Advertisment

சிம்ம லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

/idhalgal/balajothidam/guru-12-sins-simha-lakshman

சிம்ம லக்னத்தில் குரு பகவான் சூரியனின் ராசியில் இருந்தால்- 8-ஆம் பாவத்திற்கு அதிபதியான குரு பகவான் லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். நல்ல பணவசதியுடன் சந்தோஷமாக வாழ்வார். மனதில் நினைப் பதை நிறைவேற்றுவார். தைரியசாலியாக இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். பிள்ளைகளால் சில நேரங்களில் மனக்கஷ்டம் உண்டாகும். ஜாதகர் புகழுடன் இருப்பார். சில வேளைகளில் தொழில் அல்லது வர்த்தகத்தை மாற்றிச் செய்வார்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்பு களுடன் கருத்து வேறுபாடிருக்கும். ஜாதகர் துணிச்சல் குணமுள்ளவராக இருப்பார்.

சிம்ம லக்னத்தில் குரு பகவான் சூரியனின் ராசியில் இருந்தால்- 8-ஆம் பாவத்திற்கு அதிபதியான குரு பகவான் லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். நல்ல பணவசதியுடன் சந்தோஷமாக வாழ்வார். மனதில் நினைப் பதை நிறைவேற்றுவார். தைரியசாலியாக இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். பிள்ளைகளால் சில நேரங்களில் மனக்கஷ்டம் உண்டாகும். ஜாதகர் புகழுடன் இருப்பார். சில வேளைகளில் தொழில் அல்லது வர்த்தகத்தை மாற்றிச் செய்வார்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்பு களுடன் கருத்து வேறுபாடிருக்கும். ஜாதகர் துணிச்சல் குணமுள்ளவராக இருப்பார். குழந்தை பிறப்பதில் தடை யிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. எந்தத் துறையில் இருந்தாலும், அதில் தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறுவார்.

guru

Advertisment

4-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குரு பகவான் இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் சிறிய பாதிப்பிருக்கும். ஜாதகர் பூமி, வீடு வாங்குவதில் சிறிய தடங்கல்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இருக்கும். படிப்பு நன்றாக வரும். ஜாதகர் புகழுடன் இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில், சுயவீட்டில் தனுசு ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு நல்ல படிப்பிருக்கும். அதனால் புகழுடன் விளங்குவார். ஆனால் குரு அஷ்டமாதிபதியாக இருப்பதால் சில சிரமங்கள் வரும். ஜாதகருக்கு மனபலம் இருக்கும். சுயமரியாதை உள்ளவராக இருப்பார். தன் செயல்களில் வெற்றிபெறுவார்.

6-ஆம் பாவத்தில் குரு பகவான் சனியின் மகர ராசியில் நீசமடைகிறார். அதனால் ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். அதன் காரணமாக பிரச்சினைகள் வரும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். பல தடங்கல்களைக் கடந்து தன் செயல் களில் ஜாதகர் வெற்றி பெறுவார். சிலருக்கு காலில் காயமோ பாதிப்போ இருக்கும்.

7-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குரு பகவான் இருந்தால் சிலருக்கு திருமண விஷயத்தில் தடை ஏற்படும். ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அவருக்கு சுமாரான கல்வி இருக்கும். ஜாதகர் வர்த்த கத்தில் பல கஷ்டங்களைக் கடந்து வெற்றி பெறுவார். நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

8-ஆம் பாவத்தில் குரு பகவான் சுய வீட்டில்- மீன ராசியில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தன் செயல்களைத் துணிச்சலுடன் செய்வார். பிள்ளைகளால் தொல்லைகள் இருக்கும். பூமி, வீடு வாங்கும் விஷயத்தில் பிரச்சினைகளைக் கடந்துதான் வெற்றிகிடைக்கும்.

9-ஆம் பாவத்தில் குரு பகவான் செவ்வாயின் மேஷ ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக- அறிவாளியாக இருப்பார். தர்மச் செயல்களைச் செய்வார். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

10-ஆம் பாவத்தில், கேந்திர ஸ்தானத் தில் குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால், ஜாத கருக்கு தந்தையுடன் சுமாரான உறவிருக்கும். அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். ஜாதகர் தன் சுய முயற்சியால் வெற்றிபெறுவார். அறிவாளி யாக இருப்பார். குழந்தை பாக்கியம் இருக்கும்.

11-ஆம் பாவத்தில் குரு பகவான் புதனின் மிதுன ராசியில் இருந்தால் நல்ல வருமானம் இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நல்ல படிப்பிருக்கும். ஆனால் 8-ஆம் பாவத்திற்கு அதிபதியாக குரு இருப்பதால் சில கஷ்டங்கள் உண்டாகும். ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடிருக்கும். அன்றாடச் செயல்களைச் செய்வதில் பகைவர்கள் இருப்பார்கள்.

அதனால் சில பிரச்சினைகள் இருக்கும்.

12-ஆம் பாவத்தில், சந்திரனின் கடக ராசியில் குரு பகவான் உச்சமடைவதால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளின்மூலம் பணம் சம்பாதிப்பார். படிப்பில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் மன அமைதி கெடும். சிலரின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்றுவிடுவார்கள். குரு 12-ஆம் பாவத்தில் இருப்பதால், பிறரின் பணத்தை அபகரிக்கவேண்டுமென ஜாதகர் நினைப்பார். இதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால், அந்த பெண் சந்தோஷமான, அருமை யான மனைவியாக இருப்பாள்.

செல்: 98401 11534

bala080422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe