முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

இந்த வார ராசிபலன் பகுதி புத்தாண்டுப் பலன்களாக இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.

-ஆசிரியர்

மேஷம்

Advertisment

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் வாழ்வில் 2023-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படவிருக்கிறது. சனிபகவான் 17-1-2023 முதல் 11-ல் சஞ்சாரம் செய்யவுள்ளதால் சகலவிதத்திலும் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பொருளாதாரரீதியாக சாதகமான பலன்களை அடையும் யோகமுண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து முன்னேற்றமான நிலை உண்டாகும். தொழிலி-ருந்த தேக்க நிலைகள் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியை அடையும் யோகம், சந்தைச் சூழ்நிலை சாதகமாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் லாபம், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நல்லபதவிகள் தேடிவரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். நீண்டநாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனினும் ராகு- கேது 30-10-2023 வரை 1, 7-ல் சஞ்சரிப்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டிலும், 22-4-2023 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளது அவ்வளவு சிறப்பான அமைப்பென கூறமுடியாது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதன்மூலம் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். ஏப்ரலுக்குப் பிறகு குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் வாய்ப்புண்டு. மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் சந்தோஷம் ஏற்படும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

2023-ஆம் ஆண்டில் சிக்கனத்தோடு செயல்பட்டால்தான் அனைத்தையும் எதிர்கொண்டு இலக்கை அடையமுடியும். 2023-ஆம் ஆண்டில் கேது உங்கள் ராசிக்கு 6-ல் 30-10-2023 வரையும், அதன்பிறகு ராகு 11-லும் சஞ்சரிப்பதால் கிடைக்கவேண்டிய நேரத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பதால் வளமான பலன்களைப் பெறமுடியும். உங்கள் செயல்களில் கவனத்தோடு செயல்பட்டால் எடுக்கும் பணிகளில் சிறுசிறு இடையூறுகள் இருந்தாலும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். சனி 17-1-2023 முதல் 10-ல் சஞ்சாரம் செய்யவுள்ளதால் தொழில், வியாபாரத்தில் கவனத்தோடு செயல்பட்டால்தான் அனுகூலங்களை அடையமுடியும். பெரிய முதலீடுகள்கொண்ட செயல்களில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால், அவர்களைச் சார்ந்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்கள் பணியையும் சேர்த்து நீங்கள் செய்யக்கூடிய சூழல் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை அடைவதில் சில இடையூறுகள் இருக்கும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பதால், முதல் நான்கு மாதங்கள் உங்களுக்கு பொருளாதாரரீதியாக மிகவும் சாதகமான நிலை, திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய யோகங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, அழகிய குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். 22-4-2023-க்குப் பிறகு குரு 12-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். எனவே பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபார விஷயங்களில் எதிலும் சுயமாக செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படும்பொழுது வீண் செலவுகளையும், இழப்புகளையும் தவிர்த்து போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்புண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

2023-ஆம் ஆண்டு மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக இருக்கும். இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி 17-1-2023 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரநிலை மேன்மையடைந்து சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த சிறுசிறு பாதிப்புகள்கூட தற்போது முழுமையாக விலகி பொருளாதாரரீதியாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை இருக்கும். ராகு 11-ல், 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக் கூடிய யோகமுண்டு. குரு ஆண்டின் தொடக்கத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறிது தேக்கமான நிலையை எதிர்கொண்டாலும், 22-4-2023 முதல் குரு 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலம், கடன்கள் எல்லாம் குறையக்கூடிய சூழல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில்ரீதியாக இருந்த சட்டச் சிக்கல்கள் முழுமையாக விலகி அரசுவழியில் எதிர் பார்த்த உத்தரவுகளைப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு மேலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகரீதியான கவலைகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். கௌரவ மான பதவிகள் தேடிவரும். திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இவ்வாண்டில் கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

குருபகவான் 22-4-2023 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்கள் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் எண்ணியதை செயல்படுத்துவதென்றால் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்வது நல்லது. திருமண முயற்சிகளை ஆண்டில் தொடக்கத்தில் மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். 22-4-2023 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவுள்ளதால் பொருளாதார நிலையானது ஏற்ற- இறக்க மாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரவை அடைவதில் சுணக்கங்கள் ஏற்படலாம். பொருளாதாரரீதியாக ஒருசில அனுகூலங் கள் கிடைக்கும் என்றாலும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பது, எதிலும் கையிருப்பைக்கொண்டு செயல்படுவது நல்லது. அசையா சொத்து களைப் பராமரிப்பதற்காக சுபச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்குமென்றாலும், எதிர்நீச்சல் போட்டால்தான் பலனை அடையமுடியும். சில வெளிநபர்களின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங் கள் சற்று குறையும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். எதிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், உங்களின் உடல்நிலையானது அன்றாட செயல்களுக்கு ஒத்துழைக்காது. உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்வார்கள். 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடைபெற இருப்பதால், உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 2023-ஆம் ஆண்டில் கேது 4-லும் ராகு 10-லும் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால், தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உற்றார்- உறவினர் களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்களுக்கு 2023-ஆம் ஆண்டு, எல்லாவகையிலும் முன்னேற்றங் களை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும். உங்கள் ராசிக்கு கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு பகவான் 22-4-2023 வரை அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை, சிறிதளவு நெருக்கடிகள் இருந்தாலும், 22-4-2023 முதல் குரு உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்குப்பிறகு எளிதில் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும்- அசையா சொத்துகளை வாங்கக்கூடிய யோகமுண்டு. பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களை அடையலாம். போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் பார்க்கும் நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவதற்கான யோகங்கள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியுண்டாகும். உங்களின் நீண்டநாள் திட்டங்களை ஏப்ரலுக்குப் பிறகு செயல் படுத்தினால் அதில் முழுமையான வெற்றியை அடையமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு 17-1-2023 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர் கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் இலக்கை அடையமுடியும். உற்றார்- உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருந்தால், வரும் ஆண்டில் நீங்கள் எல்லாவகையிலும் வளமான பலன்களை அடையமுடியும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

சனிபகவான் 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல், பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், உங்களுடைய பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவுக்கு ஒரு உயர்வான நிலையை எட்டமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவியை அடையும் யோகம், வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலமான பலனை அடையும் வாய்ப்புண்டாகும். குரு 22-4-2023 வரை 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது சிறப் பென்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகமுண்டாகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். 22-4-2023-க்குப்பிறகு குரு 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் இலக்கை அடையமுடியும். குரு 8-ல் சஞ்சரிக்கும் காலத்தில் சனி 6-ல் சஞ்சரிக்குமென்பதால், எதையும் சமாளித்து அனுகூலங்களை அடையும் வாய்ப்புகளுண்டு. இவ்வாண்டில் 30-10-2023 வரை கேது 2-லும், ராகு 8-லும், அதன்பிறகு கேது ஜென்மத்திலும், ராகு 7-லும் சஞ்சரிக்க இருப்பதால், உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் சனி 6-ல் வலுவாக சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். நீண்டநாளைய கனவுகளை வரும் நாட்களில் நிறைவேற்றும் யோகமுண்டாகும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு இதுநாள் வரை 4-ல் சஞ்சரித்த சனி பல்வேறுவிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தினார். 17-1-2023 முதல் சனி 5-ல் வலுவாக சஞ்சரிக்கவிருப்பதால் நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து, பொருளாதாரரீதியாக சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அலைச்சல், டென்ஷன் விலகி சகலவிதத்திலும் ஏற்றங் கள் ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலம் ஏற்படும். தொழில்ரீதியாக கடந்தகாலங்களில் இருந்துவந்த பொருட் தேக்கங்கள் விலகி, சந்தைச் சூழ்நிலை சாதகமாக மாறி உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுக்கு நல்ல ஆதரவும், போட்ட முதலீட்டை எடுக்கும் பலமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து சுமூகமாகப் பணிபுரியும் அமைப்பு, உடன் வேலைசெய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலை வரும் நாட்களில் ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருந்தாலும், 22-4-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள், மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதியான நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு ஏற்படும். ஒருசிலருக்கு அழகிய குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய யோகமுண்டாகும். 30-10-2023 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 30-10-2023 வரை சஞ்சரிரிப்பதும், அதன்பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால், உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடையும் வாய்ப்புகள் உண்டாகும். குரு 22-4-2023 வரை ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை ஆண்டின் தொடக்கத்தில் முயற்சித்தால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. 22-4-2023 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத் தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில்ரீதியாக ஒவ்வொரு செய-லும் சிந்தித்து செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொண்டு அணுகூலங்களை அடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனத்தோடு செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உங்கள்மீது வீண் பழிச் சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வெளி நபர்களிடம் வீண்பேச்சைக் குறைப் பது நல்லது. சனி உங்கள் ராசிக்கு 4-ல் 17-1-2023 முதல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி தொடங்க வுள்ளது. எனவே அலைச்சல், டென்ஷன், வசதி வாய்ப்பிருந்தாலும் அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும் சூழல் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

2023-ல் இதுநாள்வரை நடைபெற்றுவந்த ஏழரைச்சனி 17-1-2023-ல் முழுமையாக முடிவதால், உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப் பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உட-ல் நல்ல முன்னேற்றம் வருகின்ற நாட்களில் ஏற்படும். பொருளாதார சங்கடங்கள் முழுமையாகக் குறைந்து நிம்மதியடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து கடன் பிரச்சினைகள் குறையும். தொழில்ரீதியாக கடுமையான தேக்கநிலையை எதிர்கொண்ட உங்களுக்கு வரும் நாட்களில் சந்தைச் சூழ்நிலை முற்றிலும் உங்களுக்கு சாதகமாக மாறி, ஒவ்வொரு செயலுக்கும் நல்ல லாபங்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 4-ல் சஞ்சரிக்கும் குரு 22-4-2023 முதல் 5-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பென்பதால் உங்களது வ-மை மேலும் அதிகரிக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலை ஏற்படும். மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கமுடியும். நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு ஒரு உயர்வான நிலையை அடையமுடியும். 2023-ஆம் ஆண்டில் ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது 11-லும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்யவுள்ளனர். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பல்வேறு அணுகூலமான பலன்களை ஏற்படுத்தும் சிறப்பான அமைப்பாகும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள்வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி 17-1-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்கவுள்ளார். இதன்காரணமாக உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிந்தாலும் பாதச்சனி தொடங்கும். உங்கள் உடல் ஆரோக்கியமானது சிறப் பாக இருக்கும். பேச்சில் பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையானது முன்பைவிட தற்போது சாதகமாக இருக்குமென்றா லும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு 22-4-2023 வரை 3-ஆம் வீட்டிலும் அதன்பிறகு 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளார். பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருக்குமென்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செய-லும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டுமென்றால் உங்கள் பெயரில் முதலீடுசெய்வதைவிட குடும்ப உறுப்பினர் கள் பெயரில் முதலீடுசெய்வது மிக நல்லது. கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் தொழி-ல் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகரீதியாக பணியில் வேலைப்பளு இருந்தாலும், அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஓய்வுநேரம் குறையும் சூழல் உண்டாகும். 30-10-2023 வரை 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் வாகனங்கள்மூலம் வீண் செலவுகள், அசையா சொத்துகளால் எதிர்பாராத செலவுகளை வரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி இதுவரை 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தார். 17-1-2023 முதல் சனி திருக்கணிதப்படி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி தொடங்கு வதால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். தேவையற்ற அலைச்சல், செய்யும் செயல்களில் சுறுசுறுப்பில்லாத நிலை, சக்திக்குமீறிய வீண் செலவுகளை சந்திக்கும் நிலை ஏற்படும். பொருளாதாரநிலை ஏற்ற- இறக்க மாக இருப்பது மட்டுமல்லாமல் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால், ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் 22-4-2023 வரை 2-ல் பலமாக சஞ்சரிப்பதால், ஆண்டின் முதல் நான்கு மாதகாலங்கள் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்களைப் பெற்று தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். 22-4-2023-க்குப் பிறகு குரு 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருக்குமென்பதால் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் வரும் ஆண்டில் எளிதில் கைகூடும். கடினமான நெருக்கடியில் இருந்தாலும் உரிய நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். தற்போதைக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் பெயரில் முதலீடுசெய்து தொழில் தொடங்குவது, பிறரை நம்பி பண உதவி செய்வது போன்றவற்றைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. ராகு 30-10-2023 வரை 3-ல் சஞ்சாரம் செய்ய விருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயமென்பதால், எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலமுண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்களுக்கு ராசியாதிபதி குரு 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், 22-4-2023 முதல் 2-ல் சாதகமாக சஞ்சரிக்கவிருப்பதால், முதல் மூன்று மாதங்கள் நீங்கள் சமாளித்து விட்டால் ஏப்ரலுக்குப்பிறகு உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல், கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் ஏப்ரலுக்குப்பிறகு எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும், உங்கள் உழைப்புக்கான பலனைப்பெற்று முன்னேற்ற மடைவீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை ஏப்ரலுக்குப்பிறகு மேற் கொண்டால் ஆதாயங்களை அடையமுடி யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலைசெய்பவர்கள் உதவிகரமாக இருப்பதால், கடினமான பணிகளைக்கூட சிறப்பாக செய்துமுடிக்கும் பலமுண்டாகும். 17-1-2023 முதல் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்குகிறது. இதன்காரணமாக வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தூரப் பயணங்களைத் தள்ளி வைக்கவும். ஏழரைச்சனியின் காரணமாக எதிர்பாராதவகையில் கடன்வாங்க நேரிடும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, சக்திக்கு மீறி செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கடன் வாங்கக்கூடிய நெருக்கடியான நிலை இருந்தாலும், உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது. உங்கள் ராசிக்கு ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்கவிருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருப்பது நல்லது.