கிரகங்கள்தான் நம் வாழ்க்கையை வழிநடத்திவருகின்றன. ஒன்பது கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் மனிதர்களின் வாழ்க்கையுடனான பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நாம் இந்த பூமியில் ஜனித்த நேரத்தை வைத்து பன்னிரண்டு ராசிகளுக்குள் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையை நாம் தெரிந்துகொள்கிறோம்.
அந்த சஞ்சாரத்தின் அடிப்படையில், நம்முடைய ராசிக்கட்டத்தின் 12 வீடுகளில் கிரகங்கள் அமைந்துள்ள நிலைப்படி நமக்குரிய பலன்களை அவர்கள் வழங்கிவருகிறார்கள்.
இங்கு மிக முக்கியமான ஒரு தகவலைச் சொல்லியாக வேண்டும். கிரகங்கள் என்பவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையாக இருக்காது. காரணம் என்னவென்றால், இந்த உலகை இயக்கிடக்கூடிய, மனிதர்களை வழிநடத்திடக்கூடிய அத்தனை சக்திகளையும் பொறுப்புகளையும் கிரகங்களுக்கு வழங்கியவர்களே நாம் இறைவனாக எண்ணித் துதிப்பவர்கள்தான்.
இறைவன்கூட ஒரு மனிதனின் நிலையைப் பார்த்து மனம் மாறலாம். அந்த மனிதன்மீது கருணை வைக்கலாம். ஆனால் கிரகங்கள் அப்படியல்ல. யார் யாருக்கு எத்தகைய பலனை எந்த அளவுக்கு வழங்கவேண்டுமோ அந்த அளவுக்குப் பாரபட்சமின்றி வழங்கிடக்கூடியவர்கள். நியாயம் தவறாத நீதிபதிகள்போல் செயல்படக்கூடியவர்கள் கிரகங்கள்.
பாமரன்முதல் பரம்பொருள் வரை யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏழரைச்சனியின் காலம் வருகின்றபோது சனி பகவான் அவர்களைப் பிடித்தாக வேண்டும் என்ற நிலையில், பரம்பொருளான ஈஸ்வரனுக்கும் ஏழரைச்சனிக்குரிய காலம் வருகிறது.
கிரகங்கள் படைக்கப் பட்டதே அவரவர் பணியை செய்திடவேண்டும் என்பதற்காகத் தானே! ஈஸ்வரனையும் பிடிப்ப தற்கு செல்கிறார் சனிபகவான். அந்தநேரத்தில் சனியின் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக சிவன் ஒரு குகைக்குள் சென்று மறைந்துகொண்டதுடன், அங்கே கண்களை மூடி தியானத் தில் ஆழ்ந்துவிட்டாராம். ஒரு கட்டத்திற்குப்பின் அந்த குகையைவிட்டு வெளியில் வருகி றார் ஈஸ்வரன். அப்போது அந்த குகைக்கு வெளியே சனி பகவான் நின்றுகொண்டிருக்கிறார்.
அவரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்த பரமேஸ்வரன், "என்ன சனிபகவானே, என்னை உன்னால் பிடிக்க முடியவில்லையே!'' என்றார்.
அதற்கு சனிபகவான், "ஈசனே, தாங்கள் இதுவரை என்னுடைய பிடியில்தான் இருந்தீர்கள்! உங்களை நான் பிடித்திருந்த காலம் முடிந்த நிலையில்தான் குகையைவிட்டு வெளியில் வந்துள்ளீர்கள். நீங்கள் எனக்கு வழங்கிய பொறுப்பை நான் நிறைவேற்றி னேன்'' என்று பதில் கூறினார்.
சனியின் பதிலினைக் கேட்டவர், ஈசன் என்றபோதிலும் நீதிநெறி தவறா மல் செயல்பட்ட சனிபகவானுக்கு ஈஸ்வர பட்டத்தை வழங்கி வாழ்த்தினார்.
அன்றுமுதல் சனிபகவான் சனீஸ்வரர் என்ற பெயருடன் வழங்கப்படுகிறார்.
இந்த ஒரு தகவலி-ருந்தே கிரகங்களின் பணி என்ன? அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒன்பது கிரகங்களைப் படைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரகத்துவத்தை வழங்கி, மனிதர்களின் வாழ்க்கையை இயக்குபவர்களாக அவர்களைப் படைத்தவர்கள் நாம் வணங்கும் இறை சக்திகள்தான்.
கிரகங்கள் நம்முடைய பாவ- புண்ணியங் களுக்கேற்ப, கடந்த ஜென்மங்களில் நாம் செய்த நன்மை- தீமைகளுக்கேற்ப நமக்குரிய பலன்களை வழங்கி நம்மை வாழவைத்து வருகின்றனர். நாம் அடையும் யோகங்களுக்கும் கிரகங்களே காரணம். நாம் அனுபவிக்கும் சங்கடங்களுக்கும் கிரகங்களே காரணம்.
அத்தகைய கிரகங்கள் நம்முடைய ஜாதகத்தில் எந்த நிலையில் சஞ்சரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து சொல்வதுதான் ஜோதிடம்.
ஒவ்வொரு கிரகமும் அவர்களுக்குரிய பணியை சரியாக செய்துவருகின்றனர். அந்த வழியில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கிரகங்களினால் உண்டாகும் தோஷங்களிலிருந்து, பாதகங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென் றால், கிரகங்களுக்குரிய பரிகாரங்களை அந்த கிரகங்களுக்குரிய சந்நிதியில்தான் செய்யவேண்டும்.
கிரகங்களுடைய பார்வை நமக்கு எந்தரீதியில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
"அவர் அப்படி வாழ்கிறார், இவர் இப்படி வாழ்கிறார்; நம்மால் அவ்வாறு வாழ முடியவில்லையே' என்னும் எண்ணத்துடன், நமக்குரிய வாழ்க்கை எதுவென்பதையே நாம் புரிந்துகொள்ளாமல் போகிறோம்.
அதைத் தெரிவிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம்.
நாம் பிறக்கும்போதே நமக்குரிய விதி உண்டாகிவிடுகிறது. இது தான் நம்முடைய வாழ்க்கை; இதற்காகத் தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்;
இதுவரைதான் நம்முடைய எல்லை என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து, நட்சத்திர, ராசியினுடைய, லக்னத்துடைய, தசாபுக்திகளுடைய நிலையை வைத்து முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. நம் தசாபுக்திக் கேற்ப, கிரகங்களின் சஞ்சாரத்திற்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டோமென்றால் நமக்குரிய வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக அமையும்.
செல்: 94443 93717