கடக லக்னத்தில் குரு உச்சமடைகிறார். அதனால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். நல்ல படிப்பாளியாக- நல்ல மனிதராக இருப்பார். தைரியசாலி. பகைவரை வெற்றிகொள்ளக்கூடியவர்.
பிறரை ஈர்க்கக்கூடியவராக இருப்பார்.
2-ஆம் பாவமான சிம்ம ராசியில், சூரியனின் வீட்டில் குரு இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். வியாபாரம் லாபத்துடன் நடக்கும். புகழ் இருக்கும்.
3-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். தைரிய குணம் கொண்டவராக இருப்பார். பகைவர்களை வெல்வார். தர்மசீலராக இருப்பார். ஆனால் விரோதியின் வீட்டில் குரு பகவான் இருப்பதால், பல நேரங்களில் கடுமையான சம்பவங்களை ஜாதகர் சந்திக்கவேண்டியதிருக்கும்.
4-ஆம் பாவத்தில் குரு பகவான், சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜாதகருக்கு மனக் குழப்பம் இருக்கும். பூமி வாங்குவதில் பிரச்சினை இருக்கும். பல சிக்கல்களைக் கடந்து வாழ்க்கையில் வெற்றிபெறுவார். பகைவர்களிடம் மென்மையாக நடந்தால் வெற்றி கிடைக்கும்.
5-ஆம் பாவத்தில் குரு பகவான், செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் படிப்பில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழ் அடையலாம். பிள்ளைகளால் பெயர் கிடைக்கும். ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப்படுவார்கள். ஜாதகருக்கு நல்ல தோற்றம் இருக்கும். மனபலம் இருக்கும். செய்யும் செயல்களில் சிறிய தடைகள் இருக்கும். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
6-ஆம் பாவத்தில் குரு பகவான் தனுசு ராசியில், தன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும். தன் எதிரிகளை வெல்வார். 6-க்கு அதிபதியான குரு, 6-ல் இருக்கும்போது பல கஷ்டங்கள் வரும். ஆனால் 5-ஆம் பார்வை 10-ஆம் பாவத்திற்கு இருப்பதால் வெற்றிகள் கிடைக்கும். பெரிய அளவில் புகழ் கிடைக்கும். ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார்.
7-ஆம் பாவத்தில், தன் எதிரியான சனியின் மகர ராசியில் குரு பகவான் நீசமடைகிறார். அதனால் வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். பகைவர்களால் வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். உடன்பிறப்பு களால் ஆதாயம் இருக்கும்.
8-ஆம் பாவத்திலுள்ள குரு பகவான் உடல்நலத்தில் பிரச்சினைகளை உண்டாக்கு வார். முன்னோர்களின் சொத்து விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பகைவர்களால் தொல்லைகள் ஏற்படும். அதிர்ஷ்டம் உண்டாவதில் தடை இருக்கும். பூமி வாங்குவதில் சிக்கல் இருக்கும். எனினும் பணவரவும் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் திரிகோணத்தில், தன் மீன ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களைச் செய்வார். பிள்ளைகளால் ஆதாயம் இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். சந்தோஷமாக வாழ்வார். பெயர், புகழுடன் இருப்பார்.
10-ஆம் பாவமான கேந்திர ஸ்தானத்தில், செவ்வாயின் மேஷ ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். வியாபாரம் லாபத்துடன் நடக்கும். பல போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
11-ஆம் பாவத்தில் தன் எதிரியான சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு பகவான் இருந்தால் கடுமையாக உழைத்தபிறகுதான் லாபம் கிடைக்கும். ஜாதகர் பகைவர்களை வெல்வார். நிறைய பணவசதி இருக்கும்.
12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும்.
ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பார். அதிர்ஷ்ட விஷயத்தில் குறையிருக்கும். தர்மச் செயல்களைச் செய்வதில் தடங்கல்கள் ஏற்படும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும்.
செல்: 98401 11534