முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
அன்புள்ள நேயர்களே!
குரு திருக்கணிதப்படி பிலவ வருடம், பங்குனி மாதம், 30-ஆம் தேதி, 13-4-2022 புதன்கிழமை மாலை 3.49 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீனராசிக்குப் பெயர்ச்சியாகி, 22-4-2023 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். (வாக்கியப்படி 13-4-2022 புதன்கிழமை பின்னிரவு 4.09 மணிமுதல் 22-4-2023 வரை). குருப் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் உண்டாகக்கூடிய பலன்களை இங்கு பார்ப்போம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதி யான குரு விரய ஸ்தானமான 12-ல் ஆட்சிபெற்று சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலையினை எதிர்கொள்ள நேரிடும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதன்மூலம் வரும் நாட்களில் ஏற்படும் நெருக்கடிகளை எளிதில் எதிர் கொள்ளமுடியும். குரு 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் கடன்கள் ஏற்பட்டாலும், அதனை நெருங் கியவர்களின் உதவியால் எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால் தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்கமுடியும். பணி நிமித்தமாக தூரப்பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால், 2023 தொடக்கத்தில் நற்பலன்களை அடையமுடியும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால், உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி யிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடு கள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம். 10-ல் சஞ்சரிக் கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறைந்து மேற்கூறிய காலங்களில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு லாப ஸ்தானமான 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதுநாள்வரை 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள், இனி கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி, பணவரவுகள் மிகச்சிறப் பாக இருக்கும். கடந்தகால கடன்கள் படிப்படி யாகக் குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். குரு 3, 5, 7 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கிய வர்களிடம் இருந்த கடந்தகால கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் களை அடையமுடியும். கூட்டாளிகள்மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நவீன யுக்திகளைப் பயன்படுத்தி தொழிலை விரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும். அரசுவழியில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த அரசு உத்தரவு களை வரும் நாட்களில் பெறுவீர்கள். கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் பெறுவது மட்டுமின்றி, விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும், ஒருசிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி களும் வரும் நாட்களில் வெற்றிபெறும். மேலும் நற்பலன்களைப் பெற சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, சரபேஸ் வரரை வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான குரு 10-ல் ஆட்சிபெற்று சஞ்சரிக
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
அன்புள்ள நேயர்களே!
குரு திருக்கணிதப்படி பிலவ வருடம், பங்குனி மாதம், 30-ஆம் தேதி, 13-4-2022 புதன்கிழமை மாலை 3.49 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீனராசிக்குப் பெயர்ச்சியாகி, 22-4-2023 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். (வாக்கியப்படி 13-4-2022 புதன்கிழமை பின்னிரவு 4.09 மணிமுதல் 22-4-2023 வரை). குருப் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் உண்டாகக்கூடிய பலன்களை இங்கு பார்ப்போம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதி யான குரு விரய ஸ்தானமான 12-ல் ஆட்சிபெற்று சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலையினை எதிர்கொள்ள நேரிடும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதன்மூலம் வரும் நாட்களில் ஏற்படும் நெருக்கடிகளை எளிதில் எதிர் கொள்ளமுடியும். குரு 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் கடன்கள் ஏற்பட்டாலும், அதனை நெருங் கியவர்களின் உதவியால் எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால் தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்கமுடியும். பணி நிமித்தமாக தூரப்பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால், 2023 தொடக்கத்தில் நற்பலன்களை அடையமுடியும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால், உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி யிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடு கள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம். 10-ல் சஞ்சரிக் கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறைந்து மேற்கூறிய காலங்களில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு லாப ஸ்தானமான 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதுநாள்வரை 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள், இனி கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி, பணவரவுகள் மிகச்சிறப் பாக இருக்கும். கடந்தகால கடன்கள் படிப்படி யாகக் குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். குரு 3, 5, 7 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கிய வர்களிடம் இருந்த கடந்தகால கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் களை அடையமுடியும். கூட்டாளிகள்மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நவீன யுக்திகளைப் பயன்படுத்தி தொழிலை விரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும். அரசுவழியில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த அரசு உத்தரவு களை வரும் நாட்களில் பெறுவீர்கள். கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் பெறுவது மட்டுமின்றி, விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும், ஒருசிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி களும் வரும் நாட்களில் வெற்றிபெறும். மேலும் நற்பலன்களைப் பெற சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, சரபேஸ் வரரை வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான குரு 10-ல் ஆட்சிபெற்று சஞ்சரிக்க இருப்பதால் தொழில், உத்தியோகரீதியாக சற்று கவனத் தோடு செயல்பட்டால்தான் ஆதாயத்தை அடையமுடியும். பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. இந்த நேரத்தில் ராகு 11-ல் சஞ்சரிப்பதால், எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடை யக்கூடிய வாய்ப்புண்டாகும். ஜென்ம ராசிக்கு 10-ல் குரு சஞ்சரித்தால் பதவி பாழ் என்ற பழமொழிக்கேற்ப, சில நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், சற்று கவனத்தோடு செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். குரு 2, 4, 6 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் கணவன்- மனைவி யிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கக் கூடிய அமைப்பு, பணவரவில் நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பலம் உண்டாகும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் எதிர்கொள்வீர் கள். தொழில்ரீதியாக சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் பொறுமையுடன் செயல் பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தற்போது வேலைப்பளுவை எதிர்கொண்டாலும், எதிர்காலத்தில் அதற்கான ஆதாயங்களை அடையமுடியும். மேலதிகாரிகளை அனு சரித்துச்செல்வது, உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. தற்போது சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 9-ல் சஞ்சரிப்பதால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக 2023 தொடக்கத்தில் சில வளர்ச்சிகளை அடையும் வாய்ப்புண்டு. சனிக்கு எள் தீபமும், தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமும் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி எல்லாவகையிலும் ஏற்றங்களை அடைவீர் கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு கள் சிறப்பாக இருந்து கடன்கள் எல்லாம் குறையக்கூடிய வாய்ப்புண்டு. குரு 1, 3, 5 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய யோகம், எடுக்கும் முயற்சியில் வெற்றி, பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துவழியில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக முடியக்கூடிய யோகமுண்டு. தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை அடையமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் குறித்த நேரத்தில் கிடைப்பதால் மகிழ்ச்சியடைவீர்கள். கூட்டாளிகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், வேலை யாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து நல்ல நிலையை அடையமுடியும். எதிர்பார்த்த பதவி உயர்வினை அடையும் யோகமுண்டு. சிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரை யொருவர் அனுசரித்துச்சென்றால் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆரோக்கியரீதியாக சற்று அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணி களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. சர்ப்ப கிரகங்கள் கேந்திரங்களில் சஞ்சரிப்பதால், அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடை யூறுகள் ஏற்படலாம். நிதானமாக செயல் பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதன்மூலம் சுபிட்சத்தை அடைய முடியும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குரு 8-ல் சஞ்சரிக்கவிருப்ப தால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டாலும், உங்கள் ராசிக்கு 3-ல் கேது, சனி 6-ல் 17-1-2023 வரை சஞ்சரிப்பதால், எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியும். குரு 2, 4, 12 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமை யால் சமுதாயத்தில் நல்ல நிலைமையை அடையும் யோகம் உண்டாகும். அசையா சொத்து வகையில் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல நிலையை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகையைப் பயன்படுத்தும் பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலையாட்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும், உழைப்பிற்கான பலனை அடைவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். மேலதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் நிதானமாக இருப்பது நல்லது. சிலருக்கு வேலையில் இடமாற்றங்கள் கிடைத்து வெளியிடங் களுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புண்டா கும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவதன்மூலம் சுபிட்சம் ஏற்படும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் எளிதில் பூர்த்தியாகும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். கடன் பிரச்சினைகள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பார்வை 1, 3, 11 ஆகிய ஸ்தானங்களில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாடப் பணிகளை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர் கள். நவீன பொருட்களை வாங்கும் யோக முண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான நிலையினை அடைவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி ஏற்றம் பெறுவீர் கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளி காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உயர்வான இடத்திலிருந்து அழைப்பு வரும். ராகு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக மனைவிவழி உறவினர் கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால், ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் மேலும் வளமான பலன்களைப் பெறும் யோகமுண்டு. பொருளா தாரரீதியாக சிறப்பான நிலையினை அடைந்து சமுதாயத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியும். நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த வம்பு வழக்குகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். தினமும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது, சரபேஸ்வரரை வழிபடுவது நன்மையளிக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிக்க விருப்பதால் நீங்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால், எதிலும் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது சிறப்பு. கணவன்- மனைவி யிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு பார்வை 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனு பவிக்க இடையூறுகள், ஓய்வுநேரம் குறையும் நிலை உண்டாகும். வீண் செலவுகளால் சிலருக்கு கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு களுண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள்மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக உங்கள் சிக்கலைக் குறைத்துக்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உழைப்புக்கான பலன் கிடைப்பதில் தற்போது இடையூறுகள் ஏற்பட்டாலும் விரைவில் நல்லது நடக்கும். சனி தற்போது 4-ல் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். 17-1-2023 முதல் சனி பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பது சிறப்பென்பதால், 2023 தொடக்கம் முதல் ஒருசில நல்ல வளர்ச்சியினை நீங்கள் எட்டமுடியும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது, பைரவரையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது உத்தமம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். சர்ப்ப கிரகங்களான ராகு 6-ல், கேது 12-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் மனநிம்மதி உண்டாகும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம், பிள்ளைகள்வழியில் சாதகமான பலன்கள், திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம் வரும் நாட்களில் உண்டு. உடல்நிலை சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து உங்கள் சிக்கல்கள் குறையும். ராசிக்கு சனி 3-ஆம் வீட்டில் தற்போது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சொந்த வீடு, வாகனங்கள் வாங்கும் எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள்கூட விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள். வேலையாட்களால் அனுகூலம் இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட் களில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு இதுவரை இருந்த அலைச்சல், வேலைப்பளு குறைந்து, பணியில் நிம்மதி யுடன் செயல்பட முடியும். உங்கள் திறமை களை வெளிக்காட்ட சிறப்பான சந்தர்ப்பங் கள் அமையும். வேலை தேடிக்கொண்டிருப்ப வர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும் யோகமுண்டு. கடந்த காலங்களில் உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி மனநிம்மதி ஏற்படும். ஆன்மிக- தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கிருந்த சோதனைகள் படிப்படியாகக் குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். கேது வரும் நாட்களில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சியில் இருந்த இடையூறுகள் விலகி இனி நற்பலன்கள் கிடைக்கும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய ஸ்தானங்களில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை, கடந்தகால வீண் செலவுகள் குறையும் அமைப்பு வரும் நாட்களில் உண்டு. பொருளா தாரநிலை சற்று சாதகமாக இருக்கும் என்றா லும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஏழரைச்சனியால் தற்போதுள்ள பாதிப்புகள் குறைந்து படிப்படியான முன்னேற்றம் அடைவீர் கள். பேச்சில் பொறுமையோடு இருந்தால் ஏற்றங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட் டால் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் தனித் திறமையால் ஒருசில அனுகூலங் களை அடைவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். வேலையில் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். தற்போது உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வதற்காக சில முயற்சிகளை மேற் கொண்டால் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான நிலையினை அடையமுடியும். பிறர் விஷயங் களில் தலையிடாமல் சற்று பொறுமை யோடு இருந்தால் 2023 தொடக்கம் முதல் உங்களுக்குள்ள அனைத்துவிதமான சிக்கல் களும் விலகி வாழ்வில் நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை யும், சரபேஸ்வரர் வழிபாட்டையும் மேற் கொள்ளவும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படவேண்டிய காலமாகும். எடுக்கும் முயற்சிகளுக்குத் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். எந்த செயலிலும் எதிர்நீச்சல் போடவேண்டியதிருக்கும். ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சரிப்பதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் பணவிஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீடு எடுப்பது உத்தமம். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உங்களின் கையிருப்புகள், நீண்டநாள் சேமிப்புகள் குறையும் நிலை, ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக அடையவேண்டிய லாபங்களை அடைய இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசியமென்றால் உங்கள் பெயரில் செய்யாமல், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. எதிலும் கவனமாக இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் பணியையும் இணைத்துச் செய்யவேண்டிய நிலை இருக்கும். வேலையில் ஈடுபாடு குறையும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதிகாரியிடம் பேசும்பொழுது நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. விநாயகர் மற்றும் ஆஞ்சனேயர் வழிபாட்டை மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் தற்போது உங்களுக்குள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இதுவரை இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். பொருளாதாரரீதியாக தாராள நிலை ஏற்பட்டு அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் உங்களுக்கிருந்த மனக்கவலைகள் விலகி வரும் நாட்களில் மகிழ்ச்சி நிலவும். ஆடை, ஆபரணங்கள், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும், குரு, ராகு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவுக்கு நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். தொழிலை விருத்திசெய்ய நினைத்த வர்களுக்கு வரும் நாட்களில் நல்லது நடக்கும். கூட்டாளிகள், வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்கத்திடம் நீங்கள் தொழில் வளர்ச்சிக்காக கொடுத்த விண்ணப்பங்களுக்கான உத்தரவுகள் தற்போது கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி ஊதிய உயர்வு, எதிர்பார்த்த பதவி உயர்வினை அடையமுடியும். வேலைப் பளு குறைந்து பணியில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உங்கள் திறமைக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, எள் தீபமேற்று வது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களை செய்வது நல்லது. முடிந்தால் திருப்பதி வேங்கடாசலபதியை தரிசிக்கவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் கடந்தகால வீண் செலவுகள் குறைந்து வளமான பலன் களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் முன்பிருந்த நெருக்கடிகள் சற்று குறைந்து தற்போது சாதகமாக இருக்கும் என்றாலும், சிக்கனமாக செயல்பட்டால் எதையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களைப் பார்ப்பதால் நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்லது நடக்கும் வாய்ப்பு, திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம் வரும் நாட்களில் உண்டு. பூர்வீக சொத்துவகையில் உங்களுக்கிருந்த வீண் கருத்துவேறுபாடுகள் விலகி எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். பங்காளிகள்வகையில் அனுகூலங்கள் ஏற்படும். ராசிக்கு ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பேச்சைக் குறைப்பதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ராசிக்கு சனி 11-ல் 17-1-2023 வரை சஞ்சரிப்பதால், எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரரீதியாக சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் செலுத்தினால் நல்ல உயர்வினை அடையமுடியும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச்சென்றால் அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர்மூலமாக நல்ல செய்தியினை அடையும் வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனைசெய்வது, துர்க்கை வழிபாட்டை யும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள் வது மிகவும் நல்லது.