குருவின் யோகங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்த சென்ற இதழ் தொடர்ச்சி!...

/idhalgal/balajothidam/gurus-yogas-prasanna-astrologer-i-continuation-anandas-last-issue

குரு

காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் குரு ஒன்பது மற்றும் பன்னிரன்டாம் இடத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒன்பதாமிடம் என்பது பூர்வபுண்ணியம், அதிர்ஷ்டம், தூர தேசப் பயணம், பூர்வீக சொத்து. பன்னிரண் டாமிடம் என்பது பயணம், அலைச்சல், செலவினம் போகம், படுக்கை சுகம், துறவறம் போன்றவற்றைக் குறிக்கும். தனம், புத்திரம், பூர்வீகம், கௌரவம் (பாரம்பரியம்) போன்றவை குரு கிரகத்தின் முக்கிய காரகத்துவங்கள்.

guru

ராகு

ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்கவிடாமல் தடை செய்பவர். ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால், தான் நின்ற வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத் துவங்களான நய வஞ்சகர்களுடன் பழ கும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்குச் சென்று பிழைக்கவேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷமருந்தச் செய்தல், கூட்டு மரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறரைக் கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், வ

குரு

காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் குரு ஒன்பது மற்றும் பன்னிரன்டாம் இடத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒன்பதாமிடம் என்பது பூர்வபுண்ணியம், அதிர்ஷ்டம், தூர தேசப் பயணம், பூர்வீக சொத்து. பன்னிரண் டாமிடம் என்பது பயணம், அலைச்சல், செலவினம் போகம், படுக்கை சுகம், துறவறம் போன்றவற்றைக் குறிக்கும். தனம், புத்திரம், பூர்வீகம், கௌரவம் (பாரம்பரியம்) போன்றவை குரு கிரகத்தின் முக்கிய காரகத்துவங்கள்.

guru

ராகு

ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்கவிடாமல் தடை செய்பவர். ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால், தான் நின்ற வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத் துவங்களான நய வஞ்சகர்களுடன் பழ கும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்குச் சென்று பிழைக்கவேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷமருந்தச் செய்தல், கூட்டு மரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறரைக் கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு உண்டாகும். பிரம்மாண்ட சிந்தனை, தடை, புதுமை, பாட்டன் போன்றவை முக்கியமான ராகுவின் காரகத்துவங்கள்.

குரு சண்டாள யோகம் குரு+ராகு பலன்கள்

செயற்கைக் கருத்தரிப்பில் குழந்தை, திடீர் அதிர்ஷ்டம், பெரிய நபர்களின் தொடர்பு கிடைத்தல், சண்டாளன் என்ற அவப்பெயரைப் பெறுதல் (கௌரவக் குறைவு) பெரும் கடன் கிடைத்தல், பூர்வீக சொத்தில் பிரச்சினை, நம்பிக்கை மோசடியில் சிக்குதல்.

குரு சண்டாள யோகம் என்பது யோகமா? தோஷமா?

ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு ஜோதிட நூல்களில் பல வழிமுறை கள் உள்ளன. எந்த முறையில் பலன் கூறினா லும் ஜாதகத்திலுள்ள யோகங்களுக்கான பலனை சரியாக நிர்ணயிப்பது மிக முக்கியம். யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருப்பதை ஜோதிடத்தில் யோகம் என்று கூறுகிறார்கள். பலவிதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் குரு+ராகு இணைவால் ஏற்படக்கூடிய குரு சண்டாள யோகம் பற்றி பலவிதமான சந்தேகங்கள் நிலவிக்கொண்டே உள்ளன. சிலர் யோகம் என்று கூறும் கிரகச் சேர்க்கையை சிலர் அவயோகம் என்று கூறுகிறார்கள். இத்தகைய குரு, ராகு சேர்க்கையை யோகம் என்ற அடிப் படையில் ஆய்வு செய்தால் குரு, ராகு நெருக்க மாக இணைந்தால் ராகு தசை "போதும் போதும்' என்ற அளவில் அள்ளிள்ளிக் கொடுக்கும். ஆனால் குரு தசையானது ராகு தசையில் கொடுத்ததை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, தெருக் கோடிக்கு நிற்க வைத்துவிடும். ராகு தசையில் கோடி கோடியாக சம்பாதித்த பலர் ஏன் குரு தசையில் வாழ்ந்த தடம் தெரியாமல் வாழ்கிறார் கள். "சிட்டிசன்' படத்தில் அத்திப்பட்டு என்ற கிராமத்தை இந்திய வரைபடத்திலிருந்து தூக்கியதுபோல், ராகு தசையில் உலகப்புகழ் பெற்றவர்கள் குரு தசையில் வாழமுடியாமல் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை வெளி நடப்பு செய்துகொள்கிறார்கள். ஆயுள் பலம் மிகுந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் சென்று சந்நியாசியாக மாறிவிடுகிறார்கள்.

சிலர் லௌகீகத்திற்கும் ஆன்மிகத்திற் கும் இடையில் சிக்கிக்கொண்டு வாழவும் முடியாமல் வீழவும் முடியாமல் தவிக்கிறார்கள். பலர் தாங்கள் வாழும் இடம் தெரியாமல் தலைமறைவாக வாழ்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த கிரகக் கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்துவிட்டால் அங்கு யோகம்தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுப மாகாவோ அமைந்துவிட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலைசெய்யும் என்பது பொதுவான விதி. அதாவது தன்னுடன் தொடர்புகொண்ட கிரகங்களை கிரகணப் படுத்தி அதன் வலிமையைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது ராகுவின் குணம். இதை மேலும் விவரித்துக் கூறினால், பாம்புகள் புற்றில் வசித்தாலும் அந்தப் புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படு வதில்லை. கரையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர் களை அழிப்பதுவே ராகுவின் வேலை.

குருவுடன் இணைந்த ராகு தனக்கு சொந்த வீடில்லாத காரணத்தால் ராகு தசையில் குருவின் காரகத்துவங் களைத் தன்னுள் இழுத்துக் கொண்டு குருவாக செயல்பட்டு தாராள பொருள் வரவு, குழந்தைப் பேறு வீடு, வாகன யோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்குவார்.

குரு தசையில் ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந்தால், குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்தியப் பலனையும் இழந்து, தன்னுடைய பார்வையால், பார்க்கும் இடத்தைப் புனிதப்படுத்தும் தகுதியை இழந்துவிடுவார். அதனால்தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது.

அதேபோல் குரு, ராகு இணைவு 8 டிகிரிக்குள் இருந்து, ராகு, குரு தசை, புக்திக் காலங்களில் மட்டுமே யோகத்தையோ அவ யோகத்தையோ மிகைப்படுத்து கிறது. மற்ற காலங்களில் பெரிய தோஷத்தைத் தருவதில்லை. நல்ல வசதியான வாழ்க்கையை குருட்டு அதிர்ஷ்டத்தில் அனுபவிக்கிறார்கள். ஆனால் தங்கள் வாழ்நாளில் மிகவும் நேசித்த உறவு களிடம், "சண்டாளா, சண்டாளி' என்ற அவப்பெயரைப் பெற வைத்துவிடுகிறுது. இந்த கிரகச் சேர்க்கை பலருக்கு கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு செயற்கைக் கருத்தரிப்புமூலம் குழந்தை பிறக்கச் செய்கிறது.

பெற்றோர்களும் குழந்தைகளும் மனம் ஒன்றாமல் தனித் தீவாகவே வாழ்கிறார் கள். ஜோதிடத்தில் ஒரு விதியை வைத்து மட்டும் பலன் சொல்லமுடியாது என்ற அமைப்பில், எந்த லக்னத்திற்கு, என்ன ஆதிபத்திய அமைப்பில் குரு, ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது என்பதை டிகிரிப்படி கணித்து, ஜாதகத்தின் மற்ற நிலைகளையும் அறிந்து, பலன் எடுப்பதே சரியான பலனாக அமையும்.

குரு, ராகு சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தா லும் தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல; உலகத்திற்கும் கேடு தரும் சம்பவங்கள் நடக்கும்.

எனவே இந்த குரு சண்டாள யோகத்தால் பாதிக்கப்படுபவர்கள் வியாழக்கிழமை பகல் 1.30 முதல் 3.00 மணி வரையான ராகு வேளையில் வீட்டில் நல்லெண்ணெய் தீபமேற்றி துர்க்கையை வழிபடவும்.

இந்த கட்டுரையின் கிளைமாக்ஸ் அடுத்த வாரத்தில் எழுதுவேன். குரு நல்லவரா? கெட்டவரா என்ற ஆய்வு அடுத்த வாரம் உங்களுக்குக் கிடைக்கும்.

தொடரும்...

செல்: 98652 20406

bala270924
இதையும் படியுங்கள்
Subscribe