guru

கிரகங்களில் சுப கிரகங்கள், பாவ கிரகங்கள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இவற்றில் முழுமையான சுப கிரகம் என்ற தகுதிகொண்டு முன்னணியில் இருப்பவர் குரு பகவான்தான்.

சப்த ரிஷிகளில் ஒருவராகிய ஆங்கிரஸ மகரிஷியின் புத்திரரான பிரகஸ்பதியே தேவர்களுக்கு குருவானதால், குரு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

Advertisment

ஞானம்,செல்வம், ஒழுக்கம், பொன், பொருள், பெருமை, மங்கலம், புண்ணியம் யாவும் குரு பகவானாலேயே சிறப்படைகிறது.

Advertisment

ஜனன ஜாதகத்தில் பாவ கிரகங்கள்

அவர்கள் அமைந்துள்ள நிலையில் எப்படி யோகங்களையும் அவயோகங்களையும் வழங்குகிறார்களோ, அதேபோல் குருபகவானும் ஜனன ஜாதக நிலையால் இன்பங்களையோ துன்பங்களையோ தரக்கூடியவராகிறார்.

பாவகிரகங்களைவிட, முழுக்க சுபரான குரு பகவானே கேந்திராதிபத்ய தோஷம், பாதகாதிபத்ய தோஷம், திதி சூன்ய தோஷம் என்று பெருமளவில் பாதிப்பினை உண்டாக்குகிறது என்பதால், தான் இருக்கும்ஸ்தான நிலையில் குரு பகவான் சங்கடங்களை உண்டுசெய்கிறார்.

அதிசாரம்

குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார் என்றாலும், அவர் அமரும் ஸ்தானப் பலனால் அந்த ஒரு ஆண்டு முழுவதும் ஒருசில ராசியினர் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களுக்கும் கொஞ்சம் நன்மையை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சஞ்சாரம் செய்யும் ராசிக்கு முன் ராசிக்கு அதிசாரமாக சென்று, செல்லும் வீட்டிற்குரிய ஸ்தானப் பலனையும், அங்கிருந்து அவர் பார்க்கும் வீடுகளுக்குரிய பார்வைப் பலன்களையும் பன்னிரண்டு ராசியினருக்கும் வழங்குகிறார்.

ganesh

வக்ரப் பலன்

பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குருபகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போதுஅந்த ராசியின் முன் ராசிக்குரிய பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

விருச்சிகத்தில் அதிசாரம்

2-9-2017 முதல் துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் 14-2-2018 மாசிமாதம் 2- ஆம் தேதி - மாலை 3.46 மணிக்கு விருச்சிக ராசிக்குஅதிசாரமாகச் சென்று, அங்கிருந்து பன்னிரண்டு ராசியினருக்கும் ஸ்தான, பார்வைப் பலன்களை வழங்கிட இருக்கிறார்.

விருச்சிகத்தில் வக்ரம்

14-2-2018 அன்று விருச்சிக ராசிக்கு அதிசாரமாகச் சென்று தனது பலன்களை வழங்கி வந்த குரு பகவான் 7-3-2018 அன்றுவிருச்சிக ராசியிலேயே வக்ரமாகி, அவருடைய வக்ர நிலைக்குரிய பலன்களை பன்னிரண்டு ராசியினருக்கும் வழங்கிட இருக்கிறார்.

துலாத்தில் வக்ரம்

விருச்சிக ராசிக்கு அதிசாரமாகச் சென்று அந்தஸ்தானத்திற்குரிய பலன்களை வழங்கி வந்த குரு பகவான், அங்கே7-3-2018 அன்று வக்ர நிலையையும் அடைந்து, வக்ர குருவிற்குரிய பலன்களை வழங்கி வந்த நிலையில்,10-4-2018 அன்று வக்ர நிலையிலேயே துலாத்திற்கு பின்னோக்கி வந்து 4-7-2018 வரை துலாத்தில் வக்ரகதியிலேயே இருந்து, வக்ர குருவிற்குரிய பலன்களை பன்னிரண்டு ராசியினருக்கும் வழங்கிட உள்ளார்.

குரு பகவானின் மூன்றுவிதமான பலன்கள்

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவான் பன்னிரண்டு ராசியினருக்கும் மூன்றுவிதமான பலன்களை வழங்கி, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாற்றங்களை, முன்னேற்றங்களை உண்டாக்கிடப் போகிறார்.

எந்த எந்த ராசிக்கு எத்தகைய பலன்களை எப்படி வழங்கிடப் போகிறார் குரு பகவான் என்பதை இங்கே தெளிவாக எழுதியுள்ளேன்.

மேஷம்

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்இரண்டரை வருடத்தில் சனி செய்யாததை இரண்டே கால் நாளில் சந்திரன் செய்து விட்டான் என்பார்கள். ஒரு மனிதனின்தலை எழுத்து ஒரே நாளில்கூட மாறிப் போகும்.

நேற்றுவரை எல்லாவிதமான சங்கடங்களையும் அனுபவித்து வந்தவர்கள் ஒரே நாளில் அவற்றிலிருந்து விடுபட்டுமுன்னேற்றம் காண்பதையும், ஒருசிலர்திடீரென்று உச்சத்திற்குச் செல்வதையும்நம் கண்முன்னால் கண்டுவருகிறோம்.

எல்லாவற்றுக்கும் காரணம் கிரகங்கள்தான்; அவற்றின் சஞ்சாரம்தான். கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவே நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நன்மைகளும் பாதிப்புகளும் உண்டாகி வருகின்றன.

14-2-2018 முதல் அதிசாரம்

குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது சில ராசியினருக்கு சாதகங்களும்,சில ராசியினருக்கு பாதகங்களும் ஏற்படுத்துவார். அவர் பாதகத்தை வழங்கியவர்களுக்குநன்மைகள் செய்வதற்காகவே அதிசாரமாக அடுத்த ராசியில் சஞ்சரிப்பார்.

அந்த ரீதியில் மாசி மாதம் 2 - ஆம் தேதி14-2-2018 அன்று, விருச்சிக ராசியில் அதிசாரமாக சஞ்சாரம் செய்ய இருக்கிறார் குரு பகவான். விருச்சிகம் உங்கள் ராசிக்கு எட்டாம்வீடு. குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியும், விரயாதிபதியும் ஆவார்.

பாக்கியத்தை வழங்கிடக் கூடியவர் எட்டில் மறைவது மேஷ ராசியினருக்கு சிரமமான காலம் என்றே சொல்லவேண்டும்.

பொதுவாகவே குரு பகவான், அவர்அமரும் ஸ்தானத்திற்கு பாதகத்தையும்,அவர் அங்கிருந்து பார்க்கும் 5, 7, 9-ஆம் ஸ்தானங்களுக்கு நன்மைகளையும் ஏற்படுத்துவார் என்பது பொதுவான விதியாகும். அதேபோல் ஒருவரின் ராசிக்கு, 2, 5, 7, 9, 11-ஆம் வீடுகளில் குரு பகவான் சஞ்சரிக்கும்போது அவர் அமர்ந்த இடத்திற்கும் நன்மைகள் புரிவார்.

14-2-2018 முதல் அட்டம குரு

எல்லாம் சரி; அட்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கு அதிசாரமாக வரும் குரு பகவான் என்னதான் செய்வார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

தன காரகனான குரு பகவான் சுப கிரகம் ஆவார். எட்டாம் இடம் என்பது மறைவுஸ்தானம், கெட்ட இடம். அங்கே குரு பகவான் சஞ்சரிக்கும்போது அவர் வழங்கிடக்கூடிய நன்மைகளை அவரால் வழங்கிட முடியாமல் போகும். அதனால் சங்கடங்கள் அதிகரிக்கும். மன உளைச்சல் ஏற்படும்.

இக்காலம் பற்றி ஒரு பழம்பெரும் பாடல், "இன்மையெட்டினில் வாலிலி பட்டமிழந்து போம்படியானதும்...' என்று சொல்கிறது.

எட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் அரசாளும் மன்னவனும் பதவியிழந்து போவானாம். அவனுடைய செல்வாக்கிற்கும் சொல்வாக்கிற்கும் சோதனைகள் உண்டாகும். நினைத்தபடி எதையும் செய்துமுடிக்க முடியாமல் போகுமாம்.

எட்டாம் இடம் என்பது அட்டம ஸ்தானம் மட்டும் அல்ல; ஆயுள் ஸ்தானம்என்றும் கூறலாம். தொழில் நிலை, அதனால்அடையப் போகும் ஏற்ற இறக்கம், தீராத வேதனை, மான அவமானங்கள், தீராத நோய், பகை, செலவினங்கள், கடன் தொல்லை, வம்புவழக்குகள், சண்டை சச்சரவுகள், விபத்துகள், கணவன்- மனைவியிடையே சச்சரவு ஆகியவற்றுக்கும் ஆதிபத்தியம் உள்ள இடம்.

கெடுதலான இந்த இடத்தில் பாவ கிரகங்கள் அமரும்போது, அவர்களால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் குறைந்து, நன்மைகள் நடக்கும், ஆனால், குரு பகவான் சுப கிரகம். அவர் இங்கே அமரும்போது அவர் வழங்கிடக்கூடிய நன்மைகளை வழங்கிட முடியாமல் போகும்.

அதனால், இதுவரை இருந்து வந்த உற்சாகம் உங்களிடம் குறைய ஆரம்பிக்கும். எந்த ஒன்றையும் எடுத்தோம், முடித்தோம் என்று வேகமாக செயல்பட்டு வந்த நீங்கள்,அசதி, சோம்பல் என்று சோர்ந்து போவீர்கள்.

இந்த நேரத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். தேவை ஏற்படுகிறபோது பணத்தைப் புரட்டுவது சங்கடமாகும். வரவேண்டிய பணமும் கைக்கு வராமல் இழுத்தடித்துக்கொண்டே போகும். அதனால்பண விஷயத்தில் கவனக்குறைவோ, அலட்சியமோ, தவறான விஷயங்களுக்காக செலவிடுவதோ வேண்டாம். அதனால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகலாம்.

பொன்னவன் எனப்படும் குரு பகவான் அட்டமத்தில் சஞ்சரிப்பதால், நகைகளை விற்க வேண்டிய சூழல் வரலாம். நகைகளை அடகுவைத்து நிலைமைகளை சரிசெய்ய எண்ணலாம்.

இக்காலத்தில் உங்களுக்கு குரு பலம் இல்லை என்றாலும்கூட, பெண்களுக்கு எட்டாம் இடமே மாங்கல்ய ஸ்தானம், தம்பதிகளுக்கு தாம்பத்ய உறவு ஸ்தானம் என்பதுடன், குரு பகவான் இங்கிருந்தபடியே, சயனஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம் ஆகிய இடங்களின்மீது தனதுபார்வையை செலுத்துவதால், ஜென்மஜாதகமும், தசாபுக்தியும் நன்றாக இருந்தால் இக்காலத்தில் திருமணம் கூடிவரும்.

குரு பகவான் புத்திரக்காரகனும் என்பதால், பிள்ளைகள்மீது அதிக அக்கறைசெலுத்த வேண்டி இருக்கும். அவர்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்திவர வேண்டிஇருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் இக்காலத்தில் எதிர்மறையான பலன்களையே காண வேண்டியிருக்கும். அவர்களால் வருத்தமும் அதிகரிக்கும்.

பொதுவாகவே அட்டம ஸ்தானத்தில் சுப கிரகம் சஞ்சரிப்பது, நன்மைகளுக்கு சங்கடமாகும். ஒவ்வொரு செயலிலிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும். மனதிற்கோ, உடலுக்கோ சங்கடங்கள் தோன்றலாம். எனவே, உணவு, உறக்கம், ஓய்வு போன்றவற்றில் காலம் தாழ்த்தும் நிலை வேண்டாம்.

7-3-2018 முதல் விருச்சிகத்தில் வக்ரம்

14-2-2018 அன்று விருச்சிக ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான், 7-3-2018 அன்று விருச்சிக ராசியிலேயே வக்ரமடைகிறார். இனி அஷ்டம ஸ்தானத்தின்பலன்கள் மாறிப்போகும்.

முதலிலில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்கள் செயல்திறன் கண்டு உங்கள் பகைவர்களும் உங்களைச் சரணடைவார்கள். பிரச்சினை என்று நீங்கள் பயந்து கொண்டு மனதைவருத்திக் கொண்டிருந்த அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் அகன்றுவிடும்.

திருமணம் கூடிவரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கும், வீட்டில்வயதுவந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கவலை தீரும். வீட்டில் திருமண யோகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்து வந்தவர்களின் வேதனை தீரும். வீட்டில் குவா குவா சப்தம் கேட்கும்.

வாழ்க்கைத் துணையால் உங்கள் அந்தஸ்துஉயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இருப்பிடத்தை ஒருசிலர் மாற்றம் செய்வீர்கள். அது உங்களுக்கு வசதியாகவே இருக்கும்.

ஒருசிலருக்கு வெளியூர் வாசம்அமையும். அதனால் வாழ்க்கை சிறக்கும். சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டாகும். ஒருசிலர்வாகனம் வாங்குவீர்கள்.

கல்வி கற்பவர்கள் சிறப்படைவர். ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய பொறுப்பு வரும்.

கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். பொதுவாக இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகும். நினைத்ததெல்லாம் நடக்கும் காலமாகும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முன் ராசியின் பலனை வழங்கி உங்களை மகிழ்வித்து வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான துலாம் ராசியில் வக்ர கதியிலேயே சென்று 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் தனது பலன்களை வழங்க உள்ளார்.

இக்காலத்தில் செய்தொழிலிலில் சங்கடங்களும், பாதிப்புகளும் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திற்கும் அதிகபட்சமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி வரும். உடல்நிலையும், மன நிலையும் ஒரு நேரத்தில் இருப்பதுபோல் மறு நேரத்தில் இல்லாமல் போகும்.

குடும்பத்திலும் பல்வேறு செலவுகள் அதிகரிக்கும். அதனால் மனதில் கவலைகள் மேலோங்கும். வேலையில் சரிவர கவனம்செலுத்த முடியாமல் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரும். வீண் பிரச்சினைகளும், தொல்லைகளும் வீடுதேடி வரும். வரவேண்டிய தொகையும் கைக்கு வராமல் இழுபறியாகவே இருக்கும். பொருளாதாரம் இக்காலத்தில் நெருக்கடியாகும். குடும்பத்திலும், பிள்ளைகள் வழியிலும் நிம்மதியற்ற நிலையையே 4-7-2018 வரை காண்பீர்கள்.

4-7-2018-ல் வக்ர நிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு சங்கடங்களையும் சிரமங்களையும்அனுபவித்து வந்த நீங்கள் 4-7-2018 முதல் சுப குருவின் பலனை 4-10-2018 வரை அடையப் போகிறீர்கள்.

இக்காலம் உங்கள் வாழ்க்கையில் பொற்காலமாக விளங்கப் போகிறது. நினைத்ததை நடத்தி மகிழ்வீர்கள். கேட்டதெல்லாம் கிடைத்து வாழ்வீர்கள்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்று விதமான பலன்களைப் பெற்று இறக்கமும் ஏற்றமும் இறக்கமும் என்று வாழப்போகிறீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்"நல்லாத்தான் போயிட்டிருந்தது. ஆறாம்வீட்டில் குரு வந்ததில் இருந்து அல்லல்பட வேண்டியதா இருக்கு' என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

நாம நம்முடைய வேலையை செய்வது போல் கிரகங்களும் அவர்களுடைய வேலைகளை செய்துக்கிட்டு தான் இருக்காங்க.

அதேநேரத்தில் "மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான்' என்பதுமாதிரி, ஒரு ஜாதகருக்கு தசா புக்தி கெட்டிருந்தாலும், எட்டு கிரகங்கள் பாதிப்பை ஏற்படுத் தினாலும்இரண்டேகால் நாள் ஒரு வீட்டில் சஞ்சரிக்கும்சந்திரனால் அந்த ஜாதகருக்குத் தேவையானது எப்படியாவது கிடைத்துவிடும்.

ஒவ்வொருவரின் பூர்வ புண்ணியத்தின் பலமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

14-2-2018 முதல் ஏழில் குரு

உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக வரும் குரு பகவான் என்ன செய்வார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஏழாம் இடம் குரு பகவானின் சஞ்சாரத்திற்கு ஏற்ற இடமாகும். அங்கிருந்து அவர் உங்கள் ராசியையும் பார்க்கிறார்.

இதனால் உங்கள் வாழ்க்கையில் இனி நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் தகுதிஉயரும். பூமிக்கும், பொன், பொருளுக்கும் அதிபதியான குரு பகவான் ஒரு ஜாதகனுடைய ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும்போது அவன் நல்ல நெறிமுறைகளில் பற்றுதல் கொண்டு நேர்மையாக நடந்து புனிதனாவான். இல்லற வாழ்க்கையில் இன்பம் காண்பான். எல்லையற்ற விருப்பத்துடன் இருப்பான். உயர் தகுதியும், மதிப்பு மிக்க பெண்களாலும் ஆதாயம்அடைவான். வாகன யோகம் அடைவான். யோகமுள்ள மனைவியைக் கொண்டவனாக மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்ற புலிலிப்பாணியாரின் வாக்கே ஏழாமிட குருவின் பெருமையை உணர்த்தும்.

சரி; நேற்றுவரை இருந்த மோசமான நிலை இனி இருக்காது. தொழிலிலில் இருந்த முடக்கமும், வேலையில் இருந்த தடைகளும் அகல ஆரம்பிக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். சுய தொழில் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். நேற்றுவரை பதுங்கிய புலிலியாய் வாழ்ந்த நீங்கள் இனி பாயும் புலியாக மாறப்போகிறீர்கள். உங்கள் பெருமையை ஊரே போற்றும். பணம் பல வழியிலும் வந்துசேரும்.

இக்காலத்தில் குரு பலம் கூடுவதால் திருமணம் நடக்காமல் இருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, வாகனம், சொத்து வசதிகள்அவர்கள் ஜாதகத்தின் யோகத்தைப் பொருத்துஅதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.

ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் உங்களுக்கு ஏற்றமான பலன்களையே வழங்க உள்ள நேரத்தில் அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியையும், மூன்றாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார்என்பதால், அந்த இடங்கள் எல்லாம் சிறப்படையப் போகிறது. ஆம்; குரு பார்க்கும்இடங்களுக்கு எல்லாம் நற்பலனை உங்களுக்குவழங்கப் போகிறது.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று விருச்சிக ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு பகவான் 7-3-2018 முதல் விருச்சிக ராசியிலேயே வக்ரகதியை அடைகிறார்.

பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள். எதிர்மறையான பலன்களை வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான்மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது முன் ராசியின் பலன்களை வழங்குவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஒரு பக்கம் அலைச்சல், மறுபக்கம் பண விரயம் என்று இக்காலம் இருக்கும். உடல்நிலையிலும் ஒரு நேரம் இருந்ததுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் இக்காலத்தில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். வீட்டினை முன்வைத்தும் அலைச்சல், டென்ஷன் என்று ஏற்படும்.

வரவேண்டிய தொகையும் கைக்கு வராமல் நெருக்கடியை அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளும், தொல்லைகளும் எந்த ரூபத்திலாவது வீடுதேடி வரும். எனவே 7-3-2018 முதல் 10-4-2018 வரை நிதானத்துடன் செயல்பட்டு வாழ்க்கையை நகர்த்தவேண்டி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட்டு வருவது நன்மையாகும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்குமுன் ராசியின் பலனை வழங்கி உங்களுக்கு பல்வேறு சங்கடங்களை வழங்கி வந்த குரு பகவான் 10-4-18 முதல் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான துலாம் ராசிக்கு வக்ரகதியிலேயே சென்று 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் தனது பலன்களை வழங்கிட உள்ளார்.

ஆறாம் வீட்டில் வக்ர நிலையில் உள்ள குரு பகவான் அதன் முன் ராசியான ஏழாம் வீட்டிற்குரிய பலன்களை வழங்கிடுவார் என்பதால், இக்காலம் உங்களுக்கு யோக காலமாக மாறப் போகிறது.

இக்காலத்தில் உங்கள் சிந்தனா சக்திஅதிகரிக்கும். எந்தவழி நல்ல வழி என்றுதெரிந்துகொண்டு அந்த வழியில் செல்வீர்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் கவலை தீர்ந்து வீட்டில் மழலை சப்தம் கேட்கும். சொத்துகளில் இருந்த வில்லங்கம், வழக்கு முடிந்து சொத்துகள் உங்கள் கைக்கு வரும். நேற்றுவரை உங்களை சர்வசாதாரணமாக எண்ணியவர்கள் உங்கள் திறமையையும், பெருமையையும் இக்காலத்தில் உணர்வார்கள். உங்கள் வாழ்க்கையில் தடைகளாக இருந்ததை எல்லாம் தாண்டி வெற்றிநடை போடுவீர்கள். திருமண வயது வந்தவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் கூடி வரும்.

உங்களிடம் புதிய துணிச்சல் பிறக்கும்.

எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். தொழில் விருத்தியாகி லாபம் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். இக்காலம் யோகத்தையும், போகத்தையும் காணக்கூடிய காலமாக இருக்கும்.

4-7-2018- ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறுநன்மைகளையும் லாபத்தையும் யோகத்தையும் அடைந்து வந்த நீங்கள் 4-7-2018 முதல் 4-10-2018 வரை ஆறாம் வீட்டிற்குரிய ரோக- சத்ரு ஸ்தானப் பலன்களைஅடையப் போகிறீர்கள்.

இக்காலத்தில் சங்கடங்களும் எதிர்ப்புகளும் அதிகரிக்கும். மாமன் வகையில் பிரச்சினை உண்டாகும். அலைச்சல் அதிகரித்து செலவுகள் கூடும். உடல் நிலையும் ஏற்றம் இறக்கமாக இருக்கும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்றுவிதமான பலன்களைப் பெற்று ஏற்றமும் இறக்கமும் ஏற்றமும் என்று வாழப்போகிறீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்வாழ்க்கை என்பது ஒரு வட்டம். இங்கே தோற்பவன் ஜெயிப்பான்- ஜெயிப்பவன் தோற்பான். எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பலன்களை வழங்கிக் கொண்டிருப்பதை வைத்து இப்படிச் சொல்லலாம்.

ஒரு நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு ஒருவிதமான பலனும், அடுத்தவருக்கு வேறுவிதமான பலனும் கிடைப்பதற்குஅவர்களின் பூர்வபுண்ணியமே காரணமாக இருக்கிறது.

முற்பிறவியில் பட்ட கடன்களை அடைப்பதற்குத்தான் ஒவ்வொருவருக்கும் இப்பிறவி என்றே சொல்லவேண்டும்.

அதன் அடிப்படையில்தான் நமக்கு பலன்களும் உண்டாகி வருகிறது.

14-2-2018 முதல் ஆறில் குரு

உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக வரும் குரு பகவான் என்ன செய்வார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதற்கு ஒரு பழம் பாடல் விடையளிக்கிறது. "சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலிலே தலைபூண்டதும்.'

குரு பகவான் ஆறில் அமரும் காலத்தில், ஜாதகருக்கு கை கால்களில் பந்தனம் உண்டாகுமாம்.

ஆறாம் இடம் என்பது ரோகஸ்தானம்ஆகும். இதனை சத்ருஸ்தானம் என்றும் சொல்லலாம். வியாதிகளையும் அதனால்உண்டாகும் பாதிப்புகளையும், விரோதிகளையும் அவர்களால் உண்டாகும் தொல்லைகளையும் இந்த இடத்தின்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பிரவேசிக்கும் குருபகவான், அங்கே சஷ்டமம் என்ற நிலையை அடைகிறார். அதனால்உறவும் பகையாகும். வீணான விவாதங்களும் விவகாரங்களும் நிகழும். வெளியிடங்களிலும் விரோதம் உண்டாகும். விரோதிகள் உண்டாவார்கள். வேண்டாத பயம் வரும். எந்தவொரு காரியமும் சரிவரக் கைகூடாமல் சங்கடம் கொடுக்கும் என்பது நமது முன்னோர்களின் வாக்கு.

ஜோதிட விதிப்படி எல்லா ராசிக்காரர்களுக்குமே- விருச்சிகத்தைத் தவிர ஆறாம் இடம் கெட்ட இடம்தான். பகை, பிணி, கடன்போன்ற பாதிப்பான பலன்களைத் தருகிற இடம் ஆறாம் இடம்தான். சுப கிரகமும் தனகாரகனுமான குரு பகவான் அங்கே சஞ்சாரம் செய்யும்போது அவரின் நல்ல குணங்கள் முடக்கப்படும். அவரால் உண்டாகக்கூடிய நல்ல பலன்கள் தடுக்கப்படும்.

ரோகஸ்தானமான ஆறாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது, உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். தொற்று நோய்களாலும் பாரம்பரிய உபாதைகளாலும் முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய்க் கோளாறு, சிறு நீரக பாதிப்பு போன்றவை தலைதூக்கும். பணவரவிலும் தடையுண்டாகும். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகவேண்டும்.

செய்தொழிலிலில் முதலீடுகள், அதிகரிக்குமே ஒழிய வருமானம் போதிய அளவில் இருக்காது. கடன் தொல்லையால் மனம்கலங்க நேரும். வரவைவிட செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும். மனம் எதையோ இழந்ததுபோல், எதிலும் நாட்டம் இல்லாமல்போகும். எந்த இடத்திற்குச் சென்றாலும்,அங்கே போட்டியாளர்களும், விரோதிகளும் உண்டாவார்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு அடிக்கடி தோன்றும். உறவினர்களும் நண்பர்களும்கூட பகையாவார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கைஅமையும் என்றாலும் அவர்களும் சுயநலக்காரர்களாகவே இருப்பார்கள். குறுக்குவழியில் செல்ல நினைப்பு வரும். அதனால்தொல்லைகளும் அவமானங்களும் உண்டாகும். ஆறாம் இடத்தில் அமரும் குரு பகவான் மேற்கண்ட பலன்களை வழங்கக்கூடியவராகவே இருக்கிறார்.

உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியும், லாபாதிபதியும் குரு பகவானே. அவர் ஆறில் அமரும் காலத்தில் இவை இரண்டிலும் திருப்தியான நிலையை உங்களால் காணமுடியாமல் போகும். சங்கடங்களும், நிம்மதியற்ற நிலையும், வருவாயில் தடையும் உண்டாகும்.

ஆறாம் இடத்தில் அமரும் குரு பகவானால்நன்மைகளை வழங்கமுடியாது என்றாலும், அங்கிருந்து அவர் பார்க்கும் இடங்களுக்கு நன்மைகளை வழங்கக் கூடியவராகஇருக்கிறார்.

குரு பார்க்க கோடி புண்ணியம் என்றவார்த்தையை இப்போது நீங்கள் உணரப்போகிறீர்கள். அவர் பார்க்கும் இடங்களால் நன்மையடைந்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள்.

ஆறாம் இடத்தில் அமரும் குரு பகவான் அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டையும், பன்னிரண்டாம் வீட்டையும், இரண்டாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு ஆறாம்வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குருபகவான் 7-3-2018 அன்று விருச்சிக ராசியிலேயே வக்ரகதியை அடைகிறார்.

பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

சரி; நேற்றுவரை இருந்த மோசமான நிலை இனி இருக்காது. தொழிலில் இருந்த முடக்கமும், வேலையில் இருந்த தடைகளும் அகல ஆரம்பிக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிட்டும். சுய தொழில் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். நேற்றுவரை பதுங்கிய புலிலியாய் வாழ்ந்த நீங்கள் இனி பாயும் புலிலியாக மாறப்போகிறீர்கள். உங்கள் பெருமையை ஊரே போற்றும். பணம் பலவழியிலும் வந்துசேரும்.

இக்காலத்தில் குரு பலம் கூடுவதால் திருமணம் நடக்காமல் இருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வீடு, வாகனம், சொத்து வசதிகள் அவரவர் ஜாதகத்தின் யோகத்தைப் பொருத்து அதிகரிக்கும்.

எனவே, 7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு யோகமான காலம் என்றே சொல்ல வேண்டும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி, அதற்கு முன் ராசியின் பலன்களை வழங்கி உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான துலாம் ராசிக்கு வக்ரகதியிலேயே சென்று 4-7-2018 வரைஅங்கு அதேநிலையில் பலன்களை வழங்கிட உள்ளார்.

இக்காலத்தில் உறவும் பகையாகும். வீணான விவாதங்களும், விரோதமும் உண்டாகும். புதிய எதிரிகள் தோன்றுவார்கள். வேண்டாத பயம் வரும். எந்தவொரு காரிமும் சரிவர கைகூடாமல் சங்கடங்களை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்பு தலைகாட்டும். தொற்று நோய்களாலும் பாரம்பரிய உபாதைகளாலும், முழங்கால், வயிறு, கருப்பை சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு தோன்றக்கூடும். பண

வரவிலும் தடையுண்டாகும் என்பதால் அனைவரிடமும் நட்புடன் பழகி எதிர்ப்பு உண்டாகாதபடி கவனத்துடன் வாழவேண்டும்.

பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு வாழ்வது இக்காலத்தில் நன்மையாகும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு சங்கடங்களும், மன உளைச்சலும் ஏற்பட்டு சிரமத்தை எதிர்கொண்டு வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் 4-10-2018 வரை ஐந்தாம் வீட்டிற்குரிய யோக பலன்களை அடையப் போகிறீர்கள்.

இக்காலத்தில், நன்மைகளுக்குமேல் நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடு வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். இக்காலம் எல்லாவற்றிலும் லாபங்களையும் நன்மைகளையும் வழங்கிடக்கூடிய காலமாகவே இருக்கும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்று விதமான பலன்களைப் பெற்று இறக்கம்- ஏற்றம்- இறக்கம்என்று வாழப்போகிறீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்மாதத்தில் பாதி நாட்கள் தேய்பிறை என்றாலும் அதன்பின் வளர்பிறையாகும். அதனால் இருளும் நிரந்தரம் அல்ல; ஒளியும் நிரந்தரம் அல்ல என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலன் எப்படி ஏற்படுகிறது? இது பூர்வபுண்ணிய பலன் மட்டும் அல்ல. தசா புக்தியின் பலனாகவும் இருக்கலாம்.

காரணம், ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் இருப்பு நாழிகையை வைத்துதான் தசா புக்தி கணக்கிடப்படுகிறது.

தசா புக்திக்கேற்ப பலன்களும் மாறுபடும். முற்பிறவியில் நாம் அடைந்திட முடியாதவற்றை அடைந்திடும் வகையிலும் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

ஜாதகம் என்று பார்க்கும்போது எல்லாவற்றையும் பார்க்கவேண்டும்.

14-2-2018 முதல் ஐந்தில் குரு

உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக வரும் குரு பகவான் என்ன செய்வார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தை வைத்துதான் முன்ஜென்மத்தில் செய்த நற்பலன்களால் விளையக்கூடிய நன்மைகள், பலாபலன்கள், புத்திரர்கள் பிறத்தல்அவர்களின் தன்மை, புத்திக்கூர்மை, சிந்தனை, ஆற்றல், தாய்மாமன், சக்தி, வித்தை, இறைவழிபாடு என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

ஐந்தாம் இடத்திற்கு வரும் குரு பகவான் இத்தனை நாளும் ஏதோ ஒரு சோகத்தில் இருந்த உங்கள் மனநிலையை மாற்றி தெளிவை உண்டாக்குவார். தேகத்தில் சுறுசுறுப்பை வழங்குவார். தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றையும் உங்களுக்கு சாதகமாக்கி, நீங்கள் வெற்றி அடையக்கூடிய நிலையை உருவாக்குவார். உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்களை அகற்றி, அதில் முன்னேற்றத்தையும், கௌரவத்தையும், வருமான உயர்வையும் உண்டாக்குவார். மேலதிகாரிகளின் உதவி இக்காலத்தில் பரிபூரணமாகக் கிட்டும். தொழில் புரிவோருக்கு இக்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலிலில் புதிய முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து அதனால் முன்னேற்றம்காண்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்குத் திருமணம் கூடிவரும். வசதியும் அந்தஸ்தும் அதிகரிக்கும். இருப்பிடம் உங்கள் ரசனைக்கேற்றவிதத்தில் மாறும். இருப்பிடத்தில் நவீன கருவிகளின் சேர்க்கை உண்டாகும். வரும் வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும். புனிதஸ்தலங்களுக்குச் சென்றுவரும் பாக்கியம் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். சிலர் புதிய வீட்டை வாங்குவீர்கள். அதற்கான உதவிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

ஐந்தில் அமர்ந்து, அந்த இடத்திற்குரிய பலன்களை நற்பலன்களாக வழங்க இருக்கும் குரு பகவான், அவர் பார்க்கும் இடங்களையும் செழிப்படைய வைத்து உங்களை முன்னேற்ற இருக்கிறார்.

ஐந்தாம் இடத்தில் அமரும் குரு பகவான் அங்கிருந்து உங்கள் ராசியையும், ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளையும் பார்வையிட இருக்கிறார்.

7-3-2018 முதல் முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்குஐந்தாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த நிலையில் 7-3-2018 அன்றுவிருச்சிக ராசியிலேயே வக்ரகதியைஅடைகிறார்.

பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம் கெட்டுச் சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது அந்தராசியின் முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அதன் காரணமாக இக்காலத்தில் சங்கடங்களும், முன்பிருந்த நிலையில் மாற்றமும் ஏற்படும்.

உறவும் பகையாகும். வீணான விவாதங்களும் விவகாரங்களும் நிகழும். வெளியிடங்களிலும் விரோதம் உண்டாகும். எதிரிகள் ஏற்படுவார்கள், வேண்டாத பயம் வரும். எந்தவொருக் காரியமும் சரிவரக் கைகூடாமல் சங்கடம் கொடுக்கும் என்பது நமது முன்னோர்களின் வாக்கு.

உடல்நிலை பாதிப்படையும். தொற்று நோய்களாலும், பாரம்பரிய உபாதைகளாலும், முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய்க் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை தலை தூக்கும். பண வரவிலும் தடையுண்டாகும். அனைவரிடமும் நட்புடன் பழகி, எதிர்ப்பு உண்டாகாதபடி கவனத்துடன் வாழவேண்டும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு, அகங்காரம்,அலட்சியம் இல்லாமல் வாழ வேண்டும்.

7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு சங்கடமான காலம் என்றே சொல்ல வேண்டும். இக்காலத்தில் அமைதியாக செயல்படுவது நன்மையாகும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முன் ராசியின் பலன்களை வழங்கி, உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி சஞ்சலத்தை உண்டாக்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான துலாம் ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்குஅதேநிலையில் பலன்களை வழங்கிட உள்ளார்.

இக்காலத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு சாதகத்தை வழங்கும்.

பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். குழந்தை இல்லாமல் ஏங்கி வந்தவர்களுக்கு அதற்குரிய பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கி அவை உங்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் புத்தியில் தெளிவு ஏற்பட்டு, செயலில்சக்தி பிறக்கும். எதிர்பாலிலினரின் மீது ஈர்ப்பு உண்டாகி காதல் என்ற பாதையில்செல்லும்.

தெய்வ தரிசனத்திற்காக ஆலயங்களை நோக்கிப் பயணம் செய்வீர்கள். எல்லா விதத்திலும் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நன்மைகளே உண்டாகும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு நன்மைகளையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தித்து வந்தஉங்களுக்கு 4-7-2018 முதல் 4-10-2018 வரை நான்காம் வீட்டிற்குரிய பலன்களே உண்டாகப் போகிறது.

இக்காலத்தில் தேவையில்லாத எண்ணங்கள் ஏற்படும். நிறைவேறாதசெயலில் முயற்சிகளை மேற்கொண்டு மனதில் சஞ்சலமும், அமைதியற்றநிலையும் உண்டாகும். உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதால் சந்தோஷமான நிலை மறைந்து சங்கடங்கள் தோன்றும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்று விதமான பலன்களைப் பெற்று ஏற்றம்- இறக்கம்- ஏற்றம் என்று வாழப்போகிறீர்கள்.

தொடர்ச்சி அடுத்த இதழில்

செல்: 94443 93717