செவ்வாயின் விருச்சிக ராசியில், லக்ன கேந்திரத்தில் குரு இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். புகழுடன் வாழ்வார். அதிர்ஷ்டசாலியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார். பணக்காரராகத் திகழ்வார்.

2-ஆம் பாவத்தில் குருபகவான் தன் சுயவீட்டில், தனுசு ராசியில் இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழந்தை பாக்கியத்தில் சிறிய தடையிருக்கும். ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். நல்ல பணவசதி அவருக்கு இருக்கும்.

dd

Advertisment

3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் குருபகவான் நீசமடைகிறார். அதனால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். குடும்ப சுகத்தில் தொல்லைகள் இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார்.

4-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகருக்குத் தன்

அன்னையுடன் கருத்து வேறுபாடிருக்கும். பூமி, வாகனம் இருக்கும். குழந்தை பாக்கியத்தில் தடையைக்கடந்து வெற்றிகிடைக்கும். படிப்பு விஷயத்தில் தடங்கல்களைக் கடந்து ஜாதகர் வெற்றிபெறுவார்.

5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், சுய வீட்டில், மீன ராசியில் குரு இருந்தால், பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். குடும்ப சுகம் உண்டு. படிப்பு நன்றாக

இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெயர், புகழ் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.

6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் கூர்மையான அறிவு படைத்தவராக இருப்பார். பகைவர்களை வெல்வார். எந்த எல்லைக்கும் சென்று அவர் தன் காரியங்களை முடிப்பார். ஆனால், அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வார். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடிருக்கும்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடிருக்கும். எனினும், மனைவியால் அவருக்கு சந்தோஷம் கிடைக்கும். தன் அறிவைப் பயன்படுத்தி, ஜாதகர் வியாபாரத்தில் பணத்தை சம்பாதிப்பார். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். பல தடைகளைக் கடந்து வெற்றிபெறுவார்.

8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கலாம். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப்பார். தன் தாயாருடனான உறவில் ஜாதகருக்குப் பிரச்சினை இருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். தன் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி ஜாதகர் எல்லா தடங்கல் களையும் கடந்து வெற்றி பெறுவார்.

9-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் குருபகவான் உச்சமடைகிறார். அதனால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவிருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.

10-ஆம் பாவத்தில் சூரிய னின் சிம்ம ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகருக்கு தந்தை யால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ், லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூமி, வாகனம் வாங்குவதில் தடைகள் இருக்கும். ஜாதகர் சில ரகசிய செயல்களைச் செய்து தன் பகைவர்களை வெல்வார்.

11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பணவரவிருக்கும். குடும்ப சுகம் இருக்கும். உடன்பிறப்பு களால் சந்தோஷம் கிடைக்கும். சில நேரங்களில் ஜாதகர் தன் தைரியத்தை இழத்துவிடுவார். மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் குருபகவான் இருந்தால், ஜாதகர் தன் வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப் பார். போட்டிகள் அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் சிறிய பிரச்சினை இருக்கும்.

ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அவரின் மனதில் எப்போதுமே அமைதி இருக்காது. பிறரைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டேயிருப்பார்.

செல்: 98401 11534