ன்னி லக்னத்தில் குரு இருந்தால் ஜாதகர் பல முயற்சிகளைச் செய்து வெற்றிபெறுவார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். பேச்சுத் திறமை இருக்கும். வீடு, வாகன யோகமுண்டு. நல்ல பணவசதி இருக்கும். ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார்.

2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் ஜாதகர் பணக்காரராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். அன்னையின் உடல்நலத்தில் குறையிருக்கும். சிலருக்கு தாயாருடன் உறவு சரியாக இருக்காது. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு உடன் பிறப்புகளுடன் நல்ல உறவிருக்கும். அவர் தைரியசா-யாகவும் பலசா-யாகவும் இருப்பார். தாயாருடனான உறவு நன்றாக இருக்கும். பூமி, வாகனம் வாங்குவார். வர்த்தகத்திலும், பணிசெய்யும் இடத்திலும் சிறிய தடங்கல்கள் இருக்கும். எனினும், அவற்றைக் கடந்து வெற்றிபெறுவார். நல்ல பணவசதியுடன் சந்தோஷமாக வாழ்வார்.

4-ஆம் பாவத்தில் தன் சுய வீட்டில், தனுசு ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு பூமி, வாகனம் இருக்கும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். பல வெற்றிகளைப் பெறுவார்.

Advertisment

gg

5-ஆம் பாவத்தில் மகர ராசியில் குரு பகவான்

நீசமடைகிறார். அதனால் ஜாதகருக்குப் பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும்.

படிப்பு விஷயத்தில் அவருக்கு பிரச்சினை இருக்கும். பெரிய செயல்களில் ஈடுபடும் போது அதில் தடையேற்படும். மனைவி யின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜாதகர் கடுமையாக உழைத்து வெற்றிபெறு வார். நிறைய பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் எதிரிகளிடம் சாந்தமாகப் பேசி, தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார். அன்னையுடன் சுமாரான உறவே இருக்கும். நிலம் வாங்குவதில் தடை உண்டாகும். மனைவியின் உடல்நலத்தில் குறை இருக்கும். பணத்தை சேமிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். இல்வாழ்க்கை சுமாராக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடன் சிறிய பிரச்சினைகள் ஏற்படும்.

7-ஆம் பாவத்தில் சுய வீட்டில், மீன ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் இருக்கும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு வீடு, வாகன யோகம் உண்டு. வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

8-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மனைவியால் மகிழ்ச்சி கிட்டும். வர்த்தகத்தில் சிறிய தடைகள் இருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைக்கொண்டு பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைத்து பணத்தை சேமிப்பார். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிய பிரச்சினைகள் உண்டாகும். வீடு, நிலம் வாங்குவதில் தடையிருக்கும்.

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு பகவான் இருந்தால் வர்த்தகத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார். மனைவியுடனான உறவில் பிரச்சினை இருக்கும். பூமி, வாகன யோகமுண்டு. உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பெண் மோகம் உள்ளவராக இருப்பார். குரு பகவான் 3-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.

10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் கிட்டும்.

அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள்.

11-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் குரு உச்சம் பெறுகிறார்.

அதனால் நல்ல லாபம் கிடைக்கும். அன்னையுடனான உறவு நன்றாக இருக்கும். வர்த்தகம் சுமாராக இருக்கும். சிலர் தந்தை இருக்கும்போது நன்றாக இருப்பார்கள். தந்தை இல்லாத காலத்தில் மூத்தவர்கள் யாருடனாவது இருக்கவேண்டும். அது அவர்களுக்கு நன்மை தரும். அப்போது மட்டுமே சந்தோஷம் கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சிம்ம ராசியில் குரு பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். இல்வாழ்க்கையில் குறையிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜாதகருக்கு வெளித் தொடர்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.

செல்: 98401 11534