வகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிடரீதியாக கிரகங்கள் பின்னோக்கிச் செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். பொதுவாக ஜாதகங்களைக் கணிக்கும்போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக் கும். ஆங்கிலத்தில் (த) என குறிப்பிட்டிருக்கும். இதற்குத் தமிழில் வக்ரம் என்றும் ஆங்கிலத்தில் தங்ற்ழ்ர்ஞ்ழ்ஹக்ங் என்றும் அர்த்தமாகும். கிரகங்கள் எப்பொழுது வக்ரம் பெறுகிறது? கிரகங்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்றால் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா?

நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில்தான் செல்வார்கள். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கிதான் செல்வார்கள்.

planets

Advertisment

நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.

மாதக் கோள்களான புதன், சுக்கிரன் ஆகிய இருவரும் சூரியனை ஒட்டியே எப்பொழுதும் சஞ்சரிக்கும் கிரகங்களாகும். பொதுவாக சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு முன், பின் வீடுகளில்தான் புதனும், சுக்கிரனும் அதிகபட்சம் இரண்டு வீடுகளில் சஞ்சரிப்பார்கள்.

சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கின்றபோது வக்ரம்பெற்று 20 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியாகும். சுமார் 24 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.

சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் மற்றொரு கிரகமான சுக்கிரன் சூரியனுக்கு 29 டிகிரியில் வக்ரம்பெற்று 26 டிகிரிக்கு வரும்போது வக்ர நிவிர்த்தியாகும். சுமார் 42 நாட்கள் வக்ரம் பெறுவார்.

ஒரு ராசியில் ஒன்றரை மாதங்கள் தங்கும் கிரகமான செவ்வாய் சூரியனுக்கு 228 டிகிரியில் வரும்போது வக்ரம்; 132 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியாகும். சுமார் 80 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார். இதனை எளிதாக அறிந்துகொள்ள சூரியனுக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று சூரியனுக்கு 6-ல் செவ்வாய் வரும்போது வக்ர நிவர்த்தியாகும்.

ஆண்டுக் கோளான குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும்போது வக்ரம்பெற்று 115 டிகிரியில் சூரியனுக்கு குரு வருகின்றபோது குரு வக்ர நிவர்த்தியாகும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய ராசி சக்கரத்தில் சூரியனுக்கு 9-ல் குரு வருகின்றபோது வக்ரம் பெற்று சூரியனுக்கு 5-ல் வரும்போது வக்ர நிவர்த்தியடையும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று 109 இருக்கும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9-ல் சனி வரும்போது வக்ரம்பெற்று சூரியனுக்கு 5-ல் சனி வரும்போது வக்ர நிவர்த்தியடையும்.

வக்ரம் பெறுவதென்பது கிரகங்கள் பின்னோக்கி சஞ்சரிக்கும் காலங்களாகும். இப்படி பின்னோக்கிச் செல்லும் கிரகங்கள் இக்காலங்களில் எதிர்மறையான பலன்களையே உண்டாக்கும்.

ஒரு கிரகம் வக்ரம் பெறுகின்றபொழுது என்ன பலன் ஏற்படுகிறதென பார்க்கின்றபொழுது, அந்த கிரகம் தரவேண்டிய பலன்களை சரிவர தருவதில்லை. எதிர்மறையான பலன்களைத் தருகிறது. குறிப்பாக ஒரு வீட்டு அதிபதி வக்ரம் பெறுகின்றபொழுது அந்த வீட்டின் பலனை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 5-ஆமதிபதி வக்ரம் பெற்றால், புத்திர ஸ்தானமென்பதால் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறுகள், பூர்வபுண்ணிய ஸ்தானமென்பதால் பூர்வீக வழியில் அனுகூலங்கள் அடைய தடங்கல்கள் உண்டாகிறது.

அதுபோல 4-ஆமதிபதி வக்ரம் பெற்றால் படித்து படிப்பை பயன்படுத்துவதில் இடையூறுகள், அந்த ஜாதகர் பேரில் ஒரு சொந்த வீடு அமைகின்றபொழுது அதனை முழுமையாக அனுபவிக்க தடங்கல், ஜாதகர் பேரில் சொத்துகள் அமைவதற்கு இடையூறுகள், இருப்பதை அனுபவிக்க தடங்கல் உண்டாகிறது. தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகிறது.

அதுபோல ஆண்களுக்கு 3-ஆமதிபதி வக்ரம் பெற்றால் இளைய உடன்பிறப்பிடம் கருத்து வேறுப்பாடு, 3-ஆமிடம் ஆண்மை, விரியஸ்தானம் என்பதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் தடைப்படுகிறது.

ஏழாமதிபதி வக்ரம் பெற்றால் மண வாழ்வில் மகிழ்ச்சி இல்லாத நிலை, திருமணத்திற்குப்பிறகு தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒருசில இடங்களில் சரியாகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்கின்றபொழுதும் அமைகின்ற வரனுக்கும் ஏழாம் அதிபதியோ, களத்திர காரகனோ வக்ரம் பெற்றிருந்து திருமணம் செய்தால் ஒருசில அனுகூலங்களை அடைய முடிகிறது.

ஒன்பதாமதிபதி வக்ரம் பெற்றால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடிய நிலை, வசதி வாய்ப்புகள் அடைவதில் இடையூறுகள் உண்டாகிறது. அதுபோல பத்தாம் அதிபதி வக்ரம் பெற்றால் நிலையான தொழில் உத்தியோகம் அமைய இடையூறுகள் உண்டாகிறது. பத்தாமதிபதி வக்ரம் பெற்றவர்கள் அவர்கள் பெயரில் தொழில் செய்யாமல் மற்றவர்கள் பேரில் தொழில் செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக 7-ஆமதிபதி வலுவாக இருந்தால் கூட்டுத் தொழில் செய்யலாம். அப்படி இல்லையென்றால் முடிந்தவரை வேலைக்குச் செல்வது நல்லது. பாவகரீதியாக நிறைய விஷயங்கள் இருந்தாலும் சில குறிப்புகளைக் கூறியுள்ளேன்.

நவ கிரகங்களில் நீங்கள் மிகவும் கவனமாகப் பாருங்கள். ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றால் உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள், வயது குறைந்த ஆண்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.

அதுபோல ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் இளைய சகோதரனுடன் கருத்து வேறுபாடு, ஹார்மோன் தொடர்பான உடல் பிரச்சினைகள், திருமண வாழ்க்கையில் சிக்கல் உண்டாகிறது.

புதன் வக்ரம் பெறுகின்றபொழுது மாமன்வழியில் கருத்து வேறுபாடு, படித்த படிப்பை முழுமையாகப் பயன் படுத்துவதில் இடையூறுகள், கல்விக்கும் செய்யக்கூடிய ஜீவனத்துக்கும் தொடர்பில்லாத நிலை ஏற்படுகிறது.

சுக்கிரன் வக்ரம் பெறுகின்றபொழுது ஒரு ஆண் என்றால் இல்லற வாழ்வில் சில சிக்கல், இளைய சகோதரி வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் வக்ரம் பெற்றிருந்தால் தன்னைவிட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்கின்றபொழுது வாழ்க்கை சற்று சாதகமாக இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றிருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானப் பிரச்சினை, பிறருக்கு பணம் கொடுத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படுகிறது. அதுபோல இருக்கும் இடத்தில் எதிர்பார்க்கும் மதிப்பு, மரியாதை அடைய இடையூறுகள் உண்டாகிறது.

சனி வக்ரம் பெற்றால் வேலையாட்களால் பிரச்சினைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கால் பாதங்களில் தொந்தரவுகள் உண்டாகிறது.

பொதுவாக ஒரு கிரகத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கிரகத்தின் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது, அதன் பலன்களை சந்திக்க நேரிடும். வக்ர கிரகத்தைப் பற்றி சில தகவல்களைக் கூறியுள்ளேன்.