து ஓடும். தொழிலில் நீங்கள் ஒரு முடிவை தைரியமாக எடுத்து செயலாற்ற துடிக்கும்போது, உங்கள் பங்குதாரர், அதெல்லாம் வேண்டாம், சரிப்படாது என மிரண்டு ஓடினால், அந்த தொழில் உருப்படுமா? எனவே அஸ்வினி நட்சத்திரத்திற்கு, கேட்டை நட்சத்திர பங்குதாரர் சரியாக வராது.
பரணி
இது மேஷ ராசியில் உள்ளது. இதற்கு பொருத்தமில்லாத நட்சத்திரம் அனுஷம். இது விருச்சிகத்திலுள்ளது. மேஷம் எனும் ராசிக்கு விருச்சிக ராசி 8-ஆம் ராசியாகும். மேலும் பரணி என்பது யானையைக் குறிக்கும். அனுஷம் மான் இனத்தைக் குறிக்கும். பரணி நட்சத்திரத்தார், வெகு யூகமாக, அமைதியாக நிதானித்து தொழிலின் மேன்மையை ஆரம்பிக்க, உங்கள் பங்குதாரர் அனுஷமாக இருப்பின், இதெல்லாம் வேலைக்காவாது என மிரண்டு பின் வாங்குவார். எனவே தொழிற்முறையில் இது சரிப்படாது.
கார்த்திகை
இது மேஷத்தில் வரும். இதற்கு எதிரான நட்சத்திரம் விசாகம். இது மேஷ ராசியின் 8-ஆமிடமான விருச்சிகத்தில் இடம்பெறும். மேலும் கார்த்திகை நட்சத்திரம் ஆடு இனத்தைக் குறிக்கும். இதற்கு ஆகாத நட்சத்திரமான விசாகம் புலி இனத்தை குறிக்கும். இவ்விதமாக பங்குதாரர் அமைந்தால், அவர் உங்களை மிரட்டி, உருட்டி பணிய செய்வார். இது போக சிலசமயம், உங்களை தொழிலைவிட்டு விரட்டிவிட்டு, முழுத்தொழிலுக்கும் நான்தான் முதலாளி என்று வெற்றிக்கொடி நாட்டிவிடுவார். இதெல்லாம் தேவையா? நன்றாக யோசித்து பங்குதாரரை சேர்க்கவும்.
ரோகிணி
இது ரிஷப ராசியில் வரும். இதற்கு 6-ஆமிடமான துலா ராசியில் இருக்கும் சுவாதி நட்சத்திரம், வணிக பங்குதாரர் விஷயத்திற்கு சரிப்படாது. ரோகிணி நட்சத்திரம் நாகம் என்ற பாம்பு வகையைக் குறிக்கும். சுவாதி என்பது எருமை மாடு வகையில் வரும். நீங்கள் பாம்பு மாதிரி எப்போதும் சீறி பாய, உங்கள் பங்குதாரர் உங்களை பார்த்து மிரண்டு மிதிக்க வர, அங்கு தொழில் எங்ஙனம் விருத்தியாகும். எனவே இந்த சுவாதி நட்சத்திர பங்குதாரர், உங்களுக்கு ஒத்து வரமாட்டார்.
மிருகசீரிடம்
இது ரிஷபம் மற்றும் மிதுனத்தில் உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு சித்திரை, அவிட்டம் இரண்டுமே ஆகாது எனக் கூறப் பட்டுள்ளது. இவை ஒன்றுக்கொன்று 6/8 என வருவதைக் காணலாம். மிருகசீரிடம் என்பது நாகம் எனும் பாம்பு வகையைக் குறிக்கும். சித்திரை என்பது புலி வகையாகும். அவிட்டம் குறிப்பது சிங்கம் ஆகும். ஆக இந்த நட்சத்திரத்தாரர். தொழிலில் தாங்கள் தான் பெரியவன், தங்களுக்கு எல்லாம் தெரியும். தாங்கள்தான் முதலாளி எனும் மஹாராஜா என்கிற மிதப்பில் இருப்பீர். ஒரே ஈகோ எனும், தான் என்கிற வெறியில் இருப்பவர்கள். எனவே இந்த நட்சத்திரத்தாரர் பங்குதாரராக சேர்ந் தால், ஒருவருக்கொருவர் இயைந்து, இணைந்து, சேர்ந்து, இணக்காமல், விட்டுக்கொடுத்து பணியாற்ற இயலாமல் போய்விடும். இவர்கள் தான்தான் பல்லக்கில் ஏறி உட்காருவேன் என அடம்பிடிப்பர். பின் பல்லக்கைத் தூக்கி நகர்த்த ஆளில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து விடும். அதற் குறைய உங்கள் தொழிலும் இவ்விதமே நகராமல் தேங்கிவிடும்.
திருவாதிரை
இது மிதுன ராசியில் வரும். இதற்கு சரிப்படாத நட்சத்திரம் இதன் எட்டாவது ராசியிலுள்ள மகர ராசியின், திருவோணம் ஆகும். திருவாதிரை என்பது நாய் வகையைக் குறிக்கும். திருவோணம் என்பது குரங்கு வகையை குறிக்கும். நாய் குரைத்துக்கொண்டே இருக்க, குரங்கு குதித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் தொழில் முனைப்பில் கத்த ஆரம்பிக்கும்போது, உங்கள் பங்குதாரர் இவனுக்கு வேறு வேலையில்லை என வேறு எங்காவது ஓடி விடுவார். மேலும் உங்களுக்கு தொழிலை பத்திரமாக பாதுகாக்கும் குணம் இருக்கும். இந்த நட்சத்திர பங்குதாரரை சேர்த்தால், சற்று மேலோட்டமான திருட்டுப் புத்தியும் இருக்கும். எனவே உங்களுக்கு திருவோண நட்சத்திரம் ஒத்து வராது.
புனர்பூசம்
இது மிதுனம் மற்றும் கடகத்தில் பரவி இருக்கும். இதற்கு சரிப்பட்டு வராத உத்திராட நட்சத்திரம் தனுசு, மகரம் இரண்டிலும் பகிர்ந்து இருக்கும். எப்படி பார்த்தாலும் 6/8 வந்துவிடும். புனர்பூசம் பூனை வகையை குறிக்கும். உத்திராடம் கீரி வகையை குறிக்கும். பூனையும், கீரியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலே பிராண்டி எடுத்துவிடும். எனவே நாமிருவரும் தொழிலில் பங்குதாரர் ஆகலாமா என முதல் பிள்ளையார் சுழிபோட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போதே சண்டை வந்து முறிந்து விடும். பிறகெங்கே பங்குதாரர் ஆவது?
பூசம்
இது கடக ராசியிலுள்ளது. இதற்கு ஆகாத நட்சத்திரம் பூராடம். இது கடக ராசியின் 6-ஆமிடத்தில் தனுசு ராசியிலுள்ளது. பூச நட்சத்திரம் ஆடு வகையைச் சார்ந்தது. பூராடம் குரங்கு வகையைச் சார்ந்தது. ஆடு எதையும் மெதுவாக யோசித்து அசைபோட்டு, யார் சொன்னாலும் கேட்டுக்கொண்டு, அதன் பின்னாடியே போகும். குரங்கு ஒரு நிமிஷம், ஒரு இடத்தில் நிற்காது. மாறிக்கொண்டே இருக்கும். இவ்வித குணங்கள்கொண்ட இருவர் வியாபார பங்குதாரர் ஆனால், எங்ஙனம் சரிப்படும். ஒருவர் யோசித்துக் கொண்டே இருக்க, அடுத்தவர் சற்றும் யோசிக் காமல் செயலாற்ற பரபரக்க, வியாபாரம் வௌங்கினாப்புலதான்.
ஆயில்யம்
இது கடக ராசியிலுள்ளது. இதற்கு சரிப்படாத நட்சத்திரம், இதன் 6-ஆமிடமான தனுசில், மூலம் நட்சத்திரம் ஆகும். இரண்டும் 6/8 ஆகிவிடும். ஆயில்யம் பூனை வகையைச் சார்ந்தது. மூலம் நாய் வகையைக்கொண்டது. நாயும், பூனையும் நட்பாக இருப்பது அரிதி லும் அரிது. ஒன்றொயொன்று சின்னதாக பார்த்துக்கொண்டாலே உறுமிக்கொள்ளும். இவர்கள், மற்றவரை பங்குதாரர்களாக யோசனைகூட பண்ண மாட்டார்கள். ஒருவர் பெயரை மற்றவர் கேட்டவுடனேயே, அவ னெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான். அவனுக்கு குணம் பத்தாது என ஒருவரை யொருவர் வெறுத்துப் பேசுவர். அதனால் இவர்கள் பங்குதாரர் ஆக வாய்ப்பேயில்லை.
மகம்
இது சிம்ம ராசியில் அமைந்திருக்கிறது. இதற்கு ஆகாத நட்சத்திரம் ரேவதி. இதன் அஷ்டம ராசியான மீனத்திலுள்ளது. எனவே இது 6/8-ல் வந்துவிடும். மேலும் மகம் எலி வகையைச் சார்ந்தது. ரேவதி யானை வகையை உடையது. மகம் நட்சத்திரத்தார் சின்ன சின்னதாக குசும்பு பண்ண, ரேவதி நட்சத்திரத்தார் அதை கண்டுபிடிக்காமல் திணறுவர். இவன் எதையோ மறைமுகமாகச் செய்கிறான். ஆனால் பயல் என்ன செய்கிறான் என்று தெரியவில்லையே என மண்டை காய்ந்து போய் வெறுத்து, ஒருகட்டத்தில் ரேவதி நட்சத்திரத்தார் கூட்டணியில் இருந்து விலகிவிடுவர். இவர்களின் பங்குதாரர் விஷயம் நீண்டநாள் நீடிக்காது.
பூரம்
இது சிம்ம ராசியில் இருக்கிறது. இதற்கு சரியாகாத நட்சத்திரம் உத்திரட்டாதி. இது மீன ராசியிலுள்ளது. எனவே 6/8 வந்து விடுகிறது. பூரம் எலி வகையைக் கொண்டது. உத்திரட்டாதி பசு வகையைச் சார்ந்தது. பொதுவாக எலியைக் கண்டால் பசு மிரளும். எலி வளை தோண்டி, மறைமுக செயல்கள் உடையது. ஆனால் பசு தெய்வீகக் குணமும், வெளிப்படையான தன்மையும் கொண்டது. எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தார் தெய்வ துணையோடு, எதையும் வெளிப்படையாக, கள்ளக்கணக்கு, போலித் தனம் இன்றி தொழில் செய்ய விரும்புவர். ஆனால் பூரம் நட்சத்திரத்தாரர், எவ்விஷயத்திலும் மறைமுகமாகவும், போலி பொருட்கள், கலப்படம் இவற்றை முன்னிலைபடுத்தி வணிகம் செய்ய விரும்புவர். இது நேர், எதிர்குணங்கள் ஆகும். எனவே நாளடைவில், இருவருக்கு இடையே எரிச்சல், கோபம், சண்டை ஏற்பட்டு பிரிய நேரிடும். சில சமயம் பங்குதாரர் பற்றிய விஷயம் ஆரம்பிக்கும்போதே, அதன் நியமங் கள் பொருந்தி வராது. எனவே பங்குதாரர்கள் ஆவரே பெரிய விஷயம்.
உத்திரம்
இந்த நட்சத்திரம் சிம்மம் மற்றும் கன்னியில் பரவியுள்ளது. இதற்கு சரிப்பட்டு வராத நட்சத்திரம் பூரட்டாதி. இது கும்பம் மற்றும் மீனத்தில் விரவியுள்ளது. இதுவும் 6/8 ஆகவரும். உத்திர நட்சத்திரத்தின் வகை பசு ஆகும். பூரட்டாதி சிங்க வகையைச் சேர்ந்தது. உத்திர நட்சத்திரத்தார் சாதுவாக தொழில் நடத்துவர். ஆனால் பூரட்டாதி நட்சத்திரத்தார், எந்த சமயமும் இவர்களை அடித்து வீழ்த்தி, தொழில் அனைத்தையும் தன் மயமாக்கிக்கொள்வர். தெரியாத்தனமாக உத்திர நட்சத்திரத்தார். பூரட்டாதி ஜாதகர் களை பங்குதாரராக சேர்க்கும்படி, சூழ்நிலை ஏற்பட்டால், மிக கவனமாக இருக்கவேண்டும். கூடிய மட்டும் தவிர்த்துவிடுவது நலம்.
அஸ்தம்
இது கன்னி ராசியில் இருக்கும் நட்சத்திரம். இதற்கு சரியாக வராத நட்சத்திரம் சதயம். இது, இதன் 8-ஆவது ராசியில் அமர்ந்திருக்கும். எனவே இங்கு சஷ்டாஷ்கம் எனும் 6/8 வந்துவிடுகிறது. அஸ்தம் நட்சத்திரம் எருமை இனத்தைக் குறிக்கும். சதயம் நட்சத்திரம் குதிரை இனத் தைக் குறிக்கும். அஸ்த நட்சத்திரத்தார், எந்த வேலையும் செய்யாமல், எந்த முடிவும் எடுக்காமல், ஒரே இடத்தில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பர். ஆனால் சதய நட்சத்திரத் தார் ஒரு நிமிடமும் வீணாக்காமல், உழைத்துக் கொண்டே இருப்பர். ஒருவர் உழைக்க, ஒருவர் உட்கார்ந்து அனுபவித்தால், அங்கு பங்குதாரர் பிரச்சினை கண்டிப்பாக வரும். எனவே இதுவும் சரிப்படாதுதான்.
மேலே 24 நட்சத்திரங்களுக்கும் சரிப்பட்டு வராத பங்குதாரர் பற்றி கூறப்பட்டது. மீதி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் மூன்றுமே ஒன்றுக்கொன்று ஆகாது.
இனிமேல் தொழில் பங்குதாரர்களை தேடும்போது, அவர் உங்களுக்கு உதவுகி றாரோ- இல்லையோ, உங்களின் தொழிலை, உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளாமல் இருப்பது பெரிய விஷயமல்லவா!
வியாபாரிகள், முன்னேற்றம் அடைய புதன்கிழமை 10.30 மணிமுதல் 12.00 மணிக் குள் பைரவருக்கு சந்தனக் காப்பு சார்த்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பாசி பயறு சுண்டல், பாசிப்பருப்பு பாயசம் படைத்து வணங்கலாம்.
சக்கரத்தாழ்வாரை தினமும் வழிபட்டால் தொழிலில் நினைத்தது நடந்து, வெற்றி கிடைக்கும்.
மேலும், தொழில், வியாபாரத்தில் சின்ன புதிய விஷயம் ஆரம்பித்தாலும், உங்கள் குலதெய்வத்தையும், விநாயகரையும் வேண்டி, சிறு காணிக்கை எடுத்து வைத்துவிட்டு ஆரம்பிக்கவும். எல்லாம் நலமாகும்.