கும்ப லக்னத்தில், குரு பகவான் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். பணவசதி இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரம் செய்யுமிடத்தில் பெயர், புகழ் கிடைக்கும்.
2-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான மீன ராசியில் குரு இருந்தால் நல்ல பண வரவிருக்கும். சேமிப்பு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பணத்தைச் சேமித்து வைக்கவேண்டுமென்ற சிந்தனை எப்போதும் இருக்கும். ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப் படுவார்கள். போட்டியில் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.
3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். துணிச்சலாக பல செயல
கும்ப லக்னத்தில், குரு பகவான் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். பணவசதி இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரம் செய்யுமிடத்தில் பெயர், புகழ் கிடைக்கும்.
2-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான மீன ராசியில் குரு இருந்தால் நல்ல பண வரவிருக்கும். சேமிப்பு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பணத்தைச் சேமித்து வைக்கவேண்டுமென்ற சிந்தனை எப்போதும் இருக்கும். ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப் படுவார்கள். போட்டியில் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.
3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். துணிச்சலாக பல செயல்களைச் செய்வார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவியால் சந்தோஷம் இருக்கும். மனைவி அழகாக இருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மாமனாரால் லாபம் இருக்கும்.
4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் அன்னையால் சந்தோஷம் குறையும். பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார்.
5-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும்.
அறிவைக்கொண்டும் மன தைரியத்தைக் கொண்டும் ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார். வாரிசுகளால் பெயர், புகழ் கிடைக்கும். சில தடங்கல்களைத் தாண்டி, வெற்றி கிடைக்கும். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார். பேச்சில் அமைதி இருக்கும். ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்.
6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் குரு உச்சமடைகிறது. வீட்டில் சந்தோஷம் நிலவும்.
அவ்வப்போது குடும்பத்தில் சிறிய சண்டைகள் நடக்கும். சில தடைகளைக் கடந்து, பண வரவிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் குரு இருந்தால் மனைவி அழகாக இருப்பாள். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.. வீட்டில் சந்தோஷம் நிலவும். பெயர், புகழ் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவிருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார்.தைரியசாலியாக இருப்பார்.
8-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பில் நஷ்டம் உண்டாகலாம். கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிக்க வேண்டியதிருக்கும். அன்னையால் சந்தோஷம் குறைவாக இருக்கும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை ஏற்படும்.
9-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், சுக்கிரனின் துலா ராசியில் குரு இருந்தால் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். எதையும் திட்டமிட்டு செயல்படுவார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும்.
ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும். தன் அறிவைப் பயன்படுத்தி, ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.
10-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குரு இருந்தால் தந்தையால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பூமி, வீடு வந்துசேரும். பகைவர்கள் பயப்படுவார்கள். ஜாதகருக்கு சண்டையில் வெற்றி கிடைக்கும். நல்ல பணவசதி இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பலரும் பாராட்டக்கூடிய பெரிய மனிதராக இருப்பார்.
11-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான தனுசு ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு திடீர் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தோரால் சந்தோஷம் கிட்டும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல பணவரவுண்டு. பெயர், புகழ் கிடைக்கும்.
12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் குரு நீசமடைகிறது. அதனால், வீண் செலவு அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் பிரச்சினை ஏற்படும். ஆனால், அதன்மூலம் ஓரளவுக்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற நிலை இருக்கும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை உண்டாகும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார்.
செல்: 98401 11534