லக்னத்தில், சுய ராசியில் குரு இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பூமி, வாகனம் இருக்கும். பேச்சாற்றல் மிக்கவர்.
ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.
2-ஆம் பாவத்தில் மகர ராசியில் குருபகவான் நீசமடைகிறார். அதனால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினை நிலவும். உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். அன்னையின் உடல்நலத்தில் சிறிய பாதிப்பிருக்கும். தந்தையால் சந்தோஷம் கிட்டும். அரசாங்க விஷயத்தில் லாபமிருக்கும். ஜாதகர் சுமாராக சம்பாதிப்பார். வயதாக ஆக பெயர், புகழுடன் சந்தோஷ மாக வாழ்வார்.
3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந்தோருடன் பிரச்சினை ஏற்படும். தைரியம் குறைவாக இருக்கும். பூமி வாங்குவதில் தடைகள் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
4-ஆம் பாவத்தில், சுய ராசியான மீனத்தில் குரு இருந்தால், வீடு, வாகனம் வாங்கலாம். தாயாரால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத் துடன் இருப்பார். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். சந்தோஷமாக வாழ்வார்.
5-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிட்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். மகிழ்ச்சியாக வாழ்வார்.
6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் பகைவர்களுடன் போராட வேண்டியதிருக்கும். சிறிய நோய்களின் பாதிப்பிருக்கும். தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஜாதகர் வெற்றிபெறுவார். தாய்க்கு உடல்நல பாதிப்பிருக்கும். எப்போதும் குடும்பம் குறித்த சிந்தனையிலேயே ஜாதகர் இருப்பார். சிலர் வேற்றிடங்களுக்குச் சென்று தொழில் செய்வார்கள்.
7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு இருந்தால் மனைவி அழகாக இருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வீடு வாங்கும் வாய்ப்புண்டு. ஜாதகர் தன் செயல்களை வெற்றி கரமாக முடிப்பார். சந்தோஷமாக வாழ்வார்.
8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் குருபகவான் உச்சமடைகிறார். அதனால் பூர்வீக சொத்து கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். சிலருக்கு மூலநோய் ஏற்படும். பூமி வாங்குவதில் பிரச்சினை இருக்கும். அதைக் கடந்து வாங்கிவிடுவார்கள். இல்வாழ்க்கையில் சிறிய தடங் கல்கள் உண்டாகும்.
9-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் குரு இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதேசமயம் தலையெழுத்து நன்றாக இருக்கும். ஜாதகர் தர்மச் செயல்களைச் செய்வார். தாயால் சந்தோஷம் கிட்டும். படிப்பு நன்றாக வரும். பூமி வாங்கலாம். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குரு இருந்தால் தந்தையால் ஜாதகருக்கு சந்தோ ஷம் கிட்டும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். சுய மரியாதையுடன் வாழ்வார். பகைவர்களுடன் கவனமாகப் பழகுவார். அதில் அவருக்கு வெற்றிகிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் குரு இருந்தால் கடுமையாக உழைத்து பணத் தைச் சம்பாதிக்க வேண்டியதிருக் கும். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். பூமி பாக்கியம் உண்டு. மனைவியால் மகிழ்ச்சி யுண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
12-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். ஜாதகர் தன் வெளித்தொடர்புகளின்மூலம் பணம் சம்பாதிப்பார். அடிக்கடி பயணங்களை மேற்கொள் வார். அதன்காரணமாக உடல் நலத்தில் பாதிப்புண்டாகும். ஜாதகரைப் பலரும் பாராட்டு வார்கள்.
செல்: 98401 11534